என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fever"

    • சென்னையில் உள்ள சிறு சிறு கிளினிக்குகளில் நள்ளிரவு வரை கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
    • குழந்தைகளுடன் பெற்றோர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் பருவமழை சீசனில் ஏற்படக் கூடிய காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பொதுவாக அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் வரையில் உள்ள காலத்தில் ப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். கை, கால் வலி, உடம்பு வலி, காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகுவது, இருமல் போன்ற பாதிப்புகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சுவாசப் பாதை தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. சிறு குழந்தைகள் முதல் பள்ளி மாணவ, மாணவிகள் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவருக்கு வரக்கூடிய காய்ச்சல் மற்றவர்களுக்கும் எளிதாக தொற்றி விடுவதால் குடும்பமாக பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னையில் உள்ள சிறு சிறு கிளினிக்குகளில் நள்ளிரவு வரை கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இது குறித்து அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரி பொதுநல மருத்துவத்து றையின் தலைவர் டாக்டர் சந்திரசேகர் கூறியதாவது:-

    தற்போது வருகின்ற காய்ச்சல் இந்த பருவ காலத்தில் வரக்கூடியது. நவம்பர், டிசம்பரில் பெய்யும் மழையாலும், குளிராலும் இந்த பாதிப்பு அதிகரிக்கும். வழக்கமான காய்ச்சல் பாதிப்பை விட 10 முதல் 15 சதவீதம் வரை பாதிப்பு அதிகரிக்கும்.

    புளு வைரஸ், அடினோ வைரஸ் போன்றவை இக்காலத்தில் அதிகமாக பாதிக்கும். இத்தகைய காய்ச்சல் பாதிப்பு 95 சதவீதம் தானாகவே சரியாகி விடும்.

    சூடான தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். சுய மருத்துவம் பார்க்கக் கூடாது. மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முகக் கவசம் அணிய வேண்டும். இணை நோய் உள்ள பெரியவர்களுக்கு காய்ச்சலால் மற்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    பருவ கால காய்ச்சலால் பயப்பட தேவையில்லை. வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைவான அளவில் வருவதாக டீன் சாந்தராமன் தெரிவித்தார்.

    'புளு' காய்ச்சல் பாதிப்பு தான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது. அதே நேரத்தில் டெங்கு பாதிப்பும் சென்னையில் அதிகரித்து உள்ளது.

    • சூடான அல்லது அதிகம் குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும்போது திடீரென்று உடலின் வெப்பநிலை மாறும்.
    • உடலில் சக்தி குறையாமல் பார்த்துக்கொண்டால்தான், காய்ச்சல் விரைவில் குணமாகும்.

    காய்ச்சல் ஏற்படும்போது உடலில் சக்தி குறைந்திருக்கும். இந்த நிலையில் குளிக்கும்போது இன்னும் கொஞ்சம் சக்தி குறைந்து விடும். மேலும், சூடான அல்லது அதிகம் குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும்போது திடீரென்று உடலின் வெப்பநிலை மாறும். இதனால், உடல் நிலை சீர்கெடக்கூடும். உடலில் சக்தி குறையாமல் பார்த்துக்கொண்டால்தான், காய்ச்சல் விரைவில் குணமாகும்.

    காய்ச்சலின்போது அதிக சூடும் அல்லாத, குளிர்ந்த நிலையிலும் இல்லாத வெதுவெதுப்பான நீரில் வேண்டுமானால் குளிக்கலாம். இல்லாவிட்டால் தண்ணீரில் நனைத்த துணியால் உடலை சுத்தப்படுத்திக்கொள்ளலாம்.

    • கொசு பெருகும் போது கொசுவால் பரவும் எல்லா நோய்களும் அதிகமாகும்.
    • டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை கொசு கடிக்கும் போது கொசுவுக்குள், வைரஸ் செல்கிறது.

    "கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா!"

    என்ற நகைச்சுவையை எல்லோரும் கேட்டு இருப்பீர்கள்.

