என் மலர்
நீங்கள் தேடியது "North Korea"
- குர்ஸ்க் பகுதியில் வடகொரிய வீரர்களை உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
- என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 2022 பிப்ரவரி முதல் தீவிரமான போர் நடந்துவருகிறது. மேற்குலகின் நேட்டோ நாடுகளுடன் சேரும் உக்ரைன் உடைய முயற்சி, ரஷியாவுக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் என்று கூறி ரஷியா போர் தொடுத்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி ரஷியாவுடன் மறைமுக போர் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரிய வீரர்கள் 12,000 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாக உக்ரைன், தென் கொரியா, அமெரிக்க நாடுகள் எச்சரித்தன. இடையில் போரில் வட கொரிய வீரர்கள் பாஷை புரியாமல் ரஷிய வீரர்களையே சுட்டது என பலவாறான தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் ரஷியாவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள குர்ஸ்க் பகுதியில் இரண்டு வடகொரிய வீரர்களை உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, குர்ஸ்க் பகுதியில் வட கொரிய இராணுவ வீரர்களை நமது வீரர்கள் சிறைபிடித்துள்ளனர். காயமடைந்த இரண்டு வீரர்கள், கீவ் -க்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இப்போது பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ளனர்.
இது எளிதான காரியமல்ல. உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியாவின் ஈடுபாட்டிற்கான எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் அழிக்க களத்தில் சண்டையிட்டு காயமடைந்த வட கொரிய வீரர்களை அவர்களே கொலை செய்வார்கள்.
இதை முறியடித்து இரண்டு வட கொரிய வீரர்களை எங்கள் படை சிறைபிடித்துள்ளது பாராட்டத்தக்கது. அனைத்து போர்க் கைதிகளையும் போலவே, இந்த இரண்டு வட கொரிய வீரர்களும் தேவையான மருத்துவ உதவியைப் பெறுகிறார்கள்.
பத்திரிகையாளர்கள் இந்தக் கைதிகளை அணுக அனுமதிக்குமாறு படையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Our soldiers have captured North Korean military personnel in the Kursk region. Two soldiers, though wounded, survived and were transported to Kyiv, where they are now communicating with the Security Service of Ukraine.This was not an easy task: Russian forces and other North… pic.twitter.com/5J0hqbarP6
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) January 11, 2025
- அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் எதிர்த்து வருகின்றன.
- 1,100 கிலோமீட்டர் (685 மைல்) தூரம் ஏவுகணை பறந்ததாகவும் தெரிவித்துள்ளது.
பியாங்யாங்:
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் வட கொரியா இன்று கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணையை செலுத்தியது. இதை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள நீரில் இறங்குவதற்கு முன் 1,100 கிலோமீட்டர் (685 மைல்) தூரம் ஏவுகணை பறந்ததாகவும் தெரிவித்தது.
வட கொரிய தலைநகரான பியாங்யாங்கிற்கு அருகில் உள்ள பகுதியில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவத்தினரால் ஏவுகணை ஏற்பாடுகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டதாகவும் தெற்கின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
- கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் பயன்படுகின்றனர்
- உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மற்றும் சில நகரங்கள் மீது ரஷியா கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியா 12,000 வீரர்கள் வரை அனுப்பி வைத்ததாக உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் கூறின. இந்நிலையில் போரில் அதிக எண்ணிக்கையிலான வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் பயன்படுகின்றனர். அங்கு தாங்கள் நடத்தும் தாக்குதல்களில் சுமார் 3000 வட கொரிய வீரர்கள் பலியானதாகவும், உக்ரைன் படைகளால் கைது செய்யப்பட்ட காயமடைந்த வடகொரிய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவும் இந்த உயிரிழப்புகளை உறுதி செய்துள்ளது. இருப்பினும் மேலும் புதிய வீரர்கள், இலக்குகளை மோதி அழிக்கக்கூடிய ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷியாவுக்கு அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தென் கொரிய முப்படைகளின் கூட்டு தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷிய மற்றும் வட கொரிய இராணுவத் தலைவர்கள் இந்த வீரர்களை மனித கேடயமாகக் கருதி செலவழிக்கின்றனர்.
