search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hardik pandya"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது.
    • டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது.

    2024 டி20 உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-

    டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்கு நீங்கள் சற்று அனுபவத்துடன் செல்ல வேண்டும். அத்தொடரில் இந்திய அணியை வழி நடத்தும் பொறுப்பை ஒரு அனுபவமிக்கவரிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். நீண்டகாலமாக விளையாடி வரும் அவருக்கு சூழ்நிலைகளை சமாளிப்பது, அழுத்தத்தை கையாள்வது போன்ற அம்சங்களில் அனுபவம் இருக்கிறது.

    டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது. எனவே ஒன்று நீங்கள் ரோகித் சர்மாவுடன் செல்ல வேண்டும். அல்லது ஹர்திக் பாண்ட்யா காயத்திலிருந்து எந்தளவுக்கு குணமடைந்து வருகிறார் என்பதை பார்த்து முடிவெடுக்க வேண்டும். ஆனாலும் உலகக்கோப்பைக்கு முன்பாக பாண்ட்யா அதிகப்படியான போட்டிகளில் விளையாடியிருக்க மாட்டார். எனவே அந்த முடிவும் பின்னடைவாகவே இருக்கும்.

    என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல காரணங்களுக்காக மும்பை அணிக்கு மீண்டும் வந்த உணர்வு மிகவும் சிறப்பானது.
    • இறுதியாக எனது முழு கிரிக்கெட் பயணமும் தொடங்கிய இடத்துக்கு திரும்பி வந்துள்ளேன்.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்களின் மினி ஏலம் வருகிற 19-ந் தேதி துபாயில் நடக்கிறது.

    இதற்கிடையே அணிகளில் தக்க வைக்கப்படும் வீரர்கள் மற்றும் கழற்றி விடப்படும் வீரர்களின் விவரங்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் அறிவித்தது.

    குஜராத் அணி கேப்டனான ஹர்த்திக் பாண்ட்யாவை வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதன்மூலம் மும்பை அணியில் ஹர்த்திக் பாண்ட்யா மீண்டும் இணைந்துள்ளார்.

    மும்பை அணிக்கு திரும்பியது தொடர்பாக ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி வந்துள்ளேன். பல காரணங்களுக்காக மும்பை அணிக்கு மீண்டும் வந்த உணர்வு மிகவும் சிறப்பானது. அவர்கள் என்னை 2013-ம் ஆண்டு முதல் கவனித்து வருகிறார்கள். இறுதியாக எனது முழு கிரிக்கெட் பயணமும் தொடங்கிய இடத்துக்கு திரும்பி வந்துள்ளேன். அவை என் வாழ்வின் முக்கியமான பகுதியாக இருந்தன.

    நான் என் வீட்டுக்கு திரும்பியது போல் உணர்கிறேன். நாம் ஒரு அணியாக வரலாற்றை உருவாக்கினோம். மீண்டும் ஒருமுறை மும்பை அணி வீரர்களுடன் சில அற்புதமான தருணங்களை உருவாக்க எதிர்பார்த்து இருக்கிறேன். மும்பை அணியில் மீண்டும் விளையாட ஆவலுடன் உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரசிகர்கள், அணி மற்றும் நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அணியின் ஒரு பகுதியாக இருப்பதும், அதை வழிநடத்துவதும் ஒரு முழுமையான கவுரவமாகும். எனது குடும்பத்தினருக்கும், எனக்கும் ஒரு வீரராகவும், தனிநபராகவும் கிடைத்த அன்பு, ஊக்கத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    குஜராத் அணியுடனான நினைவுகளும், அனுபவங்களும் என் இதயத்தில் என்றென்றும் ஒரு சிறப்பு இடத்தை பிடிக்கும். மறக்க முடியாத பயணத்துக்கு நன்றி" என்றார்.

    ஹர்த்திக் பாண்ட்யா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு கடந்த ஆண்டு புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

    குஜராத் அணி தனது முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹர்திக் தன்னுடைய ஒரிஜினல் அணியான மும்பைக்கு திரும்ப வேண்டும் என எங்களிடம் தெரிவித்தார்.
    • பாண்ட்யா முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பி உள்ளார். புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா தனது ஒரிஜினல் அணியான மும்பை இந்தியன்க்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாக குஜராத் அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத் அணியின் முதல் கேப்டனான ஹர்திக், இரண்டு சீசனிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் தன்னுடைய ஒரிஜினல் அணியான மும்பைக்கு திரும்ப வேண்டும் என எங்களிடம் தெரிவித்தார்.

    அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். மேலும் அவரது எதிர்கால முயற்சிகளில் அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேமரூன் கிரின் ஆர்சிபி அணிக்கு இணைந்துள்ளார்.

    இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு காலக்கெடு கொடுத்திருந்தது. இதனால், ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இதனையடுத்து குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேமரூன் கிரின் ஆர்சிபி அணிக்கு இணைந்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ள நிலையில் எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் ஒரு பதிவை பாண்ட்யா வெளியிட்டுள்ளார். அதில் இது பல அற்புதமான நினைவுகளைக் திரும்ப கொண்டுவருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவரை முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பயிற்சி பெற்றது குறித்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது.
    • ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை குஜராத் அணி எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அந்த பதிவில் உங்கள் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள் ஹர்திக் பாண்ட்யா என தெரிவித்திருந்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேமரூன் கிரின் பெங்களூர் அணியில் இணைந்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.
    • தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். காயம் முழுமையாக குணம் அடையாததால் ஹர்திக் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களிலும் ஹர்திக் பாண்ட்யா விலகி உள்ளார்.

    கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்பது குறித்து மருத்துவர்கள் குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. மேலும் அவர் 2 மாதங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடர் வருகிற 23-ந் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

    இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    • பாண்ட்யாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். காயம் முழுமையாக குணம் அடையாததால் ஹர்திக் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், உலக கோப்பையில் இருந்து விலகியது தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அதில், உலக கோப்பையின் எஞ்சிய பகுதியை நான் இழக்க நேரிடும் என்ற உண்மையை ஜீரணிக்க கடினமாக உள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் அவர்களை உற்சாகப்படுத்தி, உற்சாகத்துடன், அணியுடன் இருப்பேன். நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை.
    • காயம் குணமடையாததால் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். பரிசோதனையில் தசைநாரில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    இதனால் உலக கோப்பையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

    இந்நிலையில், காயம் முழுமையாக குணம் அடையாததால் ஹர்திக் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை.
    • நாக்-அவுட் சுற்றுக்கு முன்பாக அவர் முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது.

    பெங்களூரு:

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்த போது இடறி விழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். பரிசோதனையில் தசைநாரில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதனால் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் தற்போது பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டுள்ளார். கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி முன் இன்று அவருக்கு உடல்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதன் பிறகே அவர் எந்த போட்டிக்கு திரும்புவார் என்பது உறுதியாக தெரியவரும்.

    என்றாலும் வருகிற 29-ந்தேதி லக்னோவில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் ஆடமாட்டார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. நாக்-அவுட் சுற்றுக்கு முன்பாக அவர் முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. அதனால் அவருக்கு அதற்கு அடுத்த ஆட்டத்திலும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வங்காளதேசம் அணிக்கெதிராக பந்து வீசும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டது
    • 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் களத்தில் இருந்து வெளியேறினார்

    புனேயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றியை ருசித்துள்ளது.

    இந்த போட்டியின்போது ஹர்திக் பாண்ட்யா பந்து வீசும்போது காயம் அடைந்தார். அதன்பின் களம் இறங்கவில்லை. அடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் காயம் இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், ஆட்டம் முடிந்த பின்னர் ரோகித் சர்மா கூறியதாவது:-

    வங்காளதேசம் அணிக்கு எதிரான வெற்றி சிறப்பானது. நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று. முதலில் நாங்கள் சிறப்பான வகையில் ஆட்டத்தை தொடங்கவில்லை. ஆனால் மிடில் ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை நம்முடைய பக்கத்திற்கு திருப்பினர். அனைத்து போட்டிகளிலும் பீல்டிங் சூப்பராக இருந்தது. இது வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விசயம். அவர்களின் சிறந்த பங்களிப்பை கொடுக்க முடியும். பந்து வீச்சாளர்கள் எந்த லெந்தில் பந்து வீச வேண்டும் என்று புரிந்து வைத்துள்ளனர்.

    ஜடேஜா அபாரமாக பந்து வீசினார். கேட்ச் பிடித்தார். இருந்தபோதிலும், சதத்தை உங்களால் முந்தி செல்ல முடியாது.

    ஒரு அணியாக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். வீரர்கள் அறையில் சிறந்த பீல்டருக்கு பதக்கம் வழங்குவது, உத்வேகம் அடைவதற்காகத்தான்.

    ஹர்திக் பாண்ட்யா சற்று வலி இருப்பதாக உணர்கிறார். மிகப்பெரிய அளவில் கவலை அளிக்கும் வகையில் அவரது காயம் இல்லை. நாளை காலை (இன்று) அவர் எழுந்து நடக்கும்போது எவ்வாறு உணர்கிறார் என்று பார்க்க வேண்டும். அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திட்டமிடுவோம். ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வந்து ஆதரவு அளிக்கிறார்கள்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.