    இப்போது இருக்கும் இந்த பருவநிலை, வெயிலும் மழையுமாக, கொசுவுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.

    கொசு பெருகும் போது கொசுவால் பரவும் எல்லா நோய்களும் அதிகமாகும். 1897வது வருடம் டாக்டர் ரோனால்ட் ராஸ் என்பவர் தான் மலேரியா நோய் கொசுவால் தான் பரவுகிறது, கொசுவை ஒழித்தால் மலேரியா நோயை கட்டுப்படுத்தலாம் என்பதை கண்டுபிடித்தார். அதைத்தொடர்ந்து கொசுவால் பரவும் மற்ற நோய்கள் டெங்கு, சிக்கன் குனியா, யானைக்கால் நோய், எல்லோ ஃபீவர், ஜிக்கா போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. டெங்கு காய்ச்சல் எப்படி ஒருவருக்கு வந்தது என்பதை கீழே படியுங்கள்.

    மோகனாவிற்கு திடீரென தலைவலி அதிகமாக இருந்தது. அடிக்கடி வருவது தானே தலைவலி என்று தன்னுடைய வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இரவில் காய்ச்சல் அதிகமானது. தன்நிலை மறந்து முனகத் தொடங்கினார். உடல் வலி மற்றும் வயிற்று பிரட்டல், வாந்தி. எதுவும் சாப்பிட முடியவில்லை. காய்ச்சல் மாத்திரை எடுத்தால் சரியாகிவிடும் என்று மாத்திரையை போட்டுக் கொண்டார். அன்று இரவு காய்ச்சல் கடுமையானது. உடல் வலி மிக அதிகம். எழும்பவே முடியவில்லை. கண்களை திறக்க முடியாத அளவுக்கு கண்ணுக்கு பின்னே கடும் வலி. அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். மூன்று நாட்கள் கழித்த பின் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதியானது.

    ஜெயஸ்ரீ சர்மா

     

    அதே நேரத்தில் ரத்த தட்டுகளும் குறைய ஆரம்பித்தன. வயிற்றில் ஸ்கேன் செய்ததில் வயிற்றில், நெஞ்சுக்கூட்டில் நீர் சேர்ந்து இருந்தது மற்றும் இருதயத்தை சுற்றியும் நீர் சேர்ந்து இருந்தது. கல்லீரல் என்சைம்கள் ஆயிரத்தை கடந்திருந்தன. பொதுவாக முப்பது நாற்பது தான் இருக்கும்.

    முழு உடல் பாதிப்பாக டெங்கு காய்ச்சல் பாதித்திருந்தது. ஆனால் அவருடைய அதிர்ஷ்டம் ரத்த தட்டுகள் மிகவும் குறையவில்லை. மோகனாவிற்கு டெங்குவிலிருந்து வெளியே வர இரண்டு வாரங்கள் ஆனது.

    எப்படி வருகிறது?

    டெங்கு ஒரு வைரஸ் காய்ச்சல். டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை கொசு கடிக்கும் போது கொசுவுக்குள், வைரஸ் செல்கிறது. கொசுவுக்குள் வைரஸ் பல மடங்காக பெருகிறது. இதே கொசு இன்னொரு வரை கடிக்கும் போது அவர் உடம்புக்குள் வைரஸ் எளிதாக நுழைந்து விடுகிறது. 3 -14 நாட்களுக்குள் அவருக்கு டெங்கு காய்ச்சல் உண்டாகிறது.

    என்னன்னு அறிகுறிகள்?

    பொதுவான அறிகுறிகள் -

    கடுமையான காய்ச்சல்(104*)

    தாங்க முடியாத தலைவலி

    கண்களுக்கு பின்னால் வலி மூட்டு வலி, தசை வலி வாந்தி, தலைசுற்றல், சோர்வு உடல் முழுவதும் தடிப்புகள். இது எல்லாமே எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த அளவுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் என்பது மாறுபடும்.

