என் மலர்
நீங்கள் தேடியது "shivam dube"
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- இந்த போட்டியில் ஷிவம் துபே 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் (1-0) முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஆடும் லெவனில் ஷிவம் துபே இருந்து முதல் முறையாக இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.
2019-ம் ஆண்டில் இருந்து ஷிவம் துபே 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 3 போட்டிகள் முடிவில்லாமல் போனது. 56 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு தோல்வி அடங்கும். துபேவின் தொடர் வெற்றியை ஆஸ்திரேலிய அணி முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
- தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உதவித்தொகை செய்து வருகிறது.
- ஒருவருக்கு தலா 70 ஆயிரம் வீதம் 7 லட்சம் நிதியுதவி வழங்கினார் துபே.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 39 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதல் 4 இடங்களில் குஜராத், டெல்லி, ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் உள்ளன. இந்த தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 தோல்வி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதனால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எஞ்சிய 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 70 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் வருடாந்திரம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உதவித்தொகை செய்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 10 வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள அந்த சங்கம் தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி அளிக்கிறது.
அதன்படி தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TNSJA) விருதுகள் மற்றும் உதவித்தொகை விழாவில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஒருவருக்கு தலா 70 ஆயிரம் வீதம் உள்பட 7 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இது குறித்து துபே கூறியதாவது:-
சிஎஸ்கே அணி ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு சென்ற போது டாக்டர் பாபா அவர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்வது பற்றி சொன்னார். இது இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடியது. இந்த சிறிய உதவித்தொகை அவர்கள் நாட்டுக்காக பெரியளவு பாடுபடுவதற்கான உதவியைச் செய்யும்.
என்று கூறினார்.
- ரவி பிஷ்னோய் தனது முதல் 3 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
- அவருக்கு ரிஷப் பண்ட் வாய்ப்பு வழங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு ஓவரை கொடுத்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏப்ரல் 14-ம் தேதி லக்னோ- சென்னை அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 167 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. ஷிவம் துபே 43 ரன்களுடனும் கேப்டன் தோனி 26 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
இந்த போட்டியில் டெத் ஓவரில் ரவி பிஷ்னோயை பயன்படுத்தாதது தான் லக்னோவின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தெரிவித்தனர்.
அந்தப் போட்டியில் ரவி பிஸ்னோய் தனது முதல் 3 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அவருக்கு லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் டெத் ஓவரில் வாய்ப்பு வழங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு ஓவரை கொடுத்தார்.
இந்நிலையில் நீ கடைசி வரை பேட்டிங் செய்தால் ரவி பிஷ்னோய் பவுலிங் செய்ய வரமாட்டார் என்று தோனி கூறியதாக துபே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மஹி பாய் சில விஷயங்களை என்னிடம் சொன்னார். குறிப்பாக பிஸ்னோய்க்கு இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது. எனவே நீ கடைசி வரை விளையாடினால் பிஷ்னோய் பந்து வீச வர மாட்டார் என்று தோனி என்னிடம் சொன்னார். மறுபுறம் தோனி வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டார். அதைப் பயன்படுத்தி நான் விளையாடினேன்.
என்று துபே கூறினார்.
- வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
- இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதுதான் என VIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். தாய் தந்தையரை மதிக்க வேண்டும். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ்-க்கு விளையாடியதுதான். இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.
இவ்வாறு துபே கூறினார்.
இதுவரை 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சிவம் துபே, 1106 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் அதிக பட்சமாக 95 ரன்கள் எடுத்துள்ளார். 2019 முதல் ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த இவர், பெரிதாக சோபிக்கவில்லை.
2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் விளையாடிய அவர் 24 போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார். 2022, 2023-ம் ஆண்டில் சென்னை அணியில் இடம் பிடித்த இவர் 27 போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்ற அணிகள் இவரை பெரிதும் கண்டுகொள்ளாத நிலையில் சென்னை அணியின் கேப்டன் டோனி இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தார்.
