search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "t20 cricket"

    • இங்கிலாந்துடன் மோதிய 24 டி20 ஆட்டத்தில் இந்தியா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளும் கடைசியாக மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (ஜனவரி 22-ம் தேதி) நடைபெற இருக்க்கிறது.

    இந்தியா இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் நாளை மோதுவது 25-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 24 டி20 ஆட்டத்தில் இந்தியா 13 போட்டிகளிலும் இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

    இங்கிலாந்துக்கு எதிரான 25 ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை தக்க வைக்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி விவரம்:

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரெல், முகமது சமி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் அணியில் உள்ளனர்.

    • இந்த போட்டியில் பொல்லார் 36 ரன்களை விளாசினார்.
    • அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதல் 4 இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களே உள்ளனர்.

    துபாயில் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ்- எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பொல்லார் 36 ரன்களையும், தொடக்க வீரர் குசல் பெரேரா 33 ரன்களையும் சேர்த்தனர்.

    இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் ஃபகர் ஜமான் 52 பந்துகளில் 67 ரன்களையும், மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் 34 ரன்களையும், சாம் கரண் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூல டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 19.1 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    முன்னதாக இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டில் தனது 900 சிக்சர்களை நிறைவு செய்தார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டிய உலகின் 2-வது வீரர் எனும் சதனையையும் படைத்துள்ளார். அதன்படி வைப்பர்ஸ் அணி வீரர் பெர்குசன் வீசிய இன்னிங்ஸின் 19-வது ஓவரின் முதல் பந்திலேயே பொல்லார்ட் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவருக்கு முன்பு, கிறிஸ் கெய்ல் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார். முதல் 4 இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களே உள்ளனர்.

    அதிக சிக்ஸ்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:-

    கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 1056 சிக்சர்கள் (455 இன்னிங்ஸில்)

    கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) - 901 சிக்சர்கள் (613 இன்னிங்ஸ்)

    ஆண்ட்ரே ரஸல் (வெஸ்ட் இண்டீஸ்) - 727 சிக்சர்கள் (456 இன்னிங்ஸில்)

    நிக்கோலஸ் புரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 592 சிக்சர்கள் (350 இன்னிங்ஸில்)

    காலின் முன்ரோ (நியூசிலாந்து) - 550 சிக்சர்கள் (415 இன்னிங்ஸில்)

    • டபிள்யூ.பி.எல். தொடர் பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கி மார்ச் 1-ந் தேதி முடிகிறது.
    • தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகிறது.

    3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கி மார்ச் 1-ந் தேதி முடிகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் நடக்கிறது.

    போட்டி அட்டவணை:-

    பிப்ரவரி 14, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூரு வதோதரா

    பிப்ரவரி 15, 2025 மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - வதோதரா

    பிப்ரவரி 16, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs யுபி வாரியர்ஸ் - வதோதரா

    பிப்ரவரி 17, 2025 டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் - வதோதரா

    பிப்ரவரி 18, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் -வதோதரா

    பிப்ரவரி 19, 2025 யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் -வதோதரா

    பிப்ரவரி 21, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 22, 2025 டெல்லி கேபிடல்ஸ் vs யுபி வாரியர்ஸ் - பெங்களூரு

    பிப்ரவரி 23, 2025 ஓய்வு நாள்

    24, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 2025 டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 26, 2025 மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 27, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ்

    28 பிப்ரவரி 2025 டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

    1 மார்ச் 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ்

    • முதலில் விளையாடிய பரோடா 349 ரன்கள் குவித்தது
    • சிக்கிம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்தது.

    இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பரோடா- சிக்கிம் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பானு பனியா 51 பந்தில் 15 சிக்ஸ், 5 பவுண்டரியுடன் 134 ரன்கள் குவித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் பரோடா அணியில் 3 பேர் அரைசதம் அடித்து அசத்தினர்.