    மருத்துவமனையில் சேர வேண்டுமா? அல்லது வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாமா?

    முதல் மூன்று நாட்கள் கடும் காய்ச்சல் இருக்கும். பிறகு காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும். மிகவும் கடுமையான காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையில் சேரலாம். ஆனால் உண்மையில் மிகவும் பிரச்சினையான காலம், காய்ச்சல் குறையும் போது தான். அதாவது மூன்று நாட்களுக்கு பிறகு. ரத்த தட்டுகள் குறைய ஆரம்பிக்கும். (பிளேட்லட்ஸ்) அந்த சமயத்தில் மருத்துவமனையில் இருப்பது நல்லது.

    எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது?

    முதலில் நம்மைச் சுற்றியுள்ள இடங்களில் கொசு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுப்பழுக்களை கண்டுபிடிக்க. குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். கொசு புழுக்களை கண்டால் உடனே அழித்து விடுங்கள். எங்கு தண்ணீர் தேங்கி இருந்தாலும் அதில் நெளிவதை காணலாம். குடிக்கும் நீர் எனில் மூடி வையுங்கள். சங்கு பூக்களை போட்டு வைத்தாலும் கொசுப்புழுக்கள் வராது (என் பாட்டி சொல்லிக் கொடுத்தது). கொசு வலை தான் கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்கான மிகச் சிறந்த வழி.

    குழந்தைகளுக்கு வந்தால் எப்படி?

    நான்கு வயதான சூர்யாவுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். குழந்தை மருத்துவரை பார்த்து விட்டு, உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மூன்று நாட்களில் காய்ச்சல் குறைந்து, வீட்டிற்கு அனுப்பலாம் என்று முடிவு. அன்று குழந்தை அரக்கு கலரில் வாந்தி எடுத்தது. அது வயிற்றில் ரத்தம் கசிவதற்கான அறிகுறி. ரத்த பரிசோதனைகளில் டெங்கு காய்ச்சல் உறுதியானது. உடல் முழுவதும் எங்கும் ரத்த தடிப்புகள் இருந்தது. ரத்த தட்டுகள் மிகவும் குறைய ஆரம்பித்தது. ரத்தத் தட்டுகள் ஏற்றப்பட்டன. குழந்தைக்கு நீர்ச்சத்து சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு வாரத்தில் டெங்குவின் தீவிரம்குறைந்து நல்வாய்ப்பாக குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை. குழந்தைகளுக்கு வயதானவர்களுக்கு, இணை நோய் உள்ளவர்களுக்கு டெங்கு வந்தால் மிகவும் தீவிரமாகி இறந்து போக வாய்ப்பு உண்டு. காய்ச்சல் வந்தால் இவர்களை உடனே கவனிப்பது நல்லது. கொசு வலையை பயன்படுத்துங்கள்.

    மற்றவருக்கு பரவுமா?

    ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவாது. கொசுவினால் மட்டுமே பரவும்.

    டெங்குவினால் ஏன் இறந்து போகிறார்கள்?

    பெரும்பாலானவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்ற வைரஸ் காய்ச்சலை போல வந்துவிட்டு சென்று விடும். ஆனால் நூறில் ஒருவருக்கு 'டெங்கு ஷாக் சின்றோம் 'அல்லது 'டெங்கு ஹெமரேஜிக் டிசீஸ்', எனப்படும் கடும் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ரத்தம் மற்றும் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படுவதால் மரணம் ஏற்படுகிறது.

     

    ஒருமுறை வந்தால் மீண்டும் வருமா?

    அவரவர் உடலினுடைய எதிர்ப்பு சக்தியை பொறுத்து மீண்டும் வரலாம்.

    தடுப்பூசி உண்டா?

