என் மலர்
நீங்கள் தேடியது "Women's Cricket"
- இந்தியா - இலங்கை அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
- இந்த தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த டி20 தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 2 போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.
முதல் டி20 டிசம்பர் 21-ந் தேதியும் 2-வது டி20 போட்டி 23-ந் தேதியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 3,4,5-வது டி20 போட்டிகள் முறையே 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.
- ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
- இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள்.
புதுடெல்லி:
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.
ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு அணியில் குறைந்தது 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம்.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஏலத்தில் நட்சத்திர ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
ஜாம்பவான் வீராங்கனையான அவரை எந்த அணியும் ஏலம் எடுக்காதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அலிசா ஹீலி தலைமையில் ஆஸ்திரேலிய அணி ஆறு முறை உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
- ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
- ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.
ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு அணியில் குறைந்தது 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம்.
ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்கவைத்த வீராங்கனைகளுக்கான ஊதியம் கழிக்கப்படும். ஒரு வீராங்கனையை மட்டுமே தக்க வைத்த உ.பி. வாரியர்சிடம் அதிகபட்சமாக 14½ கோடி கையிருப்பு உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.5.70 கோடி, குஜராத் ஜெயன்ட்ஸ் 9 கோடி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ரூ.5¾ கோடி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரூ.6.15 கோடி இருப்பு வைத்துள்ளன.
ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போக வாய்ப்புள்ளது. தீப்தி ஷர்மாவின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தக்க வைத்த வீராங்கனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு அணிக்கும் சிறப்பு சலுகையாக ஆர்.டி.எம். கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஏலத்தில், தங்களது முந்தைய அணியில் ஆடிய வீராங்கனைகளை வாங்குவதற்கு ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தும் போது முன்னுரிமை அளிக்கப்படும். உ.பி. வாரியர்ஸ் அதிகபட்சமாக 4 ஆர்.டி.எம். கார்டு வைத்துள்ளது. 5 வீராங்கனைகளை முழுமையாக வைத்துக்கொண்ட டெல்லி, மும்பை அணிகளுக்கு ஆர்.டி.எம். இல்லை.
- வங்கதேச மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
- இந்த போட்டி தொடர் திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
டாக்கா:
வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (டிசம்பர்) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த போட்டி தொடர் திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்து இருக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா, வங்கதேசம் இடையே சமீபகாலமாக நிலவும் அரசியல் பதற்றமே கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசம் சென்று ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாட இருந்தது. அந்த போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோடப்பட்டது நினைவிருக்கலாம்.
- பிரதிகா ராவல் (31), ஸ்மிருதி மந்தனா (23), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (32), தீப்தி சர்மா (25) ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தனர்
- பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில், டயானா பெய்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கையின் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஆடி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் பிரதிகா ராவல் (31), ஸ்மிருதி மந்தனா (23), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (32), தீப்தி சர்மா (25) ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தனர்
அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடித்து அசத்தினார். ஹர்லீன் டில் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில், டயானா பெய்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் பாத்திமா சனா மற்றும் சாதியா இக்பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தானுக்கு 50 ஓவர்களில் 248 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
- இப்போட்டியின் போது அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்து களத்தில் இருந்து வெளியேறினார்.
8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இப்போட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்து களத்தில் இருந்து வெளியேறினார். அதேசமயம், அவர் வீல் சேரில் பெவிலியனுக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததன் காரணமாக, நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியானது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு காயம் பெரிய அளவில் இல்லை எனவும் நலமாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக கோப்பை தொடரில் விளையாடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.
- இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி பிங்க் ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது.
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முல்லாப்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இந்தியா 102 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி பிங்க் ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிங்க் நிற ஜெர்சி அணிந்து இந்திய மகளிர் அணி விளையாட உள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து இந்திய வீராங்கனை தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
- இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலிய தரப்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி இன்று நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஹர்லீன் தியோல் 10, கேப்டன் ஹர்மன்பிரித் கவூர் 17 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இதனையடுத்து மந்தனாவுடன் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து தீப்தி சர்மா 40 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ராதா யாதவ் 6, அருந்ததி ரெட்டி 4 என அடுத்தடுத்து வெளியேறினார்.
இறுதியில் ரிச்சா கோஷ்- சினே ராணா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிச்சா கோஷ் 29, ராணா 24 ரன்கள் எடுத்து வெளியேற இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை.
- ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை:
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூரிலும், இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிராந்தி கவுட், அமஞ்சோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யஸ்திகா (விக்கெட் கீப்பர்).
இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 தொடரை இந்தியா ஏற்கனவே 3-2 என்ற கணக்கில் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்து இருந்தது.
- இங்கிலாந்தில் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதித்தது.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட்:
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன் குவித்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் சதம் அடித்தார். அவரது 7-வது (149-வது போட்டி) செஞ்சூரியாகும். அவர் 84 பந்தில் 102 ரன்னும் (14 பவுண்டரி), ஜெமீமா ரோட்ரிக்ஸ் 45 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி), ஸ்மிருதி மந் தனா, ஹர்லீன் தியோல் தலா 45 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து 49.5 ஓவரில் 305 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் நேட் ஸ்கிவர்-பிரண்ட் 98 ரன்னும் (11 பவுண்டரி), எம்மா லேம்ப் 68 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். கிராந்தி கவுட் மிகவும் அபாரமாக பந்து வீசி 52 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றிய 4-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். தீப்தி சர்மா (2 முறை), மம்தா மாபென், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் வரிசையில் அவர் இணைந்தார். ஸ்ரீ சரணிக்கு 2 விக்கெட்டும், தீப்தி சர்மாவுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.
இங்கிலாந்தில் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதித்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று இருந்தது. 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா ஏற்கனவே 3-2 என்ற கணக்கில் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரும் கணிசமான ரன்கள் எடுத்தால் இந்தியாவின் பேட்டிங் மேலும் வலுவடையும்.
- 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய பெண்கள் அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், மழையால் பாதிக்கப்பட்ட 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரும் கணிசமான ரன்கள் எடுத்தால் இந்தியாவின் பேட்டிங் மேலும் வலுவடையும்.
நாட் சிவெர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் சோபியா டங்லி, விக்கெட் கீப்பர் அமெ ஜோன்ஸ், எக்லெஸ்டோன், டாமி பீமோன்ட் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடுகிறார்கள். 2-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். மொத்தத்தில், அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
லண்டன்:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
சவுத்தாம்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என
முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா அணி, 29 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி 40 ரன்கள் எடுத்தார். தீப்தி ஷர்மா 30 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் கோடினார்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. டாமி பியூமெண்ட் 34 ரன் எடுத்தார்.
ஏமி ஜோன்ஸ் பொறுப்புடன் ஆடினார். நாட் சீவர் பிரண்ட் 21 ரன்னில் வெளியேறினார்.
மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 24 ஓவரில் 115 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், இங்கிலாந்து அணி 21 ஓவரில் 116 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-1 என சமனிலை பெற்றுள்ளது.