தெரிந்தே பல சந்தர்ப்பங்களிலும் உக்ரேனிய படைகளுக்கு எதிரான நம்பிக்கையற்ற தாக்குதல்களுக்கு உத்தரவிடுகிறார்கள் என்பது தெளிவாகிறது. இவை ஒரு முன்பே கணிக்கப்பட்ட கூட்டு உயிரிழப்புகள் என்று அவர் விவரித்தார்.
மேலும் வரும் நாட்களில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளை அனுப்ப ஜோ பைடன் ஒப்புதல் அளிப்பார் என்று தெரிவித்தார். முன்னதாக உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மற்றும் சில நகரங்கள் மீது ரஷியா கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்தியது. இதற்கு ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார். கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் 3 ஆம் ஆண்டை நெருங்கி வருகிறது.
- பாஷை புரியாமல் ரஷிய வீரர்களை வடகொரிய வீரர்கள் தவறாக சுட்டுக்கொன்றனர்.
- குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது.
உக்ரைன் - ரஷியா பிரச்சனை
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது.
மேற்கு நாடுகள் vs ரஷியா
இந்த போர் இரண்டு ஆண்டுகளை கடந்ததும் எந்த தீர்வும் எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு நாடுகள் பண பலம், ஆயுத பலம், ராணுவ பலத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது.
நேட்டோ நாடுகளுடன் உக்ரைனை சேர்த்துக்கொள்வதே போருக்கு தீர்வு என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மறுபுறம் உக்ரைனுக்கு உதவுவது ரஷியாவை நேரடியாக மேற்கு நாடுகள் எதிர்ப்பதாகவே பொருள்படும் என ரஷிய அதிபர் புதின் மிரட்டல் விடுத்து வருகிறார்.
போர்
போர் தொடங்கியதிலிருந்து 43,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஜெலன்ஸ்கி இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும்6.5 லட்சம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2 வருடங்களில் போரில் ரஷியாவின் கைகளே ஓங்கி இருந்த நிலையில் இந்த வருடம் உக்ரைன் தற்காத்துக் கொள்வதோடு நிறுத்திவிடாமல் ரஷிய பகுதிகளின் மேல் தாக்குதல்களை நடத்தியது இந்த 2 வருட போரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது. கடந்த ஏப்ரல் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உக்ரைன் மீது டிரோன் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது.
உக்ரைனின் மின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட தளங்களைக் குறிவைக்க ரஷியா தலைப்பட்டது. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி ரஷியா சென்றிருந்த சமயத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் -இல் நாட்டிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மாறிய காட்சி
இந்த தடுமாற்றங்களுக்கு இடையில் உக்ரைன் படைகள் யாரும் எதிர்பாராத விதமாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல்முறையாக ரஷியாவுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தின. இந்த எதிர்பாராத தாக்குதலில் ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதி உக்ரைன் படைகள் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. 200,000 ரஷிய மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷிய மண்ணில் வெளிநாட்டுப் படைகள் முன்னெடுத்த மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் இறுதியில் ரஷியாவில் 100 குடியேற்றப் பகுதிகளைக் கைப்பற்றி 600 ரஷிய வீரர்களை கைது செய்ததாக உக்ரைன் கூறியது. எல்லையில் ரஷியா முன்னேறாமல் இருக்கவே அந்த பிராந்தியங்களைக் கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்தது.
பதிலடியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி 2 கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்வதேச கவனம் பெற்றன. எனவே ரஷியாவுக்கு சவாலாக உக்ரைன் போர் மாறியது. அன்று முதலே இரு தரப்பும் ஒரே பலத்துடன் போரிட்டு வருகிறது.