    இதுவரை தடுப்பூசி இல்லை. டெங்கு வைரஸை நேரடியாக கொல்லும் மருந்துகள் இல்லை. சப்போர்ட்டிவ் ட்ரீட்மென்ட் எனப்படும் குளுக்கோஸ் ஏற்றுவது, காய்ச்சலை குறைப்பது மற்றும் பிளேட்லெட்ஸ் அளவை கண்காணிப்பது போன்ற சிகிச்சைகள் மட்டுமே செய்கிறோம்.

    நிலவேம்பு கஷாயம் பயன் தருமா? பப்பாளி இலை பயன்படுமா?

    சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கஷாயம் பரிந்துரைக்கப்படுகிறது எல்லா வகையான வைரஸ் காய்ச்சலுக்கும். மருத்துவரின் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கும் பக்க விளைவுகள் உண்டு. பப்பாளி இலை சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ரத்தத்தில் உள்ள பிலைட் லிஸ்ட் அளவை மிகவும் கீழே போகாமல் காப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டது. அதிலிருந்து தயாரிக்கப்படும் சிரப் கொடுக்கப்படுகிறது.

    காய்ச்சல் வந்தால் என்ன செய்யக்கூடாது?

    காய்ச்சல் டெங்குவா? என்று தெரியாத வரை வலி மாத்திரைகளை எடுக்கக்கூடாது. எந்த ஒரு ஊசியும் போட்டுக் கொள்ளக் கூடாது . மருத்துவமனையில் சென்று ரத்தத்தில் ஏற்றும் ஊசிகளை மட்டுமே எடுக்கலாம். இதை எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் . அதுபோல காய்ச்சல் அதிகமாகும் போது தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது. இப்போது தமிழ்நாட்டில் வெகுவேகமாக டெங்கு பரவி வரும் நிலையில், இதைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டால்தான், நோய் பரவுதலை கட்டுப்படுத்த முடியும்.

    வாட்ஸ்அப்: 8925764148

    • உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    • வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கை கழுவுவது அவசியமானது.

    தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இன்புளூயன்சா என்ற சுவாசம் சார்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ (எச்1என்1, எச்3என்2) மற்றும் இன்புளூயன்சா பி போன்ற குறிப்பிட்ட வகை வைரஸ்கள் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    தமிழ்நாட்டில் பொதுவாக மழைக்காலம் மற்றும் குளிர் காலங்களில் இந்த காய்ச்சல் பரவி நோய் பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு. தற்போது மழைக்காலம் தொடங்கி பருவ காலம் மாறி இருப்பதால் இந்த வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.

    இன்புளூயன்சா வைரசின் அறிகுறிகள்:

    * உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சலை உண்டாக்கும்.

    * தொடர்ந்து இருமல் ஏற்படலாம்.

    * உணவுப்பொருளை விழுங்குவதில் சிரமம் ஏற்படும். அல்லது தொண்டை வலி உண்டாகும்.

    * உடல் சோர்வுடன் காணப்படும்.

    * உடல் முழுவதும் வலி உண்டாகும். குறிப்பாக தசைகள் மற்றும் தலையில் அதிக வலியை உணரலாம்.

    * காய்ச்சல் இருந்தாலும் உடல் குளிர்வது போன்ற உணர்வும் ஏற்படும்.

    * சளி ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு ஏற்படக்கூடும்.

    * தலைவலி உண்டாகும்.

    சிலருக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுபோக்கு உண்டாகும்.

    மருத்துவ ஆலோசனை

    * இந்த அறிகுறிகள் கடுமையாக இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.

    * வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் எளிதில் பரவக்கூடும். அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

    சிகிச்சை முறை

    * குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், உணவு உண்ண முடியாத நிலை இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

    * மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் இன்புளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

    தடுப்புமுறை

    * உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். தண்ணீரும் அதிகம் பருக வேண்டும். நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.

    * இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கை கழுவுவது அவசியமானது. வெளி இடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், சாப்பிடுவதற்கு முன்பும் கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும். சோப்பு அல்லது கிருமிகளை நீக்கும் 'ஹேண்ட் வாஷ்' பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது நல்லது.

