என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோக்பால் அமைப்பு"

    • லோக்பால் அமைப்பு 'BMW 3 Series 330Li' ரக கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தது.
    • ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் தலைவராக உள்ளார்.

    ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 7 சொகுசு பிஎம்டபிள்யூ கார்களை வாங்குவதற்கான சர்ச்சைக்குரிய டெண்டரை ரத்து செய்துள்ளது.

    லோக்பால் உடைய தலைவர் மற்றும் அதன் 6 உறுப்பினர்களுகளின் அலுவலக பயன்பாட்டிற்காக மொத்தம் 7 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வாங்குவதற்கான டெண்டர் கடந்த 2025 அக்டோபரில் வெளியிடப்பட்டது.

    லோக்பால் அமைப்பு 'BMW 3 Series 330Li' ரக கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தது. தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் தலைவராக உள்ளார்.

    ஊழலை ஒழிப்பதற்கான ஒரு அமைப்பு, இவ்வளவு பெரிய தொகையில் சொகுசு கார்களை வாங்குவது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

    இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, சொகுசு கார்கள் வாங்கும் முடிவு குறித்துலோக்பால் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இந்த கொள்முதல் திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

    லோக்பால் அமைப்புக்கு தலைவர் உள்பட உறுப்பினர்களை தேடி கண்டு பிடித்து பரிந்துரை செய்வதற்காக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமையில் 8 பேர் கொண்ட தேடுதல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. #Lokpal
    புதுடெல்லி:

    பிரதமர், மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பொது வாழ்வில் உள்ளவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    எனினும், இந்த சட்டத்தின் படி லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகின்றது. லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர் யார்? என்பதை பரிந்துரைக்க தேடுதல் குழுவை மத்திய அரசு இன்று அமைத்துள்ளது. 

    சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், எஸ்பிஐ முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பிரசார் பாரதி முன்னாள் தலைவர் சூரிய பிரகாஷ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு இன்று அமைத்துள்ளது. 

    இந்த குழு லோக்பால் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேடி கண்டுபிடித்து அரசுக்கு பரிந்துரை செய்யும். இதனை அடுத்து, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் ஆகியோர் இந்த பரிந்துரைகளை இறுதி செய்த பின்னர், அவர்கள் பதவியில் நியமிக்கப்படுவார்கள்.
    ×