search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hardik pandya"

    • முதல் இன்னிங்சில் 270 ரன்கள் என்ற திட்டத்துடன் விளையாட முடியாது.
    • மும்பை அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் பவுண்டரி, சிக்சர்கள் கிடைத்தன- கம்மின்ஸ்

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 246 ரன்கள் அடித்தது. இதனால் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    இது பைத்தியக்காரத்தனமாக இருந்தது. இல்லையா என்ன? என கேட்டுக்கொண்டார். நாங்கள் பந்து வீசி முடிக்கும் வரை, போட்டி மிகவும் நெருக்கமானதாகவே சென்னறது. மும்பை அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் பவுண்டரி, சிக்சர்கள் கிடைத்தது. பந்து மைதானத்தை சுற்றிக் கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் இறுதியாக சிறப்பான வகையில் ஆட்டத்தை முடித்தோம்.

    அபிஷேக் சர்மா ஆட்டம் உண்மையிலேயே ஈர்க்கும் வகையில் இருந்தது. நீங்கள் ஐபிஎல் தொடரில் நெருக்கடியில் விளையாட வேண்டியிருக்கும். ஆனால், அவர் அதிகப்படியான சுதந்திரத்துடன் விளையாடுகிறார். முதல் இன்னிங்சில் 270 ரன்கள் என்ற திட்டத்துடன் விளையாட முடியாது. ஆனால், நாங்கள் நேர்மறையான, ஆக்ரோசமான ஆட்டத்துடன் போட்டியை எடுத்துச் செல்ல விரும்பினோம். சொந்த மைதானத்தில் சூழ்நிலை அற்புதமாக இருந்தது. நம்பமுடியாத வகையில் ரசிகர்களின் ஆரவாரம் இருந்தது.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    டாஸ் சுண்டப்படும்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் அடிக்கும் என்று உண்மையிலான நினைக்கவில்லை. ஆடுகளம் சிறப்பாக இருந்தது. 277 என்பது விசயம் அல்ல, நீங்கள் மோசமாக அல்லது நன்றாக பந்து வீசினாலும், எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவித்தால், அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள், அவ்வளவுதான். அவர்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 500 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட நிலையில், ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, பந்து வீசுவது மிகவும் கஷ்டம்.

    நாங்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சில விசயங்கள் செய்திருக்கனும். நாங்கள் இளம் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளோம். பாடம் கற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு ஹர்திப் பாண்ட்யா தெரிவித்தார்.

    • இந்தியாவில் ஒரு வீரருக்கு எதிராக ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதை பார்ப்பது அரிதாக உள்ளதாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
    • இந்தியாவில் இதை நான் கேட்டதில்லை என பீட்டர்சன் கூறினார்.

    அகமதாபாத்:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த சீசனில் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கிய மும்பை அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பையின் கேப்டனாக முதல் முறையாக டாஸ் போட வந்தபோது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் சேர்ந்து பாண்ட்யாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பவுண்டரி எல்லைக்கு அருகே வந்தபோதெல்லாம் அவருக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர்.

    இந்நிலையில் இந்தியாவில் ஒரு வீரருக்கு எதிராக ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதை பார்ப்பது அரிதாக உள்ளதாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். அதற்கு இந்தியாவுக்காக பாண்ட்யா தொடர்ந்து விளையாடினால் மட்டுமே மீண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கலாய்க்கும் வகையில் பதிலளித்தார்.

    இது பற்றி நேரலையில் அவர்கள் பேசியது பின்வருமாறு:-

    கெவின் பீட்டர்சன்: கேப்டனாக இருக்கும் பாண்ட்யா களத்தில் டைவ் அடித்து பந்தை தடுப்பதற்காக செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் எதிர்ப்பு கூச்சலிடுகின்றனர். இந்தியாவில் இதை நான் கேட்டதில்லை.

    இயன் பிஷப்: பாண்டியா இங்கே ரசிகர்களை வெல்ல முடியுமா? அவர்களின் மனதை மீண்டும் வெல்வதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்?

