என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வான்வழித் தாக்குதல்"

    • 35 இடங்களைக் குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
    • மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.

    சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளின் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்குறிவைத்து அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் 13-ம் தேதி ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 35 இடங்களைக் குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.

    இந்தத் தாக்குதல்கள் சிரியாவின் எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது அல்லது இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற  விவரங்களை அமெரிக்க ராணுவம் இன்னும் வெளியிடவில்லை.

    இருப்பினும், பயங்கரவாத மையங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  

    • தலைநகர் காரகாஸ்-இல் உள்ள முக்கிய ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா, ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
    • வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    வெனிசுலா தலைநகர் காரகாஸ்-இல் உள்ள முக்கிய ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா, ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர் என்ற பெயரில் நேற்று அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இதில், அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ராணுவம் சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெனிசுலா இடைக்கால அதிபராக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ நியமிக்க வெனிசுலா உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில் நேற்று வெனிசுலாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் மதுரோவின் பாதுகாப்பிற்கு இருந்த வெனிசுலா ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.

    அதிபர் மாளிகை மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    அமெரிக்க தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக டொனால்ட் டிரம்ப் பேசுகையில் இந்த ராணுவ நடவடிக்கையில் ஒரு அமெரிக்க வீரர் கூட காயமடையவில்லை என்றும், முழு தாக்குதலையும் டிவி ஷோ போல தான் நேரலையில் பார்த்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • கடினமான சூழ்நிலைகளில் மீண்டும் கட்டியெழுப்பப் போராடும் ஒரு பலவீனமான நாடு.

    ஆப்கானிஸ்தான் மீது சமீபத்தில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.பாது காப்பு கவுன்சிலில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் தூதர் ஹரிஷ் பேசியதாவது:-

    ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியதால் அப்பாவி பெண்கள், குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

    இந்தத் தாக்குதல்கள் ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். அப் பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முழு மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

    அத்தியாவசியப் பொருட்களுக்காக எல்லை தாண்டிய போக்குவரத்தை நம்பியிருக்கும் ஆப்கானிஸ் தானுக்கான முக்கிய வழிகளை பாகிஸ்தான் மூடியுள்ளது.

    இது வர்த்தகம் மற்றும் போக்குவரத்து பயங்கரவாதம் ஆகும். இதுபோன்ற நடவடிக்கைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதாகும்.

    மேலும் கடினமான சூழ்நிலைகளில் மீண்டும் கட்டியெழுப்பப் போராடும் ஒரு பலவீனமான நாட்டிற்கு எதிரான வெளிப்படையான அச்சுறுத்தல்கள் மற்றும் போர்ப்செயல்களுக்கு சமமானவை ஆகும் என்று தெரிவித்தார்.  

    • தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.
    • தாய்லாந்து அனைத்து நில எல்லைகளையும் மூடியுள்ளதுடன், தங்கள் குடிமக்களை கம்போடியாவை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது.

    தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    அண்மையில் எல்லையில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றன.

    இந்நிலையில் நேற்று எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக்கொண்டனர். தாய்லாந்து F16 விமானங்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.

    தாய்லாந்து சுகாதார அமைச்சகம், ஒரு தாய்லாந்து வீரர் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 14 வீரர்கள் மற்றும் 32 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. கம்போடியா தரப்பில் குறைந்தது 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

    எல்லையோர கிராமங்களில் இருந்து 4,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்ற மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    தாய்லாந்து அனைத்து நில எல்லைகளையும் மூடியுள்ளதுடன், தங்கள் குடிமக்களை கம்போடியாவை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது.

    ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இரு தரப்பினரையும் அதிகபட்ச நிதானத்துடன் செயல்படவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கவும் வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளும் மோதலுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றன.

    இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரகாலக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினைகள்  இருந்து வருகிறது.  இதற்கிடையே தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் மற்றும் கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் கசிவு தொடர்பான அரசியல் சர்ச்சையும் இந்த மோதலுக்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. 

    • இதில் 10 பேர் உதவி விநியோக மையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள்
    • இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை சுமார் 56,331 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறையை தெரிவித்தது.

    மேலும் மத்திய காசா நகரமான டெய்ர் அல்-பாலாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் இஸ்ரேல் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெய்ர் அல்-பாலாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து கோதுமை மாவு மூட்டைகளைப் பெற வந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் அரங்கேறி உள்ளது.

    2023 அக்டோபர் 7 ஆம் தேதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 56,331 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 132,632 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இதற்கிடையே காசாவில் மனிதாபிமான உதவி கோரி வந்த பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இஸ்ரேலிய இராணுவத் தளபதிகள் உத்தரவிட்டதாக வெளியான செய்தியை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மறுத்துள்ளார். 

    • ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
    • குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள இஸ்ஃபஹான், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

    இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளன.

    இந்த நகரங்களில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன.

    நியூயார்க் நகர காவல்துறை (NYPD) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகரின் மத, கலாச்சார மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள மத்திய படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் NYPD கூறியுள்ளது.

