என் மலர்
நீங்கள் தேடியது "Russia"
- ஜெனீவாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- 8 பிராந்தியங்களில் உள்ள முக்கியமான கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் தூதர்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா சரமாரி வான்தாக்குதல் நடத்தியுள்ளது. 420 டிரோன்கள் மற்றும் 39 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. 39 ஏவுகணைகளில் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும்.
8 பிராந்தியங்களில் உள்ள முக்கியமான கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முயற்சிக்காக புதன்கிழமை இரவு டொனால்டு டிரம்ப் உடன் டெலிபோனில் பேசும்போது நன்றி தெரிவித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷியா மற்றும் உக்ரைன் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நிலத்தை தங்கள் இடமாக கருதுவதாக ரஷியா கூறி வருகிறது. இந்த விசயத்தில் முடிவு எட்டப்படாமல் உள்ளது.
- குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
- மாஸ்கோவின் விமான நிலையங்களை குறிவைத்து 10 டிரோன்களை உக்ரைன் ஏவியது.
ரஷியா, இன்று (பிப்ரவரி 23) உக்ரைன் மீது 126 டிரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தியது.
உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை 105 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியது. இருப்பினும், 20 ட்ரோன்களும் ஏவுகணையும் 11 இடங்களில் தாக்கின. இதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26 பேர் காயமடைந்தனர்.
ஒடெசா, ஜபோரிஜியா, கெர்சன்,டொனெட்ஸ்க், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், கார்கிவ், சுமி ஆகிய நகரங்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
முன்னதாக நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவின் விமான நிலையங்களை குறிவைத்து 10 டிரோன்களை உக்ரைன் ஏவியது. ஆனால் அவை இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இதனால் மாஸ்கோவில் தாற்காலிகமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு பின் செயல்பாட்டுக்கு வந்தன.
முந்தைய நாள் ரஷியா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில் உக்ரைன் இந்த தாக்குதலை பதிலடியாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- விமான நிலையங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
- மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயன்றதை எதிர்த்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.
இந்த போரானது கடந்த 5 வருடங்களாக முடிவின்றி நடந்து வருகிறது. போரை நிறுத்த கடந்த வருடம் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப் கடுமையாக முயன்று வருகிறார்.
பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே நேற்று உக்ரைனின் வடக்கு பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
மாஸ்கோவை நோக்கி வந்த 10 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்க்கோவின் 4 சர்வதேச விமான நிலையங்களும் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மறுபுறம் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கைப்பற்றிய பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க ரஷியா மறுப்பதால் ஒப்பந்தம் எட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
- தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஈரான் நவீனப்படுத்தியுள்ளது.
- அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
ஈரான் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஓமன் மத்யஸ்தத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி வருகிறார்.
ஈரானை நோக்கி அமெரிக்க கடற்படை கப்பல் பிரிவு அனுப்பப்பட்டுள்ளது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து ஓமன் கடலில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன.

பிராந்திய நாடுகளுக்கு அமைதியின் செய்தியை வழங்குவதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என்று ஈரானிய அட்மிரல் ஹசன் மக்சூத்லு தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல் மற்றும் ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கைகளை தடுத்தல் ஆகியவை இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தாக்குதல்களை எதிர்கொள்ள, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பார்க்கின் ராணுவ மையத்தில், கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டும் பணிகள் நடக்கின்றன. நதான்ஸ் அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள மலைப்பாதை நுழைவாயில்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் வெளியான செயற்கை கோள் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளன.

தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஈரான் நவீனப்படுத்தியுள்ளது.
பார்க்கின் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஜூலை 2025 முதல் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு இடங்களில் புதிய வான் பாதுகாப்புப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மொத்தத்தில் ஈரான் தனது அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
- இந்தியா, அமெரிக்காவின் அறிவிப்பை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ செய்யாமல் மௌனம் காத்துவருகிறது.
- இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை வாங்குவது இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து தங்களுக்கு தகவலும் வரவில்லை என்றும், அமெரிக்காவைத் தவிர வேறுயாரும் இந்த கூற்றை தற்போது வரை முன்வைக்கவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்து வருகிறது.
மறுபுறம் இந்தியா, அமெரிக்காவின் அறிவிப்பை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ செய்யாமல் மௌனம் காத்துவருகிறது. இந்நிலையில் மீண்டும், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது என்பதை நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என மாஸ்கோ தெரிவித்துள்ளது.
வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை வாங்குவது இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க உதவுகிறது.
ரஷ்ய எரிபொருட்களை வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது என்று நம்புவதற்கு எங்களிடம் எந்த காரணமும் இல்லை. சுதந்திர நாடுகளுக்கு கட்டளையிடும் உரிமையைத் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரின் கூற்றுகளில் புதிதாக எதுவும் இல்லை" என தெரிவித்தார்.
இதன்மூலம் தற்போதுவரை இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்பது உறுதியாகிறது.
- வெனிசுலா மற்றும் மெக்சிகோவி கச்சா என்னை சப்ளையை நிறுத்தியுள்ளார்.
