search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "luxury car"

    • ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னை அடித்து உதைத்தனர்.
    • லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்

    ஒடிசா மாநிலத்தின் கவர்னராக ரகுபர் தாஸ் பொறுப்பில் உள்ளார். அவரது மகன் லலித் குமார் அப்பாவை பார்க்க ஒடிசா வந்திருக்கிறார். அப்போது அவரை அழைத்து வர பூரி ரெயில் நிலையத்திற்கு கவர்னர் மாளிகை சார்பில் கார் அனுப்ப பட்டுள்ளது.

    இந்நிலையில், தன்னை அழைத்து வர சொகுசு கார் அனுப்பப்படவில்லை என்று ஆத்திரத்தில் கவர்னர் மாளிகை வளாகத்திலேயே பைகுந்த பிரதான் என்ற அதிகாரியை லலித் குமார் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

    இது தொடர்பாக ராஜ்பவனின் பொறுப்பு அதிகாரி பைகுந்த பிரதான் கவர்னர் மாளிகையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில், "ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி பூரி ராஜ்பவனுக்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தங்குமிடங்கள் தொடர்பான வேலைகளை கவனிக்க ஜூலை 5 ஆம் தேதி முதல் ராஜ் பவனில் நான் வேலை செய்து வந்தேன்.

    இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னிடம் தகாத முறையில் பேசியதோடு என்னை அடித்து உதைத்தனர். மேலும் லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

    • அந்த காரின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி ஆகும்.
    • எப்படி இத்தனை விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும்?

    ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் உலகின் விலை உயர்ந்த ஹைப்பர் கார் மாடல்களில் ஒன்றை ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வீடியோவின் படி ஆல்ட்மேன் கோனிக்செக் ரெகரா ஹைப்பர் கார் மாடலை ஓட்டுகிறார்.

    இது லிமிட்டெட் எடிஷன் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும். 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கோனிக்செக் ரெகரா உலகளவில் மொத்தம் 80 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இது ஒரு ஹைப்ரிட் ரக கார் ஆகும். இதன் ஆரம்ப விலையே 1.9 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி ஆகும்.

    இந்த காரை பயன்படுத்திய நிலையில் வாங்கும் போது விலை மேலும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில், இதன் மதிப்பு 3 மில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 25 கோடி ஆகும்.

    ஓபன்ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் ரெகரா மாடலை ஓட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் 40 லட்சத்திற்கும் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியால் எப்படி இத்தனை விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இதுகுறித்த எக்ஸ் தள பதிவு ஒன்றில், "ஓபன்ஏஐ சிஇஓ உலகின் விலை உயர்ந்த காரை ஓட்டி வருகிறார். லாப நோக்கற்ற நிறுவனமாக துவங்கப்பட்ட ஓபன்ஏஐ எப்படி லாபகர வியாபாரமாக மாறியது?" என கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் "நல்ல கேள்வி" என்று குறிப்பிட்டுள்ளார்.


    முன்னதாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை உருவாக்கவும், அதில் அதிக கவனம் செலுத்துவதிலும் எலான் மஸ்க் தீவிரம் காட்டினர். இதன் விளைவாக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் ஓபன்ஏஐ. பிறகு, அந்நிறுவன நிர்வாக குழுவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் மற்றும் இதர காரணங்களால் எலான் மஸ்க் ஓபன்ஏஐ-இல் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
    • அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.

    தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

    தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவைவும் குடும்ப டிரைவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் மிஹிர் ஷாமை முக்கிய குற்றவாளியாக குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது தம்பதி சென்ற இருசக்கரவாகனத்தின்மீது மிஹிர் ஷாம் ஓட்டிவந்த பிஎம்டபில்யூ சொகுசு கார் பின்னால் இருந்து மோதியதில் தூக்கிவீசப்பட்டு கார் பானட்டில் சிக்கி பெண் 100 மீட்டருக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.

    பெண்ணின் கணவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது விபத்து குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், 'கார் மோதியதில் நான் ஸ்கூட்டரில் இருந்து இடது புறமாக விழுந்துவிட்டேன். எனது மனைவி காரின் முன்புறம் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. நான் இப்போது என்ன செய்வேன். இவர்களெல்லாம் [விபத்து ஏற்படுத்திய இளைஞர் மற்றும் அவரது தந்தை] பெரிய ஆட்கள். அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்து துரதிஷ்டவசமானது, சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தப்பியோடிய மிஹிரை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது. 