    வாஷிங்டன் டிசியின் பெருநகர காவல்துறை (Metropolitan Police Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணித்து வருவதாகவும், குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றாலும், மத தளங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை (LAPD) - யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகரித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார்.

    தற்போது நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்
    • ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது.

    அமெரிக்கா ஈரானில் உள்ள பல அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீசியுள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்றைய சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.

    அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.

    ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களுக்கு ஆபத்து என்பதால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இராணுவ மோதல் அமெரிக்காவின் தலையீடு மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

    "ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்" என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

    "அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் குண்டுகள் வீசப்பட்டன.

    அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன. எங்களின் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைச் செய்ய வேறு எந்த இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று டிரம்ப் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் மட்டுமே தாக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆய்வகக் கட்டிடங்களின் அழிவு பல வருட ஆராய்ச்சியை வீணாக்கியுள்ளது.
    • 1934 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிய ஜனாதிபதியான சைம் வெய்ஸ்மானால் நிறுவப்பட்டது.

    இஸ்ரேலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் ஈரான் இஸ்ரேலுக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளது.

    யாரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்றாலும், ஆய்வகக் கட்டிடங்களின் அழிவு பல வருட ஆராய்ச்சியை வீணாக்கியுள்ளது.

    போரின் ஆரம்ப நாட்களில் இஸ்ரேலின் பெருமையை உடைத்தது ஈரானின் தார்மீக வெற்றி என்று கூறப்படுகிறது. வெய்ஸ்மேன் நிறுவனத்தின் மூலக்கூறு செல் உயிரியல் துறையின் பேராசிரியர் ஓரன் ஷால்டின், இஸ்ரேலின் அறிவியல் மகுடத்தின் மதிப்பை குறைப்பதில் ஈரான் தார்மீக வெற்றி பெற்றதாகக் கூறினார்.

    இஸ்ரேலின் "தொழில்நுட்ப மூளை" என்று அழைக்கப்படும் வெய்ஸ்மேன் நிறுவனம் உலகின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி மையமாகும்.

    கணிதம், இயற்பியல், வேதியியல், மரபியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 2,500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த மையத்தில் பணியாற்றினர்.

    ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்த இந்த மையம், 30 க்கும் மேற்பட்ட அதிநவீன ஆய்வகங்கள், விரிவான நூலகம் மற்றும் தங்குமிடம் மற்றும் படிப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.

    இஸ்ரேலிய இராணுவத்திற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் ஆராய்ச்சி நடத்துவதற்கும் வெய்ஸ்மேன் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பயன்படுத்தப்படும் பல புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டன.

    டிரோன் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, உயிரியல் ரீதியாக ஈர்க்கப்பட்ட பொருட்கள், போரில் செயற்கை நுண்ணறிவு, போரில் மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் புதுமையான ஆயுத அமைப்புகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    அணு ஆராய்ச்சியை ஆதரிக்கும் செயல்பாடுகளும் இங்கு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு உபகரண நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு வெய்ஸ்மேன் நிறுவனத்தின் ஆதரவு குறிப்பிடத்தக்கது.

     

    இந்த நிறுவனத்தின் பட்டதாரிகளில் பலர் இஸ்ரேலின் ஆயுதத் துறையில் தலைமைப் பதவிகளை வகித்துள்ளனர்.

    இதற்கிடையே ஈரான், தனது அணு விஞ்ஞானிகளைக் கொன்றதற்குப் பழிவாங்கும் விதமாக வெய்ஸ்மேன் நிறுவனத்தைத் தாக்கியதாகக் தெரிவித்துள்ளது. சேதமடைந்த வெய்ஸ்மேன் வளாகத்தை பிரதமர் நெதன்யாகு பார்வையிட்டார். 

    • ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் சிற்பியாக அறியப்படும் ஃபக்ரிஸாதே 2011 இல் SPND அமைப்பை நிறுவினார்.
    • ஏவுகணை பாகங்கள் மற்றும் ராக்கெட் என்ஜின்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் உற்பத்தி தளங்கள் குறிவைக்கப்பட்டன.

    ஈரான் இஸ்ரேல் மோதல் நேற்றுடன் ஒரு வாரத்தை எட்டியது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஈரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. 

    இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) கூற்றுப்படி, 60க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் சுமார் 120 சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தெஹ்ரானுக்கு அருகிலுள்ள பல ஏவுகணை உற்பத்தி தளங்கள் குறிவைக்கப்பட்டன. ஏவுகணை பாகங்கள் மற்றும் ராக்கெட் என்ஜின்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் உற்பத்தி தளங்கள் குறிவைக்கப்பட்டன.

    குறிப்பாக, ஈரானின் அணுசக்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தெஹ்ரானின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SPND) தலைமையகத்தின் மீது குண்டுவீச்சு நடத்தி அதை வெற்றிகரமாக அழித்ததாக இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் பலர் பேர் கொல்லப்பட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரானின் இராணுவத் திறனுக்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் SPND முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் சிற்பியாக அறியப்படும் ஃபக்ரிஸாதே 2011 இல் SPND அமைப்பை நிறுவினார்.