அந்த வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
- 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்த ரச்சின் எதிர்பாரதவிதமாக ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
- 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா- ருதுராஜ் களமிறங்கினர். ருதுராஜ் 1 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தமிழக வீரர் சாய் கிஷோர் மிஸ் செய்தார். முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே எடுத்த சிஎஸ்கே அதன்பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
20 பந்துகளில் 46 ரன்கள் குவித்த ரச்சின் எதிர்பாரதவிதமாக ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணி 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த ரகானே 12 ரன்னிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் 46 ரன்னிலும் வெளியேறினார்.
இதனையடுத்து துபே- மிட்செல் ஜோடி சேர்ந்து குஜராத் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த இளம் வீரர் ரிஸ்வி அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர், ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
- ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது.
- தல டோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சூரி பதிவிட்டுள்ளார்
ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
போட்டியில் அதிரடியாக ஆடிய ரச்சின் 46 ரன்கள் விளாசினார். 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.
குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர், ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியை நடிகர் சூரி நேரில் கண்டு கழித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில். Fantastic Atmosphere. அற்புதமான ரசிகர்கள். சென்னை என்றாலே தனி கெத்து தான். நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க...தல டோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று சூரி பதிவிட்டுள்ளார்.
- ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.
- ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய சென்னை அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சிவம் துபே 13 பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார். துபே 992 பந்துகளில் 100 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார். ஒட்டு மொத்தமாக ரஸல் மற்றும் கெய்ல் ஆகியோருக்கு அடுத்தப்படியாக துபே உள்ளார்.
குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் விவரம்:-
சிவம் துபே -992
ஹர்திக் பாண்ட்யா - 1046
ரிஷப் பண்ட் - 1224
யூசப் பதான் -1313
யுவராஜ் சிங் - 1332
ஒட்டுமொத்தமாக குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் விவரம்:-
ரஸல் - 657 பந்துகள்
கெய்ல் - 943 பந்துகள்
சிவம் துபே - 992 பந்துகள்
ஹர்திக் பாண்ட்யா - 1046 பந்துகள்
பொல்லார்ட் - 1094
- துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.
- சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறக்கியுள்ள இந்திய அணியானது அயர்லாந்துக்கு எதிரான தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் சிவம் துபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சிவம் துபே பந்துவீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை பேட்டராக விளையாட வைக்க வேண்டும் என்பதே சரியான முடிவு. சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.
மேலும் சர்வதேச அளவில் சஞ்சு சாம்சன் இந்தியா அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். மேலும் துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.
ஒரு பேட்டாராக அவரை நீங்கள் பயன்படுத்து உள்ளீர்கள் எனில் அவரைவிட சிறந்த பேட்டிங் உக்தியை கொண்டுள்ள சாம்சனை நீங்கள் நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். ஏனெனில் சிவம் துபே சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடினாலும், சஞ்சு சாம்சனால் பந்தை தாமதமாக விளையாடுவதுடன் டைமிங்குடனும் விளையாட முடியும்.
மேலும் அவரால் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான புல் ஷாட்டும் விளையாட முடியும் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான அவரை பயன்படுத்துவது சிறந்த உத்தியாக இருக்கலாம்.
இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறினார்.
- இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது.
- சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன்.
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருந்தாலும் இந்திய அணியின் பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவில் இல்லை என்றே சொல்லலாம்.
குறிப்பாக ஷிவம் துபே தடுமாறுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடிய நிலையில் உலகக் கோப்பையில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிக்சர் அடிக்க மிகவும் தடுமாறி வருகிறார்.
இந்நிலையில் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது என தடுமாற்றம் குறித்து ஷிவம் துபே வெளிப்படையாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னுடைய ஃபார்மில் தடுமாறும் நான் செயல் முறையில் கவனம் செலுத்துகிறேன். ஆனால் இங்கே அழுத்தமில்லை. ஏனெனில் இங்கே அடிப்பது கடினம் என்றாலும் உன்னிடம் சிக்சர் அடிக்கும் திறமை இருப்பதால் அதை பயன்படுத்து என்று பயிற்சியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சிஎஸ்கே அணியில் நான் செய்ததை இந்த சூழ்நிலையில் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.
இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது. இங்கே முதல் பந்திலிருந்தே உங்களால் அடிக்க முடியவில்லை. நீங்கள் இங்கே நேரமெடுத்து விளையாட வேண்டியுள்ளது. எனவே கண்டிப்பாக சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன். ஏனெனில் இங்கே வலைப்பயிற்சியில் கூட அதிரடியாக விளையாட முடியவில்லை. பந்து வீசுவது நன்றாக இருந்தாலும் சிக்சர் அடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு துபே கூறினார்.
- அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமானது.
- உலகக் கோப்பை பயணம் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என ஷிவம் துபே கூறியுள்ளார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் என அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட ஷிவம் துபே, ஆரம்ப கட்டத்தில் தடுமாற்றமாகவே செயல்பட்டார். இதனால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வாருங்கள் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இறுதிப்போட்டியில் களமிறங்கிய அவர் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 16 பந்தில் 27 ரன்களை குவித்தார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை பயணம் தமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என சிவம் துபே கூறியுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த ஆதரவினாலேயே இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஷிவம் துபே தனியார் இணைய தளத்தில் பேசியதாவது:
டி20 உலகக் கோப்பை பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. இறுதிப்போட்டி மிக முக்கிய தருணமாக அமைந்தது. அன்றைய நாளில் நானும் அணியுடன் சேர்ந்து வெற்றியில் பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகக் கோப்பையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு பாடமாகும். பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உற்சாகப்படுத்தியது.
எனக்கு அசைக்க முடியாத, நம்பமுடியாத ஆதரவை கொடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நேர்மறையாக இருந்து கடினமாக உழைக்க ஊக்குவித்தனர். எனது திறமை மீது நம்பிக்கை வைத்த அவர்களின் வழிகாட்டுதல் என்னை நம்புவதற்கு உதவியது.
இந்த அனுபவம் வருங்காலத்தில் அணியின் வெற்றிக்காக என்னை இன்னும் வலுவாக மேம்படுத்த உதவுமென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
- முகமது நபிக்கு எதிராக பேசும் நசியா கான் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்ஸ்டாவில் பதிவிட்ட சிவம் துபே மனைவி.
- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என பாஜக தலைவர் கோரிக்கை
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான சிவம் துபே 2021 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அஞ்சும் கானை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் அஞ்சும் கான் இஸ்லாம் மதத்தையே பின்பற்றி வருகிறார்.
இந்நிலையில், அஞ்சும் கான் பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கானை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதவியில், முகமது நபிக்கு எதிராக தொடர்ச்சியாக நசியா கான் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று #arrestnaziaelahikhan என்ற ஹேஸ்டேக் உடன் அவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலானதை தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
தற்போது அந்த பதிவிற்கு பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கான் பதில் அளித்துள்ளார்.
அவரது பதிவில், நீங்கள் ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளீர்கள். நீங்கள் இப்போது இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல. எனக்கு எதிரான வன்முறையை தூண்டும் பொய்யான தகவலை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் பிசிசிஐ, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் டெல்லி காவல்துறையை டேக் செய்துள்ளார்.
- வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஷிவம் துபே காயம் காரணமாக விலகினார்.
- அவருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் இடம் பிடித்துள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் மிகவும் பிரபல தனியார் பேட்டி நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஷிவம் துபே, அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அப்போது இவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் ஷிவம் துபேவிடம் யார் சிறந்த கேப்டன் டோனியா? ரோகித் சர்மா என கேட்கப்பட்டது. உடனே அனைவரும் அருமையான கேள்வி என சிரித்தனர். இதற்கு என்ன பதில் அளிக்கப்போகிறார் என ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர்.
உடனே துபே, சிஎஸ்கே அணியில் டோனி சிறந்த கேப்டன் இந்திய அணியில் ரோகித் சிறந்த கேப்டன் என கூறினார். உடனே ரோகித் சர்மா அருமையான பதில் என்பது போல சைகை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






