என் மலர்
நீங்கள் தேடியது "Dengue"
- எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
- உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரேசில் அரசாங்கம் புதன்கிழமை உலகின் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சாவ் பாலோவில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'புட்டான்டன்-டிவி' எனப்படும் இந்த தடுப்பூசி 12 முதல் 59 வயதுடையவர்களுக்கு செலுத்தப்பட தகுந்தது.
தற்போது கிடைக்கக்கூடிய டெங்கு தடுப்பூசிக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த புதிய தடுப்பூசி ஒரு டோஸ் போதுமானது.
பிரேசிலில் 16,000 தன்னார்வலர்களிடம் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கடுமையான டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
2024 ஆம் ஆண்டில் உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பாதி பிரேசிலில் நிகழ்ந்தன.
- 16,648 சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 78 ஆயிரத்து 34 பேர் மருத்துவப் பயன் பெற்றுள்ளனர்.
- இந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளவும், மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கவும் சுகாதாரத்துறை சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடத்திய பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சராசரியாகப் பெய்ய வேண் டிய 86.7 செ.மீ மழையில், இதுவரை 24.9 செ.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
இருப்பினும், சுகாதாரத் துறை முழு வீச்சில் தயாராக உள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 16,648 சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 78 ஆயிரத்து 34 பேர் மருத்துவப் பயன் பெற்றுள்ளனர்.
இந்த முகாம்கள் மூலம் 5,829 காய்ச்சல் பாதிப்புகளும், 51,107 இருமல், சளி பாதிப்பு களும் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு தெருவில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு இதுவரை 18,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரதிர்ஷ்டவசமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளும் இணை நோய்கள் மற்றும் தாமதமாக மருத்துவமனையை அணுகு வது போன்ற காரணங்களால் நிகழ்ந்துள்ளன.
உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்குவதே அரசின் நோக்கம். கடந்த காலங்களில், 2012-ல் 66 பேரும், 2017-ல் 65 பேரும் டெங்குவால் உயிரிழந்தனர். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தடுப்பு நட வடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டதால் உயிரிழப்புகள் ஒற்றை இலக்கத்தில் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன.
டெங்குவைக் கண்டறிய மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 4,755 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. இது இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் உள்ள அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
டெங்கு மட்டுமல்லாமல், மலேரியா, சிக்குன்குனியா, டைபாய்டு, எலிக்காய்ச்சல் போன்ற பிற மழைக்கால நோய்களின் பாதிப்பும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளது.
நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் சுமார் 65,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மாநிலம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாதாரண மருந்துகள் எடுத்து 24 மணி நேரத்துக்குள் குறையாவிட்டால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.
- நோய் தாக்கியவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் திவலைகள் மூலம் காய்ச்சல் பரவும்.
சென்னை:
பருவ கால மாற்றத்தால் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு பகுதியில் காய்ச்சல் பரவுவது வழக்கமாகி விட்டது. கேரளாவில் ஜூன், ஜூலை மாதங்களில் பரவலாக காணப்படுகிறது.
சென்னையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக அளவில் பரவுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நீடித்தது. இந்த ஆண்டும் காய்ச்சல் மற்றும் சுவாச சம்பந்தமான வைரஸ் தொற்றுக்கள் பரவி வருகின்றன. சாதாரண சளி, காய்ச்சல், இருமல் என்ற அறிகுறிகளுடன் வரும் பலருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதும் தெரியவந்து உள்ளது.
இன்புளூயன்சா வகை காய்ச்சல் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வரும் நிலையில் டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினசரி 60 முதல் 70 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதுவரை 7 பேர் உயிரிழந்து உள்ளார்கள்.
வரும் காலங்களில் டெங்கு காய்ச்சல் இன்னும் அதிகரிக்கும் என்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்று கணித்து உள்ளார்கள்.
இன்புளூயன்சா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், உடல்வலி, சோர்வு காணப்படும்.
