என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Peace talks"
- கலசம் எடுத்துச் செல்லுதல் தொடர்பாக நடந்தது
- தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் கிராமத்தில் நாளை (வியாழன்) ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு ஸ்ரீ பன்னீர் முருகன் கோவிலுக்கு அபிஷேக கலசம் எடுத்துச் செல்லுதல் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இது குறித்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீஸ் பாதுகாப்பு டன் திருவிழாவினை நடத்த இரு தரப்பினரிடம் அறிவுறுத்தி எழுத்துமூலம் ஒப்புதல் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், தலைமை யிடத்து துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் கட்சி அலுவலக த்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- கூட்டத்தின் முடிவில் அரசி ன் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர்
கடலூர்:
விருத்தாசலம் வட்டம் மந்தாரக்குப்பத்தில் கடலூர் -விருத்தாசலம் நெடுஞ்சா லையில் தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவ லகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூ றாக இருப்பதாக கூறி மந்தாரக்குப்பம் போலீசார் கட்சி அலுவலக த்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அரசை கண்டித்து போரா ட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். இதனை யடுத்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுக்கும் கட்சியினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
விருத்தாசலம் சப்-கலெ க்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் லூர்துசாமி தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் விருத்தாசலம் தாசில்தார் அந்தோணிராஜ், நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீத், மந்தாரக்கு ப்பம் காவல் ஆய்வாளர் மலர்விழி, தேசிய நெடுஞ்சா லை இளநிலை பொறியாளர் செந்தமி ழ்ச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் முருகன், நகர செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் அரசி ன் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதா கவும், மேலும் அந்த பகுதியில் போக்குவ ரத்து இடையூறாக ஆக்கிரமி த்துள்ள கடைகளையும் அகற்றுமாறு அதிகாரிக ளிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தெரிவித்தனர்.
- கடலூரில் அனைத்துக் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க கோரி நடைபெற்றது.
கடலூர்:
அனைத்துக்கட்சி சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் காரைக்கால், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மற்றும் கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்தில் உழவன், ராமேஸ்வரம், திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில்கள், விழுப்புரம், மயிலாடுதுறை அனைத்து பாசஞ்சர் ெரயில்கள் மீண்டும் இயக்க வேண்டும்.
கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி காலை, மாலை ெரயில்கள் இயக்க வேண்டும். புதுவை, சென்னை ெரயிலுக்கு இணைப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை போராட்டம் அறிவித்தவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என போராட்டம் செய்பவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இன்று காலை கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் குளோப், தி.க மாவட்ட தலைவர் சிவக்குமார், குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், விடுதலை வேங்கைகள் மாநில செயலாளர் வெங்கடேசன், மக்கள் அதிகாரம் பாலு, மாநகராட்சி கவுன்சிலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவை பேண எனது கையை நீட்ட முயற்சித்தேன். அது மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டது. எனவே இந்தியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக காத்திருக்கிறோம்.
எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மீண்டும் இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என கருதுகிறேன் என்றார்.
ஐ.நா. சபை கூட்டத்தின் போது இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேசுவது என கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலால் பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. இதை தான் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். #PakistanPM #Imrankhan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்