என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ukraine"

    • புளோரிடாவில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்றது.
    • ரஷியா போர் தொடுக்காத வகையில் 50 வருட உத்தரவாதத்தை ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான 4 வருட போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர் 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்தார். இது தொடர்பாக உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, புளோரிடாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.

    அப்போது, அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, உக்ரைனுக்கு 15 வருட பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முன்வந்துள்ளதாக ஜெலன்ஸ்சி தெரிவித்துள்ளார். மேலும், ரஷியா, உக்ரைன் மீது வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பை முயற்சியை மேற்கொள்ளாதவாறு, 50 வருடத்திற்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், யதார்த்தம், பாதுகாப்பு உத்தரவாதம் இன்றி இந்த போர் முடிவுக்கு வராது என்றார்.

    இந்த சந்திப்பின்போது, உக்ரைன்- ரஷியா இடையே அமைதி ஒப்பந்தம் முன்பைவிட நெருக்கமாகியுள்ளது என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஒரு மாதத்திற்கு மேலான அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை முறிந்து போகக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

    முக்கிய பிரச்சினையில் ஒருமித்த கருத்து ஏற்பட இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    • ரஷியா பிடித்துள்ள பகுதிகளை விட்டுக்கொடுக்க உக்ரைன மறுப்பு தெரிவிக்கிறது.
    • டிரம்பை இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேச இருக்கிறார்.

    ரஷியா- உக்ரைன் இடையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதில் பெரும்பாலான அம்சங்களில் அமெரிக்கா- உக்ரைன் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

    உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுக்கு விட்டுக் கொடுப்பதும், ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுஉலையான சபோரிசியாவை ரஷியாவிடம் ஒப்படைக்கவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இன்று புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, ஜெலன்ஸ்கி சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் நேற்று ரஷிய அதிபர் புதின், அந்நாட்டின் ஆயுதப்படைகள் கமாண்டு மையத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். அங்குள் அதிகாரிகளிடம் பேசும்போது "உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், ரஷியா ராணுவ வழியில் அனைத்து சிறப்பு ராணுவ ஆபரேசன் இலக்குகளை அடையும் எனத் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன்- ரஷியா எல்லையில் பாதுகாப்பு பகுதி தொடக்கம் சிறப்பான நடைபெற்று வருகிறது. ரஷியப் படைகள் டான்பாஸ் மற்றும் சபோரோசியே பிராந்தியத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

    • ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி.
    • நாளை டிரம்ப்- ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா- உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    நாளை (ஞாயிறு) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை புளோரிடாவில் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 8 பேராவது காயம் அடைந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டினிப்ரோ மாவட்டத்தில் உள்ள 18-வது மாடி ரஷியாவின் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக மீட்புப்பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். டார்னிட்சியா மாவட்டத்தில் உள்ள 24 மாடி கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளானது. குறிப்பாக தொழில்துறை மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க ஜெலன்ஸ்கி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
    • மற்ற முக்கிய பிரச்சினைகளையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி 4 வருடங்கள் முடிய உள்ளன. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க அதிகாரிகள் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    உக்ரைனின் சில பகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என ரஷிய அதிபர் உறுதியாக உள்ளார். அதேவேளையில் தங்களது நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.

    இதனைத் தவிர்த்து பல்வேறு விசயங்கள் குறித்து உக்ரைனுடன் அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளுக்கும் இடையில் பல பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    20 அம்சங்கள் கொண்டு திட்டத்தை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து மாரத்தான் பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. புளோரிடாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் அதிபர், ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். ரஷியா இது குறித்து இன்னும் பதில் ஏதும் அளிக்கவில்லை.

    டான்பாசில் உள்ள மீதமுள்ள கைப்பற்றப்படாத பகுதிகளை உக்ரைன் விட்டுத்தர வேண்டும் என்பது ரஷியாவின் அதிகப்பட்ச கோரிக்கையாகும். இதை உக்ரைன் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. லுகான்ஸ்க் பிராந்தியத்தின் பெரும் பகுதியையும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 70 சதவீத பகுதியையும் ரஷியா ஆக்கிரமித்துள்ளது.

