என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "customs"
- பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும்.
- மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள்.
அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டப்படி, பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் ஸ்ரீபெரும்புதூர், மொளசூர், கோவிந்தவாடி, பாணாவரம், மேல்பாடி, வசந்தபுரம் இடங்களிலும் சுங்கச்சாவடி அமைக்கப்படும்.
விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை: கெங்கராம்பாளையம்(விழுப்புரம்), கொத்தட்டை(கடலூர்), ஆக்கூர் பண்டாரவாடை (மயிலாடுதுறை), விக்கிரவாண்டி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள், ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள், சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3 சுங்கச்சாவடிகள், மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 20 சுங்கச்சாவடிகளை அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது
- ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது
- தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சா வடிகளில் வசூலிக்கப்படும் கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்தது. இதனை கண்டித்தும், சுங்கச்சா வடிகளில் நடைபெறும் ஊழல்களை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விக்கி ரவாண்டி சுங்கச்சாவடியை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் முற்றுகையிட்டு இன்று காலை 11.30 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வாகனங்கள் செல்லும் பாதையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அவர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் திடீர் பரபரப்பு நிலவியது.
- கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.
- வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஓ.பி.எஸ். அணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பூலித்தேவன் நினைவு நாள், மூக்கையா நினைவு நாள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஓ.பி.எஸ். தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 40 பேரை நிறுத்தி வெற்றி பெறுவோம். இதுதான் ஓ.பி.எஸ். நிலைப்பாடு. வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
கப்பலூர் சுங்கச்சாவடி மேலக்கோட்டையை கடந்து தான் அமைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற போராட்டம் நடத்துபவர்கள் யாரும் இல்லை. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சுங்கச்சாவடியை அகற்றா விட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவி, நகரச் செயலாளர் ராஜா மணி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் கருத்தராஜ், நகர துணை செயலாளர் விஜய் பாண்டி, முன்னாள் கவுன்சிலர் அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.
- மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை எனும் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மீன்பிடி தொழில் பிரதான தொழில் ஆகும். இவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடற்கரைக்கு கிழக்கே சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.
இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுங்கத்துறை ஊழியர் ராமசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 40 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தும்போது கஞ்சா பொட்டலங்கள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் எனவும், அவை கடலில் விழுந்து சுமார் 1 மாதம் ஆகி இருக்கலாம் எனவும், கஞ்சா பொட்டலங்களில் பாசி பிடித்துள்ளது எனவும் சுங்கத்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார்.
- 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஷீலா மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் அழகுநிலையம் நடத்தி வருபவர் ஷீலா. இவர் போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஷீலா 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது. சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் சதீசன், போலி போதைப் பொருள் வழக்கில் ஷீலாவை சிக்க வைத்திருப்பது, சுங்க இலாகா கமிஷனரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சதீசன், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஷீலா, தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டியும், பொய் புகார் கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கைது நடவடிக்கையால், தான் கடன் வாங்கி தொடங்கிய அழகு நிலையத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
- வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
- சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஐதராபாத்:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தங்கம் விலை உயர்ந்த போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர்.
கடத்தல் பொருட்களை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை முழுவதுமாக சோதனை செய்து வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஒரு சிலர் போதை பொருட்களை டியூப் மாத்திரை வடிவில் விழுங்கியும், ஒரு சிலர் தங்கங்களை வாட்ச், தலைமுடி, ஷூ உள்ளிட்டவைகளில் வைத்தும் கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வெளிநாட்டில் இருந்து பயணி ஒருவர் விமானத்தின் மூலம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அவர் கொண்டு வந்த சூட்கேசில் இருந்த பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சூட்கேஸில் எந்தவிதமான கடத்தல் பொருட்களும் இல்லை. சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சூட்கேசின் கைப்பிடி மற்றும் ஸ்க்ரூக்கள் தங்கத்தில் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அவர் நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.
இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் இந்தியா முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் உள்ள பீமாவரம் பகுதியில் ஒருவரிடமிருந்து இன்று ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 40 மதுபாட்டில்களை கைப்பற்றினர். அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #Customsseized #foreigncurrency
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்