search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகரிப்பு"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று இரவும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 532 கனஅடியாக உயர்ந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம்24 அடி. இதில் 22.19 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 3170 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதே போல் புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீரு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2788 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 281 கனஅடியாக உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 743 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 174 கனஅடி தண்ணீர் வருகிறது. 12 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி. இதில் 1886 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. 38 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 437 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 15 கனஅடி நீர் வருகிறது. 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
    • சில நேரங்களில் பலத்த மழையாகவும் பெய்கிறது.

    தக்கலை:

    குமரிமாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில சமயம் சாரல் மழையாகவும், சில நேரங்களில் பலத்த மழையாகவும் பெய்கிறது. அதே நேரத்தில் பகலில் வெயில் அடிக்கிறது. இவ்வாறு சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் பாதித்து அவதிப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால கடந்த 30-ந்தேதி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஒரு ஒன்றியத்தில் 3 இடங்களி லும், நாகர்கோவிலில் மாநகராட்சி பகுதியில் 4 இடங்களிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது. அதில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டது.

    இதுகுறித்து திருவி தாங்கோடு சுகாதார துறை அதிகாரி ராமதாசிடம் கேட்ட போது, 'தக்கலை சுற்று வட்டார பகுதியில் பெரும் பாதிப்பு இல்லை. இருப்பினும் முகாம் நடத்தப்பட்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுகிறது' என்றார்.

    இந்நிலையில் நேற்று தக்கலை அரசு மருத்துவ மனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஒரே நேரத்தில் நூற்றுக்கும மேற்பட்ட நோயாளிகள் திரண்டனர். அவர்கள் வெகுநேரம் காத்திருந்து மருந்து வாங்கி சென்றனர். மேலும் மாத்திரைகள் வழங்கும் இரண்டு பிரிவில் ஒன்று மட்டுமே செயல்பட்டதால் நோயாளிகள் வெகுநேரம் வரிசையில் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    • பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 70.55 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிறைந்தன. அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. சிற்றாறு-1, சிற்றாறு-2 மற்றும் மாம் பழத்துறையாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அந்த அணைகளுக்கு வந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது.

    இதனால் திற்பரப்பு அருவி, மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நகர் பகுதிகளில் மழை சற்று குறைந்தது. ஆனால் மலையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அடையாமடையில் 58 மில்லி மீட்டரும், பெருஞ்சாணி அணை பகுதியில் 42.4 மில்லி மீட்டரும், புத்தன் அணை பகுதியில் 42 மில்லி மீட்டரும் பெய்தது.

    இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்டபெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 70.55 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 581 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 220 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

    வழக்கமாக பேச்சிப்பாறை அணையில் 42 அடியும், பெருஞ்சாணி அணையில் 72 அடியும் தண்ணீர் எட்டப்பட்டால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது அந்த அளவை அணைகள் நெருங்கி வருவதால் நீர் மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    தொடர்மழையின் கார ணமாக திற்பரப்பு அருவியி லும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ஆனந்தமாக நீராட ஏரா ளமானோர் குவிந்துள்ள னர். சனி, ஞாயிறு மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வந்துள்ளதால் திற்ப ரப்பு அருவி, தடாகம், பூங்கா போன்றவை களை கட்டி காணப்பட்டது.மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அடையாமடை 58, பெருஞ்சாணி 42.4, புத்தன்அணை 42, பாலமோர் 41.4, திற்பரப்பு 37.5, சுருளகோடு 36.4, சிற்றாறு 1-35.2, களியல் 29.6, தக்கலை 26.3, கோழிப்போர்விளை 23.4, சிற்றாறு-2 (சிவலோகம்) 22.4, நாகர்கோவில் 21.4, குழித்துறை 18.8, முள்ளங் கினாவிளை 18.6, பூதப் பாண்டி 15.2, மாம்பழத்து றையாறு 12, முக்கடல் அணை 8.6, ஆணைக்கிடங்கு 8.4, கன்னிமார் 6.2, இரணி யல் 6.2, பேச்சிப்பாறை 4, குளச்சல் 3.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமேசுவரத்தில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • மரம் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் விவசாயம் பணி என்பது இல்லாத நிலையில் வீடுகளில் உள்ள காலி இடங்களில் முருங்கைக்காய் மரம் வளர்ப்பது வழக்கமான ஒன்று. அதில் விளையும் முருங்கைக்காய்களை வீட்டு தேவைக்கு பயன்படுத்தி விட்டு மற்ற காய்களை விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் முருங்கைக்காய் மரங்களில் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு மரங்களிலும் 500-க்கும் மேற்பட்ட முருங்கைக்காய் காய்ந்துள்ள தால் மரம் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் ஒரு முருங்கைக்காய் ரூ.10 முதல் 15 வரை மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கில் லாபம் கிடைத்துள்ளதாக மரம் வளர்ப்பில் ஈடுபடு பவர்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதய நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சி, முறையான உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும்.
    • புள்ளி விவரம் கேரள மாநிலத்தில் இதய நோய் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் அபாயத்தை காட்டுக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மாறிவரும் வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற உணவு பழக்க வழக்கங்கள், உடற் பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதயநோய் தொடர்பான பிரச்சினைகள் வருகின்றன. தற்போதைய வாழ்க்கை சூழலில் உணவு உள்ளிட்ட பல விஷயங்களை மக்கள் முறையாக பின்பற்ற முடிவதில்லை.

