search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stabbing"

    • ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் இல்லி னாய்ஸ் மாகாணம் ராக்போர்ட் பகுதியில் மர்மநபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். அவர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கத்தியால் குத்தினார்.

    இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டனர். அப்போது மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 8 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலியானவர்கள், 15 வயது சிறுமி, ஒரு பெண், இரண்டு ஆண்கள் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களது பெயர் விவரங்களை வெளியிடவில்லை.

    இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    • பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழிங்கநல்லூர்:

    செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவர் வீட்டு வாசலில் இருந்தபோது 5 பேர் கும்மல் திடீரென தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதே பகுதி 4-வது அவன்யூவை சேர்ந்தவர் விஜய். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பட்டாசு வெடித்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் விஜய்க்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மனைவி, ௨வது கணவருக்கு சரமாரி கத்தி குத்து விழுந்தது
    • கருத்து வேறுபாட்டினால் பிரிந்த முதல் கணவர் ஆத்திரத்தில் வெறிச்செயல்

    திருச்சி,

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது கனி (வயது 49), மீன் வியாபாரி. இவரது மனைவி சர்மிளா பானு ( 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் முகமது கனிக்கும் ஷர்மிளா பானுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் கடந்த 4 வருட காலமாக பிரிந்து வாழ்கின்றனர்.

    முகமது கனி செங்கிப்பட்டியில் வசித்து வருகிறார். ஷர்மிளா பானு திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ஜான் பாஷா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு வசித்துவருகிறார்.

    இந்த நிலையில் முகமது கனி தனது முதல் மனைவி ஷர்மிளா பானுவை பார்க்க போதையில் சுப்பிரமணியபுரம் வந்துள்ளார். அப்போது ஷர்மிளா பானு தனது 2+வது ஜான் பாஷாவுடன் இருந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற முகமது கனி அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியால் ஜான் பாஷா மற்றும் ஷர்மிளா பானுவையும் கத்தியால் குத்தினர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    முகமது கனிக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கேகே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்ட 3 பேரையும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மனைவி பிரிய காரணமாக இருந்த தம்பியை குத்திக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
    • உடன்பிறந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவில் வசித்து வருப வர் கணபதி. இவருக்கு கந்த சாமி என்ற சசிகுமார் (வயது 18), சரவணகுமார் (24), ராஜா (21) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

    இதில் மூத்த மகனான சரவணகுமார் திருமணம் முடித்து தந்தையின் வீட்டு அருகே தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இளைய மகன் வேலைக்கு செல்லா மல் ஊர் சுற்றி வந்ததோடு, தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள் ளார்.

    இந்நிலையில் நேற்று காலை கந்தசாமி வீட்டின் அறையில் கத்தியால் குத்தப் பட்டு குடல் சரிந்து இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து கந்தசாமியின் தந்தை கணபதி அருப்புக் கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில அளித்த புகா ரின் பேரில் போலீசார் கொலையுண்ட கந்தசாமி உடலை கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.

    குடும்ப பிரச்சினை கார ணமாக உடன்பிறந்த சகோத ரரே இந்த கொலையை செய்தாரா என்ற கோணத் தில் விசாரணை நடத்தப் பட்டது. அதில் சரணக்குமார் தான், சகோதரர் கந்தசா மியை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், தனது தம்பி கந்த சாமி அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறு செய்ததாக வும், அதனால் தன்னுடைய மனைவி பிரிந்து சென்றதா கவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த தான், நேற்று முன் தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கந்தசாமியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக வும் கூறியுள்ளார்.

    உடன்பிறந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • பாலக்கரையில் பா.ஜ.க. பிரமுகருக்கு கத்திக்குத்து விழுந்தது
    • பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை தேடி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி பாலக்கரை எடத் தெரு நெய்க்கார தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவரான இவர் அப்பகுதி 33-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார்.கண்ணன் அங்குள்ள ஒரு வீட்டின் தரைதளத்தில் வசித்து வருகிறார். முதல் தளத்தில் அருண்குமார் என்பவர் வசிக்கிறார். இந்த நிலையில் மேல்மாடிக்கு கண்ணனின் தாயார் சென்றபோது அருண்குமார் தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பினார்.இதை கண்ணன் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மற்றும் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து கண்ணனை கத்தியால் குத்தினர்.இதில் கண்ணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை யடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து கண்ணன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • ஜீவா மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
    • இதில் ஜீவாவின் வயிறு, மார்பு உள்ளிட்ட 11 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி பழைய காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா (17). இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (22) என்பவரும் நண்பர்கள். ஆனந்த் பி.இ. படித்து விட்டு மின் துறையில் தற்கா லிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஜீவாவை ஓரின சேர்க்கைக்கு ஆனந்த் அழைத்துள்ளார். இதற்கு ஜீவா மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இதற்கிடையே ஜீவா ஒரு பெண்ணுடன் பேசியதை ஆனந்த் ஸ்கிரின் ஷாட் எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவா, ஆனந்தின் செல்போனை பிடுங்கி உடைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே விரோதம் தீவிரமடைந்தது. நேற்று காலை ஜீவா பள்ளிக்கு செல்ல மேல்புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள பெலாந்துறை வாய்க்காலுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஆனந்த, ஜீவாவிடம் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