சாதாரண மருந்துகள் எடுத்து 24 மணி நேரத்துக்குள் குறையாவிட்டால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். நோய் தாக்கியவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் திவலைகள் மூலம் காய்ச்சல் பரவும். எனவே தும்மும் போதும், இருமும் போதும் வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். திரவ நிலை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். மேலும் வீட்டில் உள்ள 'பிரிட்ஜ்' பின்பக்கம் தண்ணீர் வடிந்து தேங்கக்கூடிய தொட்டியை வாரத்தில் ஒரு முறையாவது தூய்மை செய்ய வேண்டும்.
மொட்டை மாடியில் மழைநீர் தேங்கக் கூடிய வகையிலான பொருள்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். அப்போதுதான் 'ஏடிஸ்' கொசு பரவலைத் தடுக்க முடியும். 'ஏடிஸ்' வகை கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பது மக்களிடையே உள்ள பொறுப்பு என்று சுகாதாரத்துறை கூறி உள்ளது.
- வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம்.
- காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுகிறது. சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி என்று பல்வேறு உபாதைகளுடன் சிரமப்படுகிறார்கள்.
அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மருந்து மாத்திரைகள் எடுத்து நான்கைந்து நாட் களில் காய்ச்சல் குணமானாலும் இருமல், உடல் சோர்வு இரண்டு, மூன்று வாரங்களுக்கு நீடிக்கிறது.
சென்னையில் வைரஸ் காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் இருக்கிறது. வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம். எனவே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் நாகவள்ளி கூறும்போது, ஒரே பள்ளியில் படிக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்த 13 மாணவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதித்ததில் டெங்கு, மலேரியா அறிகுறிகள் இல்லை என்றார்.
டாக்டர்கள் கூறும்போது, இன்புளூயன்சா காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இன்புளூயன்சா தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்றார்கள்.
மேலும் அவர்கள் கூறும் போது, முக கவசம் அணிவது, கூட்டங்களை தவிர்ப்பது நல்லது என்றார்கள். காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். புரத சத்து உணவுகளையும், கீரை, காய்கறிகள் ஆகியவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்றார்கள்.
வறட்டு இருமல், தலை வலி, உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஒரு வாரத்துக்கு மேல் நீடிப்பதாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
- சென்னையில் சமீபத்தில் இரவில் கனமழை, பகலில் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி நிலவுகிறது.
- பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீப காலமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தினமும் 1,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு, டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவி வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் சமீபத்தில் இரவில் கனமழை, பகலில் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி நிலவுகிறது. இதன் காரணமாக காய்ச்சல் பரவி பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உடல் சோர்வு, வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. சிகிச்சை பெற்றாலும் உடனடியாக குணமாவதில்லை. சிலருக்கு 2 வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி பாதிப்பு தொடர்கிறது. இந்த காய்ச்சலால் நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெறாவிட்டால் டெங்கு, நிமோனியா போன்ற இணை காய்ச்சல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:-
சென்னையில் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக இருமல், சளியுடன் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது 70 சதவீதத்துக்கு மேல் 'இன்புளூயன்ஸா' காய்ச்சல் பாதிப்பு தான் உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
மழை விட்டு விட்டு பெய்வதால் நன்னீரில் வளரக்கூடிய 'ஏடிஸ்' கொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கமாக வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும்.
எனவே திறந்தவெளி இடங்கள், வீடு சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்து, முககவசம் அணிவதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தஞ்சாவூர், தெனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.
எனவே டெங்கு பாதிப்பு அதிகமாகும் என்பதால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு ATS கொசுக்களை அழிக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- தனித்துவமான நடிப்பு திறன் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் ராதிகா.
- கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராதிகா அனுமதி.
