என் மலர்
நீங்கள் தேடியது "shivam dube"
- ஷிவம் துபே 2019-ம் ஆண்டு இந்திய டி20 அணிக்கு அறிமுகமானார்.
- அவர் களமிறங்கிய முதல் போட்டியில் இந்தியா, வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே. இவர் 2019 நவம்பர் 3-ம் தேதி டெல்லியில் வங்கதேசத்துக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 35 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அவரது முதல் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அவரது 5-வது டி20 போட்டியில், திருவனந்தபுரத்தில் வங்கதேசத்திடம் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆனால், அதன் பிறகு, ஷிவம் துபே இடம்பெற்ற எந்த டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி அடையவில்லை. 2020 ஜனவரியில் நியூசிலாந்தை 5-0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் செய்த இந்திய அணியில் ஷிவம் துபேவும் இடம் பெற்று இருந்தார். அந்த ஐந்து போட்டிகளிலும் அவர் விளையாடினார்.
2024-ல் 15 டி20 போட்டிகளில் துபே விளையாடினார். இதில் டி20 உலகக் கோப்பையில் எட்டு போட்டிகள் அடங்கும். துபே இடம் பெற்ற அந்த போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியில் அவர் ஆரம்பத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால், கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 5-வது டி20 போட்டியில் பேட்டிங்கில் முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், பந்துவீச்சில் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியும் இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.
இந்நிலையில் துபேவின் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்து அவரைப் பாராட்டியது.
"துபே விளையாடினால், இந்தியா வெற்றி பெறும். 30-0 மற்றும் இன்னும் வலுவாகிக் கொண்டே செல்கிறது," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவிற்காக 35 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஷிவம் துபே 26 முறை பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். நான்கு அரை சதங்கள் உட்பட மொத்தம் 531 ரன்கள் குவித்துள்ளார். இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்ததே இந்திய அணிக்கான அவரது சிறந்த ஸ்கோர் ஆகும்.
டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக 24 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். 2019-ம் ஆண்டு நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நான்கு ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
- இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
- ஜம்மு காஷ்மீர் அணியிடம் தோல்வியடைந்தது.
அரியாணாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 தொடரில் பங்கேற்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே இருவரும் மும்பை அணி ரஞ்சி கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் ஆளுக்கு ஒரு போட்டியில் விளையாடினர்.
மேகாலயாவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதே நேரத்தில் எலைட் குரூப் ஏ-வில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற மற்றொரு அணி ஜம்மு காஷ்மீர் ஆகும்.
அக்டோபரில் மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் சூர்யகுமார் இடம்பெற்றார். சிவம் துபே இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய நட்சத்திர அணியில் விளையாடினார். மும்பை அணி கடந்த மாதம் சொந்த மைதானத்தில் ஜம்மு காஷ்மீர் அணியிடம் தோல்வியடைந்தது.
மும்பை அணி:
அஜிங்க்யா ரகானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், சிவம் துபே, ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷர்துல் தாக்கூர், ஷம்ஸ் முலானி, டனுஷ் கோட்யன், மோகித் அவாஸ்தி, சில்வஸ்டர் டி சொசா, ராய்ஸ்டன் டயஸ், அதர்வா அங்கொலெகர் மற்றும் ஹர்ஷ் டன்னா.
- காயம் காரணமாக நிதிஷ் ரெட்டி டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
- ரிங்கு சிங் 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் மற்றொரு வீரரான ரிங்கு சிங் காயம் காரணமாக 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வீரராக சிவம் துபே, மற்றும் ரமண்தீப் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3-வது போட்டியில் இருந்து இருவரும் இந்திய அணியில் சேர்வார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.
- மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உமர் நாசிர் மிர் இன்று நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, ரஹானே மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
31-வயது உமர் நாசிர் ஆக்ரோஷ பந்துவீச்சு காரணமாக மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. உமர் நாசிர் பந்துவீச்சில் ரோகித் சர்மா மூன்று ரன்களுக்கும், ரஹானே 12 ரன்களுக்கும், ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினர்.
கடந்த 2013 முதல் விளையாடி வரும் மிர் இதுவரை 57 போட்டிகளில் 138 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிர் 54 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் இதுவரை 32 விக்கெட்டுகளை கைப்ற்றியுள்ளார்.
புல்வாமாவை சேர்ந்தவரான உமர் நாசிர் மிர் கடந்த 2018-19 தியோதர் கோப்பை தொடரின் போது இந்தியா சி அணிக்காக விளையாடினார். ரஞ்சி கோப்பை தொடரில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை சார்பில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 51 ரன்களை எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் உமர் நாசிர் மிர் மற்றும் யுத்விர் சிங் தலா நான்கு விக்கெட்டுகளையும், ஆகிப் நபி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- முதலில் பேட்டிங் செய்த விதர்பா 221 ரன்கள் குவித்தது.
