என் மலர்
நீங்கள் தேடியது "போதைப்பொருள்"
- புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாமராஜ்பேட்டை தபால் நிலையத்தில் பார்சலில் வந்த 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்
புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் மூன்று வெவ்வேறு சோதனைகளின்போது ரூ.28.8 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், சம்பிகேஹள்ளி பகுதியில் பெங்களூரு நகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான்சானிய நாட்டை சேர்ந்த 29 வயதான நான்சி ஓமரியை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ டையாக்ஸிமெத்தபெட்டமனையும் பறிமுதல் செய்தனர். இவை ரூ.18.5 கோடி மதிப்பு கொண்டவை எனவும் தெரிவித்தனர்.
2023 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் டெல்லி வந்த நான்சி, பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து பியூட்டிசியனாக பணிபுரிந்துகொண்டே, போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவின் சித்தபுராவில் நடந்த மற்றொரு நடவடிக்கையில், 28 வயதான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் அரின்சே என்பவர் கைது செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு வணிக விசா மூலம் இந்தியா வந்த அரின்சே 2022 ஆம் ஆண்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.
டெல்லி, கோவா மற்றும் பிற வெளிநாட்டு வியாபாரிகளிடமிருந்து MDMA-வை வாங்கி விநியோகம் செய்துவந்துள்ளார். இவர் முன்னரே போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கோவிந்தபுரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமினில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைதாகியுள்ளார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சி.சி.பி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த பார்சலை அனுப்பியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்த ஆபரேஷனில் 2,500 காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
- இந்த நடவடிக்கையில் 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் "ரெட் கமாண்ட்" என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக காவல்துறை நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிரடி ஆபரேஷன் மேற்கொண்டது.
ரியோ டி ஜெனிரோ நகரில் கோம்ப்லெக்ஸோ டி அலேமாவோ மற்றும் பென்ஹா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனில் 2,500 காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. மேலும் கும்பல் மீது ஹெலிக்கப்பட்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு ஆபரேஷனில் நான்கு காவல்துறையினர் உட்பட 119 பேர் உயிரிழநதனர் என அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 93 துப்பாக்கிகள் மற்றும் 500 கிலோவுக்கும் கூடுதலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கிடையே இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளன.

இந்தத் ஆபரேஷன், அடுத்த வாரம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் சி40 சர்வதேச மேயர்கள் மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.
- அவர் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என்றும் அவர் போதை பொருளை தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்குள் போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கொலம்பியா மீது டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறார் என்று குற்றம்சாட்டிய டிரம்ப், அவர் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என்றும் அவர் போதை பொருளை தடுக்கவில்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அதிபர் பெட்ரோ இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
அண்மையில் மத்திய கரீபியன் கடலில் போதைப்பொருள் ஏற்றிச் செல்வதாக சந்தேகப்படும் கப்பல்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களை அதிபர் பெட்ரோ விமர்சித்தார்.
இந்த நிலையில் உலகளாவிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறி கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.
மேலும் அவரது மனைவி வெரோனிகா கார்சியா,மகன் நிக்கோலஸ் பெர்னாண்டோ பெட்ரோ பர்கோஸ் மற்றும் கொலம்பிய உள்துறை அமைச்சர் அர்மாண்டோ ஆல்பர்டோ பெனடெட்டி ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும். மேலும் அமெரிக்கர்களுடன் அவர்கள் வர்த்தகம் செய்ய முடியாது.
அதிபர் பெட்ரோவின் அமெரிக்க விசா கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கும்பலை பிடிக்க மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
- துபாயை சேர்ந்த முகமது சலீம் ஷேக் என்பவர் சிக்கினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருட்கள் தயாரித்து சட்டவிரோதமாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தது. இந்த போதைப்பொருள் கடத்தலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் சிலரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை குர்லா பகுதியில் பர்வீன் ஷேக் என்பவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துபாயை தளமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய அளவிலான சர்வதேச போதைக்கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருந்தது அம்பலமானது.
இந்த கும்பலை பிடிக்க மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதில் துபாயை சேர்ந்த முகமது சலீம் ஷேக் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ. 256 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முகமது சலீம் ஷேக் தாவூத் இப்ராகிம் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலாவின் வலது கரமாக செயல்பட்டவர்.
சலீம் டோலா துபாயில் இருந்து கொண்டு சர்வதேச அளவில் போதைப்பொருட்கள் தயாரித்து வினியோகம் செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இது வரை ஒரு பெண் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- 5 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 27 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத் தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இதில் கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டு படகுகள் மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியது. 5 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 27 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவை நோக்கி போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தும் நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்தக் கப்பலில் பெரும்பாலும் பென்டானைல் மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொ ருட்கள் நிறைந்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியது.
மேலும் அதில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் இருந்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். மற்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்குத் தொடரப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளான ஈக்வடார் ,கொலம்பியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் கரைக்கு வந்திருந்தால் அதில் உள்ள போதைப் பொருள் மூலம் சுமார் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள்.
இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனது கண்காணிப் பின் கீழ் நிலம் அல்லது கடல் வழியாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தும் பயங்கரவாதிகளை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.
- 219 கடத்தல்காரர்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்துள்ளனர்.