     

    • புதிய மெபேக் கார் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
    • இந்த காரில் லெவல் 2 ADAS சூட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டு புதிய ஆடம்பர கார் மாடல்களை அறிமுகம் செய்தது. இவை மெபேக் GLS 600 மற்றும் S53 AMG E பெர்பார்மன்ஸ் ஆகும். 2024 மெர்சிடிஸ் மெபேக் GLS 600 மாடலின் விலை ரூ. 3 கோடியே 35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மெபேக் கார் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த காரின் முன்புறத்தில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட சிக்னேச்சர் கிரில், சிறு மாற்றங்கள் செய்யப்பட்ட பம்ப்பர்கள், மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், 22 இன்ச் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     


    உள்புறத்தில் பர்மெஸ்டர் சரவுண்ட் சவுண்ட் மியூசிக் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, அகௌஸ்டிக் கம்ஃபர்ட் பேக்கேஜ், புதிய ஸ்டீரிங் வீல் டிசைன், குளிர்சாதன பெட்டி, ஷேம்பெயின் வைத்துக் கொள்ளும் வசதி, லெவல் 2 ADAS சூட், ரியர் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்கள், பார்கிங் அசிஸ்ட், அதிநவீன MBUX சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    2024 மெர்சிடிஸ் மெபேக் GLS 600 மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ V8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் பெட்ரோல் எஞ்சின் 557 ஹெச்.பி. பவர், 730 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது.

    இதில் உள்ள ஹைப்ரிட் சிஸ்டம் 22 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • சென்னையில் இருந்து பொழுது "ஃபியட்" நிறுவனத்தின் "பேலியோ" காரைத் தான் முதலில் ஓட்டி பழகியதாக கூறினார்.
    • நாக சைதன்யா போர்ஸ்ர் சி 911 ஜிடி3 ஆர்எர் ஸ் என்ற காரை வாங்கியுள்ளார்.

    பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் தான் நடிகர் நாக சைதன்யா, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், தனது இளமை பருவத்தை பெரிதளவும் சென்னையில் கழித்தவர் அவர். நடிகர் நாக சைதன்யா 2009ம் ஆண்டு வெளியான ஜோஷ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

    சமீபத்தில் இவர் நடித்த படம் 'கஸ்டடி'. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார்.


    பிரபல தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கார்கள் மீது தனக்குள்ள ஈடுபாடு குறித்தும் சென்னையில் தான் தனக்கு கார்கள் மீதான ஒரு ஈர்ப்பு துவங்கியது என்றும் கூறி மனம் திறந்து உள்ளார். கார்கள் தான் தனக்கு முதல் காதலி என்று கூறிய நாக சைதன்யா சென்னையில் இருந்து பொழுது "ஃபியட்" நிறுவனத்தின் "பேலியோ" காரைத் தான் முதலில் ஓட்டி பழகியதாக கூறினார்.

    அதன் பிறகு தனது 19 வது வயதில் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்த அவர் பல சூப்பர் பைக்குகளை ஓட்டி பழகிய பின், "மிட்சுபிஷி" நிறுவனத்தின் "லான்சர்" என்ற காரைத் தான் வாங்கி ஒட்டியதாக கூறியிருக்கிறார். இன்றளவும் இந்த கார்களுக்கு மவுசு உள்ளது குறிப்பிடத்தக்கது.


    நாக சைதன்யாவிடம் பெராரி முதல் பிஎம்டபிள்யூ வரையிலான ஈர்க்கக்கூடிய சொகுசு கார்களின் சேகரிப்பு உள்ளது. தற்போது அந்த சேகரிப்பில் புதிய கார் ஒன்றை சேர்த்துள்ளார். தற்போது நாக சைதன்யா போர்ஸ்ர் சி 911 ஜிடி3 ஆர்எர் ஸ் என்ற காரை வாங்கியுள்ளார்.

    கார்ட்ரேட் படி, இந்தியாவில் காரின் முந்தைய ஷோரூம் விலை ₹3.51 கோடி. இது மே 17 அன்று பதிவு செய்யப்பட்டது மற்றும் ஹைதராபாத்தில் முதல் போர்ஷே 911 GT3RS என்று கூறப்படுகிறது. சென்னை போர்ஸ் சென்டர் சைதன்யா காருடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

    இதனை நாக சைதன்யா ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.



    • சொகுசு காரில் ரூ. 12 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசாரை இடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- மதுரை ரோட்டில் தனியார் பள்ளி அருகே காவல்துறை சோத னை சாவடி உள்ளது. இங்கு ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸ்சார் தேவர் ஜெயந்தியை முன்னி ட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். ஆய்வாளர் கவுதம் விஜி தலைமையில் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர்.

    அப்போது சென்னை பதிவு எண் கொண்ட சொகு சு கார் வேகமாக வந்தது அதை நிறுத்த சென்ற சார்பு ஆய்வாளர் கவுதம்விஜி மீது இடித்த விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதை அறிந்த மற்ற போலீசார் அந்த காரை விரட்டி சென்ற னர். பின்னர் அந்த காரை சாத்தூரில் பிடித்து. போலீசார் சோதனை செய்த பொழுது காரில் 600 கிலோ கொண்ட 51 பண்டல்களில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பி லான குட்காவை கடத்தி சென்றது தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜஸ் தானை சேர்ந்த முகமது அஸ்லாம் மற்றும் சதன்சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் பயன் படுத்திய சொகுசு கார் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மன்னார்குடி- திருத்துறைப்பூண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
    • சொகுசு காரை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    மன்னார்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரம் பகுதியை சேர்ந்த அரபாத் (வயது 28), ஆறுமுகம் (50), செல்வராஜ் (55) ஆகிய 3 பேரும் சொகுசு காரில் மன்னார்குடிக்கு வந்துள்ளனர்.

