என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன் தாக்குதல்"

    • ஜெனீவாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
    • 8 பிராந்தியங்களில் உள்ள முக்கியமான கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் தூதர்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா சரமாரி வான்தாக்குதல் நடத்தியுள்ளது. 420 டிரோன்கள் மற்றும் 39 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. 39 ஏவுகணைகளில் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும்.

    8 பிராந்தியங்களில் உள்ள முக்கியமான கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முயற்சிக்காக புதன்கிழமை இரவு டொனால்டு டிரம்ப் உடன் டெலிபோனில் பேசும்போது நன்றி தெரிவித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ரஷியா மற்றும் உக்ரைன் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நிலத்தை தங்கள் இடமாக கருதுவதாக ரஷியா கூறி வருகிறது. இந்த விசயத்தில் முடிவு எட்டப்படாமல் உள்ளது.

    • குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
    • மாஸ்கோவின் விமான நிலையங்களை குறிவைத்து 10 டிரோன்களை உக்ரைன் ஏவியது.

    ரஷியா, இன்று (பிப்ரவரி 23) உக்ரைன் மீது 126 டிரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தியது.

    உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை 105 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியது. இருப்பினும், 20 ட்ரோன்களும் ஏவுகணையும் 11 இடங்களில் தாக்கின. இதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26 பேர் காயமடைந்தனர்.

    ஒடெசா, ஜபோரிஜியா, கெர்சன்,டொனெட்ஸ்க், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், கார்கிவ், சுமி ஆகிய நகரங்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    முன்னதாக நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவின் விமான நிலையங்களை குறிவைத்து 10 டிரோன்களை உக்ரைன் ஏவியது. ஆனால் அவை இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

    இதனால் மாஸ்கோவில் தாற்காலிகமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு பின் செயல்பாட்டுக்கு வந்தன.

    முந்தைய நாள் ரஷியா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில் உக்ரைன் இந்த தாக்குதலை பதிலடியாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.  

    • விமான நிலையங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
    • மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயன்றதை எதிர்த்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.

    இந்த போரானது கடந்த 5 வருடங்களாக முடிவின்றி நடந்து வருகிறது. போரை நிறுத்த கடந்த வருடம் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப் கடுமையாக முயன்று வருகிறார்.

    பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை.

    இதற்கிடையே நேற்று உக்ரைனின் வடக்கு பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

    மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    மாஸ்கோவை நோக்கி வந்த 10 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

    இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்க்கோவின் 4 சர்வதேச விமான நிலையங்களும் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    இதற்கிடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மறுபுறம் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கைப்பற்றிய பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க ரஷியா மறுப்பதால் ஒப்பந்தம் எட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது. 

    • ஜெனீவாவில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
    • உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்துவதற்கான புதிய அமைதி பேச்சுவார்த்தை ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில் இரு நாடுகளும் மாறிமாறி டிரோன் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

    உக்ரைனில் உள்ள கருங்கடல் துறைமுக நகரான ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் வயதான பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இருநாட்டு எல்லையில் உள்ள பிரியான்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

    ரஷியாவின் எல்லையில் அமைந்துள்ள பெல்கொரோட் நகர் மீது உக்ரைன் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து இன்று மாறிமாறி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    அடுத்த வாரம் ஜானீவாவில் ரஷியா மற்றும் உக்ரைன் தூதர்களுடன் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. செவ்வாய் மற்றும் புதன் கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் அதிபரின் தகவல் தொடர்பு ஆலோசகரும் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    • 200 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது.
    • எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைனில் பயணிகள் ரெயிலை குறிவைத்து ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

    நேற்று கார்கிவ் நகரில் சுமார் 200 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    அதேநேரம், ஒடெசா நகரில் ரஷ்யா 50-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி நடத்திய தாக்குதலில் இதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்தத் தாக்குதலில் ஒடெசா நகரில் 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், ஒரு தேவாலயம், மழலையர் பள்ளி மற்றும் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக இதன்போது எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் ஸ்லோவியான்ஸ்க் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு தம்பதியும், ஜபோரிஜியா பகுதியில் ஒரு முதியவரும் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒரே நேரத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    • தென் கொரிய டிரோனை சுட்டு வீழ்த்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
    • அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என தென்கொரியா மறுத்துள்ளது.

    சியோல்:

    தங்களது வான்பரப்பில் தென் கொரியாவின் டிரோன் அத்துமீறி பறந்தது என வடகொரியா குற்றம் சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து வடகொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், தென் கொரியாவின் டிரோன்கள் எல்லை தாண்டி வந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பறந்ததாக கூறப்பட்டது. அந்த டிரோன்கள் தங்கள் நாட்டில் உள்ள முக்கிய இடங்களை புகைப்படம் எடுத்ததாகவும் கூறிய வடகொரியா, உளவு பார்க்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், அந்த டிரோன் தங்களுடையது அல்ல. வடகொரியாவைத் தூண்டும் எண்ணம் தங்களுக்கு இல்லை என தென் கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அத்துடன் கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களைக் குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும் தென்கொரியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.
    • ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.

    கடந்த வாரம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லம் மீது ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. நோவ்கோ பிராட் பிராதியத்தில் உள்ள புதினின் அரசு இல்லத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதை பாதுகாப்பு படைகள் முறியடித்ததாகவும் ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்தநிலையில் உக்ரைன் டிரோன் தாக்குதலில் புதினின் இல்லத்தை குறி வைக்கவில்லை என்று ரஷியாவின் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.

    அமெரிக்க அதிபருக்கான ஏர்போர்ஸ் விமானத்தில் அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:-

    ரஷிய அதிபர் புதினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தவில்லை என்பதை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அங்கு தாக்குதல் நடந்ததாக நான் நம்பவில்லை. அன்றைய தினம் ரஷிய அதிபருடன் தொலைபேசியில் பேசினேன். புதினும் இந்த விஷயத்தை எழுப்பினார். இந்த குற்றச்சாட்டால் நான் மிகவும் கோபம் அடைந்தேன்.

    இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

    20 அம்ச திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.

    இது சமாதான முயற்சிகளை பலவீனப்படுத்தும் மாஸ்கோவின் முயற்சி தவிர வேறொன்றுமில்லை என்று ஐரோப்பிய அதிகாரிகள் வாதிட்ட பிறகு அமெரிக்காவின் இந்த முடிவை டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    • புத்தாண்டு இரவு உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • ரஷியாவின் ராணுவ இலக்குகளை மட்டும் இலக்கு வைத்ததாக உக்ரைன் விளக்கம்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான சண்டை 4 வருடங்களாக நடைபெற்று வருகிறது. சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திதான் வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைனின் ஆக்கிரமிப்பு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கஃபே மற்றும் ஓட்டல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 27 பேர் உயிரிழந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

    கெர்சன் பிராந்தியத்தில் உள்ள கோர்லி கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐந்து மைனர்கள் உள்பட 31 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

    ரஷியாவின் இந்த குற்றச்சாட்டு உக்ரைன் மறுத்துள்ளது. உக்ரைன் பொதுப்படைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரோ லிகோவி இது தொடர்பாக கூறுகையில் "உக்ரைன் படைகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. ரஷியாவின் ராணுவ இலக்குகள், எரிபொருள் மற்றும் எரிசக்தித் துறை தொழிற்சாலைகள் மற்றும் பிற சட்டப்பூர்வ இலக்குகளுக்கு எதிராக மட்டுமே தாக்குதல்களை நடத்துகின்றன.

    நடந்துகொண்டிருக்கும் அமைதி பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதற்காக, தவறான தகவல்களையும் பொய்களையும் ரஷியா மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறது.

    புத்தாண்டு தினத்தன்று இரவு உக்ரைன் ராணுவம் தாக்கிய இலக்குகளின் தெளிவான பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கெர்சன் பிராந்தியத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் மீதான தாக்குதல்கள் இடம்பெறவில்லை" என்றார்.

    • இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
    • 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்கள் காணப்பட்டன.

    தலைநகர் மாஸ்கோவின் அருகே உள்ள நோவ்கோரோட் பகுதியில் அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து கடந்த டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உக்ரைன் 91 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டி இருந்தது.

    ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

    இந்நிலையில் நோவ்கோரோட் பகுதியில் உள்ள புதினின் இல்லத்தைத் தாக்க உக்ரைன் அனுப்பியதாகக் கூறப்படும் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    அந்த வீடியோவில், 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்களுக்கு அருகில் ரஷிய வீரர் ஒருவர் நிற்பது போன்ற காட்சிகள் உள்ளன.

     இந்த வீடியோ நகைப்புக்குரியது என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. இத்தகைய போலியான ஆதாரத்தை உருவாக்க ரஷியா இரண்டு நாட்கள் ஆகியுள்ளதாக உக்ரைன் செய்தித் தொடர்பாளர் கிண்டலாக தெரிவித்தார்.

    இதற்கிடையில், அமெரிக்கவின் சி.ஐ.ஏ புலனாய்வு அமைப்புநடத்திய ஆய்வில், உக்ரைன் புதினின் இல்லத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று முடிவுக்கு வந்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. 

    • அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
    • அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார்.

    மாஸ்கோ அருகே உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து 91 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் ரஷியா நேற்று தெரிவித்தது.

    ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதவிட்ட பிரதமர் மோடி, "ரஷிய அதிபரின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.

    போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தூதரக ரீதியிலான முயற்சிகளே சரியான வழி" என்று தெரிவித்துள்ளார்.

    அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார். அதே சமயம் விரைவில் அமைதி உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

    • இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார்.
    • இது ஒரு அப்பட்டமான பொய் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    உக்ரைன் ரஷியா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த டிரம்ப் அரும்பாடுபட்டு வருகிறார்.

    கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் தலையீட்டுடன் ரஷியா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதாக ரஷியா அறிவித்துள்ளது.

    ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், நோவ்கோரோட் பகுதியில் உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை நோக்கி உக்ரைன் சுமார் 91 நீண்ட தூர டிரோன்களை ஏவியுள்ளது. இருப்பினும், ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார்.

    இது அரச பயங்கரவாதம் என்றும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறிய லாவ்ரோவ், இந்தத் தாக்குதலால், தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷியாவின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர்  டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது பேச்சுவார்த்தையை வலுவிழக்கச் செய்யும் என்று புதின் சுட்டிக்காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. 

    இதற்கிடையே ரஷியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் என்றும், உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தகுந்த காரணத்தை உருவாக்கவே ரஷியா இதுபோன்ற நாடகங்களை ஆடுவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

    புதின் இல்லத்தின் மீதான இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டு, போர் நிறுத்த முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது. 

    • ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி.
    • நாளை டிரம்ப்- ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா- உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    நாளை (ஞாயிறு) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை புளோரிடாவில் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 8 பேராவது காயம் அடைந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டினிப்ரோ மாவட்டத்தில் உள்ள 18-வது மாடி ரஷியாவின் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக மீட்புப்பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். டார்னிட்சியா மாவட்டத்தில் உள்ள 24 மாடி கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளானது. குறிப்பாக தொழில்துறை மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×