என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெலன்ஸ்கி"

    • இதுதொடர்பாக சீனாவை தொடர்புகொள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சரை நான் அறிவுறுத்தியுள்ளேன்
    • சீனா- அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்து வருகிறது.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் ரஷியாவுக்கு ஆதரவாக பங்கேற்க வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. அதற்கு ஆதாரமாக சில வீடியோக்களும் வெளியாகின.

    இந்த நிலையில் போரில் 2 சீன வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "ரஷிய ராணுவத்தில் இணைந்து சண்டையிட்ட 2 சீன குடிமக்களை எங்கள் ராணுவம் பிடித்தது. அவர்கள் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டனர்.

    இந்த கைதிகளின் ஆவணங்கள், வங்கி அட்டைகள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் எங்களிடம் உள்ளன. இதுதொடர்பாக சீனாவை தொடர்புகொள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சரை நான் அறிவுறுத்தியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் தற்போது சீன வீரர்கள் ரஷிய போரில் பிடிபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சீனா- அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • ஆண்டு வருமானம், செலவீனங்கள் ஆகியவை குறித்து அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஜெலன்ஸ்கியின் குடும்ப வருமானம் கடந்த ஆண்டு அதிகரித்துக் காணப்படுகிறது.

    உக்ரைன் அரசு அதிகாரிகள் வருடா வருடம் தங்கள் சொத்து விவரங்களைக் கட்டாயம் வெளியிட வேண்டும். அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த ஆண்டுக்கான தனது குடும்ப வருமானத்தை வெளியிட்டுள்ளார்.

    ஜெலன்ஸ்கியின் குடும்ப சொத்துக்கள், ஆண்டு வருமானம், செலவீனங்கள் ஆகியவை குறித்து அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஜெலன்ஸ்கியின் குடும்ப வருமானம் 2024 இல் 15,286,183 (15.3 மில்லியன்) ஹ்ரிவ்னியா -க்கள் (368,556 டாலர்) (சுமார் 3.1 கோடி ரூபாய்) ஆக உள்ளது.

    இதில் ஜெலன்ஸ்கியின் வருமானம், வங்கி இருப்புத் தொகை மூலம் கிடைக்கும் வட்டி, குடும்ப ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வாடகை ஆகியவை அடங்கும். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஜெலன்ஸ்கியின் குடும்ப வருமானம் கடந்த ஆண்டு அதிகரித்துக் காணப்படுகிறது.

    கடந்த 2022 இல் ரஷியாவுடன் உக்ரைன் போர் தொடங்கியபோது நிறுத்திவைக்கப்பட்டு, தொய்வடைந்த அவரின் தனியார் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வாடகை வருமானம் கடந்த ஆண்டு மீண்டும் இயல்பு நிலைக்கு வந்ததால் குடும்ப வருமானம் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    • உக்ரைன் ரஷியா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா பேச்சுவார்த்தை.
    • 30 நாள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை இன்னும் முடிவடையவில்லை. இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    30 நாள் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகளிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷிய அதிபர் புதினும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷியா புதிய ராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் கருதுகிறது.

    இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷியா பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, இன்னும் அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது. புதின் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

    • போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
    • உள்கட்டுமானகளை குறிவைத்து ஒன்றையன்று தாக்கி வருகிறது.

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே இறுதி முடிவை ஈட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே ரஷியா - உக்ரைன் இரு தரப்பும் டிரோன் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் வைத்து ரஷியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஒரு நாள் முன்னதாக உக்ரைன் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று தனியே ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

    மின்சக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலில் முழுமையாக நிறுத்த அமெரிக்கா வலியறுத்தி உள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரயில்வே மற்றும் துறைமுகங்கள் பாதுகாக்கப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    இரு நாடுகளும் தற்போது மின்சக்தி உள்ளிட்ட உள்கட்டுமானகளை குறிவைத்து ஒன்றையன்று தாக்கி வருகிறது. எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போதைக்கு சாத்தியமற்ற ஒன்றாவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர்
    • இடிபாடுகளுக்கிடையில் காயடைந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைனிய நகரமாக ஜபோரிஷ்யாவில் நேற்று இரவு ரஷிய டிரோன்கள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது நடந்த ரஷிய டிரோன் தாக்குதல்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜாபோரிஷ்யா மீது 10 முறை தாக்குதல் நடந்ததகவும், இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் ஒரு கைக்குழந்தை உட்பட 12 பேர் காயமடைந்தனர் என அந்நகரின் ஆளுநர் இவான் பெட்ரோவ் தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்கிடையில் காயடைந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

     

    மேலும் வடகிழக்கில் உள்ள சுமி (Sumy) பகுதியில் உள்ள கிராமத்தில் ரஷியா குறைந்தது 6 குண்டுகளை வீசியதாகவும், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உக்ரைன் கிழக்கில் உள்ள டோன்ட்ஸ்க் (Donetsk) பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்றும் அம்மகானை ஆளுநர் தெரிவித்தார்.

