என் மலர்

    நீங்கள் தேடியது "dengue"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு 2,65,834 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது, அதில் 6,430 நபர்களுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்தாண்டு இதுவரை 2,42,743 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 4,524 நபர்களுக்கு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 15 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகள் சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசு புழு வளரிடங்களான மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருட்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்) போன்றவைகளை கண்டறிந்து கொசு புழுக்கள் இருப்பின் அழித்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக 318 மருத்துவ அலுவலர்கள், 635 செவிலியர்கள், 954 கொசு ஒழிப்புக்கென நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,324 ஒப்பந்த பணியாளர்கள் என ஆக மொத்தம் 4,231 மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சென்னையில் இன்று மட்டும் 54 நபர்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    பல்லடம்:-

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளிநகர் தொட்டி அப்புச்சி கோவில் பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன்படி அந்தப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் டாக்டர் காவியா, வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெங்கு காய்ச்சலுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டது.
    • 36 பேர் டெங்கு காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கென தனி வார்டு அமைக்காததால், அங்கிருந்த நோயாளிகள் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையி னர் மேற்கொண்டு வருகின்ற னர்.

    கடலூர் அரசு மருத்துவ மனையில் 23 நபர்களும், சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் 3 நபர்களும், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 நபர்களும் ஆக மொத்தம் 36 பேர் டெங்கு காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. இது 5 மடங்கு உயர்ந்து தற்போது 36 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 260-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. பொது மக்கள் சுத்தமாகவும் சுகா தார மாகவும் இருந்து, டெங்குவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் கணிசமாக உயர்ந்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
    • கொசு உற்பத்தி ஆகும் வகையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.

    செங்கல்பட்டு:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைவலி, காய்ச்சளி, சளி, இருமல், உடல்வலியுடன் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். 10 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக படையெடுத்து வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலும் பொதுமக்களை மிரட்டி வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்திலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. தற்போது தினந்தோறும் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது. சுகாதார அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். வீடுகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் சுகாதாரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் கொசு உற்பத்தி ஆகும் வகையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.

    மறைமலை நகராட்சியில் டெங்குகாய்ச்சல் தடுப்பு பணியாளர்கள் 95 பேர் மற்றும் பொறியாளர் பிரிவு அலுவலர்கள் உட்பட அனைத்து துறை ஊழியர்கள் உள்ளடக்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு வீடாக சென்று கொசு புழுக்களை அழித்தல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை கணக்கெடுத்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், புகை மருந்து தெளிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் போது பொத்தேரி கக்கன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி இருந்ததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து மறை மலைநகர் நகராட்சி ஆணையர் சவுந்தர்ராஜன் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் தொழில் சாலை நிர்வாகத்தினர் தங்களது வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுங்கள் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநகராட்சி பகுதியில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
    • வரும்நாட்களில் நோய் பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    தீவிர நோய் பரவல் இல்லை என்ற நிலை இருந்தபோதிலும், வரும்நாட்களில் நோய் பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.டெங்கு காய்ச்சல் பரவும் தன்மை, ஏடிஎஸ்., கொசுப்புழு உருவாகும் இடம், ஏடிஎஸ்., கொசு உற்பத்தி சுழற்சி முறை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது.

    கொசுப்புகை மருந்து அடிக்கும் பணி, கொசு உற்பத்தி தடுப்பு பணிக்கு அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தார் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளால் புன்னம் சத்திரத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
    • பிளாஸ்டிக் கப்புகள் போன்ற ஏராளமான கழிவுகள் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம்சத்திரம் பகுதிகளில் ஹோட்டல்கள் பலகார கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற ஏராளமான கழிவுகள் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது. இதே போல மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் மருத்துவ கழிவுகளும் மூட்டையாக கட்டப்பட்டு இங்கு வீசி செல்கின்றனர்.

    இதனால் சாலையின் ஓரத்தில் நெடுதூரம் கழிவுகளாக கிடைக்கிறது. தற்பொழுது வட கிழக்கு பருவமழை தொடங்கி விட்டதன் காரணமாக மழை பெய்து வருகிறது. மழைநீர் கழிவுகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுகளில் கொசுக்கள் முட்டையிட்டு ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் கழிவுகளை கொட்டப்படுவதை தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் இதனை கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
    • நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது.

    நெல்லை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கே சுமார் 120 வடமாநில பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்ட காரணத்தினால் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி, சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் சுகாதார தூய்மை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கொண்டு கூட்டு துப்புரவு பணி மற்றும் தீவிர கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

    இதற்காக கொசுப்புகை மருந்து வாகனம் மற்றும் 4 புகை மருந்து மூலம் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    டவுன் மார்க்கெட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    டவுன் மண்டலத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோ முன்னிலையில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து டெங்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    டவுன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அங்கு நடந்த முகாமில் டெங்கு பாதிப்பு குறித்து விளக்கி பேசினார்.