    • 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷியா - உக்ரைன் போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் கொல்லப்பட்டார்.

    உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ரஷியாவின் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்துள்ளார்.

    இந்த கார் குண்டுவெடிப்புக்கு பின்னால் உக்ரைனின் சதி உள்ளதா என்ற கோணத்தில் ரஷியா விசாரணை நடத்தி வருகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே சமயம் ஜெனரல் இகோர் கிரிலோவ் 2024 டிசம்பரில் ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    • 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.

    ப ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதற்காக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.

    இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில், NATO கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

    அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை தெரிவித்தார். அதே நேரம் எந்த ஒரு நிலப் பகுதியை ரஷியாவுக்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுனார். 

    ஜெலென்ஸ்கியின் இந்த திடீர் முடிவால் ரஷியா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    • உக்ரைன் தலைநகரில் உள்ள இரண்டு மாவட்டங்களில் தாக்குதல்.
    • 9 மாடி குடியிருப்பு கட்டிடம், எரிசக்தி கட்டமைப்பு சேதம் எனத் தகவல்.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். இறுதியாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய போர் நிறுத்த திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதில் பெரும்பாலான கோரிக்கைகள் ரஷியாவுக்கு சாதகமாக உள்ளது. இதனால் உக்ரைன் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள், உக்ரைன் நாட்டு தலைவர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம்தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதற்குள் இன்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதல் நடத்தியள்ளது.

    பெச்செர்ஸ்க் மற்றம் டினிப்ரோவ்ஸ்கி ஆகிய மாவட்டங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. டினிப்ரோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள 9 மாடி கட்டிடம் தீப்பிடித்து எரியும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

    குடியிருப்பு கட்டிடங்களை தவிர்த்து எரிசக்தி கட்டமைப்பு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து உக்ரைன் உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    • போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த ஜெலன்ஸ்கி துருக்கி சென்றுள்ளார்.
    • போரை நிறுத்த ரஷியா மீதான அழுத்தம் போதுமானதாக இல்லை.

    உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள டெர்னோபில் மீது ரஷியா நேற்றிரவு டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 12 குழந்தைகள் உள்பட 37 பேர் காயம் அடைந்துள்ளனர். டெர்னோபில்லி உள்ள இரண்டு 9 மாடி அடுக்குமாடி குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    38 வகையான பல்வேறு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் 476 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

    சாதாரண வாழ்க்கைக்கு எதிரான ஒவ்வொரு வெட்கக்கேடான தாக்குதலும், போரை நிறுத்த ரஷியா மீதான அழுத்தம் போதுமானதாக இல்லை என்பதைக் குறிக்கிறது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த துருக்கி சென்றுள்ளார். துருக்கி அதிபரை சந்தித்து ரஷியாவுக்கு ராஜாங்கரீதியாலான அழுத்தம் கொடுக்க வலியுறுத்துவேன் என ஜெலன்ஸ்தி தெரிவித்துள்ளார்.

    முதலில் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள துருக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர் துருக்கி வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஷியா தாக்குதலை எதிர்கொள்ள பாதுகாப்பை வலுப்படுத்த ஜெலன்ஸ்கி திட்டம்.
    • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறார்.

    பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் உள்பட ராணுவ உபகரணங்கள் வாங்க உக்ரைன் விருப்பம் தெரிவித்து, பிரான்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ஆனால் முழுமையான விவரம் வெளியிடப்படவில்லை.

    கடந்த 2022-ஆம் ஆண்டு ரஷியா முழுப்பலத்துடன் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து தற்போது வரை ஜெலன்ஸ்கி 9 முறை பிரான்ஸ் சென்றுள்ளார்.