    பிரையன் லாரா: இந்தியாவுக்காக விளையாடுங்கள். அடுத்த முறை அவர்கள் இங்கே விளையாடுவார்கள் என்று பாண்ட்யாவை கலாய்க்கும் வகையில் பதிலளித்தார். இதற்கு கெவின் பீட்டர்சன் மற்றும் இயன் பிஷப் இருவரும் சிரித்தார்கள்.

    • நேற்றைய போட்டியின் நடுவே நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது.
    • உடனே சுற்றியிருந்த ரசிகர்கள் ஹர்திக்.. ஹர்திக் என முழக்கமிட்டனர்.

    ஐபிஎல் கிரிக்கெட்டின் தொடரில் 5-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 169 ரன்கள் சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தொடக்கம் முதல் முடிவு வரை சில சம்பவங்கள் அரங்கேறியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே கோபத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. அந்த கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்து தள்ளினர்.

    அந்த வகையில் இந்த போட்டிக்கான டாஸ் போடும் போது மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா என அழைக்கும் போது, சுற்றியிருந்த ரசிகர்கள் ரோகித்.. ரோகித் என முழக்கமிட்டனர். இதனால் ஹர்திக் பாண்ட்யா முகம் சற்று மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    அதை தொடர்ந்து பாண்ட்யா பீல்டிங் சரி செய்யும் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை பல இடங்களில் மாற்றி மாற்றி பீல்டிங் நிற்க சொன்னார். இந்த சம்பவத்தை பார்த்த ரசிகர்கள் பாண்ட்யாவை திட்டி வருகின்றனர். இந்த வீடியோவும் வைரலானது.

    இதனையடுத்து போட்டியின் போது நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. ரோகித்.. ரோகித் என முழக்கமிட்ட ரசிகர்கள் நாயை பார்த்ததும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டனர்.

    மேலும் அவர் பெவிலியனுக்கு செல்லும் போது அவரை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். ரோகித் தான் எப்போதுமே மும்பை கேப்டன் என பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் பேனர் வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரோகித் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் என அனைவரும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    • குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை.
    • 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார்.

    அகமதாபாத்:

    ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. சுப்மன்கில் தலைமையிலான குஜராத் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற்றது.

    குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை. 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார். ஹர்த்திக் பாண்ட்யா, லுகே வுட் ஆகியோருக்கு பிறகே வீசினார்.

    ஹர்த்திக் பாண்ட்யாவின் இந்த முடிவு தொடர்பாக டெலிவிஷன் வர்ணனையாளர்களான கவாஸ்கர், பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    பும்ரா முதல் ஓவரை வீசாதது ஏன்? எனக்கு இது புரியவில்லை என்று பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கவாஸ்கர் பதில் அளிக்கும்போது, மிக நல்ல கேள்வி, மிக மிக நல்ல கேள்வி என்றார்.

    • மோகித் சர்மா, ரஷித் கான் 16, 17-வது ஓவர்களில் முறையே 4 மற்றும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.
    • மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 12 ரன்களே அடிக்க முடிந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. டெவால்டு பிரேவிஸ் 37 பந்தில் 46 ரன்களும், திலக் வர்மா 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில், அதாவது கடைசி 30 பந்தில் 43 ரன்கள் தேவைப்பட்டது. இது எளிதான இலக்குதான். மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குஜராத் பந்து வீச்சாளரக்ள் துல்லியமாக பந்து வீச இயலாது என கருதப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றி பெற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 16-வது ஓவரில் மோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பிரேவிஸ்-ஐ அவுட்டாக்கினார். அடுத்து டிம் டேவிட் களம் இறங்கினார். அந்த நேரத்தில் 25 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக களம் இறங்கி ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ், பவுண்டரி பறக்க விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், டிம் டேவிட் களம் இறக்கப்பட்டார். 17-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரில் அவர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததன் காரணமாகவே மும்பை அணிக்கு நெருக்கடி அதிகமானது.

    அதன்பின் 3 ஓவரில் மும்பைக்கு அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் மோகித் சர்மா 9 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். 27 ரன் தேவை என்ற நிலையில் 19-வது ஓவரில் ஜான்சன் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    19 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்னில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.