    பின்னர் அவரது மேற்பார்வையில் 4 கொசு மருந்து எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது. டவுன் மார்க்கெட் பகுதிகள் முழுவதும், நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கட்டிட பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில்

    மேஸ்திரி அருணாச்சலம், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் சங்கர் மற்றும் பரப்புரையாளர்கள் மாயாண்டி, சோமசுந்தரம், வேலு பிரபாகரன் மற்றும் பணியாளர்கள், பயிற்சி கல்லூரி மாண வர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும்.
    • ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட தட்சிணாமூர்த்தி நகர், தேவனாம்பட்டினம் போட்மன் தெரு மற்றும் வண்டிப்பாளையம் குழந்தை காலனி ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களின் வீடுகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியினை முன்னிட்டு பல்வேறு வகையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. திறந்த வெளியில் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வாகன டயர்கள் போன்ற வற்றில் மழை நீர் தேங்கு வதாலும் வீடுகளில் பயன் படுத்தப்படும் நீர் கொள்கலன்கள், குளிர் சாதனப்பெட்டி, ஏசி மெஷின்கள் போன்ற தண்ணீர் சேகரணமாகும் அனைத்து விதமான கொள்கலன்களில் பெருமள வில் இந்நோயினை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியா கின்றன.

    இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். இதன் பொருட்டு பொது மக்கள் மழை நீர் தேங்கும் தேவை யற்ற பொருட்களை அப்புறப் படுத்துவது, வீட்டு உபயோகப் பொருட்களில் நீர் சேகரம் ஆவதை தவிர்ப்பது, நீர் கொள்கலன்களில் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்து வதின் மூலமாகவும் இவ்வகையான கொசுக்க ளின் உற்பத்தியை பெரிதும் கட்டுப்படுத்தலாம். சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாக வும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம். 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரையில் தீவிரமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • போதிய மாத்திரைகள், மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் தேங்கும் மழை நீரால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உயிரி ழப்புக்கள் ஏற்பட்டு வருவதாக அறிகிறோம்.

    மதுரையில் ஒரு நாளில் 3குழந்தைகள் 4சிறுவர்கள் மொத்த 15பேர் டெங்குவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் நோய் பரவாமல் தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட் டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை, தனி யார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகி றார்கள்.

    தற்போது மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பாதிப்பு அதனால் பாதாளச் சாக்கடை பாதிப்பு குடிநீரில் சாக்கடை கலப்பது போன்ற வைகள் நடைபெறுகிறது.

    மேலும் பாதாள சாக்கடை பதிப்பு மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சாலை ஓர தெருக்களில் தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படாததால் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது.

    மேலும் மதுரை மாநகரில் பல இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதும் மழை போல் தேங்கும் குப்பைகளால் தொற்று நோய்கள் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மதுரையில் முக்கிய கால்வாய்க ளான சிந்தா மணி, கிருது மால், பந்தல்குடி, அனுப்பானடி மற்றும் பனையூர் உள்ளிட்ட முக்கிய கால் வாய்கள் பல ஆண்டு களாக தூர்வாரப்படா மல் உள்ளது.

    இந்த கால்வாய்களில் கழிவு சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் வாய்க்கால் ஆக்கிரமித்து உள்ளது.

    மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகம் வேகமாக பரவி வரும் டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

    மதுரை மாநகரில் உள்ள பிரதான கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். கால்வாய்கள் குப்பைத் தொட்டிகளாக கழிவு நீர் தேங்கும் குளமாக மாறி வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மூலம் டெங்கு பாதித்த பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை எடுத்து தேவையான மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் தினசரி வருதை உறுதிப் படுத்த வேண்டும். கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்ற வற்றை பொது மக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் போதிய மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்டவை தேவை யானதுக்கு மேல் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

    மதுரை மாநகரில் மற்றும் புறநகரிலும் திடீர் காய்ச்ச லால் மக்கள் அவதிப்படு வதை மருத்துவ சுகாதாரத் துறை மூலம் விழிப்புணர்ச்சி பிரசாரம் செய்து பொது மக்களின் அச்சத்தை தவிர்த்திடும் வகையில் சுகாதாரத்துறை ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புத்தூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது
    • சுகாதார ஆய்வாளர்கள், தோகைமலை வட்டார கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    கரூர்,

    தோகைமலை ஒன்றியம், புத்தூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தனிக்காசலம் தலைமை தாங்கினார். இதில் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு, ஒவ்வொரு தெருக்களில் உள்ள வீதிகள், பள்ளிகள், பொது இடங்கள் போன்ற பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள், தேங்காய் ஓடுகளில் தேங்கி நின்ற மழைநீரை அகற்றினர். மேலும், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று குடிநீர் தொட்டிகளை பரிசோதனை செய்து மருந்துகளை தெளித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள், தோகைமலை வட்டார கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo