என் மலர்tooltip icon

    பிரேசில்

    • ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது.
    • பிரேசிலியா சென்ற பிரதமர் மோடிக்கு அல்வோராடா மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரேசிலியா:

    பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

    பிரதமர் மோடி ஏற்கனவே 3 முறை பிரேசில் சென்றுள்ளார். முதலில் ஜூலை 2014ம் ஆண்டில் சென்றார். 2019-ம் ஆண்டில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பங்கேற்றார். கடந்த ஆண்டு நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என மொத்தம் 3 முறை சென்றுள்ளார்.

    தற்போது ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரேசில் சென்றுள்ளார்.

    இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலியா நகரில் உள்ள அல்வோராடா மாளிகைக்குச் சென்றார்.

    அப்போது பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லூலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

    • முக்கிய உலகளாவிய அமைப்புகளில் சுமார் 80 ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
    • பிரிக்ஸ் குழுவின் சமீபத்திய விரிவாக்கம் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாம் உறுதியுடன் செயல்படுவதற்கான ஒரு சான்றாகும்.

    பிரதமர் மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

    உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) போன்ற அமைப்புகளின் தோல்வியை விமர்சித்தார். "20 ஆம் நூற்றாண்டின் தட்டச்சுப்பொறியில் 21 ஆம் நூற்றாண்டின் மென்பொருளை இயக்குவது சாத்தியமற்றது" என்று அவர் இவ்வமைப்புகளின் காலாவதியான தன்மையை சுட்டிக்காட்டினார்.

    மேலும், உலகின் பெரும்பாலான நாடுகளின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அமைப்புகள் (குளோபல் சவுத்) "நெட்வொர்க் இல்லாத சிம் கார்டு கொண்ட மொபைல் போன்கள்" என்று அதன் தெரிவித்தார்.

    மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய புதுப்பிப்புகளைக் கொண்டு வரும் இந்தக் காலத்தில், முக்கிய உலகளாவிய அமைப்புகளில் சுமார் 80 ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படாதது கவலையளிக்கிறது என்று மோடி கூறினார்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் (MDBs) போன்ற நிறுவனங்களின் கட்டமைப்பில் மாற்றங்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

    பிரிக்ஸ் குழுவின் சமீபத்திய விரிவாக்கம் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாம் உறுதியுடன் செயல்படுவதற்கான ஒரு சான்றாகும் என்றும், மற்ற சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தங்களில் அதே முனைப்பு காட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியா எதிர்நோக்கியிருக்கும் சூழலில் மோடியின் விமர்சனம் முக்கியதுவம் பெறுகிறது.  

    • ரஷியா, சீனா மற்றும் பிரேசில் நிதி அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை.
    • இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதம்.

    பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார்.

    இன்று மற்றும் நாளை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார்.

    மேலும், இந்த மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

    அப்போது, மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷியா, சீனா மற்றும் பிரேசில் நிதி அமைச்சர்களுடனும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சருடனும் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ரஷிய நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ் உடனான சந்திப்பின்போது, "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி" என தெரிவித்தார். அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான நீண்டகால கூட்டாண்மை குறித்து விவாதித்தனர்.

    இதேபோல் சீன நிதி அமைச்சர் லான் போனுடன் இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர் விவாதித்தார்.

    மேலும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சர் தாமஸ் ஜிவாண்டோனோ மற்றும் பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

    • பிரதமர் மோடிக்கு கானா அரசு உயரிய விருது வழங்கி கவுரவித்தது.
    • பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மற்றும் நாளை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "ரியோ டி ஜெனிரோவில் பிரேசிலின் இந்திய சமூகத்தினர் மிகவும் துடிப்பான வரவேற்பை அளித்தனர். அவர்கள் இந்திய கலாச்சாரத்துடன் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள் என்பதும், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது!" என்று தெரிவித்துள்ளார்.

    • ஹாட் ஏர் பலூனில் 21 பேர் பறந்து கொண்டிருந்தனர்.
    • திடீரென தீப்பிடித்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    பிரேசில் நாட்டின் தென் மாநிலமான சான்டா கட்டேரினாவில் செயின்ட் ஜானை போன்ற கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த விழாவின் ஒரு பகுதியாக ராட்சத பலூன் (hot-air balloon) மூலம் மக்கள் ஆகாயத்தில் பறப்பார்கள். பிரையா கிராண்டு என்பது இந்த ராட்சத பலூன் பறப்பதற்கு ஏற்ற இடம் திகழ்ந்து வருகிறது.

    இன்று சான்டா கட்டேரினா மாநிலத்தில் ராட்சத பலூனில் 29 பேர் பறந்து கொண்டிருந்தனர். வானில் பறந்து கொண்டிருக்கும்போது, பலூன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பலூன் முழுவதுமாக எரிந்து, மக்கள் நின்று கொண்டிருக்கும் தொட்டி கீழே விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் சனிக்கிழமை இதுபோன்ற ராட்சத பலூன் விழுந்ததில் 27 வயது பெண் ஒரவர் உயிரிழந்தார். 11 பேர் காயம் அடைந்தனர்.

    • சீனாவின் மின்சார காரான ‘பைட்’ நிறுவன உற்பத்தி ஆலை பிரேசிலில் அமைந்துள்ளது.
    • இந்த ஆலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    பிரேசிலியா:

    சீனாவின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான 'பைட்' நிறுவன உற்பத்தி ஆலை பிரேசில் நாட்டின் சாவ் பவுலோ நகரில் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில் சீன அதிகாரிகள் மட்டுமே பதவி வகித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், சீன கார் நிறுவனத்தின் மீது தொழிலாளர்கள் நலச்சங்கம் பிரேசிலியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் சீன நிறுவனம் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், குறிப்பிட்ட பணி நேரத்தைவிட அதிக நேரம் பணிபுரிய கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சீன கார் நிறுவன வழக்கை சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரிக்க உள்ளது. அந்த நிறுவனத்தை நாட்டில் இருந்து முழுவதுமாக அகற்ற அரசு வக்கீல்கள் நீதிபதிகளைக் கேட்டு கொண்டுள்ளனர்.

    • பிரேசிலில் சமூக பாதுகாப்புத் துறை மந்திரியாக உள்ளவர் கார்லோஸ் லூபி.
    • ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்து சுமார் ரூ.9,000 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பிரேசிலியா:

    பிரேசிலில் அதிபர் லுலா டா சில்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவையில் சமூக பாதுகாப்புத் துறை மந்திரியாக உள்ளவர் கார்லோஸ் லூபி.

    ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்து சுமார் ரூ.9,000 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, கார்லோஸ் வீட்டில் நுழைந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சொகுசு கார், நகை உள்பட ரூ.1,500 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கார்லோஸ் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்தன.

    இந்நிலையில், கார்லோஸ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    • 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு கானபரோ வாழ்ந்து வந்தார்.
    • எதெல் கேட்டர் இப்போது உலகின் வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

    உலகின் மிக வயதான பெண்ணாக அறியப்பட்ட கானபரோ லூகாஸ் காலமானார். 

    கானபரோ ஜூன் 8, 1908 அன்று பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுலில் பிறந்தார். 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு கானபரோ வாழ்ந்து வந்தார்.

    வயது முதிர்வு காரணமாக கேசெரோஸில் உள்ள சாண்டா காசா டி மிசரிகார்டியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் (ஏப்ரல் 30) உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கானபரோ லூகாஸின் மரணத்துக்கு பின், இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர் இப்போது உலகின் வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

    • போல்சனரோ வடகிழக்கு பிரேசிலில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
    • அப்போது அவருக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது.

    சாவ் பாவ்லா:

    பிரேசிலின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெய்ர் போல்சனாரோ.

    இவர் நேற்று முன்தினம் வடகிழக்கு பிரேசிலில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அவரது அரசியல் கட்சி தெரிவித்தது.

    வடகிழக்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ நோர்டேவில் உள்ள ஒரு சிறிய நகரமான சாண்டா குரூசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த வலி கடந்த 2018 செப்டம்பரில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட கத்திக்குத்தின் நீண்டகால விளைவுகளுடன் தொடர்புடையது என அவரது லிபரல் கட்சி தெரிவித்தது.

    மருத்துவமனையில் போல்சனாரோவை கண்காணித்து வரும் மருத்துவக் குழு, அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அறுவை சிகிச்சைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவித்தது.

    • ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
    • இதில் அர்ஜெண்டினா வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    ரியோ டி ஜெனிரோ:

    ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேயஸ், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லர் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பேயஸ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெர்மனியின் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரியோ டி ஜெனிரோ:

    ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ காம்சேனா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 3-6, 4-6 என இழந்தார். இதன்மூலம் ரியோ ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பிரிக்ஸ் அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
    • பிரிக்ஸில் இணைய சவுதி அரேபியாவுக்கு அழைப்பு.

    அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில் அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டு வரை வளரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பிற்கு பிரேசில் தலைமை தாங்குகிறது.

    மேலும் உலகளாவிய தெற்கு நாடுகளிடையே உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் இணைந்து நிறுவப்பட்டது. பிறகு, 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது.

    கடந்த ஆண்டு, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த கூட்டமைப்பு விரிவடைந்தது. சவுதி அரேபியாவும் இந்த அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா முறையாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளன, மேலும் பல நாடுகள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

    ×