    இந்த நிலையில் மும்பை அணி தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுதான் காரணம் என இர்பான் பதவி விமர்சனம் செய்துள்ளார்.

    டிம் டேவிட்டிற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், ரஷித் கான் பந்தை எதிர்கொள்ள ஹர்திக் பாண்ட்யா விரும்பவில்லை. இதனால் டிம் டேவிட்டை களம் இறக்கினார். இது மும்பை அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. இது மோசமான கேப்டன்சி என விமர்சித்துள்ளார்.

    18-வது ஓவரின் கடைசி பந்தில் டிம் டேவிட் (10 பந்தில் 11 ரன்) ஆட்டமிழந்ததும் ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். இவர் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார்.

    • ரோகித் சர்மா பொதுவாக ஸ்லிப், மிட்ஆஃப், மிட்ஆனில் பீல்டிங் செய்வார்.
    • நேற்று லாங்ஆன் திசையில் ரோகித் சர்மா பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா திடீரென நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக ரோகித் சர்மா மனைவி அணி நிர்வாகத்திற்கு எதிராக கருத்துக்கூட தெரிவித்திருந்தார்.

    மூன்று விடிவிலான இந்திய கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை நீக்கியதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பிற்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கான முகாமில்தான் இருவரும் சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவிக் கொண்டனர்.

    இந்த நிலையில்தான் நேற்றைய போட்டியின்போது ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவை அலைக்கழித்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

    பொதுவாக ரோகித் சர்மா ஸ்லிப், மிட்-ஆன் அல்லது மிட்-ஆஃப் திசையில்தான் பீல்டிங் செய்வார். அவரது உடல்வாகு பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்ய ஒத்துழைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும் ரிவியூ கேட்க வேண்டுமென்றால் வசதியாக இருக்கும் என்பதால் அருகில் நிற்பார்.

    ஆனால் நேற்று பெரும்பாலும் லாங்-ஆன் திசையில் ரோகித் சர்மா பீல்டிங் செய்ததை பார்க்க முடிந்தது. கடைசி ஓவர் கோட்ஸி வீசினார். இந்த ஓவரின்போது திடீரென ஹர்திக் பாண்ட்யா லாங்-ஆன் திசையில் நின்ற பீல்டரை அருகில் அழைத்தார். மிட்-ஆன் அருகில் நின்றிருந்த ரோகித் சர்மாவை லாங்-ஆன் திசைக்கு போகும்படி கேட்டுக்கொண்டார்.

    அப்போது ரோகித் சர்மா தன்னை எங்கே போகச் சொல்வார் என சாதாரணமாக நின்று கொண்டிருந்தார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா ரோகித் சர்மாவை அழைத்து நீங்கள் அங்கே செல்லுங்கள் என்பதுபோல் சைகை காட்டுவார். அதற்கு ரோகித் சர்மா, நானா... எனக் கேட்க, ஹர்திக் பாண்ட்யா நீங்கள்தான்... என வலியுறுத்துவார். உடனே ரோகித் சர்மா சற்று புன்னகையுடன் லாங்ஆன் நோக்கி ஓடுவார்.

    இதுபோன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், ரோகித் சர்மாவை அலைக்கழிப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சஜகமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தபோது ரோகித் சர்மா பும்ரா, திலக் வர்மா உள்ளிட்டோருடன் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் அணி இரண்டு குழுவாக உள்ளதா? என ரசிகர்கள் முணுமுணுத்தனர்.