- எரிபொருள் தட்டுப்பாட்டால் கியூபாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கியூபாவுக்கு வெனிசுலா மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்து வந்தது. வெனிசுலாவை முற்றுகையிட்ட அமெரிக்கா, அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அதன் நாட்டிற்கு கொண்டு சென்றுவிட்டது. இதனால் ஜனவரி மாதத்தில் இருந்து வெனிசுலா கியூபாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்தியது.
வெனிசுலாவிற்கு அடுத்தப்படியாக மெக்சிகோ அதிக அளவில் கியூபாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்தது. கியூபாவிற்கு எண்ணெய் சப்ளை செய்தால், கடுமையான வரி விதிப்போம் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதனால் மெக்சிகோவும் எண்ணெய் சப்ளையை நிறுத்தியது. இதனால் கியூபாவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதா நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விமானங்களுக்கு எரிபொருள் வழங்க இயலாது என்று கியூபா அரசு தெரிவித்துள்ளது. இதனால் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஷியாவின் சுற்றுலா நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் கியூபா வெளியுறவுத்துறை மந்திரி ப்ரூனோ ரோட்ரிக்ஸ், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவை சந்தித்தார்.
அப்போது செர்கெய் லாவ்ரோவ் "உலகளாவிய சமூகத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுடன் சேர்ந்து, அமெரிக்கா பொது அறிவைக் காட்டவும், பொறுப்பான அணுகுமுறையை எடுக்கவும், கடல் முற்றுகைத் திட்டங்களிலிருந்து விலகி இருக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் கியூபாவிற்கும் அதன் மக்களுக்கும் ரஷியா தொடர்ந்து ஆதரவளிக்கும்" என்றார்.
ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பானர் "பல நாடுகளைப் போலவே, ரஷியாவும் கியூபாவின் முற்றுகைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது" என்றார்.
கியூபா வெளியுறவுத்துறை மந்திரி ப்ரூனோ ரோட்ரிக்ஸ் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச இருக்கிறார்.
- விளாடிமிர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
- போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்தி, அவர்களை பாதுகாக்கவே இந்த செயல்
'Bring Kids Back UA' முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 2000 குழந்தைகள் நாட்டிற்கு திரும்பினாலும் இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகளால் ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 2022-ல் இருந்து ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக சுமார் 20,000 குழந்தைகள் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்திய குற்றச்சாட்டின் கீழ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
குழந்தைகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததாக தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு ரஷ்யா மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் போர்க்களத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தி, அவர்களை பாதுகாக்கவே அப்படி செய்ததாக தெரிவித்துள்ளது. மேலும் உறவினர்கள் முன்வந்து, குழந்தைகளின் அடையாளத்தை உறுதிசெய்யும் பட்சத்தில், அவர்களைத் திருப்பி அனுப்பத் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவிக்கிறது.
- ரஷியாவில் இருந்து இந்தியாவின் பொருட்கள் இறக்குமதி 2.86 பில்லியன் டாலராக இருந்தது.
- இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்துள்ளன.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் எட்டப்பட்டது. இதில் இந்தியா மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.
இதில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் அபராத வரியாக விதிக்கப்பட்ட 25 சதவீதத்தை அமெரிக்கா ரத்து செய்தது. மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்தது.
இந்தியாவுக்கு அமெரிக்கா, வெனிசுலா கச்சா எண்ணெயை விற்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்தியாவில் ரஷியாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி 40 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் ரஷியாவில் இருந்து இந்தியாவின் பொருட்கள் இறக்குமதி 2.86 பில்லியன் டாலராக இருந்தது.
இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது 40.48 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு ஜனவரியில் ரஷியாவின் பொருட்கள் இறக்குமதி 4.81 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
ரஷியாவில் இருந்து இந்தியாவின் மொத்த பொருட்கள் இறக்குமதியில் கச்சா எண்ணை இறக்குமதி 80 சதவீதம் ஆகும். தற்போது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்துள்ளன.
இதன் காரணமாக ரஷிய இறக்குமதி சரிவை சந்தித்து உள்ளது. ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு வரும் மாதங்களில் கடுமையாக குறையும் என்றும் , இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெயுடன் ஒப்பிடும்போது மலிவான வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க விரும்பும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
வெனிசுலா மீதான அமெரிக்க தடைகளுக்கு முன்பு இந்தியா வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்குபவர்களில் முக்கிய நாடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெனீவாவில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
- உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்துவதற்கான புதிய அமைதி பேச்சுவார்த்தை ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில் இரு நாடுகளும் மாறிமாறி டிரோன் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனில் உள்ள கருங்கடல் துறைமுக நகரான ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் வயதான பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இருநாட்டு எல்லையில் உள்ள பிரியான்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
ரஷியாவின் எல்லையில் அமைந்துள்ள பெல்கொரோட் நகர் மீது உக்ரைன் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து இன்று மாறிமாறி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் ஜானீவாவில் ரஷியா மற்றும் உக்ரைன் தூதர்களுடன் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. செவ்வாய் மற்றும் புதன் கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபரின் தகவல் தொடர்பு ஆலோசகரும் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
- அரசு உருவாக்கி உள்ள மேக்ஸ் என்ற சூப்பர் ஆப்-ஐ மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சி.
