search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public places"

    • ஜெர்மனியில் ஹிட்லர் பாடி டபுள்களை பயன்படுத்தினார்
    • ராணுவ உளவுத்துறை செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிபடுத்தினார்

    திரைப்படங்கள் உருவாக்கப்படும் போது ஒருவரை போன்றே அச்சு அசலாக தோற்றமளிக்கும் பாடி டபுள் எனும் மற்றொரு நபரை பல்வேறு காரணங்களுக்காக சில காட்சிகளில் பயன்படுத்துவது வழக்கம்.

    அவ்வாறு தோற்றமளிக்கும் பாடி டபுள் நபர்களை, பொது வெளியில் தனக்கு பதிலாக நடமாட விடும் வழிமுறையை இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் ஜெர்மனியில், ஹிட்லர் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தியதாக இன்றும் நம்பப்படுகிறது.

    ரஷிய அதிபர் புதின், எதிரிகளால் பொதுவெளியில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி தன்னை போலவே தோற்றமளிக்கும் பாடி டபுள்களை பொதுவெளியில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

    நடை, உடை, பாவனை, பேசும் விதம் உட்பட அனைத்து விஷயங்களிலும் அவர்களுக்கு புதினை போலவே நடந்து கொள்ள பயிற்சியளிக்கப்பட்டு இருப்பதாக அத்த தகவல்கள் கூறின.

    புதின் ஒருசில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து, தனக்கு பதிலாக தனது பாடி டபுள் ஒருவரை பயன்படுத்துகிறார் என கடந்த ஜூன் மாதம், உக்ரைன் ராணுவ உளவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி யூஸோவ் என்பவரும் உறுதிபட தெரிவித்திருந்தார்.

    ரஷிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இச்செய்திகளை முற்றிலுமாக மறுத்தார். இந்நிலையில் ரஷிய நாட்டின் தேசிய திட்டங்களுக்கான மையத்தின் ஒரு சந்திப்பில் புதின் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சி குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நேரத்தை தெரிந்து கொள்வதற்காக புதின் எதேச்சையாக தனது இடக்கரத்தை பார்க்கிறார். அக்கரத்தில் கடிகாரம் இல்லாததால் உடனடியாக தனது வலக்கரத்தை பார்த்து நேரத்தை தெரிந்து கொள்கிறார்.

    இதனையடுத்து, அந்நிகழ்ச்சியில் பங்கேற்றது புதின் அல்ல என்றும் அவரை போன்று தோற்றமளிக்கும் ஒரு பாடி டபுள் என்றும் இது சம்பந்தமாக இத்தனை காலம் வெளியான செய்திகள் உண்மை எனவும் இச்சம்பவம் குறித்து பலரும் விமர்சிக்கிறார்கள்.

    இடது கர பழக்கம் உள்ள புதின் தனது வலக்கரத்தில் கைக்கடிகாரம் அணிவது வழக்கம். எனவே நேரத்தை தெரிந்து கொள்ள இடக்கர பழக்கம் உள்ளவர்கள் வலக்கரத்தைதான் பார்க்க வேண்டும் எனும் கருத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள்.

    பல நாட்களோ, வாரங்களோ பொதுவெளியில் இருந்து அதிபர் புதின் காணாமல் போய், பிறகு திடீரென தோன்றுவதும் ரஷியாவில் சகஜமான ஒன்று என்பதால் இந்த விமர்சனங்களில் உண்மை இருக்கலாம் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.

    • சாலையோர ‘பார்’களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • டாஸ்மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும்.

    சென்னை மாநகரில் பார்களை ஏலம் விடுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் பார் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையால் பார்கள் மூடப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மாலை நேரங்களில் பார் களில் கூட்டம் அலை மோதும். குளிர்சாதன வசதிக்கொண்ட பார்கள் மற்றும் சாதாரண பார்கள் என இரண்டிலுமே மதுபிரி யர்கள் நிரம்பி இருப்பார்கள். பல மணி நேரங்களை பார் களிலேயே செலவழித்து... சில பாட்டில்களை உள்ளே தள்ளிவிட்டு 'ரிலாக்ஸ்' ஆக உற்சாகத்தோடு பொழுதை போக்கும் மது பிரியர்கள் பார்கள் மூடப்பட்டுள்ள தால் திண்டாடி வருகிறார் கள்.

    பார்கள் மூடப்பட்டிருந்த போதிலும் டாஸ்மாக் மதுக் கடைகள் எப்போதும் போல திறக்கப்பட்டு வா... வா... என்று அழைப்பதால் குடி மகன்கள் கையில் பாட்டிலை வாங்கி வைத்துக்கொண்டு எங்கே போய் குடிப்பது? என தவிக்கும் நிலையே காணப் படுகிறது.

    இதனால் சென்னையில் பல இடங்களில் சாலையில் நின்று மது குடிப்பது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

    முகப்பேர் சர்ச் ரோடு, சூளைமேடு நெல்சன்மாணிக் கம் ரோடு, பழைய வண்ணா ரப்பேட்டை மேயர் பசுதேவ் தெரு, அடையாறு கெனால் பேங்க் ரோடு மற்றும் எழும் பூர் பகுதியில் உள்ள டாஸ் மாக் மதுக்கடை என சென்னை மாநகரில் அனைத்து கடைகள் முன்பும் நின்று கொண்டு மதுபிரியர்கள் குடித்து கும்மாளமடித்து வருகிறார் கள். கடைகளில் நின்று டீ குடிப்பது போல தெருக் களை பார்களாகவே நினைத்து ஹாயாக அமர்ந்து குடிமகன்கள் மது அருந்தி வருகிறார்கள்.

    டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிவிட்டு சாலையோரமாக அமர்ந்து கொண்டு ரோட்டில் செல் லும் பள்ளி மாணவ-மாண விகள் மற்றும் குழந்தைகள் என யாரைப் பற்றியும் கவலைப்படாமல் 'சைடிஸ்' சகிதமாக உற்சாக பானத்தை உள்ேள தள்ளிவிட்டு ரோட்டில் போகிறவர்களை பார்த்து "இன்னாப்பா... மொறைக்கிற" என்று கேள்வி கேட்பதால் நமக் கெதுக்கு வம்பு என பலர் ஒதுங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது.

    ரோட்டில் நின்று பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்துபவர்களை போலீ சார் எச்சரித்து விரட்டி விடுவது உண்டு. ஆனால் தற்போது அதுபோன்று எந்தவிதமான இடையூறும் செய்யப்படுவதில்லை.

    இதனால் குடிமகன்கள் எந்தவித பயமோ... கூச்சமோ இன்றி பொதுவெளி யில் குடிப்பது அதி கரித்துக் கொண்டே செல்கிறது.இப்படி மதுஅருந்தும் குடி மகன்கள் ஊறுகாய் பாக் கெட், மிக்சர் பாக்கெட், சில்லி சிக்கன் என 'சைடிஸ்' களை உள்ளே தள்ளி விட்டு வெற்று கவர்களை ரோட்டி லேயே வீசிவிட்டு சென்று விடுகிறார்கள்.

    அதேபோன்று காலி மது பாட்டில்களையும் ரோட்டி லேயே போட்டுவிட்டு சென்று விடுவதால் 'பார்' களில் குவிய வேண்டிய குப்பைகள் ரோட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டு இது போன்ற சாலையோர 'பார்'களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனால் குடியிருப்பு வாசிகளும், குடும்பத்தோடு வெளியில் செல்பவர்களும் முகம் சுழிப்பதுடன் இந்த பிரச்சினைக்கு டாஸ்மாக் நிர்வாகத்தினர் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான அன்ப ரசனிடம் இந்த பிரச்சி னைக்கு தீர்வு தான் என்ன என்று கேட்டபோது, டாஸ் மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும் என்றார்.

    இதற்கு முன்பு 2014 மற்றும் 2021-ம் ஆண்டுகளி லும் இதுபோன்ற பிரச் சினை இருந்தது. அப்போது பார்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு குடி மகன்கள் பார்களில் போய் குடித்தார்கள். இப்போதும் அதுபோன்று செய்யலாம் என்றார்.

    குடிமகன்களின் திண் டாட்டத்துக்கு டாஸ்மாக் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    • குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.
    • ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருவலூர்செல்லும் ரோட்டில்அப்பகுதியில் உள்ள வீடுகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், காய்கறி கடைகள் ஆகியவைகளில் இருந்து குப்பைகள், மற்றும் கழிவுகளை ரோட்டு ஓரங்கள் மற்றும் கோவில் பகுதிகளில் கொட்டிச் சென்று விடுகின்றனர். இதனால் கடுமையான துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- இப்பகுதியை சேர்ந்த அனைத்து குப்பைகளும் தினசரி இங்கு கொண்டு வந்து கொட்டப்படுவதால் குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்துடன் கூறி யும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றனர்.

    தேர்தல் பிரசாரத்தையொட்டி பொது இடங்களில் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட்அவுட் வைக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourtMaduraiBench #ParliamentElection
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர் தேர்வில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில வருடங்களாக தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    2014 பாராளுமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. அதே போல 2016-ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

    பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் கமி‌ஷன் தவறிவிட்டது. 2016 சட்டசபை தேர்தலின்போது சுமார் 750 கோடி வரை கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

    இதே குற்றச்சாட்டை முன் வைத்து அப்போது நடக்க இருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன. இந்த நிலை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தொடரலாம்.

    எனவே தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யும் நடைமுறையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.



    எனது மனுவின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கணக்கில் வராத பணம் பிடிபட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேர்தல் பிரசாரத்தையொட்டி பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும்.

    பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகளால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கட்சிகளிடமோ, கட்சி தலைவர்களிடமோ தேர்தல் செலவுகளை வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கு பஸ்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் மொத்தமாக பொதுமக்களை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    இதேபோல் பொது இடங்களில் கட்-அவுட், பேனர்கள் வைக்கவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சியின் வேட்பாளர், தலைவரிடம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிடப்படுகிறது.

    அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். #HighCourtMaduraiBench #ParliamentElection

    கோவா கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்துவோருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. #Goa #PublicPlace #Alcohol #Jail
    பனாஜி:

    அழகான கடற்கரைகள், பாரம்பரிய கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்த கோவா மாநிலத்துக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்தி பொழுதை போக்குகின்றனர்.

    இதனால் சமீப காலமாக அங்கு பல்வேறு பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இது கோவா அரசுக்கும், போலீசாருக்கும் மிகப்பெரும் தலைவலியாக மாறி வருகிறது. எனவே இதை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. சுற்றுலா வர்த்தக பதிவு சட்டத்தில் மேற்கொண்டுள்ள இந்த திருத்தத்துக்கு மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இதன் மூலம் கோவாவில் உள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்துவோருக்கும், மதுபாட்டில்களை உடைப்போருக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதை செலுத்த தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதைப்போல சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் சமைப்போருக்கும் மேற்படி தண்டனை வழங்கப்படும் என மந்திரி ஒருவர் தெரிவித்தார். #Goa #PublicPlace #Alcohol #Jail
    ×