    பின்னர், அந்த காரில் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கீழப்பாலம் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் சென்றபோது சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த 4 ஆடுகளை பிடித்து தங்கள் காருக்குள் வைத்து கடத்திவிட்டு வேகமாய் சென்றனர்.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதி மக்களின் உதவியுடன் சொகுசு காரை கண்டறிந்து அதில் இருந்த 4 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஆடு திருடுவதை வழக்கமாக வைத்துள்ளது தெரியவந்தது.

    பட்டப்பகலில் ஆடுகள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
    • மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    வானூர்:

    புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு காரில் அதிக அளவு மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகா மணன், சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .

    அதில் உயர் ரக புதுச்சேரி மதுபாட்டில்கள் 650 இருந்தது தெரியவந்தது. மேலும் காரில்வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து மது பாட்டில்களை கடத்திய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 650 உயர்ரக மது பாட்டில்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான செல்வராஜ் மீது விழுப்புரம் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மெர்சிடிஸ் AMG GLC 43 4மேடிக் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய மெர்சிடிஸ் AMG GLC மாடலில் 4-வீல் டிரைவ், AMG டைனமிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய AMG GLC மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் AMG GLC மாடலில் மேம்பட்ட டிசைன், டிரைவிங் டைனமிக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த காரில் 680 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    என்ட்ரி லெவல் மெர்சிடிஸ் AMG GLC 43 4மேடிக் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 421 ஹெச்பி பவர், 499 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.

    AMG GLC 63 S e-பெர்பார்மன்ஸ் பிளாக்ஷிப் மாடலிலும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 204 ஹெச்பி பவர் கொண்ட மோட்டார் மற்றும் 6.1 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது 680 ஹெச்பி பவர், 1020 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 274 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மின்சக்தியில் அதிகபட்சம் 12 கிலோமீட்டர்கள் வரை மட்டுமே செல்லும்.

    புதிய மெர்சிடிஸ் AMG GLC மாடலில் 4-வீல் டிரைவ், AMG டைனமிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை காரின் எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி மற்றும் ஸ்டீரிங் ரெஸ்பான்ஸ் உள்ளிட்டவைகளை சிறப்பாக கன்ட்ரோல் செய்யும் திறன் வழங்குகின்றன. AMG ரைடு கன்ட்ரோல் இந்த காரின் ஸ்டான்டர்டு அம்சம் ஆகும். இத்துடன் ஸ்போர்ட்ஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய AMG GLC மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை GLC எஸ்யுவி ஸ்டான்டர்டு மாடலை ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.
    • 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

    இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.திருமணம் முடிந்து வந்த போது அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அவரது வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் லாரன்ஸ் வீட்டின் உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    சிசிடிவி., காட்சிகள் அடிப்படையில் மங்கலம் போலீசார் திருடர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மர்ம நபர்கள் சொகுசு காரில் வந்து திருடி செல்லும் சிசிடிவி., காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கர்நாடகாவில் பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலாமக நடைபெற்றது.
    • கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதலமைச்சராகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர்.

    இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலாமக நடைபெற்றது. முதலில் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    தொடர்ந்து அமைச்சர்களாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றார்கள். அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ரூ. 1 கோடியில் புதிய சொகுசு கார் ( டொயோட்டா வெல்ஃபயர் ) கர்நாடக அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளது. 

    • ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன.
    • இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார்.

    இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான் சமீபத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வாங்கி இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் காரின் விலை ரூ. 8.2 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இவர் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் ஆர்க்டிக் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் காரின் இண்டீரியர் முழுக்க ஆல்-வைட் லெதர் மற்றும் கோபால்டோ புளூ அக்செண்ட்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார். முன்னதாக ஐதராபாத்தை சேர்ந்த நசீர் கான் என்பவருக்கும், இரண்டாவதாக புவனேஷ்வரை சேர்ந்த நபருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் டெலிவரி செய்யப்பட்டது.

     

    ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன. ஸ்டாண்டர்டு கலினன் மாடலில் இருப்பதை விட பிளாக் பேட்ஜ் மாடலின் ஸ்பிரிட் ஆஃப் எக்டசி சின்னம் மற்றும் இரட்டை R பேட்ஜ் உள்ளிட்டவைகளில் டார்க் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று முன்புற கிரில் சரவுண்ட், பக்கவாட்டு ஃபிரேம் ஃபினிஷர்கள், பூட் ஹேண்டில், பூட் ட்ரிம், லோயர் ஏர் இண்டேக் ஃபினிஷர் மற்றும் எக்சாஸ்ட் பைப் உள்ளிட்டவைகளில் டார்கென்டு க்ரோம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எஸ்யுவி-இல் 22 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், காண்டிராஸ்ட் ரெட் நிற பிரேக் கேலிப்பர்கள் உள்ளன.

    கலினன் பிளாக் பேட்ஜ் மாடலிலும் 6.75 லிட்டர், டுவின் டர்போ வி12 எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் வழக்கமான கலினன் மாடலை விட 29 ஹெச்பி மற்றும் 50 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ×