என் மலர்
நீங்கள் தேடியது "Price"
- விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
- நைஸ்ரக கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை
மதுரை அனைத்து தொழிற்சங்க ஐக்கிய குழு நிர்வாகிகள், தலைவர் கோபிநாத் (ஐ.என்.டி.யூ.சி.), செயலாளர் ரவீந்திரன் (ஜனதாதளம்), பொருளா ளர் பத்மநாபன் (ஏ.டி.பி.), இணைச்செயலாளர் சுதர்சன் (பி.எம்.எஸ்.), துணைத்தலைவர் ஈஸ்வரன் (சி.ஐ.டி.யூ.), துணைத் தலைவர் தாமோதரன் (ஏ.ஐ.டி.யூ.சி.), துணைச் செயலாளர் லெட்சுமணன் (எல்.பி.எப்.) ஆகியோர் மாவட்ட கலெக்டரிடமும் நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை டவுன், புறநகர், கைத்தறிநகர், சக்கிமங்கலம், வண்டியூர், பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன்நகர், கடச்ச னேந்தல், ஸ்ரீனிவாசா காலனி, எல்.கே.டி. நகர் மற்றும் பல பகுதிகளில் நைஸ்ரக கைத்தறி ஜவுளி ரகமான வேட்டி, கோடம் பாக்கம் ரக சேலைகள் மற்றும் பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யும் நைஸ்ரக நெசவுத் தொழிலாளர்கள் அவரவர் வீடுகளில் ஒரு தறி, இரு தறி அமைத்து நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு-நூல் மற்றும் கூலி பெற்று தொழில் செய்து வருகின்றனர்.
கூலி, போனஸ் கூடுதலாக வழங்க வேண்டும். தற்போதைய கடுமையான விலை உயர்வு, வாடகை உயர்வு காரணமாக மிக சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மாற்று வேலைவாய்ப்பு இன்றி வாழ்க்கை நடத்த கஷ்டப்படும் நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்வு, போனஸ் உயர்வு சம்பந்தமான ஒப்பந்தம் வருகின்ற 11.11.2023 அன்றுடன் காலாவதி ஆகிறது. எனவே வருகின்ற 12.11.2023 (தீபாவளி) முதல் நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உள்ள கூலி பட்டியலுக்கு மேல் 40 சதவீதம் கூலி உயர்வும், இந்த ஆண்டு தீபா வளிக்கான போனஸ் 20 சதவீதமும் வழங்கி கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது.
- 1 கிலோ பார் வெள்ளி ரூ.76500-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக 1 பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியே விற்பனையாகி வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. கடந்த 19-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.44,400-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக குறைய தொடங்கியது.
21-ந்தேதி பவுன் ரூ.44,240 ஆக குறைந்தது. 24-ந்தேதி ரூ.44,168 ஆக குறைந்தது. அதன்பிறகு தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்துக்கு கீழே வந்தது. நேற்று பவுன் ரூ.43840-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுன் ரூ.43,280 ஆக குறைந்தது. ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.560 குறைந்து உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.888 குறைந்துள்ளது.
நேற்று ஒருகிராம் தங்கம் ரூ.5480-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5410-க்கு விற்கப்படுகிறது. 4 நாட்களில் கிராமுக்கு ரூ.111 குறைந்துள்ளது.
இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.76.50-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76500-க்கு விற்பனையாகிறது.
- தங்கம் கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.5,521 ஆகவும், சவரனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.44,168 ஆகவும் உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் 79 ஆகவும், ஒரு கிலோ ரூ.79 ஆயிரம் ஆகவும் இருந்தது.
சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.5,410 ஆகவும், பவுனுக்கு ரூ.44,080 ஆகவும் இருந்தது. இன்று கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.5,521 ஆகவும், பவுனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.44,168 ஆகவும் உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் 79 ஆகவும், ஒரு கிலோ ரூ.79 ஆயிரம் ஆகவும் இருந்தது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.79.30 ஆகவும், ஒரு கிலோ ரூ.79 ஆயிரத்து 300 ஆகவும் உயர்ந்துள்ளது.
- விலைவாசி, வரி உயர்வால் தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகாசி
சிவகாசி அருகே சாட்சி யாபுரத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா, மதுரையில் நடந்து முடிந்த அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மான சாராம்சத்தின் விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டதிற்கு ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலா ளருமான லட்சுமி நாரா யணன் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வெங்கடேஷ், மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசிய தாவது:-
கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் திறக்கப்பட அடிப்படை காரணம் தி.மு.க. தான். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் மது கடை களையும் மூடவில்லை, மிகப்பெரிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த வில்லை. புதிய திட்டங்க ளையும் அறிவிக்கவில்லை.
கடந்த கால எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி களில் ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று பொற்கால ஆட்சி நடத்தப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து மதத்தினர்களும் புனித யாத்திரை மேற்கொள்ள கோடிக் கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மாணவ- மாணவிகளுக்கு விலை யில்லா மடிக்கணினி, மிதிவண்டி அதேபோன்று மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவை வழங்கப்பட்டது.
நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்பதற்காக அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 ஆயிரம் டாக்டர்கள் உருவாகி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் வியாபாரிகள், தொழிலா ளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்ப டைந்து, விலைவாசி உயர்வு, வரி உயர்வால் பொது மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்ட த்தில் தலைமை கழக பேச்சாளர் பலகுரல் சந்தானம், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், விருதுநகர் மாவட்ட முன்னாள் இந்து சமய அறங்கா வலர் குழுத் தலைவர் பல ராம், மாமன்ற உறுப்பினர் கரை முருகன், சிவகாசி ஒன்றிய கழக துணை செயலாளர் இளநீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 530 ஆக உள்ளது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.78 ஆயிரத்து 200 ஆக உள்ளது.
சென்னை:
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 40-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 530 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.78 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20-க்கு விற்கிறது.
- மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீர் உயர்ந்துள்ளது.
- கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுரை
மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீரென அதிகரித்துள்ளது. கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் அனைவராலும் மிகவும் விரும்பி வாங்கப்படும் பூக்களில் மல்லிகை முதலிடம் பெற்றுள்ளது. அந்த வகையில் அவ்வப் போது மல்லிகையின் விலை வீழ்ச்சி அடைந்தாலும் பண்டிகை காலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மல்லிகை பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கமாகி விட்டது.
தற்போது சீசன் மந்தமாக இருப்பதாலும் மல்லிகை பூக்கள் வரத்து மதுரை மார்க்கெட்டில் கணிசமாக குறைந்துள்ளதாலும் விலை திடீரென அதிகரித்துள்ளது. வருகிற 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா என்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக இருப்ப தாலும் அதன் விலை உயர்வு இருமடங்காக அதிகரித்து உள்ளது.
இன்று காலை மல்லிகை பூ கிலோவுக்கு 1200 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது அதுபோல முல்லை பிச்சி ஆகிய பூக்களின் விலை 700 ரூபாயாக விற்கப்பட்டது.
சம்மங்கி, அரளி 200 ரூபாய்க்கும், செவ்வந்தி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதுபோல மற்ற பூக்களும் சற்று விலை அதிகரித்து உள்ளது.
- சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
- சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400,
சேலம்:
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வருகிற 6 ந் தேதி புதன்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, தொடர்ந்து 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டு மல்லி கிலோ ரூ.250, ரூ.300 என்கிற விலைகளில் விற்கப்பட்டது. ஆனால் இன்று குண்டு மல்லி கிலோ ரூ.400- க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பண்டிகை சீசன் என்பதால் பூக்கள் விலை சற்று உயர்ந்து உள்ளது. ஒரு சில ரகங்கள் விலை குறைந்தும் உள்ளன. சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400, முல்லை - ரூ.240, ஜாதி மல்லி - ரூ.260, காக்கட்டான் - ரூ.100, கலர் காக்கட்டான் - ரூ.100, மலை காக்கட்டான்- ரூ.100, சி.நந்தியா வட்டம் - ரூ.200, சம்மங்கி - ரூ.100, சாதா சம்மங்கி - ரூ.100, அரளி - ரூ.40, வெள்ளை அரளி - ரூ.60, மஞ்சள் அரளி - ரூ.60, செவ்வரளி - ரூ.80, ஐ.செவ்வரளி - ரூ.50, நந்தியா வட்டம் - ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.80 ஆயிரமாக உள்ளது.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்கிறது.
சென்னை:
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43 ஆயிரத்து 840க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 480-ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.80 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்கிறது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது.
- இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர்.
சேலம்:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது. இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர். மற்ற பூக்களின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு:- முல்லை ரூ.360 ஜாதிமல்லிகை ரூ. 260, காக்கட்டான் ரூ.320, கலர் காக்கட்டான் ரூ.280 ,மலைக்காக்கட்டான் ரூ.320, அரளி ரூ.160, வெள்ளைஅரளி ரூ.260, மஞ்சள் அரளி ரூ.260, செவ்வரளி ரூ.260, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.140, சி.நந்திவட்டம் ரூ.200, சம்பங்கி ரூ.200, சாதா சம்பங்கி ரூ.200.
- நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
- கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு உற்பதத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு மற்றும் உள்மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. வடமாநிலங்களில் உற்பத்தி குறைவால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை அதிகளவில் செல்கின்றன.
இது மட்டுமின்றி துபாய், மஸ்கட், இலங்கை உள்பட பல்வேறு வெளிநா டுகளுக்கு முட்டைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணை யாள ர்கள் சங்க தலைவர் சிங்க ராஜ் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் வடமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. மழைகாரணமாக நுகர்வு அதிகம் உள்ளதால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
- சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கடந்த 3 நாட்களில் வருகை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய தக்காளி சந்தையான மதனபள்ளியில் இருந்து சந்தைகளுக்கு அதிக அளவில் தக்காளி வருவதால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் சித்தூர் மாவட்டத்திற்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதனால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து சந்தைகளில் இருந்தும் தினமும் சுமார் 35 முதல் 40 லாரிகள் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் தமிழகத்திலும் விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.