    இதில் ஜீவாவின் வயிறு, மார்பு உள்ளிட்ட 11 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவர் அலறினார் . இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனை பார்த்து ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த ஜீவா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சேத்தியா தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மதுபாலன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட ஜீவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவரை கொன்று விட்டு தலைமறைவான ஆனந்தை பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • கட்டண கழிப்பிடம் செல்வதில் தகராறு காரணமாக பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது
    • கரூர் டவுன் போலீசார் மற்றொரு டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், 

    கரூர், வடக்கு பிரதட்ணம் சாலையை சேர்ந்தவர் வெற்றி முரசு (வயது 26), மினி பஸ் டிரைவர். இவர், கரூர் பஸ் ஸ்டாண்டில், கட்டண கழிப்பிடத்துக்கு சென்றுள்ளார். அப்போது, கழிப்பிடத்தின் ஊழியர், வெற்றி முரசுவிடம் கட்டண தொகையை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கரூர் நெரூரை சேர்ந்த மற்றொரு மினி பஸ் டிரைவர் கபில் (30), கழிப்பிடத்துக்கு சென்றுள்ளார். பிறகு, கழிப்பிட ஊழியருக்கு ஆதரவாக கபில் பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெற்றி முரசு, கபிலை கத்தியால் தலை, கண்களில் குத்தினார். அதில், காயமடைந்த கபில் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வெற்றி முரசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகி-டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தர்மலிங்கம் (வயது52). இவரது மனைவி முத்து லட்சுமி. யூனியன் துணைத்தலைவராக உள்ளார்.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நாளை விருதுநகரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தர்மலிங்கம் செய்து வந்தார். அதன்படி நேற்று இரவு நோட்டீஸ் வழங்குவதற்காக சென்னல்குடி, கோட்டூர் பகுதிகளுக்கு சென்றார்.

    கோட்டூரில் உள்ள அதிமுக மாணவரணி நிர்வாகி அலுவலகத்தில் தர்மலிங்கம் இருந்த போது யூனியன் கவுன்சிலர் சென்னல்குடி மாரியப்ப னின் மகன் செந்தூர்பாண்டி அங்கு வந்தார். நிர்வாகி களை நியமனம் செய்வது தொடர்பாக தர்ம லிங்கத்துக்கும், செந்தூர் பாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் தர்மலிங்கத்திற்கு கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை காரை ஓட்ட முயன்ற கார் டிரைவர் கடம்பன் குளத்தை சேர்ந்த மகேஷ்கண்ணன் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. 2 பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்கா ரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தொழிலாளி
    • குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்கள் முருகானந்தம் (வயது 40), சத்தியமூர்த்தி (25). இதில், முருகானந்தம் சென்னையிலும், சத்தியமூர்த்தி துங்கபுரத்திலும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் முருகானந்தம் சென்னையில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து உள்ளார். கடந்த 10-ந் தேதி அண்ணன்-தம்பி இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி தனது அண்ணன் முருகானந்தத்தை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    • பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரும் செல்வராசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
    • செல்வராஜை தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேல வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்னதாகவே முன் விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று செல்வராசும், அவரது மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது செல்வராஜ் வீட்டிற்கு வந்த அந்த தரப்பை சேர்ந்த கும்பலான பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரும் செல்வராசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பூமாலை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜ் வயிற்றில் குத்தியதாக தெரிகிறது. மேலும் அந்த கும்பலில் ஒருவர் இரும்பு பைபால் செல்வராஜை தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் திட்டக்குடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திட்ட க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோத தகராறில் செல்வராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாக உள்ள பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வாலிபர்களுக்கு கத்திக்குத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    பழங்காநத்தம் உழவர் சந்தை பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் சிவகுரு 19. ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவுக்கும், ஆதிமூலத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் மாடக்குளம் பெரியார் நகர் 2-வது தெரு அருகே சிவகுரு சென்று கொண்டி ருந்தார். அப்போது ராஜா உள்பட 5 பேர் அவரை வழிமறித்தனர். அவர்கள் சிவகுருவை அவதூறாக பேசி கத்தியால் குத்தி யுள்ளனர். இதுகுறித்து சிவகுரு எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்நாடு கஞ்சிமணி மகன் வேல்முருகன் (வயது21) என்பவரை கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள மதன், கருணாமூர்த்தி, கருப்பு, ராஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் புலிபாண்டியன் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் பால முருகன் (27). இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள இடியாப்பம் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடை முன்பாக நின்று கொண்டிருந்தபோது பொன்மேனி முதல் தெருவை சேர்ந்த பாலு மகன் ரமேஷ் (21) என்ற வாலிபர் அவரிடம் கத்திய காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் பாலமுருகன் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், பாலமுருகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

    இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

    • ஒருவர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை பேகோபுரத் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் பிரேம்குமார் (29) தனது நண்பர்களுடன் திருவண்ணாமலை தேரடி வீதி அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து மது அருந்தி உள்ளார்.

    பின்னர் பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர்க ளுடன் தேரடி வீதியில் நடந்து சென்ற போது ஏற்பட்ட சண்டையில் வெங்கடேசன் நடைபாதை பழக்கடையில் பழம் அறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து பிரேம்குமார் கழுத்தில் குத்தியுள்ளார்.

    இதில் பிரேம்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரேம்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பிரேம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு சென்னை ராஜூவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருவண்ணா மலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கத்தியால் குத்திய புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனை (35) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை நகரின் கூட்ட நெரிசல் மிகுந்த இடத்தில் நடைபெற்ற கத்தீகுந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×