WATCH: Drone crashes into high-rise building in Saratov, Russia pic.twitter.com/IIf1TU7ijg
— BNO News (@BNONews) August 26, 2024
வடகொரிய நட்பு
இந்த நிலையில் போரின் முக்கிய திருப்பமாக ரஷியாவுக்கு வட கொரியாவின் நட்புறவு கிடைத்தது. இரு நாட்டு தலைவர்களும் தத்தமது நாட்டுக்கு ஒருவரை ஒருவர் அழைத்து உபசரித்துப் பாதுகாப்பு உதவிகளைப் பரிமாற்றம் செய்துகொள்ள ஒப்பந்தம் இட்டனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்த நிலையில் வட கொரியா, சீனா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நட்பை புதின் அதிகம் நாடினார்.
கடந்த அக்டோபரில் போரில் ரஷியாவுடன் 12 வட கொரிய வீரர்களும் இணைந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் பாஷை புரியாமல் ரஷிய வீரர்கள் சிலரை வடகொரிய வீரர்கள் தவறாக சுட்டுக்கொன்ற சம்பவமும் நிகழ்ந்தது.
திடீர் அனுமதி முன்னதாக நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் ஜோ பைடன் நிர்வாகம் அவசர அவசரமாக ஒரு விஷயத்தை செய்தது போரின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியது.
அமெரிக்கா தான் வழங்கியிருந்த ATACMS [பால்சிடிக் ஏவுகணைகளை] கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு முதல் முறையாக அனுமதி கொடுத்தது.
சற்றும் தாமதிக்காத உக்ரைன் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி அதாவது போர் தொடங்கி 1000 வது நாளில் ரஷியாவின் பிரையன்ஸ்க் பகுதி ராணுவ தளங்களை குறிவைத்து பால்சிடிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சேதங்கள் ஏற்படவில்லை என்றாலும் ரஷியாவை இது மேலும் சீண்டியது.
அதே நாளில் 120 ஏவுகணைகள், 90 டிரோன்கள் மூலம் உக்ரைன் மின் உற்பத்தியை சீர்குழைக்க ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியது. மேலும் ரஷிய அணு ஆயுத கொள்கைகளில் புதின் மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
அணு ஆயுத கொள்கை
இந்த கொள்கைப்படி, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.
இதன்மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளை தங்களின் நேரடி எதிரியாக அறிவித்து அவர்கள் மீது அணு ஆயுத தாக்குதலுக்கு புதின் எந்த நேரமும் உத்தரவிடக் கூடும் என்ற பதற்றமும் நிலவுகிறது.
இகோர் கிரில்லோவ் கொலை
இதற்கிடையே கடந்த செய்வ்வாய்கிழமை ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.
குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதில் இகோரும் அவரது உதவியாளரும் உயிரிழந்தனர்.
இதற்கு பழிவாங்க ரஷியா சூளுரைத்துள்ள நிலையில் நிலைமையில் டிரம்ப் சொன்ன கருத்தால் திடீர் மாற்றமும் ஏற்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது பைத்தியக்காரத்தனம் என்று அடுத்த மாதம் அதிபர் பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் கூறினார்.
இதன் எதிரொலியாக உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் உடன் பேச தயாராக உள்ளேன் என அதிபர் புதின் கூறியதாக ரஷிய அதிபர் மாளிகை வட்டாரங்களில் இருந்து நேற்று தகவல் வந்திருக்கிறது.
- அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
- நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
சியோல்:
தென்கொரியாவில் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிரகடனத்தை அதிபர் யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதனையடுத்து அவசர நிலை கைவிடப்பட்டது. எனினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
எனினும், அவருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் அவசர நிலை பரிந்துரை செய்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால், யூன் சுக்-இயோல் தப்பிச் செல்லாமல் இருக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அவருக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
- அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது
- நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
சியோல்:
தென் கொரியாவில் கடந்த 3-ந்தேதி அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார்.
பாராளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், வட கொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை கவிழ்க்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், அவசரநிலை முடிவை எடுத்ததாக தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் பிறப்பித்த ராணுவ சட்டத்தை பாராளுமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து 12 மணி நேரத்துக்கு பிறகு ராணுவ அவசரநிலையை திரும்ப பெறுவதாக அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.
இதற்கிடையே தென் கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இத்தீா்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
300 உறுப்பினா்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 173 இடங்கள் உள்ளன. சிறிய கட்சிகளுக்கு 19 உறுப்பினா்கள் உள்ளனா். இன்னும் 8 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. யூன் சுக் இயோலுக்கு எதிராக அவரது கட்சியின் தலைவரே உள்ள நிலையில், இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்த நிலையில் அவசர நிலையை அறிவித்ததற்கு அதிபர் யூன் சுக் இயோல் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறியதாவது:-
அவசரகால ராணுவச் சட்டப் பிரகடனத்தால் நான் மக்களுக்கு கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தினேன். அதற்காக நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்னொரு ராணுவச் சட்டப் பிரகடனம் இருக்குமா என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
அதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நடக்காது என்று உறுதியளிக்கிறேன். இந்தப் பிரகடனத்தால் ஏற்படும் எந்தவொரு சட்ட மற்றும் அரசியல் பொறுப்புச்சிக்கல்களையும் நான் தவிர்க்க மாட்டேன்.
எனது பதவிக்காலம் உள்பட நாட்டை எவ்வாறு ஸ்திரப்படுத்துவது என்ற முடிவை எனது கட்சிக்கே விட்டு விடுகிறேன். நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு நான் தலை வணங்குகிறேன். மக்களுக்கு நான் ஏற்படுத்திய ஏதேனும் கவலைகளுக்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது.
- கொரியன் வர்த்தக யூனியன் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
சியோல்:
கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள தென்கொரியா நாடானது, அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மற்றொரு நாடான வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. வடகொரியாவோ, ரஷியா மற்றும் சீனா நாடுகளுடன் இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இதனால், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், வடகொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை முடக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என தென்கொரிய அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனை தொடர்ந்து நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ராணுவ தலைவர், முக்கிய தளபதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்பு, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்து தடுப்பான்களை அமைத்தனர்.
எனினும், உறுப்பினர்களை வரும்படி எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்ததுடன், அவசரநிலை அறிவிப்பை நீக்குவதற்காக வாக்களித்தனர். இந்த சூழலில், தென்கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே (இந்திய நேரப்படி அதிகாலை 1.15 மணி) உரையாற்றினார். அப்போது அவர், அவசரநிலையை வாபஸ் பெறும்படி சில நிமிடங்களுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது.
அவசரநிலை நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை நாங்கள் வாபஸ் பெற்றுள்ளோம். நாடாளுமன்றத்தின் கோரிக்கையை நாங்கள் ஏற்று, மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என கூறியுள்ளார்.
இதற்கு முன், யூன் சுக்கின் அவசரநிலை அறிவிப்புக்கு அந்நாட்டின் மிக பெரிய, கொரியன் வர்த்தக யூனியன் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 12 லட்சம் உறுப்பினர்களை கொண்ட கொரியாவின் மிக பெரிய தொழிலாளர் அமைப்பான அதன் தலைவர் கிம் ஜின் யூக் கூறும்போது, சட்டவிரோத அவசரநிலை உத்தரவை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் கூடியிருக்கிறோம். அதிபருக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
இந்த முட்டாள்தன செயலை அவர் செய்கிறார் என என்னால் நம்பவே முடியவில்லை என கூறினார். இந்த சூழலில், அதிபரின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், அவசரநிலை அறிவிப்பை அதிபர் யூன் சுக் இயோல், முழுமையாக நீக்கும் வரை இந்த நிலையே தொடரும் என அந்நாட்டின் அரசியல் வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில், தென்கொரியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
- பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
- தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்
தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் அமல்படுத்தி உள்ளார்.