    பிசிசிஐ உடன் மோதல் போக்கை கடைபிடித்த இஷான் கிஷன் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஹர்திக் பாண்ட்யா அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
    • ஹர்திக் பாண்ட்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (மார்ச் 22) துவங்கியது. பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த நிலையில், ஐ.பி.எல். தொடர் துவங்கும் முன்பு பல அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டனர். எனினும், மும்பை மற்றும் சென்னை அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

     

    மும்பை அணியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கேப்டன் மாற்றப்பட்ட காரணத்தால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள அக்கவுண்ட்களின் ஃபாளோவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

    அந்த வகையில் ஐ.பி.எல். போட்டிகள் துவங்கும் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "ஐ.பி.எல். எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. ஐ.பி.எல். எனக்கு அடையாளத்தை கொடுத்துள்ளது. ஐ.பி.எல். இல்லையெனில் நான் பரோடாவில் இருந்திருப்பேன். ஆனால் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். அங்கு வேறொரு ஹர்திக் இருந்திருப்பார்," என்று தெரிவித்துள்ளார்.



    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
    • பாண்ட்யா, ரோகித்தை நோக்கி சென்று கட்டியணைத்து சிரித்த முகத்துடன் பேசி சென்றார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த முறை மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுகிறார். இவர் கேப்டனாக செயல்படுவது ரோகித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாண்ட்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    அந்த வகையில் நேற்றும் ஹர்திக் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியானது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் ரோகித் மற்றும் பாண்ட்யா ஒன்றாக இருப்பது போல காட்சிகள் இடம் பெறவில்லை. மற்ற ஜூனியர் வீரர்களுடன் ரோகித், பாண்ட்யா தனித்தனியாக இடம் பெற்றிருந்தனர். அந்த வீடியோவின் முடிவில் மும்பை வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்க ரோகித் மற்றும் பாண்ட்யா சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதுவும் இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. இதுவும் ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.

    மேலும் மும்பை இந்தியன்ஸ் செய்தியாளர் சந்திப்பின் போது ரோகித் கேப்டன்சி குறித்த கேள்விக்கு பாண்ட்யா, பவுச்சர் இருவரும் பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர். இந்த இரு சம்பவங்களுக்கும் சேர்த்து பாண்ட்யாவை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.

    இந்நிலையில் இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று ஒரு வீடியோவை மும்பை வெளியிட்டள்ளது. அதில் பயிற்சி குறித்து மும்பை வீரர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்போது பாண்ட்யா, ரோகித்தை நோக்கி சென்று கட்டியணைத்து சிரித்த முகத்துடன் பேசி சென்றார். இருவரும் சிரித்த முகத்துடன் பேசி சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஹேஸ்டேக்களும் டிரெண்டாகி வருகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டு வீரர்கள் அவர்களது அணியில் இணைந்த வண்ணம் உள்ளது.

    அந்த வகையில் இந்திய வீரர்களான ரோகித், விராட் ஆகியோர் அவர்களது அணியான மும்பை, பெங்களூர் அணியில் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் RIP ஹர்திக் பாண்ட்யா என்ற ஹேஸ்டேக் மற்றும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஹேஸ்டேக்களும் டிரெண்டாகி வருகிறது. இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட வீடியோவும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பும் தான் காரணம். மும்பை நிர்வாகம் வெளியிட்ட வீடியோவில் ரோகித் மற்றும் பாண்ட்யா ஒன்றாக இருப்பது போல காட்சிகள் இடம் பெறவில்லை. மற்ற ஜூனியர் வீரர்களுடன் ரோகித், பாண்ட்யா தனித்தனியாக இடம் பெற்றிருந்தனர்.

    அந்த வீடியோவின் முடிவில் மும்பை வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்க ரோகித் மற்றும் பாண்ட்யா சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதுவும் இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. ரோகித் சோகமான முகத்துடன் காணப்பட்டனர். இதற்கு ரசிகர்கள் ரோகித்துடன் பாண்ட்யா உட்கார்ந்து இருப்பதை பார்க்க வேதனையாக உள்ளது என தெரிவித்திருந்தனர்.

    மேலும் நேற்றைய மும்பை இந்தியன்ஸ் செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரைக்கையாளர்கள் ரோகித் கேப்டன்சி குறித்த கேள்விக்கு பாண்ட்யா, பவுச்சர் இருவரும் பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர். இந்த இரு சம்பவங்களுக்கும் சேர்த்து பாண்ட்யாவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

    கடந்த 2 வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யாவை இந்த வருடம் மும்பை அணி வாங்கி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. ஹர்திக்கை கேப்டனாக நியமித்ததற்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது வரை விமர்சித்து வருகின்றனர்.