     

    இதனையடுத்து ரஷியாவின் வோரோனிஸ், பெலோகிராட் ரோஸ்டோவ் வோலோகிராட் உள்ளிட்ட பகுதிகள் மீது உக்ரைன் ஏவிய 47 டிரோன்களை இடைமறித்து அளித்ததாகவும், மொத்தம் 6 பேர் காயமடைந்ததாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த வியாழக்கிழமை போர் நடைபெறும் எல்லையில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷியாவின் ஏங்கல்ஸ் ராணுவ விமானத் தளம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது.

    சோவியத் காலத்திலிருந்தே ஏங்கல்ஸ் தளத்தில், வைட் ஸ்வான்ஸ் என்று அழைக்கப்படும் டுபோலேவ் டு-160 அணுசக்தி திறன் கொண்ட கனரக குண்டுவீச்சு விமானங்கள் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலின் வீடியோவும் வைரலாகியது.

    2022 முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பர டிரோன் தாக்குதல் நடத்தி வருவது நிலைமையை மோசமாக்கியுள்ளது. 

    • இரு நாட்டு தலைவர்களிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • டிரம்ப் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு அமெரிக்கா சமீப காலமாக தீவிரம் காட்டி வருகிறது. அதன் பேரில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாட்டு தலைவர்களிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாட்டு அதிபர்களிடம் பேசியதன் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷியா குறுகிய கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதன்படி இருநாடுகள் இடையே 30 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வரவுள்ளது. இருநாடுகளும் மற்றவரின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என்று ஒப்புக் கொள்ள செய்வதில் தான், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க டிரம்ப் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.

    அதிபர் புதினுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, இருநாட்டு தலைவர்களும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த வார இறுதியில் சவுதி அரேபியாவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் என்று தெரிவித்தார்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இருநாடுகளும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா "எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள்" என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும், இத்துடன் ரெயில்வே மற்றும் துறைமுகங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது.

    அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதள பக்கத்தில், "போரை முடிவுக்குக் கொண்டுவரும் முதல் படியாக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவது தான் இருக்க முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு தான் எப்போது போர் நிறுத்த ஒப்ந்தம் அமலுக்கு வரும் என்று தெரியவரும்.

    • உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர்
    • அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    2022 பிப்ரவரியில் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சிப்பதை கண்டித்து அந்நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. 4 ஆண்டுகளை கடந்தும் போரானது நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொண்டார்.

    அதன்படி சவுதியில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டிரம்ப் - புதின் அலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து சத்தம் போட்டார் டிரம்ப். இந்நிலையில் முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா முன்மொழிந்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் உடன்பட்டது.

    ரஷிய அதிபர் புதினும் நேற்று முன் தினம் மாஸ்கோவில் அளித்த பேட்டியில், போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறேன். உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னால் அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், உக்ரைன் வீரர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாகவும், ரஷிய துருப்புகளால் சூழப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனிய வீரர்களின் உயிர்களை புதின் காப்பாற்ற வேண்டும் என்றும் பேசியிருந்தார். குறிப்பிட்டு கூறாவிட்டாலும், குர்ஸ்க் பகுதியையே டிரம்ப் குறிப்பிடுகிறார். புதினிடம் தான் அவர்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் கூறுகிறார்.

    இதனையடுத்து உக்ரைன் நேற்று ஒரு அறிக்கை விட்டது. அதாவது, கடந்த ஒரு நாளில் போர் சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. குர்ஸ்க் பிராந்தியத்தில் எங்கள் இராணுவப் படைகளால் போர் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது. எங்கள் வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர் மற்றும் எதிரியின் நடவடிக்கைகளை சிறப்பாக எதிர்கொள்கின்றனர்.

    எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களுடனும் நாங்கள் போராடுகிறோம் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது. மேலும் இவை அனைத்தும் உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    இந்த சூழலுக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் வாய்திறந்துள்ளார். அதாவது, அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளுக்கு நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம். உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால், அவர்களுக்கு உயிரும், நிம்மதியாக வாழும் உரிமையும் உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார் புதின்.

    குர்ஸ்க் பகுதியில் இருக்கும் உண்மை நிலை குறித்து அந்தந்த நாடுகள் தங்கள் தரப்பு பார்வைகளைக் கூறி வருவதால் உண்மை நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அரசியல் சித்து விளையாட்டுகள் முடிவடைந்து 30 நாள் போர் நிறுத்தம் ஏற்படுமா, உக்ரேனியர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

    • இந்தியப் பிரதமர், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர்கள் ரஷியா -உக்ரைன் போரை தீர்க்க நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.
    • புதினிடமிருந்து மிகவும் சூழ்ச்சிகரமான வார்த்தைகளை இப்போது நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம்.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 4 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

    தற்போது டிரோன்கள் மூலம் கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷியாவும், ரஷியா மீது உக்ரைனும் பயங்கர டிரோன் தாக்குதல் நடத்தின.