    சிக்கிம் அணி தரப்பில் சுனில் பிரசாத் ரோஷன் குமார் 4 ஓவர்கள் பந்து வீசி 81 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரோடா அணி உலக சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் காம்பியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் அடித்திருந்ததே டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிக்கிம் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    • குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ஊர்வில் படேல் படைத்துள்ளார்.
    • 2018-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் 32 பந்தில் சதம் விளாசினார்.

    சையது முஷ்டாக் டிராபி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் குஜராத் - திரிபுரா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் நாக்வாஸ்வல்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ஆர்யா தேசாய்- ஊர்வில் படேல் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடி காட்டிய ஊர்வில் படேல் 28 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் குஜராத் அணி 10.2 ஓவரில் 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஊர்வில் படேல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 113 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 12 சிக்சர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் 32 பந்தில் சதம் விளாசினார். அதனை தற்போது ஊர்வில் முறியடித்துள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஊர்வில் படேலை எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்பிரிக்க மண்டல தகுதி சுற்று நைஜீரியாவில் நடந்து வருகிறது.
    • லாகோஸ் நகரில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் நைஜீரியா- ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின.

    லாகோஸ்:

    2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்பிரிக்க மண்டல தகுதி சுற்று நைஜீரியாவில் நடந்து வருகிறது. இதில் லாகோஸ் நகரில் நடந்த 'சி' பிரிவு ஆட்டம் ஒன்றில் நைஜீரியா - ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நைஜீரியா செலிம் சாலு (112 ரன்) சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.

    இதைத்தொடர்ந்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐவரிகோஸ்ட் அணி, நைஜீரியா வீரர்களின் மிரட்டலான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 7.3 ஓவர்களில் வெறும் 7 ரன்னில் சுருண்டது. இதனால் நைஜீரியா அணி 264 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

    ஒற்றை இலக்க ரன்னில் அடங்கிய ஐவரிகோஸ்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்னில் சுருண்ட அணி என்ற மோசமான சாதனைக்கு சொந்தமானது. இதற்கு முன்பு கடந்த செம்டம்பரில் நடந்த சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் மங்கோலியா அணியும், 2023-ம் ஆண்டு ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ஐல் ஆப் மேன் தீவு அணியும் தலா 10 ரன்னில் அடங்கியதே மோசமான சாதனையாக இருந்தது.

    • டாஸ் வென்ற பரோடா அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 35 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார்.

    சயத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இன்று குஜராத் - பரோடா அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி 19.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பரோடா அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 35 பந்துகளில் 74 ரன்கள் குவித்து 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 5,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் தற்போது வரை ஹர்திக் பாண்ட்யா 5067 ரன்கள் மற்றும் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார்.
    • அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    செஞ்சுரியன்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. செஞ்சுரியனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது.

    திலக் வர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 56 பந்தில் 107 ரன்னும் (8 பவுண்டரி, 7 சிக்சர்), அபிஷேக் சர்மா 25 பந்தில் 50 ரன்னும் ( 3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகாராஜ், ஷிமிலேன் தலா 2 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மார்கோ ஜான்சன் 17 பந்தில் 54 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) கிளாசன் 22 பந்தில் 41 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கவர்த்தி 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா , அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    இந்த போட்டியின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. பயம் இல்லாமல் ஆடுங்கள் என்பதை தான் நாங்கள் அணியின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்துகிறோம். நாங்கள் எந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாட நினைத்தோமோ அதை செயல்படுத்தினோம். பயிற்சியின் போது அதிரடியாக ஆடுவதற்கு முயற்சி செய்கிறோம்.

    வீரர்கள் சில போட்டிகளில் எளிதில் ஆட்டம் இழந்தாலும் அதிரடியாக ஆட வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்கள். ஆக்ரோஷமும், உத்வேகமும் இருந்தால் மட்டுமே 20 ஓவரில் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும்.

    முதல் 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார். இதனால் இந்த ஆட்டத்தில் 3-வரிசையில் அனுப்பி வைத்தேன். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்ஸ்பர்கில் நாளை நடக்கிறது.

