என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொகுசு கார்"

    • விவசாயி தனது பாரம்பரிய உடையான வேட்டி, குர்தாவுடன் எளிமையாக வந்து காரை வாங்கினார்.
    • விவசாயி காரில் அமர்ந்ததும், சிறு பிரார்த்தனை செய்து, அதன் சிறப்பம்சங்களை ஆராய்கிறார்.

    ஒரு விவசாயி தனது புத்தம் புதிய மெர்சிடஸ் ஜி-வேகன் காரை வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அந்த காரின் மதிப்பு சுமார் ரூ. 3 கோடி. விவசாயி தனது பாரம்பரிய உடையான வேட்டி, குர்தாவுடன் எளிமையாக வந்து காரை வாங்கினார்.

    ஷோரூமுக்குள், விவசாயி உள்ளே நுழைந்து தனது புதிய காரை மூடி இருக்கும் உறையை திறந்ததும், அவரது மனைவி காருக்கு பொட்டு வைத்து, ஆரத்தி செய்கிறார். விவசாயி காரில் அமர்ந்ததும், சிறு பிரார்த்தனை செய்து, அதன் சிறப்பம்சங்களை ஆராய்கிறார்.

    பின்னர் அமைதி, திருப்தியான புன்னகையுடன் காரை இயக்கி, நம்பிக்கையுடன் ஷோரூமிலிருந்து வெளியேறுகிறார். விவசாயி ரூ.3 கோடிக்கு கார் வாங்கியது குறித்து வலைத்தளவாசிகள் பரபரப்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.



    • ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • கேரளாவில் சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

    கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

    பூடான் ராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்றது.

    இந்நிலையில், இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

    • சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.

    கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சொகுசு கார்களை பூட்டன் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி கொண்டுவரப்பட்டதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனால் இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.

    கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து எம்புரான் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பிரித்விராஜுக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டது
    • 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    அதே போல் சில பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அவ்வகையில் பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் மற்றும் கார்பனேற்ற குளிர்பானங்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும், 1,500 சிசி திறனுக்கு மேல் உள்ள சொகுசு பைக்குகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களுக்கு 40% வரி விதிக்கபட்டுள்ளது. 

    • தன்னிடம் உள்ள ஆடம்பர சொகுசு காரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஒட்டி சென்றார்.
    • நடுரோட்டில் சொகுசு கார் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரை சேர்ந்தவர் சஞ்சீவ். ஆடம்பர கார்கள், சொகுசு கார்கள், பழமையான கார்கள் ஆகியவற்றை குவித்து வைத்துள்ளார். அது தொடர்பான படங்களை வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். கார் பிரியர்களால் ரசிக்கப்படும் இவரின் பதிவுகளால் சமூக வலைத்தளத்தில் 2 லட்சம் பின்தொடர்பாளர்களுடன் பிரபலமாக உள்ளார்.

    இந்தநிலையில் தன்னிடம் உள்ள ஆடம்பர சொகுசு காரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஒட்டி சென்றார். ரூ.10 கோடி மதிப்புள்ள அந்த காரை சாலையில் வந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் கண்கொட்டாமல் அந்த காரை பார்த்து ரசித்தனர். அப்போது அந்த கார் எதிர்பாராமல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    என்ஜினில் இருந்து பற்றி எரிந்த தீ மளமளவென கார் முழுவதும் எரிந்தது. இதனால் சாலைவாசிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். சுதாரித்து கொண்ட சஞ்சீவ் காரில் இருந்து உடனடியாக வெளியேறி தீயை அணைக்க முயன்றார். நடுரோட்டில் சொகுசு கார் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காருக்கு அபராதம் மற்றும் வரி தொகைக்கான ரசீதை அதிகாரிகள் வழங்கினர்.
    • 2021-ம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மாநிலத்தில் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

    பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரும், அமீர் கான் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் பெங்களூரு நகரில் சில ஆண்டுகளாக இயங்கி வந்தன.