    இதற்கிடையில் உக்ரைன் உடன் அமெரிக்கா 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக் கொண்டது.

     

    இந்நிலையில் நேற்று மாஸ்கோவில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய அதிபர் புதின், நம் அனைவருக்கும் போதுமான உள்நாட்டு விவகாரங்கள் உள்ளன. ஆனால் சீன அதிபர், இந்தியப் பிரதமர், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர்கள் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இந்தப் பிரச்சினையைத்(ரஷியா -உக்ரைன் போரை) தீர்க்க நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.

    அதற்காக அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏனெனில் இந்த செயல்பாடு ஒரு உன்னதமான பணியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரோதம் மற்றும் உயிர் இழப்பை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கம்.

    போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறேன். விரைவில் இவ்விவகாரம் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஒரு தொலைபேசி உரையாடலை எதிர்நோக்கியுள்ளேன். உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னால் அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும்.

    அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கான வலுவான புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமானது நீண்ட கால அமைதிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும். நெருக்கடியின் மூல காரணங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

    அதிபர் புதின் போர் நிறுத்தத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மாஸ்கோவில் புதினின் அறிக்கையை முழுமையற்றது. ஆனால் ரஷியா சரியானதைச் செய்யும். முன்மொழியப்பட்ட 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்றும் தான் நம்புவதாகக் கூறினார்.

    இதற்கிடையே புதினின் போர் நிறுத்த கருத்துக்கள் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, புதினிடமிருந்து மிகவும் சூழ்ச்சிகரமான வார்த்தைகளை இப்போது நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். உண்மையில் அவர் இப்போது போர் நிறுத்தத்தை நிராகரிக்கத் தயாராகி வருகிறார்.

    இந்தப் போரைத் தொடர விரும்புவதாகவும், உக்ரேனியர்களைக் கொல்ல விரும்புவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் புதின் நேரடியாக சொல்ல பயப்படுகிறார்.

    அதனால்தான் மாஸ்கோவில் அவர்கள் போர் நிறுத்தத்திற்கான முன் நிபந்தனைகளை விதிக்கிறார். அந்த நிபந்தனைகள் போர் நிறுத்தத்தை சாத்தியமற்றதாக்கும் அல்லது முடிந்தவரை ஒத்திவைக்கும் என்பதே அவரது திட்டம் என்று தெரிவித்தார். 

    • உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்.
    • மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், நாட்டின் பல நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கி உள்ளதாகவும் அவர் கூறினார். மின்தடைகளை சரி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உக்ரைன் மக்களுக்கு உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானில் தயாரிக்கப்பட்ட அந்த டிரோன்களை போரில் ரஷியா பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த ஆளில்லா விமானங்களை ரஷிய பயன்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரஷிய ராணுவம் வெளியேறிய நிலையில், கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
    • உக்ரைன் பொதுமக்கள் மற்றும் வீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு கொடியை ஏற்றினார்கள்.

    இந்நிலையில் கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள் மற்றும் படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • ரஷிய ராணுவம் வெளியேறியதால் கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
    • கெர்சன் நகரை ஆக்ரமித்தபோது ரஷிய ராணுவம் 400-க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டினார்.

    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின.

    அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றினர்.

    இதற்கிடையே, கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

    புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள், படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன என தெரிவித்தார்.

    இந்நிலையில், கெர்சன் நகரில் இருந்து ரஷிய ராணுவம் வெளியேறியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நகரைப் பார்வையிட்டார். அங்குள்ள படைவீரர்களிடம் நகரின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அதிபரைப் பார்த்த மக்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.

    அப்போது பேசிய அவர் கெர்சன் நகரில் ரஷிய ராணுவம் வெளியேறியது போரின் முடிவுக்கான ஆரம்பம் என தெரிவித்தார்.

    • கிறிஸ்துமஸுக்குள் படைகளை ரஷியா வாபஸ் பெற வேண்டும்.
    • படைகளை வாபஸ் பெற்றால், அது நம்பகமான முடிவை உறுதி செய்யும்.

    கீவ்:

    ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது:

    உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக ரீதியான தீர்வை ரஷியா முன்னெடுக்க வேண்டும். மாஸ்கோ தனது துருப்புக்களை கிறிஸ்துமஸுக்குள் வெளியேற்ற வேண்டும். உக்ரைனில் இருந்து தனது படைகளை ரஷியா வாபஸ் பெறச் செய்தால், அது போருக்கு நம்பகமான முடிவையும் உறுதி செய்யும்.

    இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில் ரஷியா இதை செய்யக் கூடாது என்பதற்கான காரணம் எதுவும் எனக்கு தெரியவில்லை. மேலும் போரை தொடர நவீன டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு, ஜி7 அமைப்பு நாடுகள் வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×