- மும்பை 19.2 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.
இந்தியாவில் சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் விதர்பா- மும்பை அணிகள் மோதின. முதலில் விளையாடிய விதர்வா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.
பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ரகானே ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரித்வி ஷா 26 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார். ரகானே 45 பந்தில் 84 ரன்கள் விளாசினார்.
ஷிபம் டுபே 22 பந்தில் 37 ரன்களும், சூரயான்ஷ் ஷெட்ஜ் 12 பந்தில் 36 ரன்களும் அடிக்க மும்பை அணி 19.2 ஓவரில் 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
222 இலக்கை எட்டியதன் மூலம் டி20 நாக்அவுட் போட்டியில் அதிக ரன்களை துரத்திப்பிடித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக 2010-ல் நடைபெற்ற பைசல் பேங்க் டி20 கோப்பை (Faysal Bank T20 Cup 2010) கோப்பையில் கராச்சி அணி ராவல்பிண்டி அணிக்கெதிராக 210 ரன்களை சேஸிங் செய்தது.
- வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஷிவம் துபே காயம் காரணமாக விலகினார்.
- அவருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் இடம் பிடித்துள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் மிகவும் பிரபல தனியார் பேட்டி நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஷிவம் துபே, அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அப்போது இவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் ஷிவம் துபேவிடம் யார் சிறந்த கேப்டன் டோனியா? ரோகித் சர்மா என கேட்கப்பட்டது. உடனே அனைவரும் அருமையான கேள்வி என சிரித்தனர். இதற்கு என்ன பதில் அளிக்கப்போகிறார் என ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர்.
உடனே துபே, சிஎஸ்கே அணியில் டோனி சிறந்த கேப்டன் இந்திய அணியில் ரோகித் சிறந்த கேப்டன் என கூறினார். உடனே ரோகித் சர்மா அருமையான பதில் என்பது போல சைகை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
KAPIL : Shivam, Which Captain you like the most ? Rohit or MS Dhoni ?
— ??????? (@Oyye_Senpai) October 5, 2024
ROHIT : fass gaya ye ab ?pic.twitter.com/fnUZm5pvUB
- முகமது நபிக்கு எதிராக பேசும் நசியா கான் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்ஸ்டாவில் பதிவிட்ட சிவம் துபே மனைவி.
- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என பாஜக தலைவர் கோரிக்கை
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான சிவம் துபே 2021 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அஞ்சும் கானை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் அஞ்சும் கான் இஸ்லாம் மதத்தையே பின்பற்றி வருகிறார்.
இந்நிலையில், அஞ்சும் கான் பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கானை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதவியில், முகமது நபிக்கு எதிராக தொடர்ச்சியாக நசியா கான் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று #arrestnaziaelahikhan என்ற ஹேஸ்டேக் உடன் அவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலானதை தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
தற்போது அந்த பதிவிற்கு பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கான் பதில் அளித்துள்ளார்.
அவரது பதிவில், நீங்கள் ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளீர்கள். நீங்கள் இப்போது இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல. எனக்கு எதிரான வன்முறையை தூண்டும் பொய்யான தகவலை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் பிசிசிஐ, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் டெல்லி காவல்துறையை டேக் செய்துள்ளார்.
Oh madam you married with a Hindu and according to Islam , sharia you are not part of islam now Anjum Dubey, Wife of Indian cricketer & CSK player Shivam Dubey, @IamShivamDube you are posting a provocative , false ,fabricated story encouraging violence against me @JayShah keep… pic.twitter.com/ZgSRTiNbAP
— Nazia Elahi Khan (Modi Ka Parivar) (@NaziaElahiKhan1) August 12, 2024
- அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமானது.
- உலகக் கோப்பை பயணம் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என ஷிவம் துபே கூறியுள்ளார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் என அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட ஷிவம் துபே, ஆரம்ப கட்டத்தில் தடுமாற்றமாகவே செயல்பட்டார். இதனால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வாருங்கள் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இறுதிப்போட்டியில் களமிறங்கிய அவர் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 16 பந்தில் 27 ரன்களை குவித்தார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை பயணம் தமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என சிவம் துபே கூறியுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த ஆதரவினாலேயே இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஷிவம் துபே தனியார் இணைய தளத்தில் பேசியதாவது:
டி20 உலகக் கோப்பை பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. இறுதிப்போட்டி மிக முக்கிய தருணமாக அமைந்தது. அன்றைய நாளில் நானும் அணியுடன் சேர்ந்து வெற்றியில் பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகக் கோப்பையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு பாடமாகும். பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உற்சாகப்படுத்தியது.