    ரஷியா தொடர்ந்து உக்ரைனின் எனர்ஜி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனின் பாதுகாப்பை பலப்படுத்த ஜெலன்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    • துறைமுக நகரமான நோவோரோஸ்யிஸ்க் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடந்தியுள்ளது.
    • இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷியா உக்ரைன் போருக்கான அதிக நிதியை ஈட்டும் நிலையில் இந்த தாக்குதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் இரவோடு இரவாக ரஷியாவின் துறைமுக நகரமான நோவோரோஸ்யிஸ்க் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடந்தியுள்ளது.

    இந்த துறைமுக நகரம் ரஷியாவின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையம் ஆகும்.

    இந்த நிலையில் உக்ரைன் தாக்குதலில் நகரத்தின் மதிப்புமிக்க உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷியா உக்ரைன் போருக்கான அதிக நிதியை ஈட்டும் நிலையில் இந்த தாக்குதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்த தாக்குதலில் துறைமுகம், எண்ணெய் டெர்மினல் மற்றும் ரஷியாவின் S400 வான் பாதுகாப்பு அமைப்பு சேதமடைந்ததாக உக்ரைன் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

    இந்த தாக்குதலில் அப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. முன்னதாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியத்தில் 7 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.    

    • ரஷிய தாக்குதலில் கர்ப்பிணி பெண் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
    • ரஷியா தாக்குலால் கீவ் நகர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா தாக்குதலை தொடங்கியது. போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆன போதும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ரஷியாவும், உக்ரைனும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி தாக்கி வருகின்றனர்.

    ரஷியா நடத்திய தாக்குதலில் உக்ரைனில் உள்ள பல நகரங்கள் கடுமையான சேதமடைந்து உள்ளது. ஏராளமான கட்டிடங்கள் எலும்பு கூடுகள் போல காட்சி அளிக்கிறது. ரஷியாவுக்குள் புகுந்து உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையில் ரஷியா இறங்கி இருக்கிறது.

    இந்த நிலையில் சமீப காலமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது. இடைவிடாமல் ஏவுகணைகள், டிரோன் களை வீசியது.

    உள்கட்டமைப்பு வசதிகள், குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் கூறி உள்ளது. இரவு முழுவதும் குண்டு மழை பொழிந்தது.

    கீவ் சர்வதேச விமான நிலையம் அருகே டெஸ்னி யான்ஸ்கி பகுதியில் உள்ள 5 மாடி கட்டிடமும் ஏவுகணை தாக்குதலுக்கு தப்பவில்லை. அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

    மேலும், பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உள்கட்டமைப்புகள் தாக்குலுக்கு ஆளானதால் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ரஷியாவின் இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ரஷியா தாக்குலால் கீவ் நகர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    • எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து கடந்த வாரம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
    • இதற்கு பதிலடியாக 400 கி.மீ. நீளம் கொண்ட பைப்லைன் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள, முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தொடர்ந்து எரிபொருள் கட்டமைப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது.

    மாஸ்கோ மற்றும் நிஸ்னி நோவ்கொரோடுவில் உள்ள ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 400 கி.மீ. நீளம் கொண்ட கோல்ட்செவோய் பைப்லைன்கள் மூலம் விமான எரிபொருள், டீசல், பெட்ரோல் ஆகியவை ரஷிய படைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த எரிபொருள் பைப்லைன்களை தாக்கி அழித்ததாக உக்ரைன தெரிவித்துள்ளது. இது ரஷியப் படைகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள எரிபொருள் கட்டமைப்புகள் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதற்கு பதிலடியாக உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுளுள்து.

    ராமென்ஸ்கி மாவட்டம் அருகே உள்ள கட்டமைப்பை இலக்காக நிர்ணயித்து மூன்று எரிபொருள் லைன்களையும் தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது. இந்த எரிபொருள் பைப் லைன்கள் 3 மில்லியன் டன் வரை விமான எரிபொருள், 2.8 மில்லியன் டன் வரை டீசல், 1.6 மில்லியன் டன் வரை பெட்ரோல் எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

    இன்று காலை ரஷியா, தென் உக்ரைன் பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். மத்திய போல்டாவா பிராந்தியில் உள்ள கியாஸ் நிலையம் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

    ×