என் மலர்

    நீங்கள் தேடியது "tiruchendur"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.
    • படத்தொகுப்பை 10 எம்.பி. அளவுக்கு மிகாமல் வருகிற 3-ந்தேதிக்கு (சனிக்கிழமை) முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி கணினி பொறியியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான புகைப்பட தொகுப்பு போட்டி இணையவழியில் நடக்கிறது.

    பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.

    இப்போட்டியில் பங்கு பெற மாணவர்கள் https://forms.gle/TAdLy6jBvHHTQtEZ7 என்ற இணைப்பின் மூலம் தங்களது படத்தொகுப்பை 10 எம்.பி. அளவுக்கு மிகாமல் வருகிற 3-ந்தேதிக்கு (சனிக்கிழமை) முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் போட்டிகள் பற்றிய விவரம் அறிய jensi@drsacoe.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 04639-220740 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், கணினி துறை பேராசிரியர் ஜென்சி மற்றும் பேராசிரியர்கள், துறை மாணவர்கள் செய்துள்ளனர்.

    இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் ரூ. 4 கோடி மதிப்பில் 148 கடைகள் கட்டப்பட்டு வருகிறது.
    • தொடர்ந்து ஆவுடையார்குளம் உபரிநீர் வடிகால் ஓடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது. அந்தப் பணிகளை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அமைச்சர் ஆய்வு

    திருச்செந்தூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் ரூ. 4 கோடி மதிப்பில் 148 கடைகள் கட்டப்பட்டு வருகிறது. அதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆவுடை யார்குளம் உபரிநீர் வடிகால் ஓடையை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், ஆர்.டி.ஓ. புகாரி, தி.மு.க. மாநில வர்த்தகஅணி இணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், கமிஷனர் வேலவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20,22-ந்தேதிகளில் நடந்தது.
    • விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் சேர www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20 மற்றும் 22-ந்தேதிகளில் நடந்தது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இதில் இடம் கிடைக்காத மாணவர்கள் அனைவரும் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியில், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன. இளங்கலை பாடப்பிரிவுகளான ஆங்கிலம், பொருளியல், பி.காம். போன்றவற்றிலும் சில இடங்கள் உள்ளன. எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மறுநாளுக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பித்து, வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் மாணவர்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பி.பி.இ.எஸ். இளநிலை பட்டப்படிப்பு படிக்க பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • பள்ளிகளுக்கு இடையேயான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    மாணவர் சேர்க்கை

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு (பி.பி.இ.எஸ்.) மூன்று வருட படிப்பு, இளநிலை உடற்கல்வியியல் (பி.பி.எட்) இரண்டு வருட படிப்பு, முதுநிலை உடற்கல்வியியல் (எம்.பி.எட்) இரண்டு வருட படிப்புகான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

    பி.பி.இ.எஸ். இளநிலை பட்டப்படிப்பு படிக்க பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தின போட்டி அல்லது பாரதியார் தின போட்டிகள் ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

    இளநிலை பட்டப்படிப்பு

    பி.பி.எட். படிக்க இளநிலை பட்டப்படிப்புடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். மாணவ-மாணவிகள் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது பல்கலைக்கழகம் சார்பில் ஏதேனும் ஒரு விளையாட்டில் பங்கு பெற்றிருந்தால் (பார்ம் III) அந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். மேலும், இக்கல்லூரியில் பி.பி.இ.எஸ். பயின்றோருக்கும் மற்றும் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தால் நடத்தப்படும் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு பயின்றோருக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

    முதுநிலை பட்டப்படிப்பு

    எம்.பி.எட். முதுநிலை உடற்கல்வியியல் படிக்க இளநிலை உடற்கல்வியியல் பயின்று இருக்க வேண்டும். மேலும் அதில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் வயது 35-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பி.பி.எட். படித்தவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். மேலும் பல்கலைக்கழக தேர்வில் இளநிலை உடற்கல்வியியலில் தங்கப்பதக்கம் (முதல் தரவரிசை) பெற்றவர்களுக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

    சிறப்பு அம்சங்கள்

    இந்த கல்லூரி சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. தேசிய தரமதிப்பீட்டு குழு மறுமதிப்பீட்டில் 'A' சான்று பெற்று உள்ளது. தரமான ஆசிரியர்கள், விளையாட்டு மைதானங்கள், தங்கும் விடுதிகள் இக்கல்லூரியின் சிறப்பு அம்சங்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக அளவில் மாணவ-மாணவிகள் பதக்கங்கள் பெற்று வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் வேலைவாய்ப்பை பெற்றுத்தருகிறது.

    விண்ணப்பிக்கும் முறை

    கல்லூரி பற்றிய அனைத்து விவரங்களும் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் கல்லூரியின் www.drsacpe.com என்ற இணையதளத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியினை தேர்வு செய்து மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கல்வி சான்றிதழ், விளையாட்டு சான்றிதழ் மற்றும் மருத்துவ சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கையில் குறைவான இடங்களே இருப்பதால் விரைவில் விண்ணப்பித்து கல்லூரியில் சேரவும்.

    இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-245110, 220590 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் பொ.சாம்ராஜ் தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேச்சிமுத்து நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு பேச்சிமுத்து சென்று வீட்டின் கதவை திறக்கும்படி கூறியுள்ளார்.
    • அதற்கு அந்த பெண் கதவை திறக்காததால், விரக்தி அடைந்த பேச்சிமுத்து வீட்டின் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 25). இவர் திருச்செந்தூர் கோவிலில் அன்னதான திட்டத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு பேச்சிமுத்து சென்று வீட்டின் கதவை திறக்கும் படி கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் கதவை திறக்காததால், விரக்தி அடைந்த பேச்சிமுத்து வீட்டின் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து கோவில் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இக்கல்லூரியானது ஐ.எஸ்.ஓ. 9001:2015 டி.யு.வி.-ன் சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.
    • மாணவ-மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    பாடப்பிரிவுகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை (சிவில்), எந்திரவியல் துறை (மெக்கானிக்கல்), கணினி அறிவியல் துறை (சி.எஸ்.இ), மின் மற்றும் மின்னணு துறை (இ.இ.இ), தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (இ.சி.இ) என 6 துறைகளில் இளநிலை பட்டப்படிப்புகளும், முதுநிலை பட்ட மேற்படிப்பில் (எம்.இ.) கணினி அறிவியல் துறை, டிரைவ்ஸ் அமைப்புசார் பொறியியல் (வி.எல்.எஸ்.ஐ.) மற்றும் மேலா ண்மை துறையில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    இக்கல்லூரியானது ஐ.எஸ்.ஓ. 9001:2015 டி.யு.வி.-ன் சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும். மேலும் டி.சி.எஸ். ஐ.இ.(ஐ) அங்கீகாரம் பெற்றது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறையானது இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்துறைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

    கருத்தரங்குகள்

    கட்டிடவியல் துறையின் ஸ்கேல் அமைப்பு, எந்திரவியல் துறையின் மாஸ் சங்கம், கணினி அறிவியல் துறையின் ஸ்கேன் சங்கம், தகவல் தொழில்நுட்ப துறையின் பயாஸ் சங்கம், மின் மற்றும் மின்னணு துறையின் ஈஸ் சங்கம், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் ஸ்பேஸ் சங்கம், மேலா ண்மை துறையின் ஷேர் சங்கம் சார்பில், மாணவ-மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

    இக்கல்லூரி மாணவர்கள் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து பல பரிசுகளை வென்றுள்ளனர். தொழில்நுட்ப சங்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக,

    ஒவ்வொரு துறையும் தொழில்சார்ந்த படிப்புகள், தொழில்நுட்ப விரிவுரைகள், திட்டங்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு 'கேட்' பயிற்சி ஆகியவற்றை ஏற்பாடு செய்கின்றது.

    மாணவர் சேர்க்கை

    கல்லூரியில் மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் நவீன வசதிகளுடன் உள்ளது.

    மேலும் கல்லூரி மற்றும் விடுதி வளாகம் முழுவதும் வை-பை கணினி இணையதள சேவை வசதி உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, சாயர்புரம், சாத்தான்குளம், திசையன்விளை, நாசரேத், உடன்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் கல்லூரிக்கு மாணவர்களை அழைத்து வரும் வகையில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு www.drsacoe.org என்ற கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் படிப்புகள் குறித்த விவரங்களை பெறுவதற்கு drsacoe@aei.edu.in, princyengg@aei.edu.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், கல்லூரி முதல்வரை நேரிலோ அல்லது 04639- 220700, 220702, 220715, 9443246150 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் நாராயண ராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி கல்லூரி அறிக்கையை வாசித்தார். முன்னாள் மாணவரும், கல்லூரி மின்னணு தகவல் தொடர்பு துறை பேராசிரியரும், பயின்றோர் கழக செயலாளருமான ஜோஸ்வா பாபு வரவேற்று பேசினார். வேலைவாய்ப்பு அலுவலர் பொன்னுகிருஷ்ணன் வேலைவாய்ப்பு அறிக்கையை வாசித்தார்.

    முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கல்லூரியில் படித்த அனுபவங்களையும், தற்போது பணியாற்றும் பணிகள் குறித்தும் உரையாற்றினர். முன்னாள் மாணவர்களான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மூத்த துணை போக்குவரத்து மேலாளர் ரமேஷ், மூத்த தொழில்நுட்ப கட்டிட கலைஞர் ஸ்ரீராம் பாலாஜி, சென்னை இன்போசிஸ் நிறுவன அதிகாரி முகமது முனாவர் உசேன், சோகோ நிறுவன அதிகாரி முகமது இப்ராஹிம் அன்சாரி, அமேசான் நிறுவன அதிகாரி பிரபாகரன், டேட்டா என்ஜினீயர் ராஜாராம், ஆராய்ச்சி மாணவி நூர்பஸ்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியரும், பயின்றோர் கழக பொருளாளருமான சித்ராதேவி கணக்கு அறிக்கையை வாசித்தார். கணினி துறை பேராசிரியரும், பயின்றோர் கழக துணை செயலாளருமான ஜென்சி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், கல்லூரி இணையதளம் www.aditanarcollege.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
    • விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் கலந்தாய்வுக்கு நேரில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான தகவல் மையம் திறப்புவிழா நடந்தது. கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் தகவல் மையத்ைத திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

    தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் வாசுகி, பேராசிரியர்கள் பாலு, சரண்யா, மோதிலால், தினேஷ், சிங்காரவேலு, ரூபன், செல்வன், பிருந்தா, ஜெயந்தி, திலீபன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவும் பொருட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், கல்லூரி இணையதளம் www.aditanarcollege.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கலைப்பிரிவில் பி.ஏ. ஆங்கிலம், பொருளியல், பி.பி.ஏ. வணிக நிர்வாகவியல், பி.காம் வணிகவியல், பி.காம் வணிகவியல்(சுயநிதி பிரிவு) சேர விரும்பும் மாணவர்களுக்கு மே.20-ந் தேதி காலை 9.45 மணிக்கும், அறிவியல் பாடப்பிரிவில் (பி.எஸ்.சி. கணிதவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி அறிவியல்(சுயநிதி பிரிவு) சேர விரும்பும் மாணவர்களுக்கு மே.22-ந் தேதி காலை 9.45 மணிக்கும் கல்லூரி உள்அரங்கில் கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் கலந்தாய்வுக்கு நேரில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னணு தொடர்பு துறை முதுநிலை இணை பேராசிரியர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • கருத்தரங்கில் 15 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னணு தொடர்பு துறை மற்றும் உள்தர உறுதிப்பிரிவு சார்பில், ''மின்னணு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் சமீபத்திய போக்குகள்'' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். பேராசிரியர் வளனரசு வரவேற்று பேசினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து மின்னணு தொடர்பு துறை தலைவர் பெனோ எடுத்துரைத்தார்.

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னணு தொடர்பு துறை முதுநிலை இணை பேராசிரியர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ''மாணவர்கள் தற்போதைய தொழில்நுட்பங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்'' என்று கூறினார். தொடர்ந்து அவர், மாநாட்டின் தொகுப்பு நூலை வௌியிட, அதனை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி பெற்று கொண்டார்.

    கருத்தரங்கில் 15 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் மணி, பேராசிரியர் வளனரசு ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு ஆராய்ச்சி கட்டுரைகளை ஆராய்ந்து வழிகாட்டினர். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை தொடங்கியது.
    • இதற்கான விண்ணப்பம் கல்லூரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை தொடங்கியது.

    கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களால் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 36 ஆண்டுகளாக ஒழுக்கம் நிறைந்த தரமான கல்வியை வழங்கி வருகிறது. இக்கல்லூரி பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு 2(f) பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    அனுபவம் மிக்க மற்றும் தகுதி வாய்ந்த பேராசிரியைகளால் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரி மாணவிகள் இதுவரை பல்கலைக்கழக அளவில் 1386 ரேங்க் பெற்று சாதனை படைத்து உள்ளனர். குறிப்பாக 89 மாணவிகள் முதல் ரேங்க் பெற்று பல்கலைக்கழகம் வழங்கும் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளனர்.

    மேலும், கல்லூரியில் சிறந்த நூலக வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தடையில்லா மின்சார வசதி, பாதுகாப்பான விடுதி வசதி மற்றும் பஸ் வசதிகளையும் கொண்டு பல்கலைக்கழக அளவில் சிறந்த மகளிர் கல்லூரியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள்

    இந்த கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளாக பி.ஏ. (தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம்), இளம் அறிவியல் பாடப்பிரிவுகளாக பி.எஸ்சி. (கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல்) பி.சி.ஏ. (கணினி பயன்பாட்டியல்), இளம் வணிகவியல் பி.காம் (2 பிரிவு), பி.பி.ஏ. என 11 இளநிலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. முதுநிலை பாடப்பிரிவுகளாக எம்.ஏ. (தமிழ், ஆங்கிலம்), எம்.எஸ்சி. (கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்), எம்.காம் என 6 பிரிவுகளும் ஆராய்ச்சி படிப்பாக பி.எச்டி. கணிதமும் உள்ளன.

    மாணவிகள் சேர்க்கை

    இந்த கல்லூரியின் 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவிகள் சேர்க்கை நேற்று முன்தினம் முதல் தொடங்கி உள்ளது. இதற்கான விண்ணப்பம் கல்லூரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. www.gacw.in என்ற கல்லூரி இணையதளத்திற்குள் சென்று APPLY NOW வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் மாணவிகளின் புகைப்படம், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை ஸ்கேன் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். கல்லூரி இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.

    தொலைபேசி எண்கள்

    விண்ணப்பம் தொடர்பாக மேலும் விவரங்களை பெற 04639- 242184, 220525, 220529, 220533 ஆகிய கல்லூரி தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தெரிவித்து உள்ளார்.