search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "airstrike"

    • லெபனானின் தெற்கே குவார் தவுனைன் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதலை தொடுத்தனர்.
    • 3 போராளிகளின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.

    சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த தளபதிகள் அந்தஸ்திலான 3 முக்கிய அதிகாரிகள் உள்பட 7 பேர் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    எனினும், இதனை இஸ்ரேல் முறியடித்தது. ஈரானின் தாக்குதலை, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி அரசுகள் 99 சதவீதம் வழிமறித்து தடுத்து நிறுத்தியது. இவற்றில், 79 ஆளில்லா விமானங்கள் மற்றும் 3 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்தது.

    தொடர்ந்து, ஈரான் மீது இஸ்ரேல் பதிலடியாக தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காசாவை இஸ்ரேல் தாக்கியது. பணய கைதிகளாக உள்ள தன்னுடைய நாட்டின் குடிமக்களை மீட்கும் பணியை தொடர்ந்தது. இந்நிலையில், லெபனானின் தெற்கே குவார் தவுனைன் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதலை தொடுத்தனர். இதில், மேற்கு பகுதியை சேர்ந்த ரத்வான் படைகளின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவுகளின் தளபதி முகமது உசைன் ஷாஹவுரி கொல்லப்பட்டார்.

    அவர், லெபனானின் மத்திய மற்றும் மேற்கத்திய பகுதிகளில் இருந்து கொண்டு இஸ்ரேல் நிலப்பகுதியை நோக்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளார் என இஸ்ரேல் தெரிவித்தது.

    இதேபோன்று, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவை சேர்ந்த மஹ்மூத் இப்ராகிம் பத்லல்லா என்பவரும் கொல்லப்பட்டார்.

    லெபனானின் தெற்கு பகுதியில் நடந்த தாக்குதலில், லெபனானின் எயின் ஈபெல் பகுதியில் கடலோர பிரிவை சேர்ந்த தளபதியான இஸ்மாயில் யூசெப் பாஜ் என்பவர் கொல்லப்பட்டார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. 3 போராளிகளின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.

    • ஈராக், சிரியாவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது.

    அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதுபோன்று நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    அந்த வகையில் சிரியாவில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரண்டு அமெரிக்க எஃப்-15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்பை விட உயர்ந்தது ஏதும் எல்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவின் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த மாதம் 17-ந்தேதியில் இருந்து அமெரிக்க துருப்புகள் மீது குறைந்தது 40 முறையாவது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    • தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
    • காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    காசா முனை பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்துகிறார்கள். அதேபோல் ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதலை மேற்கொண்டது.

    காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள குடிமக்களை நோக்கி நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு ஹமாஸ் ராணுவ சாவடிக்குள் உள்ள ஆயுத தளத்யுதைம், ஹமாசுக்கு சொந்தமான 3 ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தியது என்று கூறியது.

    மேலும் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் ஏவிய ராக்கெட்டுகள், இஸ்ரேலிய வான் பாதுகாப்புகளால் இடை மறிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் ஹமாஸ் இயக்கத்தில் முக்கிய தளபதி ஒருவர் பலியானார்.

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய வான் தாக்குதலில் தலீபான் தளபதி உள்ளிட்ட 6 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. #Afghanistan #Taliban #AirStrike
    கஜினி:

    ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தில் காராபாக் மாவட்டத்தின் ஜமால் கில் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாசவேலை நடத்த சதி செய்து கொண்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பு படைகள் அதிரடியாக வான்தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகினர். பலியானவர்களில் தளபதி ரபியுல்லாவும் ஒருவர் என தகவல்கள் கூறுகின்றன. தலீபான்கள் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப் படுகிறது.

    இந்த தாக்குதல் பற்றி மாகாண அரசு செய்தி தொடர்பாளர் ஆரிப் நூரி கூறும்போது, “வான்தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதி ரபியுல்லா மிகவும் கொடூரமானவர். அவர் கொல்லப்பட்டு விட்டதால், அந்தப் பகுதியில் இனி பாதுகாப்பு நிலை மேம்படும்” என குறிப்பிட்டார்.

    இந்த தாக்குதல் பற்றி தலீபான்கள் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.  #Afghanistan #Taliban #AirStrike 
    ஈராக் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #ISmilitantskilled
    பாக்தாத்:

    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
     
    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து வந்த ஈராக் நகரங்கள் அத்தனையும் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அந்த நாட்டின் பிரதமர் ஹைதர் அல்அபாதி தெரிவித்தார். ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை.

    இந்நிலையில், ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்த டியாலா மாகாணத்தில் உள்ள ஹாத் அல் வக்ப் பகுதியில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை நோக்கி ஈராக் ராணுவத்தினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அப்பகுதியில் பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிக்ள் 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #ISmilitantskilled
    சிரியாவில் எயின் அல் டினே கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதாகவும் அதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Syria #Airstrike
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி உள்நாட்டுப்போர் மூண்டது. தொடர்ந்து 8-வது ஆண்டாக அந்தப் போர் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் சிரியாவின் தென் மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஒரு கிராமத்தின் மீது ரஷியாவின் துணையுடன் அதிபர் ஆதரவு படைகள் நேற்று குண்டுவீச்சில் ஈடுபட்டன.

    இந்தக் குண்டுவீச்சில் 6 பேர் பலியாகினர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

    ஆனால் அங்கு இயங்கி வருகிற ஒரு மருத்துவ அறக்கட்டளை, எயின் அல் டினே கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதாகவும் அதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் கூறுகிறது.

    பலியானவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் என கூறப்படுகிறது. 35 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    அண்டை கிராமங்களில் அதிபர் ஆதரவு படைகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இடம் பெயர்ந்து எயின் அல் டினே கிராமத்துக்கு வந்த மக்கள்தான் பீப்பாய் குண்டுவீச்சில் சிக்கிக்கொண்டதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. 
    ×