    • ரோகித் சர்மா குறித்த கேள்விக்கு ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தார்.
    • ஆனால் ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஏன் என்ற கேள்விக்கு பாண்ட்யா - பவுச்சர் பதிலளிக்காமல் இருந்தனர்.

    2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதனால் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யாவை இந்த வருடம் மும்பை அணி வாங்கி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக மட்டும் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்திக்கை கேப்டனாக நியமித்ததற்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது வரை விமர்சித்து வருகின்றனர்.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் குறித்து கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அவ்வபோது வைரலாகி வருவதுண்டு. அந்த வகையில் இன்று ஹர்திக் மற்றும் பவுச்சர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றனர்.

    இந்நிலையில் ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்று பத்திரைக்கையாளர் கேட்ட கேள்விக்கு ஹர்திக் மற்றும் பயிற்சியாளர் பவுச்சர் மெளனமாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த சந்திப்பின் போது ரோகித் சர்மா குறித்து கேள்வி கேட்க்கப்பட்ட போது பதிலளித்த பாண்ட்யா, கேப்டன்சி பற்றிய குறிப்புகள் ஆவணங்களில் இருந்ததாக தகவல் வெளியானது என்ற கேள்விக்கும் (இந்த கேள்விக்கு மும்பை அணி தரப்பில் இருந்து இந்த கேள்வி வேண்டாம். அதற்கு பாண்ட்யா பதிலளிக்க முடியாது என ஒருவர் தெரிவித்தார்) மும்பை கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்டது மற்றும் ஹர்திக் நியமிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கும் இருவரும் பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர்.

    • ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். இது எனக்கு உதவுகிறது.
    • மும்பை அணி என்ன சாதித்தது. அது எல்லாமே அவரது தலைமையில் தான் சாதிக்கப்பட்டது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    பாண்ட்யாவிடம் ரோகித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாண்ட்யா பேசியது பின்வறுமாறு:-

    முதலில் ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். இது எனக்கு உதவுகிறது. மும்பை அணி என்ன சாதித்தது. அது எல்லாமே அவரது தலைமையில் தான் சாதிக்கப்பட்டது.

    நான் அதை முன்னோக்கி எடுத்துச் செல்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் அவரது தலைமையின் கீழ் விளையாடியிருக்கிறேன். களத்தில் அவரது கைகள் என் தோள் மீது இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
    • அதற்கான நான் அணி நிர்வாகத்திடம் எனக்கு ஒரு ஐந்து நாள் ஓய்வு கொடுங்கள், இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து விடுகிறேன் என்று கூறினேன்.

    ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடந்த சீசன் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

    இத்தொடரின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டார் ஹர்திக் பாண்ட்யா காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களிலிருந்தும் விலகினார். இதையடுத்து தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் வரவுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்படவுள்ளார்.

    இந்நிலையில் கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக கடந்த ஓராண்டு காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். மேலும் ஒன்றரை ஆண்டு காலமாக எனது தனிப்பட்ட பயிற்சிகளில் கவனத்தை செலுத்தினேன். ஆனாது துரதிர்ஷ்டவசமாக உலகக்கோப்பை தொடரின் போது எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தால் என்னால் நடக்கக்கூட முடியவில்லை. எனினும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் முடிவில் நான் இல்லை. கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    அதற்கான நான் அணி நிர்வாகத்திடம் எனக்கு ஒரு ஐந்து நாள் ஓய்வு கொடுங்கள், இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து விடுகிறேன் என்று கூறினேன். அதற்காக எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன்.

    ஆனால் அந்த ஐந்து நாளில் நான் எடுத்த முயற்சிகள் எனக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. நான் ஓய்வு எடுக்காமல் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என முயற்சி செய்ததால், அந்த ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது. உலகக் கோப்பையில் முழுமையாக பங்கேற்க முடியாதது என்றும் என் இதயத்தில் கனமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×