    * லேசான காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் 7 நாட்கள் வரை வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க அது உதவும்.

    • மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை.
    • ஜி.எஸ்.டி. வரியை முன்பு உயர்த்தியதும் பா.ஜ.க. அரசு தான், தற்போது குறைத்ததும் பா.ஜ.க. அரசு தான்.

    கிண்டி:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் புதிதாக எந்த நோய் தொற்றும் பரவவில்லை.

    * மாஸ்க் அணிவது கட்டாயம் போன்ற பதற்றமாமன நிலை எதுவும் இல்லை.

    * சுகாதாரமற்ற நீர்நிலைகள் மூலம் கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று ஏற்படுகிறது.

    * தமிழகத்தில் தற்போது பருவமழை கால நோய் தொற்று பாதிப்புதான் உள்ளது. பதற்றம் தேவையில்லை.

    * மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை.

    * ஜி.எஸ்.டி. வரியை முன்பு உயர்த்தியதும் பா.ஜ.க. அரசு தான், தற்போது குறைத்ததும் பா.ஜ.க. அரசு தான் என்றார். 

    • பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் முககவசம் அணிந்து செல்ல சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    • 38 மாவட்டங்களில் 10 முதல் 20 ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.

    காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி ஆகிய பாதிப்புகளும் காணப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது.

    இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில் 38 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் ஆகியவற்றில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து சுகாதாரத்துறை ஆய்வு செய்ய உள்ளது.

    ஏற்கெனவே தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளூயன்சா ஏ வகை தொற்று என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வேறு எதுவும் தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    38 மாவட்டங்களில் 10 முதல் 20 ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 450-க்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து ஆய்வு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

    • சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.
    • காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவீத நோயாளிகளுக்கு இன்புளூயன்சா A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே காணப்படுகிறார்க்ள்.

    இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவீத நோயாளிகளுக்கு இன்புளூயன்சா A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது. வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது.
    • வெளியே சென்று வந்த உடன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.

    காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி ஆகிய பாதிப்புகளும் காணப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது.

    இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பருவகால மாற்றம் காரணமாக இன்புளூயன்சா வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் தான் அதிகம் காணப்படுகிறது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது. மருத்துவ சிகிச்சை தேவை. இதேபோல, பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முக கவசம் அணிந்து செல்வது நல்லது. ஆனால், கட்டாயம் கிடையாது. வெளியே சென்று வந்த உடன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சென்னையில் சமீபத்தில் இரவில் கனமழை, பகலில் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி நிலவுகிறது.
    • பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    சென்னை:

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீப காலமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சென்னையில் மட்டும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தினமும் 1,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு, டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவி வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் சமீபத்தில் இரவில் கனமழை, பகலில் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி நிலவுகிறது. இதன் காரணமாக காய்ச்சல் பரவி பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    உடல் சோர்வு, வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. சிகிச்சை பெற்றாலும் உடனடியாக குணமாவதில்லை. சிலருக்கு 2 வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி பாதிப்பு தொடர்கிறது. இந்த காய்ச்சலால் நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெறாவிட்டால் டெங்கு, நிமோனியா போன்ற இணை காய்ச்சல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:-

    சென்னையில் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக இருமல், சளியுடன் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது 70 சதவீதத்துக்கு மேல் 'இன்புளூயன்ஸா' காய்ச்சல் பாதிப்பு தான் உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

    மழை விட்டு விட்டு பெய்வதால் நன்னீரில் வளரக்கூடிய 'ஏடிஸ்' கொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கமாக வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும்.

    எனவே திறந்தவெளி இடங்கள், வீடு சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்து, முககவசம் அணிவதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஒரு ஏலக்காய், அதிமதுரம் அரை துண்டு, ஏழு மிளகு இவை மூன்றையும் உரலில் இடித்து சேர்க்கவும்.
    • குழந்தைகளுக்கு பால் சங்கில் பாதி அளவு இக்கசாயமும் பாதி அளவு தேனும் கலந்து கொடுக்கலாம்.