பட்ஜெட் மசோதா தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்து எட்டாத நிலையில் எதிர்க்கட்சிகள் வடகொரிய கம்யூனிச சக்திகளுடன் சேர்ந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிபர் யூன் சுக் யோல் குற்றம் சாட்டி அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமலப்படுவதாகத் தேசிய ஊடகத்தில் தோன்றி நாட்டு மக்களுக்கு இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தென் கொரியாவில் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் அதிபர் யூன் தலைமையிலான ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.
இந்நிலையில் திடீரென தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல், வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், மக்களின் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொள்ளையடிக்கும் தேச விரோத சக்திகளை அகற்றவும், நான் இதன் மூலம் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சிகள் தங்கள் தலைவரை, குற்றச்சாட்டுகள்,விசாரணைகள் மற்றும் நீதியிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமே ஆட்சியை முடக்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இந்த திடீர் எமர்ஜென்சி ராணுவ சட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அச்சத்தில் தென் கொரிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.
- நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும்.
பியாங்யாங்:
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளது. அதன்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.
இரு நாடுகளுக்கிடையே கடுமையான போர் நிலவுவதாகல், 3ம் உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கவலை தெரிவித்தன. இந்தநிலையில் ரஷிய ராணுவ மந்திரி ஆண்ட்ரே பெலோசோவ் தலைமையிலான குழுவினர் வடகொரியா சென்று அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினர்.
அப்போது கிம் ஜாங் அன் கூறியதாவது, நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும். எனவே உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷியாவுக்கு தனது ஆதரவை அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தென் கொரியாவை அதிகாரப்பூர்வமாக எதிரி நாடாக அறிவித்து அதனுடன்
- தொடர்ச்சியாக வினோதமான சத்தங்களை வட கொரியா ஸ்பீக்கர்கள் ஒளிபரப்பை வருகிறது.
தென் கொரியாவுடன் பகைமை பாராட்டி வரும் வட கொரியா அணு ஆயுத மிரட்டல், ஏவுகணை சோதனை என உலக நாடுகளை பதற்றத்திலேயே வைத்துள்ளது. சமீப காலமாக ரஷியவுடன் ராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம், உக்ரைன் போருக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது என வட கொரியா தனது இருப்பை வெளிப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் தென் கொரியாவை அதிகாரப்பூர்வமாக எதிரி நாடாக அறிவித்து அதனுடன் இருந்த அணைத்து எல்லை தொடர்பு சாலைகளைத் துண்டித்து அழித்தது. தென் கொரியாவுக்குள் தங்கள் நாட்டின் குப்பைகள் நிரம்பிய பலூன்களை அனுப்புவது என தொல்லை கொடுத்த வந்த வட கொரியா தற்போது தென் கொரியாவை சீண்ட நூதன வழியை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறது.
அதாவது, எல்லைப் பகுதியில் அதிக ஒலிகளை எழுப்பும் ஸ்பீக்கர்களை நிறுவி 24 மணி நேரமும், எல்லைக்கு அந்த புறம் இருக்கும் தென் கொரிய கிராமங்களில் உள்ள மக்களைப் பாடாய் படுத்தி வருகிறது. அமானுஷ்யமான, வினோத ஒலிகளை 24 மணி நேரமும் ஒலிக்கச் செய்வதால் அம்மக்களின் அன்றாட வாழ்வு சீர்குலைந்துள்ளது.
குறிப்பாக எல்லையில் தென் கொரியாவுக்குள் உள்ள டாங்கன் என்ற கிராமம் இதனால் அதிகம் பாதிப்படைந்துள்ளது. கார் விபத்துகள் ஏற்படுவது போன்ற சத்தம், பேய் அலறுவது, உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, ஓநாய்கள் ஊளையிடுதல், பீரங்கித் தாக்குதல் சத்தம் எனதொடர்ச்சியாக வினோதமான சத்தங்களை வட கொரியா ஸ்பீக்கர்கள் ஒளிபரப்பை வருகிறது.
குண்டு ஒன்று தான் வீசவில்லை என்றாலும் அதற்க்கு ஈடாக இந்த சத்தங்கள் தங்களை பைத்தியமாக்குவதாகவும் இரவில் தூக்கமில்லை என்றும் அந்த கிராம மக்கள் புலம்பித் தவிக்கின்றனர்.
கடந்த ஜூலை மாதம் முதல் 24 மணி நேரமும் இடைவிடாமல் இதுபோன்ற சத்தம் வந்துகொண்டிருப்பதாக அவர்கள் புலம்பித தவிக்கின்றனர். இந்த சத்தங்கள் [ NOISE BOMBING] தென் கொரியா மீதான வடகொரியாவின் உளவியல் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.
- ரஷியா - வட கொரியா ராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டுள்ளது.
- புகைப்படங்களைச் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது
சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் அதிபராக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் [40 வயது] செயல்பட்டு வருகிறார். ராணுவ கட்டமைப்புக்கு அதிகம் செலவு செய்யும் வட கொரியா கடந்த 2006 ஆம் ஆண்டு தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இணைந்தது.
தென் கொரியா உடனான எல்லை பிரச்சனை, அந்நாட்டுக்கு உதவி செய்யும் அமெரிக்காவை எதிர்ப்பது என செயல்பட்டு வரும் வட கொரியா அவ்வப்போது அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போவதாக மிரட்டலும் விடுத்து வருகிறது. மேலும் சமீப காலமாக ரஷியாவுடன் நெருக்கம் காட்டும்வட கொரியா ராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டுள்ளது.
தென் கொரியா தாராளவாதத்தைப் பின்பற்றும் நாடாக உள்ள நிலையில் வட கொரியா கடுமையான சட்டங்களையும், அதிக சமூக கட்டுப்பாட்டையும் மக்கள் மீது கொண்ட நாடாக விளங்குகிறது. அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வாழ்வாதாரம், சமூக நிகழ்வுகள் என என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்குத் தெரியாத அளவுக்கு அதிக தணிக்கை விதிமுறைகளும் வட கொரியாவில் உள்ளது.
மக்கள் சுதந்திரமாக இல்லை என சர்வதேச சமூகத்தில் பொதுவான கண்ணோட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் வட கொரியாவில் இதுவரை வெளியுலகுக்குத் தெரியாத கட்டமைப்புகள் மற்றும் இடங்களின் புகைப்படங்களைச் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்களில் தென் கொரியாவிலிருந்த காணும் தூரத்தில் உள்ள Gijungdong கிராமம், Liaoning மாகாணத்தில் Dandong பகுதியிலிருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் உள்ள Sinuiju பகுதி உள்ளிட்ட பல பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
- அமெரிக்காவுக்கு வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்து வருகிறது
- இந்திய நேரப்படி இன்று மாலை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குகிறது
உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்குகிறது. இந்நிலையில் தென் கொரியாவையும் அதற்கு உதவும் அமெரிக்காவையும் பரம எதிரியாக கருதும் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்து சர்வதேச அரங்கில் பீதியை கிளப்பியுள்ளது.
சமீப காலங்களாகவே அமெரிக்காவுக்கு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்துவரும் வட கொரியா எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு 12 ஆயிரம் வரையிலான வட கொரிய ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தென் கொரியாவும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னதாக வட கொரிய ராணுவம் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடல் நோக்கி ஏவி சோதனை செய்துள்ளது. இதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் களம் அமெரிக்க தேர்தலை நோக்கி திரும்பியிருக்க வடகொரியாவின் இந்த சோதனை உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.