என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல்"

    • ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது
    • அமெரிக்காவின் தலையீடு 2 நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை மேலும் மோசமாக்கியது.

    கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.

    அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.

    இதனையடுத்து, இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், " போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீற வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது
    • அமெரிக்காவின் தலையீடு 2 நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை மேலும் மோசமாக்கியது.

    கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.

    அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.

    ஆனால் போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி மறுத்தார்.

    இந்நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

    • ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • அமெரிக்காவின் தலையீடு 2 நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை மேலும் மோசமாக்கியது.

    கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.

    அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில், போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது.

    இது தொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பதிவில், "இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை தொடங்கியது. நாங்கள் போரை தொடங்கவில்லை.

    தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த 'உடன்பாடும்' எட்டப்படவில்லை.

    இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை.

    எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • அதை "12 நாள் போர்" என்று அழைக்க வேண்டும்.
    • முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை.

    கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.

    அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

    தனது ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப் கூறியதாவது, "அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

    சுமார் 6 மணி நேரத்தில், இஸ்ரேலும் ஈரானும் தங்கள் இறுதிப் பணிகளை முடித்த பிறகு 12 மணிநேர போர் நிறுத்தம் தொடங்கும். அப்போது போர் முடிந்ததாக கருதப்படும்.  அந்த 12 மணிநேர போர் நிறுத்தத்தின் பின், ஈரான், இஸ்ரேல் தங்கள் போர் நிறுத்த்தை நீட்டிக்கும், 24வது மணி நேரத்தில், 12வது நாள் போரின் அதிகாரப்பூர்வ முடிவை உலகமே வரவேற்கும்.

    ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்கும். இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முடிவுக்கு வருவதற்கான சகிப்புத்தன்மை, தைரியம் பெற்றதற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன். அதை "12 நாள் போர்" என்று அழைக்க வேண்டும்.

    இது பல வருடங்களாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, மத்திய கிழக்கு ஒருபோதும் அழியாது!. கடவுள் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஈரானை ஆசீர்வதிப்பாராக, கடவுள் மத்திய கிழக்கை ஆசீர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உலகை ஆசீர்வதிப்பாராக!" என்று பதிவிட்டுள்ளார். 

    • பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் விமானப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் டோமர் பார் தெரிவித்தார்.
    • 50 விமானப்படை போர் விமானங்களை இந்த தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.

    ஃபோர்டோ உட்பட மூன்று ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி கனவைத் தகர்த்ததாக அமெரிக்கா கூறிய போதிலும், குறிப்பிடத்தக்கச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது.

    மறுநாள் (நேற்று) இஸ்ரேல், அமெரிக்கா தாக்கிய அதே ஃபோர்டோஅணுசக்தி தளத்தை தாக்கியது. இதனுடன் துணை ராணுவப் புரட்சிகர காவல்படை தலைமையகம், பாலஸ்தீன சதுக்கம், துணை ராணுவப் பசிஜ் தன்னார்வப் படை கட்டிடம் மற்றும் எவின் சிறைச்சாலையையும் தாக்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரான், ஃபோர்டோவில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது தெளிவாக குறிப்பிடவில்லை.

    புஷேர், அஹ்வாஸ், யாஸ்த் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஏவுகணை சேமிப்பு வசதிகள், ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள் மற்றும் வான் பாதுகாப்பு உபகரண உற்பத்தி வசதி ஆகியவற்றைத் தாக்கியதாகவும், இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் விமானப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் டோமர் பார் தெரிவித்தார்.

    யாஸ்டில் உள்ள இமாம் ஹுசைன் ஏவுகணை தளத்தைத் தாக்கி கோர்ராம்ஷஹர் ஏவுகணைகளை அழித்ததாகவும் அவர் கூறினார். 50 விமானப்படை போர் விமானங்களை இந்த தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களைத் தவிர, இஸ்ரேலின் பிற நகரங்களையும் ஏவுகணைகள் தாக்கியுள்ளன.

    இதற்கிடையே கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளத்தின் மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. 