    பருவநிலையில் மாற்றம் ஏற்படும்போது சிலருக்கு காய்ச்சலும், ஜலதோஷமும் ஏற்படுவதுண்டு. ஒரு டம்ளர் தண்ணீரை சிறு தீயில் கொதிக்கவைத்து அதில் கற்பூரவல்லி இலை ஐந்து, அரச இலை (கொழுந்து) மூன்று, துளசி இலைகள் ஆறு சேர்க்க வேண்டும்.

    ஒரு ஏலக்காய், அதிமதுரம் அரை துண்டு, ஏழு மிளகு இவை மூன்றையும் உரலில் இடித்து அதையும் அவற்றுடன் கலந்து அரை டம்ளர் வரும் வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். ஆறிய பின்னர் இதை குழந்தை முதல் முதியவர் வரை குடிக்கலாம்.

    குழந்தைகளுக்கு பால் சங்கில் பாதி அளவு இக்கசாயமும் பாதி அளவு தேனும் கலந்து கொடுக்கலாம். பெரியவர்கள் அப்படியே அருந்தலாம்.

    இக்கசாயத்தை மூன்று வேளையும் எடுத்துக்கொள்ளலாம். குணமாகாத பட்சத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமானது.

    • உடலில் குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கி வெப்பநிலையை சீராக்க வழிவகை செய்யும்.
    • காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும்.

    காய்ச்சலின்போது இளநீர் குடிப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் காய்ச்சல் மற்றும் வியர்வை காரணமாக உடலில் ஏற்பட்ட நீரிழப்பையும், எலக்ட்ரோலைட்டுகளையும் சமநிலைப்படுத்த இளநீர் உதவும்.

    மேலும் உடலில் குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கி வெப்பநிலையை சீராக்கவும் வழிவகை செய்யும்.

    காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும். இளநீரை அதிகமாக உட்கொள்ளவும் கூடாது. அதில் சோடியம் அதிகமாக இருப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

    • கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கோழிப்ப ண்ணையாளர்கள் கலக்க மடைந்துள்ளனர்.
    • நாமக்கல் மற்றும்சுற்று வட்டாரங்களில் உள்ள கோழி பண்ணைகளில், கால்நடை பராமரிப்பு துறை யினரின் ஆலோசனைப்படி வெளிநபர்கள் கோழிப் பண்ணைகளுக்குள் நுழை வது தடுக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கோழிப்ப ண்ணையாளர்கள் கலக்க மடைந்துள்ளனர். கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல்

    மாவட்டத்தில் பண்ணையா ளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கி யுள்ளனர்.

    இதன்படி நாமக்கல் மற்றும்சுற்று வட்டாரங்களில் உள்ள கோழி பண்ணைகளில், கால்நடை பராமரிப்பு துறை யினரின் ஆலோசனைப்படி வெளிநபர்கள் கோழிப் பண்ணைகளுக்குள் நுழை வது தடுக்கப்பட்டுள்ளது. பண்ணைகளுக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் கொண்ட 45 அதிவிரைவு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை களை எவ்வாறு பின்பற்றி வருகிறார்கள் என இக்குழு கண்காணிப்பில் ஈடுபட, நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துணை இயக்குனர் பாஸ்க ரன் உத்தரவிட்டு உள்ளார்.

    இதனிடையே பல்ல டத்தில் நேற்று முன்தினம் ரூ.119-ஆக இருந்த கறிக்கோழி விலை, 13 ரூபாய் குறைந்து நேற்று ரூ.106- ஆக இருந்தது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ள நிலையில் மேலும் இந்த விலை குறையும் என கூறப்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் பீதிஅடைந்துள்ளனர் .

    முட்டை பண்ணை கொள்முதல்விலை 5 ரூபாயாக நீடிக்கிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்ட நிலையிலும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டைகள் வழக்கம் போல அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ×