என் மலர்

    நீங்கள் தேடியது "sales"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எழுமாத்தூர், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.95 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை நடைபெற்றது
    • நிலக்கடலைக்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.65.45-க்கு விற்பனையானது

    கொடுமுடி,

    எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் ஆயிரத்து 484 மூட்டைகள் கொண்ட 71 ஆயிரத்து 669 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ79.90-க்கும், அதிகபட்ச விலையாக ரூ81.81-க்கும், சராசரி விலையாக ரூ.81.70 என்ற விலைகளிலும், 2-ம் தர பரு ப்பு குறைந்தபட்ச விலையாக ரூ63.35-க்கும், அதிகபட்ச விலையாக ரூ75.39-க்கும், சராசரி விலையாக ரூ72.60 என்ற விலைகளில் மொத்தம் ரூ.55 இலட்சத்து 47 ஆயிரத்து 858-க்கு விற்பனையானது.

    இதேபோல கொடுமுடி ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு, நிலக்கடைலக்காய் விற்ப னைக்கான ஏலம் நடந்தது. இதில் 13 ஆயிரத்து 695 எண்ணிக்கையிலான 4 ஆயிரத்து 671 கிலோ எடை யுள்ள தேங்காய்கள் கி லோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.17.90- க்கும், அதிகபட்ச விலையாக ரூ.23.60-க்கும், சராசரி விலையாக ரூ.22.89 என்ற விலைகளில் மொத்தம் ரூ.97 ஆயிரத்து 413-க்கு விற்பனையானது.

    இதனை அடுத்து தேங்காய் பருப்புக்கான ஏலத்தில் 891 மூட்டைகள் கொண்ட 43 ஆயிரத்து 737 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.78.99-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80.39-க்கும், சராசரி விலையாக ரூ.79.99 என்ற விலைகளிலும், 2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.63.80-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.78.99-க்கும், சராசரி விலையாக ரூ.76.78 என்ற விலைகளில் மொத்தம் ரூ.33 இலட்சத்து 12 ஆயிரத்து 943-க்கு விற்பனையானது.

    இவற்றை அடுத்து நிலக்க டலைக்காய் விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் 7 ஆயிரத்து 972 கிலோ எடையுள்ள 278 மூட்டைகள் கொண்ட நிலக்கடலைக்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.65.45-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.83.30-க்கும், சராசரி விலையாக ரூ.80.50 என்ற விலைகளி்ல் மொத்தம் ரூ.5 இலட்சத்து 56 ஆயிரத்து 737-க்கு விற்பனையானது. ஆகமொத்தம் எழுமா த்தூர், கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட ங்களில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை க்காய் சேர்த்து ரூ.95 இலட்சத்து 14 ஆயிரத்து 951-க்கு விற்பனையானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை மும்முரமாக நடைபெற்றது
    • ஜிலேபி கிலோ 130 ரூபாய், கெண்டை 110 விற்பனை செய்யப்பட்டது.

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுாரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரிநீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது.இந்த மீன்களை உள்ளூர் மீனவர்கள்பிடித்துவந்து, கதவணை அருகே செல்லும் கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஜிலேபி, கெண்டை மீன்கள் அதிகளவில் கிடைத்து வருகிறது. இதில் ஜிலேபி மீன் கிலோ, 130 ரூபாய், கெண்டை மீன் கிலோ, 110 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.கரூர், புலியூர், சேங்கல், மணவாசி,திருக்காம்புலியூர், லாலாப்பேட்டைஆகிய பகுதி மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலாயுதம்பாளையம் பகுதியில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு
    • பூக்கள் விலை உயர்வு அடைந்துள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், நொய்யல் மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம் , ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில் , பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, ரோஜா, செவ்வந்தி , சம்பங்கி சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை உள்ளூர் கோவிலுக்கு வரும் விவசாயிகளுக்கும் அருகாமையில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். வேலாயுதம்பாளையம் ,நொய்யல், புன்னம் சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, என். புகளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.300- க்கும், சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.120- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.300- க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது. ஆடி மாதத்தில் திருமண நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.ஆனி மாத தொடக்கத்திலேயே திருமண நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.240- க்கும், அரளி கிலோ ரூ.200- க்கும், ரோஜா கிலோ ரூ.250- முல்லைப் பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது. பூக்களின் வரத்து குறைவாலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாலும் பூக்கள் விலை உயர்வு அடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
    • பயிற்சியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கியது.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறை வாசிகளின் தண்டனை காலம் முடிந்த பின் அவர்களது வாழ்வாதா ரத்திற்காக பல்வேறு வகை யான தொழில் பயிற்சிகள் சிறைக்குள் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் மற்றும் தமிழக சிறைத் துறையுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலை யத்தை பிரீடம் பில்லிங் ஸ்டேஷன் என்ற பெயரில் தொடங்கி சிறைவாசி களுக்கு வேலை வாயப்பை அளித்து வருகிறது.