    இதற்கிடையே ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.

    ஈரானின் இராணுவத் திறனுக்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எஸ்பிஎன்டி முக்கிய பங்கு வகிக்கிறது. 

    • மொசாட் மற்றும் இராணுவ உளவுத்துறை மையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
    • இதுவரை ஈரானில் குறைந்தது 244 பேரும், இஸ்ரேலில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல்.. புதிய ஏவுகணையை களமிறக்கிய ஈரான்

    ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த ஐந்து நாட்களாக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) டெல் அவிவ்வில் உள்ள இஸ்ரேலின் உள்நாட்டு ராணுவ உளவுத்துறை அமன் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறையான மொசாட் தலைமையகம் உட்பட ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி, அதிகாலை வேளையில் IRGC வெற்றிகரமான இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் அமன் தலைமையகத்தையும், மொசாட்டின் படுகொலை நடவடிக்கைகளை திட்டமிடும் மையத்தையும் குறிப்பாக குறிவைத்ததாக IRGC கூறியுள்ளது.

    இந்தத் தாக்குதல்களில் மொசாட் மற்றும் இராணுவ உளவுத்துறை மையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் டாஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

     ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரெசா தலாய்-நிக் "இன்றைய(ஜூன் 17) தாக்குதலில், கண்காணிக்கவோ அல்லது இடைமறிக்கவோ முடியாத ஏவுகணைகளை நாங்கள் பயன்படுத்தினோம்" என்று கூறினார்.

    இதற்கு முன்னதாக, இஸ்ரேல், ஈரான் உயர்மட்ட இராணுவத் தளபதி அலி ஷாட்மானியை தெஹ்ரானில் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொன்றதாக அறிவித்தது. அலி ஷாட்மானி நான்கு நாட்களுக்கு முன்புதான் அப்பதவியை ஏற்றிருந்தார். அவருக்கு முன் கொல்லப்பட்ட கோலம் அலி ரஷீத்துக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் மேற்கு ஈரானில் தங்கள் விமானப்படை புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், சில ஏவுகணைகள் ஹெர்சிலியா உள்ளிட்ட நாட்டின் மத்திய பகுதிகளில் விழுந்து லேசான காயங்களை ஏற்படுத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த ஈரானியத் தாக்குதலில் சுமார் 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவித்தன.

    இஸ்ரேலின் வெள்ளிக்கிழமை தொடங்கிய திடீர் தாக்குதல்களால் போர் மூலம் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் பரஸ்பர வான்வழி தாக்குதல்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஈரானில் குறைந்தது 244 பேரும், இஸ்ரேலில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

    • காயமடைந்த நிலையில் செய்தி வெளியிடும் நிருபரின் காட்சிகளும் வெளியாகின.
    • ஈரான் 350 ஏவுகணைகளையும் 30 முதல் 60 ஏவுகணைகளையும் ஏவியுள்ளது.

    இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    நேற்று இரவு, இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் அரசு தொலைக்காட்சி தலைமையகம் கடும் சேதமடைந்தது. இந்தத் தாக்குதல் நேரடி செய்தி ஒளிபரப்பின்போது நிகழ்ந்தது. வெடிப்புச் சம்பவமும், நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் மேடையில் இருந்து இறங்கி பாதுகாப்புக்காக வெளியேறினார்.

    தாக்குதலுக்குப் பிறகு கட்டிடம் இடிந்து விழும் காட்சிகளும், காயமடைந்த நிலையில் செய்தி வெளியிடும் நிருபரின் காட்சிகளும் வெளியாகின.

    இஸ்ரேல் தெஹ்ரான் மக்களை வெளியேறுமாறு எச்சரித்த சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்தது.

    மத்திய இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் விமான தளத்தைப் பார்வையிட்ட பிறகு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "தெஹ்ரானுக்கு மேலே உள்ள வானம் இஸ்ரேலிய விமானப்படையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இஸ்ரேல் வெற்றிப் பாதையில் உள்ளது" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    ஈரான் இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல் அவிவிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்றும், ஈரான் வலுவான தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகவும் எச்சரித்துள்ளது.

    இதுவரை, ஈரான் 350 ஏவுகணைகளையும் 30 முதல் 60 ஏவுகணைகளையும் ஏவியுள்ளது. இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்களில் இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய இராணுவம் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

    அதேநேரம் ஈரானில் 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் போர்க்கப்பல் மத்திய கிழக்கு நோக்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
    • அவ்னர் நெதன்யாகு, இன்று தனது காதலி அமித் யார்தேனியை திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகனின் திருமணம் ஈரான் தாக்குதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகு, இன்று தனது காதலி அமித் யார்தேனியை திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.

    இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னமும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நெதன்யாகு குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என்று இஸ்ரேலில் எதிர்ப்பு எழுந்த நிலையில், திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    ×