    • அரபு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்ற நாடுகளுக்கு செல்வது தடுக்கப்படும்.
    • இந்தியாவில் தற்போது போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது அமெ ரிக்க போர் விமானங்கள் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    பூமிக்கு அடியில் மிக அழமான இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய சுமார் 14 டன் எடை கொண்ட குண்டுகளை அமெரிக்கா முதன் முதலாக பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியது. இதனால் கடும் கோபம் அடைந்த ஈரான் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. நேற்று அடுத்தடுத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்களான டெல்அவிவ், ஹய்பா, சியோனா நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.

    ஈரானில் நேற்று பூமியை துளைத்து செல்லும் பங்கர் பஸ்டர் எனப்படும் சக்தி வாய்ந்த 14 குண்டுகளை அமெரிக்கா வீசியது. இதனால் ஈரானின் 3 இடங்கள் கடும் சேதத்தை சந்தித்து இருப்பதாக தெரிகிறது. இதற்கு பழிக்கு பழி வாங்க இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்து இருக்கிறது.

    இதன் காரணமாக போர் பதட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஈரான் மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மீது நேரடி தாக்குதலை தொடுக்காத ஈரான் அதற்கு பதில் உலகம் முழுவதும் நடைபெறும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.

    ஈரான் கடல் பகுதியில் ஹார்முஸ் நீரிணை என்ற முக்கியத்துவம் வாய்ந்த இடம் இருக்கிறது. இது 33 கிலோ மீட்டர் மட்டுமே அகலம் கொண்டது. இந்த கடல் பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. இந்த நீரிணைப்பு கடல் பகுதி பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் பகுதியாகும்.

    இந்த ஹார்முஸ் நீரிணை பகுதி வழியாகதான் கத்தார், பக்ரைன், ஈராக், அரேபியா, குவைத் உள்பட அரபு நாடுகள் அனைத்தும் தங்களது கச்சா எண்ணெயை உலகின் மற்ற நாடுகளுக்கு அனுப்பி வருகின்றன. குறிப்பாக உலகம் முழுக்க நடைபெறும் கச்சா எண்ணெய் வர்த்தக விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது.

    முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை இணைப்பு பகுதியை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரானால் அங்கு ஏற்படுத்தப்படும் இந்த இடையூறு பல நாடுகளின் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் விதமாக மாறி விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் கணிசமான அளவுக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அரபு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்ற நாடுகளுக்கு செல்வது தடுக்கப்படும். முக்கியமாக அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படலாம். இது அடுத்தடுத்து மற்ற பாதிப்புகளையும் உருவாக்கும் என்று கருதுகிறார்கள்.

    கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாட்டையும் உருவாக்க ஈரான் நடவடிக்கை ஏற்படுத்தக் கூடும். கச்சா எண்ணெய் கிடைக்காதபட்சத்தில் பல நாடுகளில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஈரானின் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச அளவில் தங்கத் தின் விலையும் மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்படுத்தப்படும் தடையை தகர்க்க அமெரிக்க படைகள் முயற்சி செய்தால் மேலும் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    அமெரிக்காவுக்கு மறைமுகமாக அதிக இழப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    ஈரான் முடிவு செய்துள்ள ஹார்முஸ் நீரிணை தடை இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்தியாவுக்கு தினமும் அந்த நீரிணை பகுதி வழியாக கணிசமான அளவுக்கு கச்சா எண்ணெய் வருகிறது. அதாவது இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் அந்த பகுதி வழியாகத்தான் வருகிறது.

    கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் 9-வது பெரிய நாடாக இருக்கும் ஈரான் மற்ற நாடுகளின் கச்சா எண்ணெய்களையும் முடக்கும்பட்சத்தில் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். கச்சா எண்ணெயை அதிகளவு இறக்குமதி செய்யும் உலக நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது.

    எனவேதான் ஈரானின் ஹார்முஸ் நீரிணை தடை நடவடிக்கை இந்தியாவில் மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். குறிப்பாக பெட்ரோல்-டீசல் மற்றும் தங்கம் விலையில் அதிக பாதிப்பை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

    ஆனால் ஈரானின் இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. மத்திய பெட்ரோலிய மந்திரி இதுகுறித்து கூறுகையில், "இந்தியாவில் தற்போது போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. மேலும் ரஷியாவில் இருந்து அதிக கச்சா எண்ணெய் பெற்று வருகிறோம். எனவே பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை" என்றார்.

