என் மலர்
ரஷ்யா
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி பரிசோதனை நடத்தியது.
- ரஷியாவின் அண்டை நாடான பெலாரசில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆணுஆயுதங்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியதாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஒரேஷ்னிக் ஏவுகணைகள் செயல்பாட்டிற்கு வந்ததாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளார். மேலும், ரஷியா- உக்ரைன் இடையிலான போர் நிறுத்துவதற்கான வழிகளை தேடும் பேச்சுவார்த்தை தொடர்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
ரஷியாவின் ஆதரவு தெரிவிக்கும் அண்டை நாடான பெலாரஸில் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ரஷிய ராணுவ வீரர்கள் இடையே ஒரு குறுகிய விழாவை நடத்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியா- உக்ரைன் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் முக்கியமான நேரத்தில் ரஷியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஏவுகணையின் திறனை ரஷிய அதிபர் புதின் பாராட்டியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், போர்க்களத்தில் ஒரேஷ்னிக் ஏவுகணை விரைவில் நுழையும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உக்ரைனுக்கு எதிராக இந்த ஏவுகணையை பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தியது. உக்ரைன் சோவியத் ரஷியாவுடன் இருக்கும்போது, ஏவுகணைகள் தயாரிக்கும் டினிப்ரோவில் உள்ள ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தி பரிசோதனை செய்தது.
இந்த ஏவுகணையை இடைமறிப்பது கடினம் எனக் கூறப்படுகிறது.
- இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார்.
- இது ஒரு அப்பட்டமான பொய் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் ரஷியா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த டிரம்ப் அரும்பாடுபட்டு வருகிறார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் தலையீட்டுடன் ரஷியா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதாக ரஷியா அறிவித்துள்ளது.
ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், நோவ்கோரோட் பகுதியில் உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை நோக்கி உக்ரைன் சுமார் 91 நீண்ட தூர டிரோன்களை ஏவியுள்ளது. இருப்பினும், ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார்.

இது அரச பயங்கரவாதம் என்றும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறிய லாவ்ரோவ், இந்தத் தாக்குதலால், தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷியாவின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது பேச்சுவார்த்தையை வலுவிழக்கச் செய்யும் என்று புதின் சுட்டிக்காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ரஷியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் என்றும், உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தகுந்த காரணத்தை உருவாக்கவே ரஷியா இதுபோன்ற நாடகங்களை ஆடுவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
புதின் இல்லத்தின் மீதான இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டு, போர் நிறுத்த முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது.
- ரஷியா பிடித்துள்ள பகுதிகளை விட்டுக்கொடுக்க உக்ரைன மறுப்பு தெரிவிக்கிறது.
- டிரம்பை இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேச இருக்கிறார்.
ரஷியா- உக்ரைன் இடையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதில் பெரும்பாலான அம்சங்களில் அமெரிக்கா- உக்ரைன் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுக்கு விட்டுக் கொடுப்பதும், ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுஉலையான சபோரிசியாவை ரஷியாவிடம் ஒப்படைக்கவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இன்று புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, ஜெலன்ஸ்கி சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் நேற்று ரஷிய அதிபர் புதின், அந்நாட்டின் ஆயுதப்படைகள் கமாண்டு மையத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். அங்குள் அதிகாரிகளிடம் பேசும்போது "உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், ரஷியா ராணுவ வழியில் அனைத்து சிறப்பு ராணுவ ஆபரேசன் இலக்குகளை அடையும் எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷியா எல்லையில் பாதுகாப்பு பகுதி தொடக்கம் சிறப்பான நடைபெற்று வருகிறது. ரஷியப் படைகள் டான்பாஸ் மற்றும் சபோரோசியே பிராந்தியத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
- 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷியா - உக்ரைன் போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் கொல்லப்பட்டார்.
உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ரஷியாவின் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்துள்ளார்.
இந்த கார் குண்டுவெடிப்புக்கு பின்னால் உக்ரைனின் சதி உள்ளதா என்ற கோணத்தில் ரஷியா விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே சமயம் ஜெனரல் இகோர் கிரிலோவ் 2024 டிசம்பரில் ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டது. தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள்.
ஆனால் மார்க்கெட் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- இந்தியாவில் 50-60 கோடி மக்கள் தான் இந்தி மொழி பேசுகினறனர்.
- இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்
சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார் . டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் புதின் பங்கேற்றார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்திய பயணத்தை மேற்கொண்டார்.
இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், இந்திய வருகை குறித்து பேசிய புதின், "சில நாட்களுக்கு முன் இந்தியா சென்றேன். சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் ஹிந்தி பேசுவதில்லை, 50-60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். அங்கு ஒரு மொழி பேசும் மக்கள் குறித்து இன்னொரு மொழி பேசும் மக்களுக்கு தெரியாது. ஆனால் இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்" என்று தெரிவித்தார்.
- ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் எங்களுக்கு பொருந்தாது.
- முதலில் தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் ரஷியாவுக்கு சாதகமான அம்சங்கள் இருந்தன.
மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்தித்து பேசினார். இதில் அனுமதி ஒப்பந்தத்தில் மேற்கொள் ளப்பட்ட திருத்தங்கள் குறித்து புதினுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக புதினின் மூத்த ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறும்போது, அமெரிக்க குழுவுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தன.
ஆனால் அதில் இன்னும் பணிகள் உள்ளன. இதுவரை நாங்கள் ஒரு சமரசத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் எங்களுக்கு பொருந்தாது" என்றார்.
திருத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ரஷியா நிராகரித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதலில் தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் ரஷியாவுக்கு சாதகமான அம்சங்கள் இருந்தன. இதற்கு உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- 25 கிலோ எடையை அதிகரித்து பின்னர் அதைக் குறைக்கும் சவாலைத் தொடங்கினார்.
- மாதத்தில் 13 கிலோ அதிகரித்து 105 கிலோவை எட்டியதாக அவர் கூறியிருந்தார்.
ரஷியாவின் ஷ்யாவின் ஓரன்பர்க் நகரைச் சேர்ந்த 30 வயதான டிமிட்ரி நுயான்சின், உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் சமூக ஊடகங்க பிரபலமாகவும் உள்ளார்.
தனது எடை இழப்புத் திட்டத்தை விளம்பரப்படுத்த, அவர் 25 கிலோ எடையை அதிகரித்து பின்னர் அதைக் குறைக்கும் சவாலைத் தொடங்கினார்.
இதன் ஒரு பகுதியாக, சில வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் 10,000 கலோரிகளுக்கு மேல் ஜங்க் ஃபுட் சாப்பிடத் தொடங்கினார்.
காலையில் பேஸ்ட்ரிகள் மற்றும் கேக்குகள், மதியம் மயோனைஸுடன் பாலாடைக்கட்டிகள், இரவில் ஒரு பர்கர் மற்றும் இரண்டு சிறிய பீட்சாக்கள் சாப்பிடுவார்.
இந்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மாதம் 18 ஆம் தேதி தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு மாதத்தில் 13 கிலோ அதிகரித்து 105 கிலோவை எட்டியதாக அவர் கூறியிருந்தார்.
இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, அவர் தனது நண்பர்களிடம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தனது பயிற்சி வகுப்புகளை ரத்து செய்வதாகவும் கூறினார். ஆனால் மறுநாள் அவர் தூக்கத்தில் மாரடைப்பால் இறந்தார்.
- இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ரஷிய அதிபர் புதினை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு மந்திரி ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
அதிபர் புதின் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அங்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு மந்திரி ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்பின் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், இந்தியா-ரஷியா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கூட்டத்தில் பரிமாறிக் கொள்வோம். அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷியாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என தெரிவித்தார்.
- துறைமுக நகரமான நோவோரோஸ்யிஸ்க் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடந்தியுள்ளது.
- இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷியா உக்ரைன் போருக்கான அதிக நிதியை ஈட்டும் நிலையில் இந்த தாக்குதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் இரவோடு இரவாக ரஷியாவின் துறைமுக நகரமான நோவோரோஸ்யிஸ்க் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடந்தியுள்ளது.
இந்த துறைமுக நகரம் ரஷியாவின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையம் ஆகும்.
இந்த நிலையில் உக்ரைன் தாக்குதலில் நகரத்தின் மதிப்புமிக்க உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷியா உக்ரைன் போருக்கான அதிக நிதியை ஈட்டும் நிலையில் இந்த தாக்குதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் துறைமுகம், எண்ணெய் டெர்மினல் மற்றும் ரஷியாவின் S400 வான் பாதுகாப்பு அமைப்பு சேதமடைந்ததாக உக்ரைன் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. முன்னதாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியத்தில் 7 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
- ரஷிய தாக்குதலில் கர்ப்பிணி பெண் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
- ரஷியா தாக்குலால் கீவ் நகர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா தாக்குதலை தொடங்கியது. போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆன போதும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ரஷியாவும், உக்ரைனும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி தாக்கி வருகின்றனர்.
ரஷியா நடத்திய தாக்குதலில் உக்ரைனில் உள்ள பல நகரங்கள் கடுமையான சேதமடைந்து உள்ளது. ஏராளமான கட்டிடங்கள் எலும்பு கூடுகள் போல காட்சி அளிக்கிறது. ரஷியாவுக்குள் புகுந்து உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையில் ரஷியா இறங்கி இருக்கிறது.
இந்த நிலையில் சமீப காலமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது. இடைவிடாமல் ஏவுகணைகள், டிரோன் களை வீசியது.
உள்கட்டமைப்பு வசதிகள், குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் கூறி உள்ளது. இரவு முழுவதும் குண்டு மழை பொழிந்தது.
கீவ் சர்வதேச விமான நிலையம் அருகே டெஸ்னி யான்ஸ்கி பகுதியில் உள்ள 5 மாடி கட்டிடமும் ஏவுகணை தாக்குதலுக்கு தப்பவில்லை. அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.
மேலும், பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உள்கட்டமைப்புகள் தாக்குலுக்கு ஆளானதால் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ரஷியா தாக்குலால் கீவ் நகர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.






