search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiruchendur"

    • கடந்த 3-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் அஜித், மேலாளர் ராஜ்மோகன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், மணியம் செந்தில்குமார், பணியாளர்கள் ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், மாரிமுத்து, கார்த்திகேயன், கிட்டுமணி, சரவணபவன், நெல்லையப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

    • கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரா தனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

     ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நள்ளிரவில் இருந்தே நீண்ட வரிசையில் நின்றனர். வரிசை கோவில் பிரகாரத்தையும் தாண்டி நீண்டு கொண்டே சென்றது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக இலவச தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டணம், மூத்த குடிமக்கள் தரிசனம் என தனித்தனியே வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

     சமீபத்தில் தென் மாவட்டத்தில் பெய்த கனமழையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. கோவில் வளாகத்தில் சண்முக விலாசமண்டபம், கிரிப்பிரகாரம், நாழிக்கிணறு, கடற்கரை மற்றும் மொட்டை போடும் இடம், காதுகுத்தும் இடம், துலாபாரம் செலுத்தும் இடம் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தனியார் விடுதிகள். சன்னதி தெருவில் உள்ள சமுதாய மடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

     பாதயாத்திரையாக, குழுக்களாக வருகை தந்த பக்தர்கள் மேளதாளத்துடன் ஆடி பாடிவந்தனர். காவடி, பால்குடம், எடுத்து வந்தும் சில பக்தர்கள் ஒரு அடி முதல் 21 அடி வரை அலகு (வேல்) குத்தி வந்து நேர்ச்சை செய்தனர். சிறு குழந்தைகள் முருகன் வேடம் அணிந்து வந்தும் நேர்ச்சை செய்தனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம்.
    • பக்தர்கள் முருகன் பக்தி பாடல்கள் பாடி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடக்கிறது.

    இதை முன்னிட்டு அதி காலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப தை திருநாளை கொண்டாடும் வகையில் அதற்கு முன்பாக கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், காவடி எடுத்து வந்தும் அலங்கார செய்த வாகனங்கள் முன் செல்ல பக்தர்கள் முருகன் பக்தி பாடல்கள் பாடி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.

    தற்போது பருவ மழை பெய்து ஒய்ந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஏராளமான பக்தர்கள் வந்தவாறு உள்ளனர்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வ ரூபம், 4 மணிக்கு உதயமார் த்தாண்ட அபிஷேகம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு மேல் உச்சிக்கால அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்கத்தேர் கிரிவீதி உலா, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8-8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    முக்கிய விழா நாட்களான வருகிற 27-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோவில் அதிகலை 2 மணிக்கும், ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு மற்றும் ஜனவரி 15-ந் தேதி (திங்கள்கிழமை) தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும்நடைபெறுகிறது.

    • போதிய மழை இல்லாததால் உடன்குடி வட்டாரங்களில் குளங்கள் வரண்டு காணப்படுகின்றன.
    • நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும் போதிய மழை இல்லாததால் உடன்குடி வட்டாரங்களில் குளங்கள் வரண்டு காணப்படுகின்றன.கிணறுகளில் வெகுவாக தண்ணீர் குறைந்து வருகிறது. மேலும் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது

    எனவே மாநிலம் முழுவதும் நல்ல பருவ மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலையில் சிறப்பு யாகம் செம்மறிக்குளம் பஞ்சாயத்து தலைவர் அகஷ்டா மரிய தங்கம் தலைமையில், காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளைகள் செயலாளர் ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவனடியார் சிவமுருகன், காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ்ணன், தொழில் அதிபர் நோவா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
    • விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் விடுமுறை நாட்க ளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே கோவிலில் குவிந்தனர்.

    கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    ரூ.100 கட்டணம் தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.

    • திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் வாக்காளர் உரிமை, கடமை, நேர்மை குறித்து உரையாற்றினார்.
    • 18 வயதான மாணவ-மாணவிகள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்காளர் உரிமை, கடமை, நேர்மை குறித்து உரையாற்றினார். வாக்களிப்பதின் அவசியம் குறித்து தாசில்தார் வாமனன் எடுத்துரைத்தார். சிறப்பு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் புதிய வாக்காளர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.

    18 வயதான மாணவ-மாணவிகள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட வருவாய்த்துறையினர் மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். மாணவி உலகேஸ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பப்பி வின்சென்ட் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • பயிற்சி வகுப்புகள் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, மொத்தம் 45 நாட்கள் இணையவழியில் நடத்தப்பட உள்ளது.
    • அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்லைன் வழியாக நடைபெறும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில், பாரத ஸ்டேட் வங்கி தேர்வுக்கு இணையவழி பயிற்சி வகுப்பு வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.

    பாரத ஸ்டேட் வங்கி தேர்வு

    ஒவ்வொரு ஆண்டும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) தேர்வினை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் சுமார் 8,773 காலிப்பணியிடங்களை நிரப்ப நேரடி எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கு வருகிற 7-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) https://sbi.co.in/web/careers என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

    ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 28 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓ.பி.சி.) 31 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வின் வினாக்கள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் இடம்பெறும்.