    என்றாலும் அரபி கடல் வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கும்போது ஆப்பிரிக்க நாடுகளை சுற்றிக்கொண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் வரவேண்டியது இருக்கும். இதற்கு 12 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும். அதோடு கச்சா எண்ணெய் விலையிலும் 40 சதவீதத்தை அதிகரிக்க செய்து விடும் என்கிறார்கள்.

    இதன் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் உடனடி பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. அதற்கேற்ப ரஷியாவில் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வருகிறது.

    • ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது
    • இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் களமிறங்கி உள்ளது.

    இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

    அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும் என்று ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.

    ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய பின் முதல் முறையாக கருத்து கூறியுள்ள ஈரானின் உச்சபட்ச தலைவர், எந்த இடத்திலும் அமெரிக்காவைப் பற்றியோ, அதன் தாக்குதலை பற்றியோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் களமிறங்கி உள்ளது.
    • ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

    அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும் என்று ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.

    ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய பின் முதல் முறையாக கருத்து கூறியுள்ள ஈரானின் உச்சபட்ச தலைவர், எந்த இடத்திலும் அமெரிக்காவைப் பற்றியோ, அதன் தாக்குதலை பற்றியோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க கமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வெளியுறவு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    • அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன.

    இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவும் தற்போது ஈரானுக்கு எதிரான நேரடி ராணுவ நடவடிக்கையை முதன் முறையாக தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்று பெயரிடப் பட்ட 7 பி-2 நவீன ரக குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் போர் விமானங்கள ஈரான் மீது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.

    இந்த விமானங்கள் ஈரானில் உள்ள போர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான், ஆகிய 3 அணுசக்தி தளங்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசியது. இந்த நவீன ரக விமானங்கள் 30 ஆயிரம் பவுண்டு ( 13,500 கிலோ ) எடை கொண்ட பங்கர் பஸ்டர் எனப்படும் பதுங்கு குழிகள் அழிப்பு குண்டுகளை வீசியது.

    ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தில் மேலே உள்ள மலையில் மோதிய இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    அமெரிக்க படைகள் தாக்கியதில் அணு சக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமையுடன் கூறினார்.

    இடைவிடாமல் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானங்கள் பத்திரமாக மீண்டும் மிசோரியில் உள்ள வைட்மேன் விமான படை தளத்திற்கு திரும்பி உள்ளது.

    தங்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதால் ஈரான் பதிலடி கொடுக்கும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத் தப்பட்டு உள்ளனர்.

    உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் லெபனானில் உள்ள அமெரிக்க துணை தூதரக ஊழியர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக் கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஈரான் மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    • இஸ்ரேல் - ஈரான் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
    • ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இதனையாடடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    டிரம்ப் தனது சமூக வலைத்தள, "செயற்கைக்கோள் படங்கள் காட்டியுள்ளபடி, ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய சேதம் தரை மட்டத்திற்கு கீழே நடந்தது" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஈரான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது .
    • ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை தடுப்பதே நமது தாக்குதலின் முக்கிய நோக்கம்

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இதனையடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

    டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், "தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், அங்கு ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது? ஈரான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது. அந்த நாடு அணு ஆயுதங்கள் உருவாக்குவதை தடுப்பதே நமது தாக்குதலின் முக்கிய நோக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ரஷியா வரலாற்று ரீதியாக ஈரானின் அணுசக்தி திட்டத்தை ஆதரித்து வருகிறது.
    • ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா என்ன சாதித்தது.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இதனையடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக அணு ஆயுதங்களை வழங்க தயாராக இருப்பதாக ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக தங்கள் சொந்த அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளன. ரஷியா வரலாற்று ரீதியாக ஈரானின் அணுசக்தி திட்டத்தை ஆதரித்து வருகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா என்ன சாதித்தது" என்று பதிவிட்டுள்ளார்.

    ×