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ராதிகா. நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என்ற பன்முக அடையாளங்கள் கொண்டவர் ராதிகா. தனது தனித்துவமான நடிப்பு திறன் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடிகை ராதிகா நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் "டெங்கு" காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராதிகா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் 5 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் இல்லம் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
- கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் கொரோனா, டெங்கு குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் ஜான் ரவி, கவுன்சிலர்கள் சாலமோன்ராஜா, பழனி சங்கர், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளநிலை உதவியாளர் முகைதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக்குழுவினர் ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு கொரோனா, டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் செல்வின்துரை, ஆனஷ்ட் ராஜ் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- சிவகிரி பேரூராட்சியும், தேவிபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சிவகிரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது
- டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சியும், தேவிபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சிவகிரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது. டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், ஒலிபெருக்கி மூலமாக விளம்பரம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
முகாமிற்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகி ருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். வாசுதே வநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகிரி யில் சிவராம லிங்க புரம் தெரு, தெற்கு ரத வீதி, அம்பேத்கார் தெரு, பால கணேசன் தெரு, மலைக் கோவில் ரோடு போன்ற பகுதிகளில் மருத்துவ முகாமும், மழையிலும் வெயிலிலும் கேட்பாரற்று கிடந்த கழிவு பொருட்களான டயர், டியூப், சிரட்டை, அம்மி, ஆட்டு உரல் போன்றவற்றை வீடுவீடாக சென்று அவற்றை அகற்றும் பணியும், ஒட்டுமொத்த துப்புரவு பணியும், நிலவேம்பு கசாயம் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராஜாராம், துப்புரவு ஆய்வாளர் லாசர் எட்வின், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முருகையா, இசக்கி, டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ராஜாராம் செய்திருந்தார்.
- பணையேறிப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
- கிராமம் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் முரளி சங்கர் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள அரியப்பபுரம் வெள்ளை பணையேறிப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று நல்ல தண்ணீரில் கொசுப்புழு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். கிராமம் முழுவதும் காய்ச்சல் நோயாளிகள் உள்ளார்களா என கணக்கெடுக்கப்பட்டது. கிராமம் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், டாக்டர் பாரதி கண்ணம்மா மாவட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் தண்டாயுதபாணி, மாவட்ட மலேரியா அலுவலர் குருநாதன், இளநிலை பூச்சிகள் வல்லுநர் பாலாஜி, வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் ஸ்ரீமுக நாதன், சுகாதார ஆய்வாளர் ஜெயராமன், சுப்ரமணியன் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தொடர்மழை காரணமாக நெல்லை மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
- டவுன் தெருக்களில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து அடித்தனர்.
நெல்லை:
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக நெல்லை மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். கொசு புழுக்களால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதை தடுக்கும் வகையில் மாநகர பகுதியில் உள்ள தெருக்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும், வீடு வீடாக சென்று குடிதண்ணீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கமிஷனரின் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுரைப்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி டவுன் ரத வீதிகள் மற்றும் அதனை சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து அடித்தனர். இந்த பணியின் போது தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கொசு மருந்து அடித்ததோடு, வீடு வீடாக சென்று தண்ணீரின் தரத்தையும் ஆய்வு செய்தனர்.
- நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
- கொசு புழு ஒழிப்பு பணி மற்றும் முதிர் கொசுக்கள் அழிப்பதற்கு புகை மருந்து அடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு கிராமங்கள் தோறும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு டெங்கு உள்ளிட்ட கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் வீடு வீடாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டதுணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் ராஜேந்திரன் அறிவுரைப்படி உக்கிரன்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன் தலைமையில் மேல தாழையூத்து, அழகிய பாண்டியபுரம், பட்டவர்த்தி, வெண்கல பொட்டல் மற்றும் வன்னிகோனேந்தல் கிராமங்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர். கொசு புழு ஒழிப்பு பணி மற்றும் முதிர் கொசுக்கள் அழிப்பதற்கு புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த பணியினை மாவட்ட மலேரியா அலுவலர் மஞ்சுளா, மானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பு செய்தனர்்.






