search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shivam dube"

    • ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது.
    • தல டோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சூரி பதிவிட்டுள்ளார்

    ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    போட்டியில் அதிரடியாக ஆடிய ரச்சின் 46 ரன்கள் விளாசினார். 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.

    குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர், ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இந்த போட்டியை நடிகர் சூரி நேரில் கண்டு கழித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில். Fantastic Atmosphere. அற்புதமான ரசிகர்கள். சென்னை என்றாலே தனி கெத்து தான். நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க...தல டோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று சூரி பதிவிட்டுள்ளார். 

    • 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்த ரச்சின் எதிர்பாரதவிதமாக ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
    • 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா- ருதுராஜ் களமிறங்கினர். ருதுராஜ் 1 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தமிழக வீரர் சாய் கிஷோர் மிஸ் செய்தார். முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே எடுத்த சிஎஸ்கே அதன்பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    20 பந்துகளில் 46 ரன்கள் குவித்த ரச்சின் எதிர்பாரதவிதமாக ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணி 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த ரகானே 12 ரன்னிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் 46 ரன்னிலும் வெளியேறினார்.

    இதனையடுத்து துபே- மிட்செல் ஜோடி சேர்ந்து குஜராத் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த இளம் வீரர் ரிஸ்வி அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர், ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    • வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
    • இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதுதான் என VIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். தாய் தந்தையரை மதிக்க வேண்டும். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ்-க்கு விளையாடியதுதான். இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.

    இவ்வாறு துபே கூறினார்.

    இதுவரை 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சிவம் துபே, 1106 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் அதிக பட்சமாக 95 ரன்கள் எடுத்துள்ளார். 2019 முதல் ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த இவர், பெரிதாக சோபிக்கவில்லை.

    2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் விளையாடிய அவர் 24 போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார். 2022, 2023-ம் ஆண்டில் சென்னை அணியில் இடம் பிடித்த இவர் 27 போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்ற அணிகள் இவரை பெரிதும் கண்டுகொள்ளாத நிலையில் சென்னை அணியின் கேப்டன் டோனி இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தார்.

    அந்த வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×