தனது சிறப்பான ஆட்டத்திற்கு தோனியின் அறிவுரையே காரணம்.. ஷிவம் துபே நெகிழ்ச்சி

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் துபே 31 பந்தில் 66 ரன்கள் விளாசினார்.இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஷிவம் துபே தட்டிச் சென்றார்.
தனது சிறப்பான ஆட்டத்திற்கு தோனியின் அறிவுரையே காரணம்.. ஷிவம் துபே நெகிழ்ச்சி
Published on

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஷிவம் துபே தட்டிச் சென்றார்.

இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டத்திற்கு எம்.எஸ். தோனி அளித்த அறிவுரையே காரணம் என்று ஷிவம் துபே நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மஹி பாய் என்னிடம் சொன்னது. ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரி அடிக்கலாம் அல்லது ஒரு ரன் எடுக்கலாம் என்று தோனி எனக்குக் கூறினார். இது எனது பேட்டிங்கில் தெளிவை ஏற்படுத்தியது. அதனால் நான் ஆரம்பத்தில் வரும்போது அந்த விஷயம் எப்போதும் என் மனதில் இருக்கும்.

தோனியின் வழிகாட்டுதல் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இக்கட்டான சூழலில் இந்திய அணியை மீட்க அது உதவியது என துபே கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com