என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drone Attacks"

    • ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.
    • எண்ணெய் கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.

    ரஷியாவின் கருங்கடல் துறைமுகமான துவாப்சை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த எண்ணை கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணை கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் துறைமுகம் மற்றும் எண்ணை கப்பல் கடும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துறைமுகத்தின் கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துவாப்ஸ் துறைமுகம் ரஷியாவின் கச்சா எண்ணை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். இந்த தாக்குதலால் ரஷியாவின் கச்சா எண்ணை விநியோகம் பாதிக்கப்படும்.

    துவாப்ஸ் துறைமுகத்தில் உள்ள எண்ணை முனையம், ரஷியாவின் மிகப்பெரிய எண்ணை நிறுவனமான ரோஸ்நெப்ட்டுக்கு சொந்தமானது. சமீபத்தில் இந்த நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே துவாப்ஸ் அருகே உள்ள சோஸ்னோவி கிராமத்திலும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அடுக்குமாடி கட்டிடம் சேதமடைந்தது. மேலும் துவாப்சில் உள்ள ரெயில் நிலையத்திலும் சிறிது சேதங்கள் ஏற்பட்டது.

    • கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் டிரோன் மூலம் சரமாரி தாக்குதல்.
    • 251 டிரோன்களை வீழ்த்தியதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். ரஷியா பேச்சுவார்த்தைக்கு இணங்காததால், சண்டை நீடித்து வருகிறது.

    தற்போது டிரோன்கள் மூலம் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று ரஷியாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை டிரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    மேற்கு ரஷியாவில் உளள் நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உளள் ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள் தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார். அங்கு வெடிச்சத்தம் கேட்டதாகவும், தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    ரஷியப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது. கிரீமியாவில் உள்ள எண்ணெய் நிலையத்தையும் டிரோன் தாக்கியதாவும், இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதை ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.

    251 டிரோன்கள் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்த ரஷியா, போர் தொடங்கிய பிறகு உக்ரைனின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளது.

    • நேற்றி இரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் தாக்குதல்.
    • பல்வேறு வகையான 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல்.

    ரஷியா நேற்றிரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் டிரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

    479 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், 20-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

    இரவு நேரங்களில் டிரோன்களை கண்டுபிடித்து அழிப்பது சிரமம் என்பதால், மாலை நேரத்தில் இருந்து காலை வரை டிரோன் தாக்குதலை நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

    ஷாஹேத் வகை டிரோன்கள் மூலம் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்திய வருகிறது. கடந்த 3 வருடத்திற்கு மேலாக ரஷியா நடத்திய தாக்குதலில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் ரஷியா விமானப்படை தளத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட ரஷிய விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்து ரஷியா தாக்குதலை அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே ரஷியா- உக்ரைன் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஆயிரக்கணக்கான கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

    • எல்லை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் "பிளாக் அவுட் (இருளில் மூழ்கிய பகுதிகள்)" செய்யப்பட்டுள்ளது.
    • சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதால் அதிர்ச்சி.

    சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    உதம்பூர், அக்னூர், பூஞ்ச், ராஜோரி, ஜம்மு, ஆர்.எஸ்.புரா, கத்துவா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எல்லை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் "பிளாக் அவுட் (இருளில் மூழ்கிய பகுதிகள்)" செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் டிரோன் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால், ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர், ஜெய்சல்மார், பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர், ஜம்முவின் உதம்பூர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

    மேலும், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்துவதாக அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தாக்குதல் எதிரொலியால், கட்ச் மாவட்டத்தில் மின் வினியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்த எல்லை பாதுகாப்பு படைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவுடனான சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    • ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.
    • இந்தியாவின் 14 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் 26 டிரோன் தாக்குதலை நடத்தியது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான எல்லை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் உடனடியாக தாக்கிஅழித்தது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரியானாவின் அம்பாலா, பஞ்சகுலா, பஞ்சாப்பின் பிரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. காஷ்மீரில் வான் பாதுகாப்பு கவசம் செயல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்தியாவின் 14 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் 26 டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த டிரோன்கள் இந்திய வான் பாதுகாப்பு மையம் மூலம் தடுத்து அழிக்கப்பட்டன.

    பதான்கோட், அக்னூர், பாராமுல்லா, அவந்தி நகர், அவந்திபோரா, பெரோஸ்பூர் உள்ளிட்ட 14 நகரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இதையடுத்து, சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    பெரோஸ்பூரில் வீசப்பட்ட டிரோன் தாக்கியதில் அங்கிருந்த வீடுகள் தீப்பற்றின. இதில் காயமடைந்த 3 பேரை ராணுவத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பாகிஸ்தான் தாக்குதலை சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    • ஜம்மு, ஸ்ரீநகர், சம்பா, பதார்கோட் உள்ளிட்ட இடங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிப்பு.
    • போர் பாதுகாப்பு நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநில பார்மரில் முழுமையாக மின்சாரம் துண்டிப்பு.

    ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியை குறி வைத்து எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படைகள் பயங்கரத் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பீரங்கி குண்டுகளை வீசி பாகிஸ்தான் ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் Black out (மின்சாரம் துண்டிப்பு) செய்யப்பட்டுள்ளது.

    ஜம்மு, ஸ்ரீநகர், சம்பா, பதார்கோட் உள்ளிட்ட இடங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், போர் பாதுகாப்பு நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநில பார்மரில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப்பின் பிரோஸ்பூரிலும் மின்சாரத்தை துண்டித்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், அரியானாவின் பஞ்ச்குலா, அம்பாலாவில் மின்சாரத்தை துண்டித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    • ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
    • இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான் நிலைகுலைந்து காணப்பட்டது.

    வாஷிங்டன்:

    பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தின.

    இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையில் நாங்கள் தற்போது தலையிடப் போவதில்லை.

    பதற்றத்தைத் தணிப்பதற்கு முயற்சி செய்வோம்.

    இரு நாடுகளையும் ஆயுதங்களைக் கைவிடும்படி நாங்கள் கூறமுடியாது.

    இது மிகப் பெரிய போராகவோ, அணு ஆயுத பிரச்சனையாகவோ மாறாது என நம்புகிறோம் என தெரிவித்தார்.

    • பாகிஸ்தானின் மற்றொரு போர் விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
    • விமானத்தில் இருந்து உயிர் தப்பிய விமானி கைது செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தின.

    இந்நிலையில், பாகிஸ்தானின் மற்றொரு போர் விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்து உயிர் தப்பிய விமானி கைது செய்யப்பட்டார்.

    ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தானின் 2 டிரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

    • பஞ்சாப்பில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகிறது.
    • ஜம்மு காஷ்மீரிலும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூடப்படுகிறது.

    புதுடெல்லி:

    பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தின.

    இந்நிலையில், முன் எச்சரிக்கை காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு 3 நாள் மூடப்படும் என அம்மாநில பள்ளிக் கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார்.

    இதேபோல், ஜம்மு காஷ்மீரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது ரஷியா இடைவிடாமல் வான் தாக்குதல் நடத்துகிறது.
    • தாக்குதலில் சேதமடைந்த இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது. உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷிய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்துவருகின்றன. ஆரம்பத்தில் ரஷிய படைகளை முன்னேற விடாமல் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டு வந்த உக்ரைன் படைகள், கடந்த சில மாதங்களாக ரஷிய பகுதிகளை குறிவைத்து வான் தாக்குதல்களை நடத்துகின்றன.

    இந்நிலையில், உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது ரஷியா இடைவிடாமல் வான் தாக்குதல் நடத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதேசமயம், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்திய 8 ட்ரோன்களை ரஷிய வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்ததாக ரஷிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    5 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, மேலும் மூன்று ட்ரோன்கள் தடுத்து திசைதிருப்பப்பட்டன. இது உக்ரைன் ஆட்சியின் பயங்கரவாத தாக்குதல் என ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ட்ரோன் தாக்குதலில் மாஸ்கோவின் பல கட்டிடங்கள் சிறிய அளவில் சேதமடைந்தன என்றும், 2 பேர் காயமடைந்ததாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறினார். தாக்குதலில் சேதமடைந்த இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

    இந்த தாக்குதலானது, உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியதில் இருந்து ரஷியாவிற்குள் ஊடுருவி நடத்தப்படும் தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் இருந்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அதேசமயம், இந்த தாக்குதல்கள் ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

    • ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
    • 12 டிரோன்கள் அழிக்கப்பட்டதாக மேயர் செர்ஜி தெரிவித்தார்.

    மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் விமான சேவை பாதிக்கப்பட்டது. உக்ரைனின் திடீர் டிரோன் தாக்குதல் காரணமாக இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. டிரோன் தாக்குதலால் விமான நிலையங்கள் மூடப்பட்டதை ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    மாஸ்கோ பிராந்தியத்தின் ராமென்ஸ்காய் மற்றும் கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்தில் 12 டிரோன்கள் அழிக்கப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.

    "முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தாக்குதல் காரணமாக சேதமோ அல்லது உயிரிழப்புகளோ இல்லை. தாக்குதலுக்கு ஆளான பகுதிகளில் அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன," என்று சோபியானின் கூறினார்.

    கிரெம்லினில் இருந்து தென்கிழக்கில் சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள ராமென்ஸ்காய் மாவட்டம், கடந்த செப்டம்பர் மாதம் ரஷிய தலைநகர் மீது உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலில் குறிவைக்கப்பட்டது. அப்போது ரஷிய வான் பாதுகாப்பு பிரிவுகள் 20 டிரோன்களை பதில் தாக்குதல் நடத்தி அழித்தன.

    • உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியது.
    • கிறிஸ்துமஸ் அன்று ரஷிய படையினர் டிரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தினர்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு ஆண்டுகளைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைனின் அனல்மின் நிலையங்கள் உள்பட எரிசக்தி கட்டமைப்புகள் நிறைந்த கார்கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைக் குறிவைத்து ரஷிய படையினர் நேற்று தாக்குதல் நடத்தியது. டிரோன்கள் எனும் ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தியது.

    அனல்மின் நிலையங்களை குறிவைத்து ரஷிய படை தாக்குதல் நடத்தியதால் ஏராளமான நகரங்கள் இருளில் மூழ்கின.

    இந்நிலையில், கிறிஸ்துமஸ் அன்று தாக்குதல் நடத்திய ரஷியாவுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் தருணத்தில் உக்ரைன்மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் நிறைந்த பகுதிகளைக் குறிவைத்து 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் வாயிலாக தாக்குதலை ரஷியா தொடுத்துள்ளது. இதைவிட மனிதாபிமானமற்ற செயல் இருக்க முடியுமா என பதிவிட்டுள்ளார்.

    ×