என் மலர்
நீங்கள் தேடியது "நிகோலஸ் மதுரோ"
- அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்கள் வெனின்சுலாவை நோக்கி நகர்கின்றன.
- உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்டது வெனிசுலா.
கரீபியன் கடலில் திடீரென போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்கா தனது இராணுவப் படைகளை பெரிய அளவில் நகர்த்தி வருகிறது.
அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்களை வெனின்சுலாவை நோக்கி அமெரிக்க ராணுவம் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதனால் வெனிசுலா எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கும்பல்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதாகவும், இந்த இராணுவ நடவடிக்கை அவற்றை அடக்குவதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு இந்த போதைப்பொருள் மாஃபியாவுடன் நேரடி தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்நது கூறி வருகிறார்.
அது மட்டுமல்லாமல், மதுரோவின் இருப்பிடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 430 கோடி) வெகுமதியையும் டிரம்ப் அறிவித்திருந்தார்.
மேலும், "மதுரோ அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன" என்று டிரம்ப் சமீபத்தில் சமூக ஊடகங்களில் நேரடியாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
- வெனிசுலா அதிபர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
- வெனிசுலா அதிபரை பிடித்து கொடுத்தால் ரூ.450 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் அதிபர் டிரம்ப்.
வாஷிங்டன்:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக அதிபராக உள்ளார்.
அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீது, கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் போதைப்பொருள் தீவிரவாதம் மற்றும் கொக்கைன் கடத்தல் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அவரைக் கைது செய்ய உதவுவோருக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஜோ பைடன் நிர்வாகம் அந்தத் தொகையை ரூ.219 கோடியாக உயர்த்தியது.
இந்தத் தொகை சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகரானதாகும். இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி மதுரோ தனது பதவியில் நீடித்து வருகிறார்.
இந்நிலையில், வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை இரு மடங்காக, அதாவது ரூ.450 கோடியாக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.
- நிகோலஸ் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்க வில்லை.
- வெனிசுலாவில் பதற்றம் நிலவி வருகிறது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 51.2 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் 44.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.
தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியான ஒன்று. எங்களது வேட்பாளர் எட்மண்டோ கோன்சாலஸ், அதிபர் மதுரோவை தோற்கடித்ததற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
தங்களது வேட்பாளர் எட்மண்டோ கோன்சா 70 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவர்தான் நியாயமான முறையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறும்போது, நாங்கள் தான் வெற்றி பெற்றோம், வெனி சுலாவின் புதிய அதிபராக எட்மண்டோ கோன்சாலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார்.
இதற்கிடையே நிகோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரோவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த மதுரோவின் பிரச்சார சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தனர். பால்கன் மாநிலத்தில் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேசின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் இடித்தனர்.
இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் டயர்களை போட்டு எரித்தனர். சில வாகனங்களுக்கும் தீ வைக் கப்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதை யடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர். இதில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

சில போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை நோக்கி சென்றனர். அவர் களை போலீசார் தடுத்து நிறுத்தினர். வன்முறை காரணமாக வெனிசுலாவில் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே அதிபர் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்கா, சில தென் அமெரிக்க நாடுகள் ஏற்கவில்லை. அதே வேளையில் மதுரோவுக்கு ரஷியா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.
- வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க்.
- செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே வெனிசுலா அதிபர் தேர்தல் முடிவை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சனம் செய்தார். அவர் கூறும்போது, சர்வாதிகாரி மதுரோ மீது அவமானம் என்ன ஒரு கேலிக்கூத்து என்றார்.
இதையடுத்து நிகோலஸ் மதுரோ கூறும்போது, `வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க். நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்களா? நான் தயார். நான் உன்னை கண்டு பயப்படவில்லை. சண்டைக்கு எந்த இடத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று சவால் விடுத்தார். இதை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, `சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜெயித்தால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் ஜெயித்தால் உங்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன்' என்றார்.
- மதுரோ ஒரு சர்வாதிகாரி என மஸ்க் கூறிய நிலையில் இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
- குவாண்டானமோ விரிகுடாவில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய சிறையைக் குறிப்பதாகும்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே வெனிசுலா அதிபர் தேர்தல் முடிவை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சனம் செய்தார். மதுரோ ஒரு சர்வாதிகாரி, அங்கு நடந்த தேர்தல் ஒரு கேலிக்கூத்து என மஸ்க் கூறிய நிலையில் இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
மஸ்கின் குற்றச்சாட்டுக்கு அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியின் நடந்த விவாதத்தின்போது பதிலளித்த நிகோலஸ் மதுரோ, `வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க்.நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்களா? நான் தயார். நான் உங்களைக் கண்டு பயப்படவில்லை. சண்டைக்கு எந்த இடத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று சவால் விடுத்தார்.
இதனால் ட்ரிகரான எலான் மஸ்க், சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜெயித்தால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் ஜெயித்தால் உங்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன் என்றார். மேலும், 'நான் உங்களிடம் வருகிறேன் [I'm coming for you], உங்களை கிட்மோவுக்கு கழுதையில் அமர்த்தி அழைத்துச் சொல்லப்போகிறேன் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கிட்மோ [Gitmo] என்பது கரீபிய கடலில் கியூப பகுதியில் அமைந்துள்ள குவாண்டானமோ விரிகுடாவில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய சிறையைக் குறிப்பதாகும். முன்னதாக மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பார்கையும் மஸ்க் சண்டைக்கு அழைத்து குறிப்பிடத்தக்கது.