- உள்நாட்டு சமூக வலைதளங்களை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை.
ரஷியாவில் வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் டெலிகிராம் செயலியும் முடக்கப்பட்டுள்ளது. ரஷிய அரசு உருவாக்கி உள்ள மேக்ஸ் என்ற சூப்பர் ஆப்-ஐ மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்நாடு முயற்சித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷியாவில் வாட்ஸ்அப் செயலியை முழுமையாக முடக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும் டெலிகிராம் செயலிக்கு ரஷிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ரோஸ்கோம் நாட்சோர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ரஷிய சட்டங்களுக்கு புறம்பான தகவல்களை நீக்க மறுப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான தகவல்களை பகிர மறுப்பது ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வீசாட் போன்று உருவாக்கப்பட்ட மேக்ஸ் செயலி மூலம் அரசாங்க சேவைகளையும் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷிய அரசின் இந்த நடவடிக்கைக்கு வாட்ஸ்அப் நிறுவனம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப்-ஐ ரஷியாவில் முழுமையாக தடுக்க அந்நாட்டு அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். உள்நாட்டு தளங்களை ஊக்குவிப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயனர்களை அரசுக்குச் சொந்தமான கண்காணிப்பு செயலிக்கு நகர்த்த இந்த தடை முயற்சி செய்யப்படுகிறது. இது 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை தனிமைப்படுத்தும். மக்களுக்கான பாதுகாப்பைக் குறைக்கும். பாதுகாப்பான தகவல்களில் இருந்து மக்களைப் பிரிக்கும் பிற்போக்கு செயலாகும். பயனர்களை தொடர்ந்து இணைப்பில் வைத்திருக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் என்றார்.
ரஷியாவின் இந்த நடவடிக்கையை டெலிகிராம் நிறுவனர் பவெல் துரோவ் கடுமையாக விமர்சித்து உள்ளார். இதற்கிடையே ரஷிய அரசின் மேக்ஸ் செயலி மக்களை கண்காணிப்பதற்காக கொண்டுவரப்பட்ட செயலி ஆகும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
- ஆர்மீனியாவும் அமெரிக்காவும் இணைந்து உண்மையான செழிப்பை அடைவதற்கான சூழலையும் உருவாக்குகிறோம்
- தெற்கு காகசஸ் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்யாவுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும்.
ரஷ்யாவின் முன்னாள் நெருங்கிய கூட்டாளியான ஆர்மீனியாவும், அமெரிக்காவும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளன. பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் ஆர்மினியா சென்றுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
"123 ஒப்பந்தம்" என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பம், எரிபொருள் மற்றும் உபகரணங்களை அர்மீனியாவிற்கு சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அர்மீனியாவிற்கு சுமார் $5 பில்லியன் மதிப்பிலான ஆரம்ப ஏற்றுமதிகளும், கூடுதலாக $4 பில்லியன் மதிப்பிலான நீண்டகால பராமரிப்பு மற்றும் எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களும் கிடைக்கும் என ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் "நாங்கள் ஆர்மீனியாவிற்கு அமைதியை மட்டும் ஏற்படுத்தவில்லை; ஆர்மீனியாவும் அமெரிக்காவும் இணைந்து உண்மையான செழிப்பை அடைவதற்கான சூழலையும் உருவாக்குகிறோம்," என்றும் தெரிவித்துள்ளார்.
தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுவரை ரஷ்யா மற்றும் ஈரானை சார்ந்திருந்த ஆர்மீனியா, தற்போது ஒரு புதிய அணு உலை அமைப்பதற்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் தென் கொரிய நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள முன்மொழிவுகளைப் பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் மெட்சாமரில் உள்ள பழைய ரஷ்ய தயாரிப்பு அணுமின் நிலையத்திற்குப் பதிலாக புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும். தெற்கு காகசஸ் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்யாவுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும்.
ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் சாராமல், பல்வேறு நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வது அரசியல் ரீதியாக முக்கியமானது என ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் ரஷ்யாவின் தொழில்நுட்பம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது என்பதால், அமெரிக்காவின் புதிய தொழில்நுட்பங்களை விடத் தங்களது திட்டமே சிறந்தது என ரஷ்யா வாதிடுகிறது.
- ரஷியாவில் இந்தியர் உள்பட 8 பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகினர்.
- இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாஸ்கோ:
ரஷியாவின் பேஷ்கோர்டோஸ்டான் குடியரசில் உள்ள அஃபா பகுதியில் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த மாணவர்கள் மீது திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். மேலும் தனது உடலையும் கத்தியால் கிழித்துக் கொண்டார்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசாரையும் அந்த நபர் தாக்கியுள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அவரை மீட்ட போலீசார், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






