என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Cricket"

    • மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.
    • இந்தத் தொடருக்கு பிறகு நியூசிலாந்து கேப்டன் ஓய்வுபெற உள்ளதாக தெரிவித்தார்.

    வெல்லிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை சோபி டிவைன். இவர் நியூசிலாந்து அணிக்காக 151 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3,990 ரன்னும், 107 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். மேலும், 146 டி20 போட்டிகளில் ஆடி 3,432 ரன்னும், 119 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.

    16 வயதில் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமான சோபி டிவைன் சுமார் 20 ஆண்டுக்கு மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில், சோபி டிவைன் இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஓய்வு குறித்து சோபி டிவைன் கூறுகையில், நியூசிலாந்து அணியில் விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பேன். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்தார்.

    13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

    • இந்த தொடரின் 3 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன.
    • இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

    மும்பை:

    ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு நடைபெறும் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அதன்படி இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரின் 3 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன.

    இந்த தொடருக்கான போட்டி அட்டவணை:

    1. முதல் ஒருநாள் போட்டி: செப்டம்பர் 14-ம் தேதி

    2. 2-வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 17-ம் தேதி

    3. 3-வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 20-ம் தேதி

    • சர்வதேச டி20 போட்டிகளில் டிக்ளேர் செய்ய அனுமதி இல்லை
    • இந்த அசாதாரண நடவடிக்கைக்கு பின் யுஏஇ பந்து வீச்சாளர்கள் கத்தாரின் பேட்டிங்கை இலகுவாக தகர்த்தனர்.

    ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை ஆசிய தகுதிச் சுற்று 2025 இல் நேற்று (சனிக்கிழமை) கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மகளிர் கிரிக்கெட் அணி விளையாடியது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள டெர்த்தாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுஏஇ அணி புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 16 ஓவரில் 0 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.

    ஆட்டத்தின்போது மழை அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாலும், சர்வதேச டி20 போட்டிகளில் டிக்ளேர் செய்ய அனுமதி இல்லை என்பதாலும், யுஏஇ ஒரு தந்திரமான முடிவை எடுத்தது.

    ஒவ்வொரு பேட்டர்களும் கிரீஸுக்கு நடந்து சென்று, பின்னர் வந்தவுடன் உடனடியாக வெளியேறினர். இது யுஏஇ அணி தங்கள் இன்னிங்ஸை விரைவாக முடிக்க அனுமதித்தது.

    இதனால் வானிலை இடையூறுகள் ஆட்டத்தைப் பாதிக்கும் முன்பாகவே அவர்கள் பந்து வீச முடிந்தது. இது டி20 விதிகளின் கீழ் ஒரு தனித்துவமான ஆனால் சட்டப்பூர்வ உத்தியாகும்.

    இந்த அசாதாரண நடவடிக்கைக்கு பின் யுஏஇ பந்து வீச்சாளர்கள் கத்தாரின் பேட்டிங்கை இலகுவாக தகர்த்தனர். இதனால் 11.1 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து கத்தார் 163 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ அணியிடம் தோற்றது.

    இந்த வெற்றியின் மூலம், யுஏஇ நான்கு புள்ளிகள் மற்றும் 6.998 என்ற வலுவான நிகர ரன் விகிதத்துடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. யுஏஇ அணி அடுத்ததாக மே 13 அன்று பாங்காக்கில் உள்ள இதே டெர்த்தாய் மைதானத்தில் மலேசியாவை எதிர்கொள்ளும். 

    • டாஸ்மின் பிரிட்ஸ் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • முதல் விக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்கா 140 ரன்கள் எடுத்தது.

    கொழும்பு:

    இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் லாரா வால்வார்ட்- டாஸ்மின் பிரிட்ஸ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. கேப்டன் லாரா வால்வார்ட் 43 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாஸ்மின் சதம் விளாசி அசத்தினார்.

    இதனையடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவரில் 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சினே ராணா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • சதமும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை ஹீலி மேத்யூஸ் படைத்தார்.
    • அவரது அணி தோல்வியடைந்த போதிலும், ஆட்டநாயகி விருது மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டது.

    மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

    இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹேலி மேத்யூஸ் ஒரு உலக சாதனையைப் பதிவு செய்தார்.

    அதன்படி இப்போட்டியில் சதம் விளாசி ஆட்டநாயகி விருதை கைப்பற்றியதன் மூலம் 54 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங்கில் சதமும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை ஹீலி மேத்யூஸ் படைத்தார்.

    இருப்பினும் அவரது அணியானது இப்போட்டியில் தோவ்லியைத் தழுவியது. இதன்மூலம் ஒரே போட்டியில் சதம் அடித்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியும், அந்த அணி தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறையாகும்.

    மேலும் மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனை எனும் மோசமான சாதனையையும் ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார்.

