என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வியாபாரிகள்"
- தினமும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
- கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழியில் தீபாவளி பண்டிகையொட்டி 13-வது வார்டுக்கு உட்பட்ட தேர் வடக்குவீதி, மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக சாலை யோரக டைகள் அமைக்க ப்படுவது வழக்கம்.அதன்படி நிகழாண்டு சாலையோர கடைகள் அமைக்கப்ப ட்டுவருகிறது. இதனிடையே சாலையோர கடை வியா பாரிகளுடனான ஆலோ சனைக்கூட்டம் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் பாபு.கே.விஜயன் முன்னிலை வகித்தனர்.இதில் தகர கொட்டகை அமைத்து தற்காலிக கடை அமைத்துக்கொள்வது, நாள்தோறும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் பெரிய நெகிழி பையில் வைத்து கடை உரிமையாளர்களே தூய்மைபணியாளர்களிடம் வழங்கிடுவது, கடைக்கு நகராட்சிக்கு மட்டும் உரிய தொகையை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. இந்த கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.
- காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
- கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிப்பு செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போரூர்:
கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகள், மளிகை, காய்கறி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானவர்கள் இங்கிருந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாகவே பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் ஒரிரு நாட்கள் பெய்த லேசான மழைக்கே கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனால் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள், மூட்டை தூக்கி செல்லும் கூலி தொழிலாளர்கள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் என அனைவரும் மார்க்கெட் வளாகத்தில் நடந்து செல்ல கூட முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மார்க்கெட் வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே தண்ணீர் தேங்கி கிடப்பதற்கு காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் மழை காலம் தொடங்கி உள்ளதால் மார்க்கெட் வளாகத்தில் தேங்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றிடவும், தொற்று நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் சுகாதாரமான குடிதண்ணீர் கிடைத்திடவும், கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிப்பு செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகளுக்கு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.
- கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பிரம்ம தேசம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்வது வழக்கம். பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் காலை மாலையில் சாராயம் விற்பனை அேமாகமாக நடைபெறுகிறது. குறைந்த விலைக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படு வதால் விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது. இந்த சாரா யத்தை விற்பனை செய்த வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரம்மதேசம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை போலீசார் தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்க ளும் கோரிக்கை விடுத்துள்ள னர்.
- பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும்.
- மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன.
கடலூர்:
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நாளை மற்றும் நாளை மறுநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேந்தி பூ தற்போது 80 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 240 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி மற்றும் குண்டு மல்லி 800 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ தற்போது 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்தனர். 2 நாட்கள் தொடர்ந்து விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.
- பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- வியாபாரிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
மேலும், இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை விற்பனை மற்றும் பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவ டிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதனையடுத்து, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் நேற்று திலாசுப்பேட்டை பகுதியில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு நடத்தினர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் இருப்பதை கண்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். மேல் நடவடிக்கைக்காக அவற்றை வாகனங்களில் ஏற்றினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தனர்.
இதையறிந்த திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள் அங்கு ஒன்று திரண்டு வந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சிறை பிடித்தனர். பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'வியாபாரிகளை ஒருங் கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள். அதன் பிறகு வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறி முதல் செய்யுங்கள்'என ஆவேசமாக கூறினர். அதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகளிடம் திரும்ப கொடுத்து விட்டு சென்றனர்.
- சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
- போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.
அவிநாசி
அவிநாசி நகரப் பகுதியில் வைக்கப்படும் சாலையோர கடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துவந்தனா்.
இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற பேரூராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், சாலையோர கடைகள் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டன.
இதனைக் கண்டித்தும், சாலையோர கடைகளை இடமாற்றம் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்துக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா்.சங்க பொருளாளா் தனசேகரன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி, மாா்க்கெட் அசோசியேஷன் தலைவா் காா்த்திகேயன், மெடிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவா் ஈசுவரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
- அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம்.
- வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்:
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகம் பகுதியில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்று வந்தனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படக்கூடிய துறைமுகத்தில் பொதுமக்கள் மிக மிக குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்று சென்றனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
இதன் காரணமாக மீன் வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் மிகுந்த தொய்வுடன் காணப்பட்டனர். மேலும் வரத்து குறைவால் மீன்களின் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. பொதுவாக ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் பன்னி சாத்தான் மீன் கிலோ 250 ரூபாய்க்கும், ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படும் கனவா வகை மீன் ரூ.150-க்கும், 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 19 பேர்களுக்கு 15 ஆயிரம் மானிய விலையில் தள்ளு வண்டிகள்
- தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் குளித்தலை மற்றும் தோகைமலை பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் 19 பேர்களுக்கு 15 ஆயிரம் மானிய விலையில் தள்ளு வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குளித்தலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் லலிதா தலைமை வகித்தார், குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காய்கறி கனி 19 தள்ளு வண்டிகள் மற்றும் மாடித் தோட்டம் அமைப்பதற்கான விதைகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார், நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் அன்பழகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சச்சின்ராம், தகவல் தொழில்நுட்பம் அமுல்ராஜ், ஒன்றிய கழக நிர்வாகி பரளி குமார், ஜோதிவேல், கிளை செயலாளர் அருணாச்சலம், ராஜேந்திரம் கோபால், மேல தண்ணீர்பள்ளி கிளை செயலாளர் ஸ்டாலின் விக்னேஸ்வரன், மாணவரணி லோகேஸ்வரன், ஒன்றிய கழக நிர்வாகி ஜெகநாதன், பொறியாளர் அணி ஹரிஹரன், மேட்டுமருதூர் ஆறுபாஸ்கர், கழக நிர்வாகிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை நிர்வாகிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சராசரியாக 1329.4 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.
- வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7059.
பாபநாசம்:
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1021 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 1329.4 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 09 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர் பருத்தியின் மதிப்பு சராசரியாக 0.88 கோடி ரூபாய் ஆகும்.
இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7059, குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,409,
சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,279/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
- இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன.
- கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வேலை மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக கேரள மக்கள் தினமும் உடுமலைக்கு வருகின்றனர்.
தற்போது கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. இதனால் பண்டிகைக்காக தேவையான பொருட்களை வாங்குவதற்காக கேரள மக்கள் உடுமலையில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக உடுமலை உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கடை வீதிகளில் கேரள மக்கள்-வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.
கேரள மாநிலம் மறையூர், காந்தலூர், மூணாறு செல்லும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக 9/6 செக்போஸ்ட் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்காக தனியார் ஜீப்புகளில் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன. அங்குள்ள ஓட்ட ல்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை விருந்துக்காக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வெல்லம், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பனை செய்வதற்காக மாநில எல்லையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகள் உடுமலையில் குவிந்து, மூட்டை மூட்டையாக பொருட்களை வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகை கொண்டாட கேரள மாநிலம் செல்வதற்காக குவிந்த பொது மக்களால் உடுமலை பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.