    முதற்கட்டமாக இத்திட்டத்தில் புழல் , வேலூர் பாளையங் ேகாட்டை, புதுக்கோட்டை, கோவை ஆகிய 5 இடங்களில் தொடங்கப் பட்டு செயல்பட்டு வரு கிறது.

    அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆறு முக்கிய இடங்களில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. அதில் மதுரை புதுஜெயில் ரோடு பகுதியில் புதிய பெட்ரோல் பல்க் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. சிறப்பு விருந்தி னராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார்.

    விழாவில் சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி, மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் பழனி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பரசுராமன், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் சிறைவாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மதுரை மத்திய சிறையில் உள்ள தகுதியான 41 தண்டனை சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படை யில் தேர்வு செய்து அவர்களுக்கு களப்பயிற்சி யும் பெட்ரோல் நிலையத்தில் பணி புரிவது குறித்தான பயிற்சியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த போது போலீசாரிடம் சிக்கினார்.
    • திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில ஆன்லைன் லாட்டரி சீட்டு சிலர் விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் புஸ்பநாதன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் அதே பகுதியில் உள்ள குரவஞ்செட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பழனித்துரை (வயது 41) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தபோது கையும்களவுமாக சிக்கினர்.

    இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி கால்நடை ஆஸ்பத்திரி அருகே சிலர் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி (வயது 45) என்பவர் அரசு மதுபானங்களை வாங்கி வந்து அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பக்கிரிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2-ம் தர நண்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • மீன்களின் விலை அதிகரித்ததால் மீன் பிரியர்கள் கவலை அடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீன்பிரியர்கள் குவிந்ததால் மீன்பிடி துறைமுகம் நிரம்பி வழிந்தது. ஆனால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காத காரணத்தால் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். மீன் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டதால் மீன் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக கடந்த வாரம் 450 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 500 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்பனையான வஞ்சரம் மீன் 750 ரூபாய்க்கும், 450 ரூபாய்க்கு விற்பனையான சீலா மீன் 480 ரூபாய்க்கும், கரட்டை மீன் 370, கிளி மீன் 350 ரூபாய், கடல் விறால் 600, என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல இறால் 700 ரூபாய்க்கும், முதல் ரக நண்டு நண்டு 700 ரூபாய்க்கும், இரண்டாம் தர நண்டு 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    4 ஆயிரம் லிட்டர் முதல் டீசல் செலவு செய்து, ஐஸ், மீன்பிடிக்க தேவையான தளவாட பொருட்கள் , ஆட்கள் கூலி என 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் தொழில் நஸ்டம் ஏற்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக ஒரு விசைப்படகில் 10 நபருக்கு மேல் தொழிலுக்கு செல்வதால் படகு உரிமையாளர் மட்டுமின்றி வேலையாட்கள் மற்றும் அவர்களின் குடும்பம் என 40 குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்கள். இருந்தபோதிலும் மீன்களின் விலையை பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே நாகை துறைமுகத்தில் குவிந்த மீன்பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்கின்றனா்.
    • 2,122 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

    இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டுவருகின்றனா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்கின்றனா்.

    இந்நிலையில் இந்தவாரம் நடைபெற்ற ஏலத்தில் 2,122 குவிண்டால் பருத்தி விற்னைக்கு கொண்டுவரப்பட்டது. குவிண்டால் ரூ.6,450 முதல் ரூ.7,828 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.1.50 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

    இத்தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரூர் ரேஷன் கடையில் இன்று தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது
    • மற்ற ரேஷன் கடைகளிலும் இதேபோல் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி உழவர் சந்தையில் ரூ.160-க்கும், காய்கறி மார்க்கெட்டில் ரூ.180-க்கும், சில்லரை கடைகளில் ரூ.200-ஐ தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே மற்ற மாவட்டங்களில் தமிழக அரசின் உத்தரவின்படி ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவுத்துறையினர் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் கூட்டுறவுத்துறை சார்பில் ஆலத்தூர் தாலுகா, இரூர் ரேஷன் கடையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற ரேஷன் கடைகளிலும் இதேபோல் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்
    • ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.120, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.30 சின்ன வெங்காயம் ரூ. 100. உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.60, புடலை காய் ரூ.60, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.80,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.250, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 60, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.100,சுரைக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்னை விவசாயிகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தேங்காய் விலை கடும் வீழ்ச்சி எதிரொலியாக விரக்தியில் இருக்கும் தென்னை விவசாயிகளுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என வலியுறுத்தி பேராவூரணி வேதாந்தம் திடலில் கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்க தலைவர் காந்தி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு கள் இயக்கம் ஈரோடு கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தொடங்கி வைத்தார். இதில் போராவூரணி பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தொடர்ந்து, இதுகுறித்து கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்க தலைவர் காந்தி கூறியதாவது:-

    தமிழக அரசு தென்னை விவசாயிகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் காலை, மதியம் சத்துணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். தென்னை சார்ந்த உற்ப்பத்தி பொருட்களை உள்நாடுகளில் விற்பனை செய்யவும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

    போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.