என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 Cricket"

    • தொடக்கத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
    • அவரிடம் பலவிதமான ஷாட் திறமை இருப்பதால், அவர் களத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு ஆடலாம்.

    மும்பை:

    இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. உடல்நலக்குறைவால் ஒரு ஆட்டத்தில் ஆடவில்லை. மற்ற 3 ஆட்டங்களி லும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    இந்த நிலையில் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    இது குறித்து கவாஸ்கர் கூறியதாவது:-

    அபிஷேக் ஷர்மா அருமையான ஒரு வீரர். ஆனால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அவருக்கு அதிக அழுத்தத்தை கொடுப்பதாக நினைக்கிறேன். அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை அவர் சிறப்பாக தொடங்கி இருந்தால் இப்போது நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். அவரிடம் பலவிதமான ஷாட் திறமை இருப்பதால், அவர் களத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு ஆடலாம். இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்க முயற்சிக்க கூடாது. அதே நேரம், விரட்டுவதற்கு உகந்த பந்தாக வந்தால் அடிக்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் வேண்டுமென்றே பெரிய ஷாட் ஆடக்கூடாது. முதலில் ரன் எடுத்து கணக்கை தொடங்க வேண்டும். அதற்கு 4 பந்து விரயமானாலும் பரவாயில்லை. அதை பிறகு அவரால் சரி செய்ய முடியும். தொடக்கத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

    ஒன்று அல்லது 2 ஓவர் நின்று விட்டால், அதன் பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். முதல் ரன் தான் முக்கியம். ஒரு ரன் எடுத்து விட்டாலே அனைத்தும் நன்றாக அமையும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட் மற்றும் 30 ரன்கள் விளாசினார்.
    • உலகின் 6-வது ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு விக்கெட் மற்றும் 30 ரன்கள் விளாசியதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் 6000+ ரன்கள், 200+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்தார்.

    இந்தச் சாதனையைச் செய்த உலகின் 6-வது ஆல்-ரவுண்டர் இவராவார். இவருக்கு முன்னதாக கீரன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் இந்த இரட்டை மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    டி20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் 200 விக்கெட்டுகளைக் கடந்திருந்தாலும், 6000 ரன்கள் என்ற இலக்கை இன்னும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் சூர்யகுமார் 30 பந்துகளில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் 30 பந்துகளில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் (1822) 3000* ரன்களை கடந்து சூர்யகுமார் சாதனை படைத்தார். 

    • இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 5 போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் 64 சிக்சர்கள் அடித்திருந்த இங்கிலாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. 

    • அதிரடியாக விளையாடிய சிவம் துபே 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
    • 23 பந்துகளில் 65 ரன்கள் அடித்திருந்த நிலையில் சிவம் துபே ரன் அவுட்டனார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 18.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.

    இப்போட்டியில் அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்பிய நிலையில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சிவம் துபே 3வது இடத்திற்கு முன்னேறினார். 

    • முதல் 3 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியது
    • 4 ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 18.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.

    முதல் 3 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    தோல்விக்கு பின்பு பேசிய கேப்டன் சூர்யகுமார், "நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வேண்டுமென்றேதான் 6 பேட்டர்களுடன் நாங்கள் விளையாடினோம். 200 ரன்களை சேஸ் செய்யும்போது 2-3 விக்கெட்டுகளை இழந்தாலும் எங்களின் திறன் எப்படி உள்ளது என்பதை பரிசோதிக்கவே இவ்வாறு செய்தோம். டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள அனைவருமே இந்த போட்டியில் இடம்பெற வேண்டும் என நினைத்தோம்" என்று தெரிவித்தார்.

    • முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்தது.
    • தென் ஆப்பிரிக்கா 17. 5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பார்ல்:

    தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள பார்ல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்தது. ஹெட்மயர் அதிகபட்சமாக 32 பந்தில் 48 ரன் ( 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ், கார்பின் போச் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 17. 5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மர்க்ராம் 47 பந்தில் 86 ரன் ( 9 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் செஞ்சூரியனில் நாளை நடக்கிறது.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
    • இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 (5) என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

    அந்த வகையில் இரு நாட்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 9-வது தொடர் இதுவாகும். இந்த வகையில் பாகிஸ்தான் முதலிடத்தில் (10 தொடர் வெற்றி) உள்ளது.

    இரு நாட்டு தொடருடன், 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையையும் சேர்த்தால் இந்திய அணி தொடர்ச்சியாக தனதாக்கிய 11-வது தொடராக இது அமையும்.

    154 ரன் இலக்கை இந்திய அணி 60 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்துள்ளது. முழு உறுப்பினர் நாடுகள் இடையே நடந்த டி20 கிரிக்கெட்டில் 150 ரன்னுக்கு மேலான இலக்கை 10 ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்த முதல் அணி இந்தியா தான்.

    • இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மோதியது.
    • பிரேவிஸ் 56 பந்துகளில் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    SA20 லீக் என்றழைப்படும் தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் இந்தாண்டு நடந்து வருகிறது.

    SA20 லீக்கின் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மோதியது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய கேபிடல்ஸ் வீரர் டெவால்ட் பிரேவிஸ் சதம் அடித்து அசத்தினார். 56 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் SA20 லீக் வரலாற்றில் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை டெவால்ட் பிரேவிஸ் படைத்தார்

    • நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.
    • இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, அகஷர் படேலுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே, டிம் சீஃபர்ட் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அதிரடியாக விளையாடிய கான்வே, அந்த ஓவரில் 18 ரன்கள் விளாசினார்.

    9 பந்துகள் சந்தித்து 19 ரன்கள் எடுத்த நிலையில் கான்வே ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டிம் சீஃபர்ட் 24 ரன்னில் வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து பிலிப்ஸ் 19, டேரில் மிட்செல் 18, சாப்மேன் 10 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ரச்சின் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கடைசியில் வந்த கேப்டன் சாட்னர் 27 பந்தில் 47 ரன்கள் குவிக்க நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
    • பும்ரா, அகஷர் படேலுக்கு இந்த போட்டியில் இடம் கிடைக்கவில்லை.

    மும்பை:

    இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

    இதையடுத்து, கடந்த 21-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, அகஷர் படேலுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தியா:

    அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி.

    • இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது.
    • இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் களம் இறங்குகிறார்கள்.

    நாக்பூர்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்ெகாண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்த நியூசிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இவ்விரு அணிகளும் விளையாடும் கடைசி தொடர் இதுவாகும். இதனால் இது உலகக் கோப்பை போட்டிக்கு ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது. தங்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு இந்த போட்டியை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள்.

    சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை முதல்முறையாக பறிகொடுத்த இந்திய அணி, அதற்கு 20 ஓவர் போட்டியில் பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் பட்டேல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா வலு சேர்க்கிறார்கள்.

    ஒரு நாள் தொடரை வென்றதால் நியூசிலாந்து வீரர்கள் கூடுதல் நம்பிக்கையோடு இருப்பார்கள். கேப்டன் மிட்செல் சான்ட்னெர், டேரில் மிட்செல், பிலிப்ஸ், ராபின்சன், நீஷம், சோதி, ரச்சின் ரவீந்திரா என்று நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை. மேலும் அந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடுவதால் இங்குள்ள சூழல் அவர்களுக்கு பரீட்சயமானதே. அதனால் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பின்னங்கால் காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர் பிரேஸ்வெல் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

    இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும், 10-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.

    நாக்பூர் மைதானத்தில் இந்திய அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் 2016-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 79 ரன்னில் சுருண்டு தோற்றதும் அடங்கும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா அல்லது ஷிவம் துபே, அர்ஷ்தீப்சிங் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    நியூசிலாந்து: டிம் ராபின்சன், டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×