- 10 கிலோவுக்கும் அதிகமான உயர் ரக வெடி பொருட்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சமீப காலமாக அடிக்கடி எல்லை தாண்டி வரும் டிரோன்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து பஞ்சாப் உள்ளிட்ட பாகிஸ்தானையொட்டி உள்ள மாநிலங்களின் 553 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.
எல்லைப்பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டு பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடத்தல் காரர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தரை மற்றும் வான்வழி மூலம் நவீன கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளால் இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்த 200 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டிரோன்கள் மூலம் அனுப்பப்பட்ட போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக எல்லைப்பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் 16 பாகிஸ்தானியர்கள் உள்பட 219 கடத்தல்காரர்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து வந்த 200 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 287 கிலோ ஹெராயின், 13 கிலோ மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள்,174 ஆயுதங்கள், 12 கையெறி குண்டுகள், 10 கிலோவுக்கும் அதிகமான உயர் ரக வெடி பொருட்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபட்ட 203 இந்திய கடத்தல் காரர்கள் மற்றும் 16 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதன் மூலம் பாகிஸ்தான் ஊடுருவல் காரர்கள் தடுக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு (2024) 294 டிரோன்கள் மற்றும் 294 கிலோ போதைப்பொருட்கள் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 30 பாகிஸ்தானியர்கள் உள்பட 191 கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு கடத்தல் காரர்களின் கைது எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
- கைதானவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
- போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணி ஒருவர், பெருமளவு போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருந்தது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் சாதாரண உடையில் வந்திருந்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்து கொண்டு இருந்தனர்.
அப்போது 35 வயது வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுக்கு சென்றுவிட்டு, சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதையடுத்து அந்த வாலிபரை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். அவரது உடைமைகளையும் பரிசோதித்தனர். அதில் 3.5 கிலோ கொகைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி என கூறப்படுகிறது.
போதைப்பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அதனை கடத்தி வந்த வாலிபரை கைது செய்து தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
கைதான அவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் கடத்தி வந்த போதைப்பொருளை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள 2 போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்ததும் தெரிந்தது.
இதுபற்றி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பட்டியலில் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
- போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் அந்த நாடுகளை கேட்டுக்கொண்டு உள்ளார்.
சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.
23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்து இருந்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் அவற்றின் தயாரிப்பில் முக்கியமாக ஈடுபட்டுள்ள இந்த நாடுகளின் செயலால் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அந்த பட்டியலில் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த குற்றச்செயல் தடுப்பில் தவறிவிட்டதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் உள்ளிட்ட 5 நாடுகளை குறிப்பிட்டு இருந்த அவர், போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் அந்த நாடுகளை கேட்டுக்கொண்டு உள்ளார்.
போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்த டிரம்பின் நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2 மாதங்களாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார்.
- ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவும் கைதானார்.
இவ்வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜாமினில் வெளியே வந்த நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2 மாதங்களாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். நடிகர் ஸ்ரீகாந்தை பார்த்தவுடன் ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்கள் வெனின்சுலாவை நோக்கி நகர்கின்றன.
- உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்டது வெனிசுலா.
கரீபியன் கடலில் திடீரென போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்கா தனது இராணுவப் படைகளை பெரிய அளவில் நகர்த்தி வருகிறது.
அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்களை வெனின்சுலாவை நோக்கி அமெரிக்க ராணுவம் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதனால் வெனிசுலா எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கும்பல்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதாகவும், இந்த இராணுவ நடவடிக்கை அவற்றை அடக்குவதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு இந்த போதைப்பொருள் மாஃபியாவுடன் நேரடி தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்நது கூறி வருகிறார்.
அது மட்டுமல்லாமல், மதுரோவின் இருப்பிடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 430 கோடி) வெகுமதியையும் டிரம்ப் அறிவித்திருந்தார்.
மேலும், "மதுரோ அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன" என்று டிரம்ப் சமீபத்தில் சமூக ஊடகங்களில் நேரடியாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
- பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறைக்கு அழைத்து சென்றனர்.
- ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த விமானத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான உயர்ரக போதை பொருட்கள் பயணிகள் மூலம் கடத்தி வரப்படுவதாக கோவை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் வான் சுங்க இலாகா துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் வைத்திருந்த பைகள் உள்ளிட்ட உடைமைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 2 பயணிகள் கொண்டு வந்த பைகளில் 6.713 கிலோ கிராம் எடையுள்ள உயர்ரக கஞ்சா(தண்ணீரில் வளரக்கூடியது) போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பகத்மான் முஜீப் மற்றும் சுகைல் உபயதுல்லா ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கைதான கேரள பயணிகள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடத்தில் அதே விமானத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டித்துரை சுப்பையா என்ற 2 பயணிகள் ரூ.18.67 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சுங்க இலாகாவிற்கு வரி செலுத்தாமல் அவற்றை ரகசியமாக கடத்தி வந்தது தெரிய வந்தது.
இந்த 2 சம்பவங்களால் நேற்று இரவு கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து வந்த அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
- ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை:
சென்னையில் கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பலருக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.
இதனை ஏற்று போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பலரிடம் உங்களை கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஒருவரும் 2 சப்- இன்ஸ்பெக்டர்களும் மிரட்டி லட்சக்கணக்கில் வசூல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து லஞ்சம் பெற்றிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 50 லட்சம் வரை பணம் கைமாறி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.






