என் மலர்
நீங்கள் தேடியது "பிரித்விராஜ்"
- மகேஷ் பாபு கதாநாயகனாகவும், பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
- இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.
இப்படத்தின் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
முன்னதாக இப்படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை பட குழுவினர் வெளியிட்டனர்.கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
- மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார்.
பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி மகேஷ் பாபுவை பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. படப்பிடிப்பு விறுவிறுபப்ான நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மலையாள மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் நடிக்கிறார் என்று ஏற்கனவே படக்குழு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இப்படத்தில் பிரித்விராஜ் மகேஷ் பாபுக்கு எதிராக வில்லன் வேடத்தில் கும்பா கேரக்டரில் நடிப்பார் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
ஸ்பைடர்மேன்-2 படத்தின் வில்லன் டாக்டர் ஆக்டோபஸ் வீல்சேரில் இருப்பதை இந்த போஸ்டர் நினைவூட்டுகிறது. அதேபோல் 24 படத்தில் சூர்யா வீல்சேரில் இருந்து கொண்டு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதையும் நினைவூட்டுகிறது.
வருகிற 15-ந்தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- கேரளாவில் சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.
கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.
பூடான் ராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
- சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
- இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.
கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொகுசு கார்களை பூட்டன் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி கொண்டுவரப்பட்டதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனால் இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.
கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து எம்புரான் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பிரித்விராஜுக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ஆடு ஜீவிதம் படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளாது.
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் இப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஆடு ஜீவிதம் படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளாது.
குறிப்பாக லூசிபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்புரான் படத்தில் குஜராத் கலவரத்தை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
எம்புரான் படத்தை பிரித்விராஜ் இயக்கியிருந்தார். ஆகவே இதன் காரணமாக தான் பிரித்விராஜ் நாயகனாக நடித்த ஆடு ஜீவிதம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் 2023 டிசம்பர் 31க்குள் தணிக்கை முடிந்த படங்கள் மட்டுமே 2023 தேசிய விருதுகளுக்கு தகுதி பெறும். ஆனால் ஆடுஜீவிதம்' திரைப்படம் 2024 இது பிப்ரவரி 1 அன்று தணிக்கை சான்றிதழ் பெற்றது. எனவே, அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் 72வது தேசிய விருதுகளில் ஆடுஜீவிதம்' திரைப்படம் விருதை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
- சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார்.
- ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது
2024ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார்.
சிறந்த நடிகருக்கான விருது ஆடு ஜீவிதம் படத்திற்காக பிரித்விராஜுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார். ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகைக்கான விருது உள்ளொழுக்கு படத்திற்காக ஊர்வசிக்கும் தடவு படத்திற்காக பீனா ஆர் சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த படத்திற்கான விருது மம்முட்டியின் 'காதல் - தி கோர்' படத்திற்கு வழங்கப்பட்டது.
- கோகுலம் நிதி நிறுவனத்தின் அதிபர் கோபாலகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
- எம்புரான் படத்தில் பிரித்விராஜ் ரூ.40 கோடி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் மீண்டும் வெளியானது.
'எம்புரான்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் நிதி நிறுவனத்தின் அதிபர் கோபாலகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில், நடிகரும் எம்புரான் திரைப்பட இயக்குநருமான பிரித்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எம்புரான் திரைப்படத்தை இயக்கிய பிரித்விராஜ் அப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார்.
எம்புரான் படத்தில் பணியாற்றியதற்காக பிரித்விராஜ் ரூ.40 கோடி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுமான நிறுவனத்தின் பெயரில் பணம் பெறப்பட்டது பற்றியும் கடுவா, ஜன கண மன மற்றும் கோல்ட் படங்களின் ஊதியம் குறித்தும் அவரிடம் வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரமின் 62-வது படமான 'வீர தீர சூரன்' வெளியாகிறது.
- இரண்டு படங்களிலும் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

அதேநாளில் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரமின் 62-வது படமான 'வீர தீர சூரன்' வெளியாகிறது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த இரண்டு படங்களிலும் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனில் பேசிய அவர், இரண்டு படங்களுமே சிறந்த படங்கள். ஹிட் அடிக்கும். எம்புரான் ஹிட்டகும்போது அது மோகன்லாலுக்கு ஒரு வெற்றி. வீரதீர சூரன் ஹிட்டாகும் அது விக்ரமூக்கு ஒரு வெற்றி. ஆனால் இரண்டு படங்களிலுமே உள்ளதால் எனக்கு ஒரே நாளில் இரண்டு ஹிட் படங்கள் என்று தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ‘கோல்டு’.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

கோல்டு
'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

கோல்டு
அதீத எதிர்பார்ப்புகளுடன் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது. இந்த விமர்சனங்களுக்கு படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, 'கோல்டு' திரைப்படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ்.
- இவர் தற்போது ‘குருவாயூர் அம்பல நடையில்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ் 'ஜெய ஜெய ஜெய ஹே'படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

பிரித்விராஜ்
இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தெய்வத்தின் பெயரை படத்திற்கு வைத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் பெயரை காரணமாக வைத்து பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்று மலையாள பட உலகினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘கோல்டு’.
- இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

கோல்டு
'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அதீத எதிர்பார்ப்புகளுடன் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது.

அல்போன்ஸ் புத்திரன்
அல்போன்ஸ் புத்திரனிடம் சமூக வலைதளத்தின் வாயிலாக ரசிகர் ஒருவர், "அஜித்துடன் ஒருப்படம் பண்ணுங்க தலைவா" என கேள்விக்கு எழுப்பினார். இதற்கு பதிலளித்த அல்போன்ஸ், அஜித் சாரை இதுவரைக்கும் மீட் பண்ண முடியல. நிவின் ஒருமுறை அஜித் சாருக்கு பிரேமம் படம் பிடித்துள்ளதாக கூறியிருந்தார். பிறகு, நான் ஒரு 10 முறை அவரின் வலதுக்கை மற்றும் மேலாளரிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டி கேட்டு இப்போது 8 வருஷம் ஆகிறது. எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் சாரை பார்த்தால் படம் பண்ணுவேன்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா தம்பி? முயற்சி செய்து செய்து சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோவம் வரும். பின்னர் நீங்களும் என்னை மாதிரி ஒரு ஏகே ரசிகரென நினைத்து அமைதியாக கடந்து விடுவேன். ஏகே சாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாள் ஓடும். இதே மாதிரிதான் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தளபதியுடனும் என கூறினார். இவரின் இந்த பதில் ரசிகர்களிடம் ஆதரவை பெற்று பலரும் விரைவில் அஜித் சாரை சந்திப்பீர்கள் என கூறிவருகின்றனர்.
- நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘கடுவா’.
- இப்படம் தமிழில் வெளியாகவுள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'கடுவா'. இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

கடுவா
இந்நிலையில், 'கடுவா' திரைப்படத்தை தமிழில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'கடுவா' திரைப்படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

கடுவா போஸ்டர்
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோல்டு' மற்றும் 'காப்பா' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதையடுத்து 'கடுவா' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