    இதனால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகிறது. மிகக்குறைந்த வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பலர் மரணமடைவதை பார்க்க முடிகிறது. சிறுவர்களுக்கு கூட சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதய நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சி, முறையான உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் சமீப காலமாக இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மாரடைப்பு உள்ளிட்ட பல இதயநோய் பாதிப்பு களுக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் கேரளாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

    திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ சிகிச்சையளிப்பதில் நாட்டில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த ஆஸ்பத்திரியில் 4 மாத காலத்தில் 40 ஆயிரம் பேர் இதய நோய்க்கு சிகிச்சை பெறறுள்ளனர் என்ற அதிரச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஆஞ்சியோ பிளாஸ்டி உள்ளிட்ட இதய நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சை அளிப்பதில் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி முதலிடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த புள்ளி விவரம் கேரள மாநிலத்தில் இதய நோய்பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் அபாயத்தை காட்டுக்கிறது. இது கேரள மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது. நாளை இதய நோய் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது.
    • டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. தண்ணீரை திறக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என அந்த மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 16ந்தேதி (புதன்கிழமை) கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 11 ஆயிரத்து 602 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 25 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    தொடர்ந்து நேற்று (17ந்தேதி) கிருஷ்ணராஜ சாகர் அணையில் 15 ஆயிரத்து 184 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 825 கன அடி தண்ணீரும் என மொத்தம் 22 ஆயிரத்து 9 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து இன்று நீர் திறப்பு குறைக்கப்பட்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 13 ஆயிரத்து 145 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தம் 18 ஆயிரத்து 145 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 552 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3 ஆயிரத்து 260 கன அடியாக உயர்ந்தது. பின்னர் நேற்று மாலை 9 ஆயிரத்து 394 கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9 ஆயிரத்து 938 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி உள்ளது. நேற்று காலை 53.15 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 53.50 அடியாக உயர்ந்தது. அணையில் நீர் இருப்பு 20.08.டி.எம்.சி ஆக உள்ளது

    மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளதால் பண்ணவாடியில் மூழ்கியிருந்த நிலப்பரப்பு பகுதிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்ட பகுதியாக மாறி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.

    தண்ணீர் வற்றிப்போன நீர் தேக்க பகுதிகள் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளன. இந்த நிலப்பரப்புகளில் கால்நடை தீவனங்கள் மற்றும் புற்கள் அதிகளவில் முளைத்து பார்ப்பதற்கு பசுமையான மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை இந்த பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
    • மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு விளையும் தக்காளியை உடுமலை நகராட்சி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் சென்னை, மதுரை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.நடப்பாண்டு கோடை மழை குறைந்ததோடு, தக்காளி விலை கிலோ 5 ரூபாய் என்ற அளவில் சரிந்ததால் தக்காளி சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.

    வழக்கமாக ஏப்ரல்- மே மாதங்களில் நடவு செய்து, ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.நடப்பாண்டு தக்காளி சாகுபடி பரப்பு குறைந்ததால் கடந்த ஜூலை மாதம் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. அதிக பட்சமாக 14 கிலோ கொண்ட பெட்டி 2,400 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்த விலையில் கிலோ 180 ரூபாய் வரை விற்றது.

    இந்நிலையில் தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். தற்போது இயல்பை விட கூடுதல் பரப்பளவில் தக்காளி சாகுபடியாகி வருகிறது. மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிகப்பட்சமாக ஒரு பெட்டி 1,200 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு கிலோ தக்காளி, 60 ரூபாய் வரை விலை நிலவியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
    • ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன்காரணமாக குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகர் மாவட்டங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதைத்தொடர்ந்து அணைக்கு நேற்று 44ஆயிரத்து 436 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து 48 ஆயிரத்து 25 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து இன்று 2688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.

    இதேபோல் நீர்வரத்து தொடர்ந்து நீடித்தால் அடுத்த ஒரு சிலதினங்களுக்குள் அணை முழு கொள்ளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் 80.51 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    கபினிஅணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 896 கனஅடியாக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீராக 11250 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

    இந்த உபரி நீரானது நாளை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு திறந்து விடப்பட்டுள்ள 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தற்போது மெல்ல மெல்ல பிலிக்குண்டுலுவுக்கு வர தொடங்கியுள்ளது.

    ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன்காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். இதன் காரணமாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் பரிசலில் சென்று நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை.
    • மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக நாள்தோறும் 5 ஆயிரம் மூட்டை வரை மஞ்சள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த மாதங்களில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயித்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. வடமாநிலங்களில் அதிக மழையால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டு தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை. குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தரம் குறைந்த மஞ்சளே அதிகம் கிடைப்பதால் வியாபாரிகள் ஈரோடு பகுதி மஞ்சளை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர்.

    தமிழகத்தில், ஈரோடு, சேலம் பகுதி மஞ்சள் தரமாக உள்ளதால் படிப்படியாக விலை அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் 8,500 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் மஞ்சள் கடந்த வாரம் 10 ஆயிரம் ரூபாயை எட்டியது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மஞ்சள் குவிண்டால் ரூ. 10 ஆயிரத்தை எட்டியது. கடந்த வெள்ளியன்று 10,500 ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, முதல் தர மஞ்சள் அதிகபட்சமாக 12,600 ரூபாய்க்கு விற்பனையானது.

    கடந்த 6 மாதங்களில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மஞ்சளின் அளவு 25 சதவீதம் உயர்ந்துள்ளதாலும், வட மாநிலங்களில் பெய்த மழையினாலும் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்ந்துள்ளதாக கூறும் வணிகர்கள், இன்னும் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பலரும் மஞ்சளை இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மராட்டியத்தில் மஞ்சள் மொத்த சாகுபடி பரப்பு அடுத்த மாதம் தெரியவரும் என்றும், அப்போது விலையில் மாற்றம் ஏற்படலாம், அதுவரை இதே விலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மஞ்சள் விலை 3 மாதங்களில் குவிண்டாலுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருப்பது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மஞ்சளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஈரோடு நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print