என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 Cricket"

    • முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள்.
    • இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

    இந்தியாவுக்கு வந்துள்ள சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது. இதில் முதலில் ஆடிய இலங்கையை 121 ரன்னில் மடக்கிய இந்தியா அந்த இலக்கை ஜெமிமா ரோட்ரிக்சின் அரைசதத்தால் (69 ரன்) 14.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள். பீல்டிங் தான் சற்று மந்தமாக இருந்தது. 4 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டனர். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தொடக்க ஆட்டத்தில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைத்தார். விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களில் 16 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இலங்கை பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

    இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்ற தனது நனவு நனவான உற்சாகத்தில் உள்ள 20 வயதான வைஷ்ணவியின் செயல்பாடு 2-வது ஆட்டத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
    • இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.

    சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 121 மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 

    • சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
    • வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் மந்தனா, தீப்தி ஷர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகுவதற்கு இரு அணிகளும் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ள தீவிரம் காட்டும். வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 26 இருபது ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இந்தாண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். குறிப்பாக இந்தாண்டு சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரின் இந்தாண்டு சராசரி 15 ஆக குறைந்துள்ளது.

    இந்நிலையில், நேற்றை போட்டியின் வெற்றிக்கு பின்பு பேசிய சூர்யகுமார் யாதவ், "நெட் பயிற்சியின் போது நான் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறேன். என் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்தையும் நான் முயற்சி செய்கிறேன். நான் ரன்களை அடிக்க முயற்சித்து வருகிறேன். நான் ஃபார்ம் அவுட்டில் இல்லை. அவுட் ஆஃப் ரன்ஸ் தான். மீண்டும் ரன்கள் குவிப்பேன்" என்று தெரிவித்தார்.

    • 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது
    • இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டியில் வருண் சக்கரவர்த்தி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    32 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி இந்த மைல்கல்லை அதிவேகமாக தொட்ட 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
    • இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

    தர்மசாலா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் மார்க்ரம் 61 ரன்கள் அடித்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா இதுவரை வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இவர் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,939 ரன்களும் அடித்துள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்ற உலக சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.

    இதற்கு முன் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

    • பும்ரா 81 போட்டியில் 101 விக்கெட்டை எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.
    • அர்ஷ் தீவ் சிங் 107 விக்கெட்டுகளை (69 போட்டி) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

    நியூ சண்டிகர்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2-வது ஆட்டம் நியூ சண்டிகரில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 74 ரன்னில் சுருட்டி 101 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்யும் வேட்கையில் இருக்கிறது.

    இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட்டை வீழ்த்தும் ஆர்வத்தில் உள்ளார். அவர் 121 போட்டிகள் விளையாடி 99 விக்கெட் எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட் கைப்பற்றினால் அவர் 100-வது விக்கெட்டை தொடுவார்.

    100-வது விக்கெட்டை எடுக்கும் 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெறுவார். கடந்த போட்டியின் போது பும்ரா 100 விக்கெட்டை தொட்டார். அவர் 81 போட்டியில் 101 விக்கெட்டை எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அர்ஷ் தீவ் சிங் 107 விக்கெட்டுகளை (69 போட்டி) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

    முதல் 20 ஓவர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்தி அரை சதத்தை பதிவு செய்தார். அதோடு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    • ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
    • சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளார்.

    அகமதாபாத்:

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.

    இந்த நிலையில், சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடர் வரும் 6-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் ரோகித் சர்மா, சையத் முஷ்டாக் அலி தொடருக்காக மும்பை அணியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அதன்படி காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அணியில் இடம் பிடித்தால் சஞ்சு சாம்சனை வழக்கம் போல கழற்றி விட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர் அணியில் இடம் பெறுவதே ஒரு கேள்வி குறியாக உள்ளது.

    • இந்தியா - இலங்கை அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இந்த தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    அதன்படி இந்த டி20 தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 2 போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.

    முதல் டி20 டிசம்பர் 21-ந் தேதியும் 2-வது டி20 போட்டி 23-ந் தேதியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 3,4,5-வது டி20 போட்டிகள் முறையே 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.

    • வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் மெக்லேனிங் டெல்லி அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
    • தீப்தி சர்மாவை ஏலத்தில் எடுப்பதற்கு போட்டி நிலவும்.

    புதுடெல்லி:

    மகளிர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

    5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் (2023, 2025), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு தடவையும் (2024) சாம்பியன் பட்டம் பெற்றன.

    4-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மெகா ஏலம் டெல்லியில் நாளை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.

    இந்த ஏலத்துக்கான பட்டியலில் 194 இந்திய வீராங்கனைகள், 83 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 277 பேர் இடம் பெற்றுள்ளனர். 5 அணிகளில் விளையாடுவதற்காக 50 இந்திய வீராங்கனைகள், 23 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த தீப்தி சர்மாவை ஏலத்தில் எடுப்பதற்கு போட்டி நிலவும்.

    வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் மெக்லேனிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்ட், இங்கிலாந்தின் சோபி எக்லஸ் டோன், நியூசிலாந்தின் சோபி டிவைன், அமீலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல் வார்ட் ஆகியோரை ஏலம் எடுக்கவும் அணிகள் இடையே போட்டி ஏற்படும்.

    • முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.
    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

    வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் 4 போட்டிகள் முடிவில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவரில் 140 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 38, ஷெப்பர்ட் 36 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அதிரடியாக விளையாடி 15.4 ஓவரில் 141 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கான்வே 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. 

    ×