    இதில் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரை பெங்களூரு வசந்தம் நகரில் வசிக்கும் தொழிலதிபர் கே.ஜி.எப். பாபு ஒரு திரைப்பட நடிகரிடமிருந்து வாங்கியிருந்தார்.

    அப்போது, வாங்குபவர் 15 நாட்களுக்குள் ஆவணங்களை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று ஒரு கடிதம் வழங்கப்பட்டது.

    இருப்பினும், வாங்கிய பிறகு கே.ஜி.எப். பாபு அதை தனது பெயரில் பதிவு செய்யவில்லை. மேலும் இந்த காருக்கு உரிய வரி செலுத்தாமலும் ஓட்டி வந்தார்.

    இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து போக்குவரத்து இணை ஆணையர் ஷோபாவின் வழிகாட்டுதலின் கீழ் அதிகாரிகள் வசந்தம் நகரில் உள்ள தொழிலதிபர் கே.ஜி.எ.ப் பாபுவின் வீட்டில் சோதனை நடத்தினர்.

    அங்கு நிறுத்தி வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காருக்கு அபராதம் மற்றும் வரி தொகைக்கான ரசீதை அதிகாரிகள் அவரிடம் வழங்கினர்.

    உரிய கட்டணம் செலுத்தாமல் 2021-ம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மாநிலத்தில் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அமிதாப் பச்சனுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த கார் தற்காலிகமாக பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • துமாஸ் கடற்கரையில் இளைஞர்கள் சாகசம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • காரை கடற்கரை மணலில் இருந்து எடுக்க இளைஞர்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை

    குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள துமாஸ் கடற்கரையில் சாகசம் செய்வதற்காக ஓட்டிச் சென்ற சொகுசுக் கார், கடல் மணலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில் கடற்கரை மணலில் சொகுசு கார் பாதி அளவு சிக்கியுள்ளது.

    துமாஸ் கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பகுதியில் இளைஞர்கள் சாகசம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரை கடற்கரை மணலில் இருந்து எடுக்க இளைஞர்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

    • உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    பிரபல சொகுசு கார் நிறுவனமான லம்போர்கினி குழந்தைகளை தள்ளிச் செல்லும் வண்டியான Stroller-களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    லிமிட்டட் எடிசனாக உருவாகியுள்ள உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பெற்றோர்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சைமன் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினர்.
    • காருடன், ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட எல்லை வழியாக கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் அவ்வப்போது ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அந்தப் பகுதியில் ரோந்துப் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்றிரவு குளச்சல் பகுதியில் தீவீர ரோந்து சென்றனர்.

    அவர்கள் சைமன் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது காரை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். பின்னர் காரை சோதனை செய்தபோது, அதில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை கேரள மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயற்சித்தது தெரிய வந்தது.

    இதையடுத்து காருடன், ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? அவர் யாருக்காக ரேஷன் அரிசியை கடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    • திற்பரப்பு அருவிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்
    • திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அதிவேகமாக வந்த கார் தள்ளுவண்டியில் மோதியதில் தள்ளுவண்டி வியாபாரி மற்றும் காரில் இருந்தவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    குலசேகரத்தை அடுத்த வலியாற்று முகத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36) இவரது மனைவி சித்ரா (32) இவர் உடல்நிலை சரியில்லாமல் நடப்பதற்கு சிரமப்பட்டு வந்தார். இவர்களுக்கு ஒரே மகன் உள்ளார். புலியிறங்கி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருக்கும் தள்ளு வண்டியில் கணவனும் மனைவியும் கூழ், மோர் மற்றும் பலகார வியாபாரம் நடத்தி வந்தனர்.

    இவர்களின் வருமானத்துக்கான ஒரே ஆதாரம் இந்த தள்ளுவண்டி கூழ், மோர், பலகார வியாபாரம்தான். இதை வைத்து குடும்பம் நடத்தினர்.

