என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 Cricket"

    • ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
    • சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளார்.

    அகமதாபாத்:

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.

    இந்த நிலையில், சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடர் வரும் 6-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் ரோகித் சர்மா, சையத் முஷ்டாக் அலி தொடருக்காக மும்பை அணியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அதன்படி காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அணியில் இடம் பிடித்தால் சஞ்சு சாம்சனை வழக்கம் போல கழற்றி விட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர் அணியில் இடம் பெறுவதே ஒரு கேள்வி குறியாக உள்ளது.

    • இந்தியா - இலங்கை அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இந்த தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    அதன்படி இந்த டி20 தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 2 போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.

    முதல் டி20 டிசம்பர் 21-ந் தேதியும் 2-வது டி20 போட்டி 23-ந் தேதியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 3,4,5-வது டி20 போட்டிகள் முறையே 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.

    • வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் மெக்லேனிங் டெல்லி அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
    • தீப்தி சர்மாவை ஏலத்தில் எடுப்பதற்கு போட்டி நிலவும்.

    புதுடெல்லி:

    மகளிர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

    5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் (2023, 2025), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு தடவையும் (2024) சாம்பியன் பட்டம் பெற்றன.

    4-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மெகா ஏலம் டெல்லியில் நாளை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.

    இந்த ஏலத்துக்கான பட்டியலில் 194 இந்திய வீராங்கனைகள், 83 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 277 பேர் இடம் பெற்றுள்ளனர். 5 அணிகளில் விளையாடுவதற்காக 50 இந்திய வீராங்கனைகள், 23 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த தீப்தி சர்மாவை ஏலத்தில் எடுப்பதற்கு போட்டி நிலவும்.

    வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் மெக்லேனிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்ட், இங்கிலாந்தின் சோபி எக்லஸ் டோன், நியூசிலாந்தின் சோபி டிவைன், அமீலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல் வார்ட் ஆகியோரை ஏலம் எடுக்கவும் அணிகள் இடையே போட்டி ஏற்படும்.

    • முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.
    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

    வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் 4 போட்டிகள் முடிவில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவரில் 140 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 38, ஷெப்பர்ட் 36 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அதிரடியாக விளையாடி 15.4 ஓவரில் 141 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கான்வே 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. 

    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்தது.

    சாக்ஸ்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

    முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து டி20 தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், நியூசிலாந்தின் இஷ் சோதி நேற்று 3 விக்கெட் சாய்த்தார். அவர் டி20 கிரிக்கெட்டில் 156 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

    இதன்மூலம் வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரகுமான் 155 விக்கெட் எடுத்த சாதனையை முறியடித்தார்.

    இந்தப் பட்டியலில் ரஷித் கான் 182 விக்கெட், டிம் சவுதி 164 விக்கெட்டுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

    • வெஸ்ட் இண்டீஸ் 12.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் அடித்திருந்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அடுத்த 6.3 ஓவர்களில் 78 ரன்களை அடித்து அசத்தியது

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

    முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இன்று 3 ஆவது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கான்வே 56 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    12.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை மட்டுமே எடுத்து அடித்திருந்தது. அப்போது 9 விக்கெட்டுக்கு கைகோர்த்த ரோமாரியோ ஷெஃபெர்ட் - ஷாமர் ஸ்பிரிங்கர் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை நாளா பக்கமும் பறக்கவிட்டு ரன்களை சேர்த்தது.

    இந்த ஜோடி அடுத்த 6.3 ஓவர்களில் 78 ரன்களை சேர்த்தது. கடைசி 7 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷாமர் ஸ்பிரிங்கர் தனது விக்கெட்டை பறிகொடுக்க இறுதி ஓவரில் ரோமாரியோ ஷெஃபெர்ட்டும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் 19.5 ஓவர்கள் முடிவில் 168 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டமிழந்தது. இதன்மூலம் 9 ரன்கள் விதிசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ரோமாரியோ ஷெஃபெர்ட் 49 ரன்னும் ஷாமர் ஸ்பிரிங்கர் 39 ரன்னும் அடித்து அவுட்டாகினர்.

    இந்த வெற்றியின் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றது.

    • இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
    • மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ் பேனில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா புதிய சாதனையை நோக்கி இருக்கிறார். அவர் இன்று ஒரு விக்கெட் எடுத்தால் 100-வது விக்கெட்டை தொடுவார். 31 வயதான அவர் 79 ஆட்டத்தில் விளையாடி 99 விக்கெட் எடுத்துள்ளார்.

    100-வது விக்கெட்டை எடுக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெறுகிறார். அர்ஷ் தீப் சிங் 105 விக்கெட்டுடன் (67 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். பும்ரா இந்த தொடரில் 3 விக்கெட்டே எடுத்துள்ளார்.

    சர்வதேச அளவில் 33 வீரர்கள் 100 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத்கான் 182 விக்கெட்டுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    டிம் சவுத்தி (நியூசி லாந்து) 164 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், முஷ்டா பிசுர் ரகுமான் (வங்காள தேசம்) 155 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.

    • கடந்த 2 T20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    • இன்றைய கடைசி போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.

    இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    • அதிரடியாக விளையாடிய மார்க் சாப்மேன் 28 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார்.
    • கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரோவ்மென் பாவெல் 16 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

    இன்று 2 ஆவது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய மார்க் சாப்மேன் 28 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து 208 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 94 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

    இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 7 ஓவர்களில் 110 ரன்கள் குவித்தும் 4 ரன்களில் வெற்றியை தவறவிட்டது. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 204 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது.

    கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரோவ்மென் பாவெல் 16 பந்துகளில் 45 ரன்னும் ரோமாரியோ ஷெஃபெர்ட் 16 பந்துகளில் 34 ரன்னும் அடித்து அவுட்டாக்கினர். மேத்யூ போர்டே 13 பந்துகளில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நியூசிலாந்து அணி தரப்பில், சோதி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனாகியது.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது.
    • டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.

    ஆக்லாந்து:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 53 ரன் எடுத்தார். ரோவ்மன் பவல் 33 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, போல்க்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஆனாலும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து போராடி 55 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.

    • 3 ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
    • சுப்மன் கில் வருகையால் சஞ்சு சாம்சனின் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இப்போட்டியில் சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சுப்மன் கில் வருகையால் மிடில் ஆர்டர் பினிஷிங் என மாறி மாறி களமிறக்கப்பட்டார். இப்போது அணியில் இருந்தும் டிராப் செய்யப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனின் டி20 கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி மாறியுள்ளது.

    ×