    இணையவழி பயிற்சி வகுப்பு

    பாரத ஸ்டேட் வங்கி நடத்தும் கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) தேர்வுக்கான எழுத்து தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள், திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, மொத்தம் 45 நாட்கள் இணையவழியில் நடத்தப்பட உள்ளது. அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்லைன் வழியாக நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் சேர பயிற்சி கட்டணம் ரூ.7,500 ஆகும். பயிற்சிக்கான குறிப்பேடுகள் சாப்ட் காப்பியாக (soft copy) வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) ஆகும்.

    விண்ணப்பிக்கும் முறை

    பயிற்சி வகுப்பில் சேர விரும்புகிறவர்கள் ரூ.7,500-க்கான வங்கி வரைவோலையை (கனரா வங்கி/ இந்தியன் ஓவர்சீஸ் வங்கி/ பாரத ஸ்டேட் வங்கி/ இந்தியன் வங்கி) 'சிவந்தி அகாடமி, திருச்செந்தூர்' என்ற பெயரில் எடுத்து 'சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216 தூத்துக்குடி மாவட்டம்' என்ற முகவரிக்கு தங்களின் புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களுடன் அனுப்ப வேண்டும்.

    அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (http://sivanthiacademy.org) மூலமாகவும், இப்பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம். அதன் பின்னர் பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ரூ.7,500-க்கான ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு (sa@aei.edu.in) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய தொலைபேசி எண்க ளில் தொடர்பு கொள்ளு மாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜீலா தெரிவித்துள்ளார்.

    • கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சக்திமுருகன் தரமற்ற உணவுப்பண்டங்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும்? என்பதை மாணவ, மாணவியரிடம் எடுத்துரைத்து செய்முறை விளக்கம் கொடுத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் அக மதீப்பீட்டின் (ஐகியுஏசி) சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். உதவிபேராசிரியர் கணேசன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சக்திமுருகன் கலந்து கொண்டு தரமற்ற உணவுப் பண்டங்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும்? என்பதை மாணவ, மாணவியரிடம் எடுத்துரைத்து செய்முறை விளக்கம் கொடுத்தார். நிகழ்ச்சிகளை உதவிபேராசிரியர் செல்வகுமார் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி அக மதீப்பீட்டு ஒருங்கிணைப்பாளர் இணை பேராசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார்.

    • சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்.
    • சுவாமி-அம்பாளுக்கு பட்டாடைகள் மற்றும் மாலைகள் மாற்றப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. திருவிழாவின் 7-ம் நாளான நேற்று காலையில் தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு மாலையில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல் நடைபெற்று இரவு 11 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ராஜகோபுரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு வந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க 12 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெரு மானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

    கந்தசஷ்டி திருவிழா 8-ம்நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வருதல் நடக்கிறது.

    திருவிழாவில் 21, 22, 23-ந் தேதி வரை 3 நாட்களும் நாள்தோறும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.

    12-ம் திருவிழாவான 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். *** திருச்செந்தூர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.

    • சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இன்று முதல் விரதம் மேற்கொள்வார்கள்.
    • திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    திருச்செந்தூர்:

    கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இன்று முதல் விரதம் மேற்கொள்வார்கள்.

    அந்த வகையில் திருச்செந்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இன்று காலையில் திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் வைத்து திருச்செந்தூர் அய்யப்பா சேவா சங்க குருசாமி சந்தானம் தலைமையில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதே போல் அகில பாரத அய்யப்பா சேவா சங்க திருச்செந்தூர் ஒருங்கிணைப்பாளர் அஜித் குமார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் ரெயிலடி ஆனந்த விநாயகர் கோவிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான 20-வது ஆண்டு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடந்தது.
    • உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சிவந்தி கோப்பையை வென்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயின்றோர் கழகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான 20-வது ஆண்டு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடந்தது.

    கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை பேராசிரியரும், பயின்றோர் கழக பொருளாளருமான சித்ரா தேவி வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார்.

    பெங்களூரு ஈக்கோ வேர்ல்ட் டெக் சிஸ்டம்ஸ் குளோபல் சர்வீஸ் நிறுவன மூத்த மேலாளர் குமரன் ராமஜெயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், கற்றல் ஒரு தொடர்ச்சியான செயல்முறை, மாணவர்கள் தங்களது திறன்கள் மற்றும் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

    இதில் 25 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முதலில் பொது அறிவு, நாட்டு நடப்பு, தொழில்நுட்பம், அடிப்படை அறிவியல் ஆகியவற்றில் இருந்து மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட 6 அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.

    சர்வதேச மனிதவள மற்றும் வினாடி-வினா போட்டி நிபுணர் ஜஸ்டின் ஆண்டனி இறுதிச்சுற்று வினாடி-வினா போட்டியை நடத்தினார். இதில் உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகமது பவாஸ், பொன் காயத்ரி முதலிடம் பிடித்து சிவந்தி கோப்பையை வென்றனர்.

    கன்னியாகுமரி எஸ்.ஆர்.கே.பி.வி. மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் அஸ்வந்த், அகிேலஷ் கோவர்தன் 2-வது இடமும், சாகுபுரம் கமலாவதி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீராம், அப்துல் ஹரீத் 3-வது இடமும் பிடித்தனர்.

    வெற்றி பெற்ற மாண வர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதிச்சுற்றில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த உடன்குடி சல்மா பள்ளி மாணவர்களுக்கு சிவந்தி சுழல் கோப்பையும், ரொக்கப்பரிசும் கல்லூரி நாள் விழாவில் வழங்கப்படும்.

    ×