    நேற்று மதியம் உணவருந்த சித்ரா வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது தள்ளு வண்டியில் பிரகாஷ் மட்டும் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். தள்ளு வண்டியின் முன் புறம் காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்த ரெனால்டு ஜெபா என்பவர் கூழ் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது குலசேகரம் - மார்த்தாண்டம் ரோட்டில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சிவப்பு நிற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தள்ளுவண்டி யையும், கூழ் குடித்துக்கொண்டிருந்த ரெனால்டு ஜெபாவையும் இடித்துக் கொண்டு அருகில் உள்ள காம்பவுண்டை ஒட்டி நின்றிருந்த ரப்பர் மரத்தில் மோதி நின்றது. தள்ளு வண்டியும், காரின் முன்பக்க இடதுபுறமும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் விபத்துக்குள்ளான சொகுசுகார் தற்போதுதான் புதியதாக எடுக்கப்பட்டது. காரின் முன்பகுதியில் இருந்த இரண்டு ஏர்பேக் ஓப்பன் ஆனதால் வண்டியில் இருந்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார் கள். ரோட்டோரம் இதைப்பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார் மோதியதில் தள்ளுவண்டியின் உள்புறம் நின்றிருந்த பிரகாஷ்க்கு இடுப்பின் கீழ்பகுதி மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அருகிலிருந்த வர்கள் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரகாஷ் அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்நிலையில் காரில் முன்புறம் இருந்தவர்க ளுக்கும். பின்புறம் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் குலசேகரம் மற்றும் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட னர். ரெனால்டு ஜெபா குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கக் பட்டார்.

    போலீஸ் விசாரணையில் வெள்ளிச்சந்தையைச் ேசர்ந்த அஜித்குமாருக்கு சமீபத்தில் திருமணமாகி உள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் இவர் உறவினர் வீட்டு விருந்துக்கு நேற்று வந்தார். மனைவியை உறவினர் வீட்டில் விட்டு விட்டு இவர்கள் நண்பர்கள் குளச்சல் அரவிந்த் (17), கொல்வேல் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27), விஜூ (23), வினீத் (25) ஆகியோருடன் காரில் திற்பரப்பு அருவிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அதிவேகமாக வந்து புலியிறங்கியில் தள்ளுவண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தியில் பிரகாஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தப்பி சென்ற மர்ம நபர்களுக்கு வலை வீச்சு
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மாஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் ரப்பர் ஷீட் மொத்த வணிகம் செய்து வருவதுடன், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறார்.

    இவரது ரப்பர் கடை மற்றும் குடோன் பிணந்தோடு பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் 2 பேர் ஒரு காரில் வந்து ரமேசின் குடோன் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 2 பண்டல் ரப்பர் ஷீட்டுக்களை திருடியுள்ளனர். இதனை ரமேஷ் செல்போனில் இணைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா வழியாக நாகர்கோவிலில் இருந்தவாறு கவனித்தார்.

    இதையடுத்து அவர் உடனடியாக குடோன் அருகில் உள்ள தனது வேலையாட்களுக்கு தகவல் கூறினார். அவர்கள் விரைந்து வந்து குடோனுக்கு சென்று அவர்களை பிடிக்க முயன்ற போது மர்ம நபர்கள், ரப்பர் ஷீட்டையும் ஓட்டி வந்த காரையும் விட்டு, விட்டு தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து ரமேஷ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் போலீசார் மர்ம நபர்கள் விட்டு சென்ற காரை பறிமுதல் செய்தனர். மேலும் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திருவட்டார் அருகே தெங்குவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன் (61). இவருக்கு சொந்தமாக ரப்பர் மரங்கள் உள்ளது. இவர் வீட்டின் பின்பக்கம் அதனை உலற வைத்திருந்தார். ரப்பர் ஷீட்டுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1500 ஆகும்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசில் ராஜப்பன் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி புலியிறங்கி பகுதியை சேர்ந்த பாலஸ் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      கன்னியாகுமரி:

      ஐரேனிபுரம் பகுதியில் வட்டவழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது அந்த காரை நிறுத்து மாறு சைகை காட்டினர். டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று காப்பிக்காடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

      இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலுவலகத்தி லும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

      ×