எனக்கு அசைக்க முடியாத, நம்பமுடியாத ஆதரவை கொடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நேர்மறையாக இருந்து கடினமாக உழைக்க ஊக்குவித்தனர். எனது திறமை மீது நம்பிக்கை வைத்த அவர்களின் வழிகாட்டுதல் என்னை நம்புவதற்கு உதவியது.
இந்த அனுபவம் வருங்காலத்தில் அணியின் வெற்றிக்காக என்னை இன்னும் வலுவாக மேம்படுத்த உதவுமென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
- இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது.
- சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன்.
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருந்தாலும் இந்திய அணியின் பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவில் இல்லை என்றே சொல்லலாம்.
குறிப்பாக ஷிவம் துபே தடுமாறுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடிய நிலையில் உலகக் கோப்பையில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிக்சர் அடிக்க மிகவும் தடுமாறி வருகிறார்.
இந்நிலையில் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது என தடுமாற்றம் குறித்து ஷிவம் துபே வெளிப்படையாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னுடைய ஃபார்மில் தடுமாறும் நான் செயல் முறையில் கவனம் செலுத்துகிறேன். ஆனால் இங்கே அழுத்தமில்லை. ஏனெனில் இங்கே அடிப்பது கடினம் என்றாலும் உன்னிடம் சிக்சர் அடிக்கும் திறமை இருப்பதால் அதை பயன்படுத்து என்று பயிற்சியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சிஎஸ்கே அணியில் நான் செய்ததை இந்த சூழ்நிலையில் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.
இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது. இங்கே முதல் பந்திலிருந்தே உங்களால் அடிக்க முடியவில்லை. நீங்கள் இங்கே நேரமெடுத்து விளையாட வேண்டியுள்ளது. எனவே கண்டிப்பாக சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன். ஏனெனில் இங்கே வலைப்பயிற்சியில் கூட அதிரடியாக விளையாட முடியவில்லை. பந்து வீசுவது நன்றாக இருந்தாலும் சிக்சர் அடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு துபே கூறினார்.
- துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.
- சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறக்கியுள்ள இந்திய அணியானது அயர்லாந்துக்கு எதிரான தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் சிவம் துபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சிவம் துபே பந்துவீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை பேட்டராக விளையாட வைக்க வேண்டும் என்பதே சரியான முடிவு. சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.
மேலும் சர்வதேச அளவில் சஞ்சு சாம்சன் இந்தியா அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். மேலும் துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.
ஒரு பேட்டாராக அவரை நீங்கள் பயன்படுத்து உள்ளீர்கள் எனில் அவரைவிட சிறந்த பேட்டிங் உக்தியை கொண்டுள்ள சாம்சனை நீங்கள் நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். ஏனெனில் சிவம் துபே சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடினாலும், சஞ்சு சாம்சனால் பந்தை தாமதமாக விளையாடுவதுடன் டைமிங்குடனும் விளையாட முடியும்.
மேலும் அவரால் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான புல் ஷாட்டும் விளையாட முடியும் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான அவரை பயன்படுத்துவது சிறந்த உத்தியாக இருக்கலாம்.
இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறினார்.
- ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.
- ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய சென்னை அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சிவம் துபே 13 பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார். துபே 992 பந்துகளில் 100 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார். ஒட்டு மொத்தமாக ரஸல் மற்றும் கெய்ல் ஆகியோருக்கு அடுத்தப்படியாக துபே உள்ளார்.
குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் விவரம்:-
சிவம் துபே -992
ஹர்திக் பாண்ட்யா - 1046
ரிஷப் பண்ட் - 1224
யூசப் பதான் -1313
யுவராஜ் சிங் - 1332
ஒட்டுமொத்தமாக குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் விவரம்:-
ரஸல் - 657 பந்துகள்
கெய்ல் - 943 பந்துகள்
சிவம் துபே - 992 பந்துகள்
ஹர்திக் பாண்ட்யா - 1046 பந்துகள்
பொல்லார்ட் - 1094
- ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது.
- தல டோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சூரி பதிவிட்டுள்ளார்
ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
போட்டியில் அதிரடியாக ஆடிய ரச்சின் 46 ரன்கள் விளாசினார். 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.
குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர், ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியை நடிகர் சூரி நேரில் கண்டு கழித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில். Fantastic Atmosphere. அற்புதமான ரசிகர்கள். சென்னை என்றாலே தனி கெத்து தான். நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க...தல டோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று சூரி பதிவிட்டுள்ளார்.