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
    • தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    செஞ்சூரியன்:

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்திலும், கெபேஹாவில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையலான 3-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் 202 ரன்கள் குவித்து எளிதில் வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி 2-வது ஆட்டத்தில் வேகமும் பவுன்சும் கூடிய ஆடுகளத்தில் தடுமாறியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்னில் அடங்கியது. இந்த குறைவான இலக்கை கொண்டும் எதிரணிக்கு இந்தியா கடும் குடைச்சல் கொடுத்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆனால் கடைசி கட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (47 ரன்) நிலைத்து நின்று ஆடி தங்கள் அணியை 19-வது ஓவரில் கரைசேர்த்தார்.

    தற்போதைய ஆட்டம் நடக்கும் செஞ்சூரியன் ஆடுகளத்திலும் 'வேகம்' கைகொடுக்கும். ஆனால் பேட்ஸ்மேன்கள் துல்லியமாக கணித்து ஆடினால் ரன்வேட்டை நடத்தலாம். இரு ஆட்டத்திலும் (7 மற்றும் 4 ரன்) சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் நடப்பு தொடரில் இதுவரை 2 ஓவர் மட்டுமே பந்து வீசியிருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக யாஷ் தயாள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    தென்ஆப்பிரிக்க அணியினர் முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். அந்த அணியில் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் மற்றும் மார்க்ரமிடம் இருந்து இன்னும் அதிரடி வெளிப்படவில்லை. அவர்கள் மிரட்டினால் தென்ஆப்பிரிக்காவின் பேட்டிங் வலுவடையும். கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 259 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது. இந்த முறையும் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் யுக்திகளை வகுத்துள்ளனர்.

    இந்திய அணி இங்கு 2018-ம் ஆண்டு ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடி இருக்கிறது. அதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

    மொத்தத்தில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணிக்கே தொடரை வெல்லும் வாய்ப்பு உருவாகும் என்பதால் இரு அணியினரும் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது யாஷ் தயாள், அர்ஷ்தீப்சிங், ஆவேஷ்கான், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.

    தென்ஆப்பிரிக்கா: ரையான் ரிக்கெல்டன், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மார்கோ யான்சென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், அன்டில் சிம்லேன் அல்லது லுதோ சிபம்லா, ஜெரால்டு கோட்ஜீ, கேஷவ் மகராஜ், இன்கபா பீட்டர்.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார்.
    • அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். 4 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - சூர்யகுமார் வங்கதேச பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர். 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து இந்த ஜோடி அதிரடி காட்டியது.

    அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர் 111 ரன்கள் எடுத்து சாம்சன் அவுட்டானார். இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர் களத்தில் இருந்த ரியான் பராக் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி வங்கதேச பந்துவீச்சை சிதறடித்து சிக்சர் மழை பொழிந்தனர். 13 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ரியான் பராக் ஆட்டமிழந்தார். 18 பந்துகளில் 47 ரன்கள் குவித்து பாண்ட்யா ஆட்டமிழந்தார்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது இந்திய அணி. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது 2 ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். முதல் இடத்தில 314 ரன்கள் அடித்து நேபாளம் அணி உள்ளது.

    • இந்திய அணி 10 ஓவர்களிலேயே 150 ரன்களை கடந்தது.
    • சாம்சன் - சூர்யகுமார் ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அதிரடியாக விளையாடி வருகிறது.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். 4 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - சூர்யகுமார் வங்கதேச பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர்.

    அதிரடியாக விளையாடிய இந்திய அணி 10 ஓவர்களிலேயே 150 ரன்களை கடந்தது. அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார்.

    இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார். 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடி வருகிறது.

    • 2-வது டி20 போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி சனிக்கிழமை நடக்கிறது.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக 200 ரன்கள் அடித்துள்ளது. மேலும் அந்த அணிக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக 196 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோர்.

    மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2024 டி20 உலகக் கோப்பையில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய பெரிய வெற்றியாகும். 

    ×