    அவரது அணி தோல்வியடைந்த போதிலும், அவர் இந்த விருதை வெல்வது இது 5-வது முறையாகும். இந்தப் பட்டியலில், அவர் தனது சக நாட்டவரான ஸ்டெஃபனி டெய்லரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

    மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த அட்டத்தில் அதிக ஆட்ட நாயகி விருதுகள்

    5-ஹேலி மேத்யூஸ்

    4-ஸ்டஃபானி டெய்லர்

    2-எமி சாட்டர்த்வைட்

    2-நிக்கோலா பிரவுன்

    2-கிளேர் டெய்லர்

    • இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி, சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

    இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன.

    இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.

    இந்தாண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முத்தரப்பு தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கிறார்.

    அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் டைட்டஸ் சாது ஆகியோரும் காயம் காரணமாக இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. 

    இருப்பினும் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி ஆகியோரும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிர் அணி:

    ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், காஷ்வீ கௌதம், சினே ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசாப்னிஸ், ஸ்ரீ சரணி, சுசி உபாத்யாய்.

    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது.
    • வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    மிர்புர்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி மந்தனா -ஷஃபாலி வர்மா ஜோடி களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்திய அணி 33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. மந்தனா 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷஃபாலி வர்மா 19 ரன்னிலும் அடுத்து வந்த கேப்டன் கவூர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.

    33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா அடுத்த ஒரு ரன் எடுப்பதற்க்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சிறிது நேரம் தாக்குபிடித்த இந்திய அணி 48 ரன்னில் (யாஸ்திகா பாட்டியா 11 ரன்) 4-வது விக்கெட்டையும் 58 ரன்னில் (ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன்) 5-வது விக்கெட்டையும் இழந்தது. 61 ரன்னில் 6-வது விக்கெட்டையும் (ஹர்லீன் தியோல் 6) இந்திய அணி இழந்தது.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது.
    • வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் எடுத்தது.

    மிர்புர்:

    இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் மந்தனா 13 ரன், ஷபாலி வர்மா 19 ரன், அடுத்து களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 0 ரன், யாஷ்டிகா பாடியா 11 ரன், ஹார்லீன் தியோல் 6 ரன், தீப்தி சர்மா 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

    இறுதியில் இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச பெண்கள் அணி ஆடியது.

    இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் கேப்டன் மட்டுமே இரண்டு இலக்க ரன்னை எட்டினார். மற்ற வீராங்கனை சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    • அதிரடியாக விளையாடி இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 80 ரன்கள் குவித்தார்.
    • டி20 தொடரை நியூசிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது.

    நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதனையடுத்து டி20 தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய இலங்கை பெண்கள் அணி 14.3 ஓவரில் 143 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 போட்டிகளில் முதன் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. அதிரடியாக விளையாடி இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 80 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை தட்டிச்சென்றார்.

    • வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன், நஹிதா அக்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    • காயத்தில் இருந்து மீண்டு வந்த கவூர் அரை சதம் விளாசி 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினர். தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இந்நிலையில், இந்தியா- வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா- பிரியா களமிறங்கினர்.

    பிரியா புனியா 7, யாஷிகா 15, மந்தனா 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கவுர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கவுர் 48 ரன்னில் காயம் காரணமாக வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரை சதம் விளாசி அசத்தினார்.

    அவர் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்த கவூர் அரை சதம் விளாசி 52 ரன்னில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன், நஹிதா அக்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.
    • நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் 77 ரன்கள் குவித்தார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் 3 டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி 2-1 என தொரை கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என ஒருநாள் தொடர் சமனில் இருந்தது.

    தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி தரப்பில் பர்கானா 105 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ்டிகா 5 ரன்களில் வெளியேறினார்.

    தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல் இணைந்து சிறப்பாக விளையாடினார். அரை சதம் அடித்த மந்தனா 59 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்மான்ப்ரீத் கவுர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய ஹர்லீன் தியோல் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. 1 விக்கெட் கைவசம் இருந்தது. ஆனால் அந்த ஓவரில் மருபா அக்டர் வீசிய முதல் 2 பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில், மேக்னா சிங் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 49.3 ஓவரில் 225 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் போட்டி டையில் முடிந்தது. அத்துடன், இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    • இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம்.
    • இவ்விரு டெஸ்டுகள் பெண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நேற்று அளித்த பேட்டியில், '2023-24-ம் ஆண்டு சீசனில் நாங்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதாவது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளோம். இவ்விரு டெஸ்டுகள் பெண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

    எதிர்காலத்தில் மேலும் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். பெண்கள் கிரிக்கெட்டுக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளை கொண்டு வர வேண்டும். ஏனெனில் அது பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. ஒரு வீராங்கனையாக நானும் அதிகமான டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார்.

    ×