உளுந்து விலை உயர்வால் அப்பளம் உற்பத்தி பாதிப்பு

உளுந்து விலை உயர்வால் அப்பளம் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
உளுந்து விலை உயர்வால் அப்பளம் உற்பத்தி பாதிப்பு
Published on

மதுரை

தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத் திதன் மாநில தலைவர் திரு முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

பருப்பு விலை தற்போது கடுமையாக உயர்ந்து உள் ளது. இன்று தீட்டல் எனப்ப டும் பருப்பு வகைகள் 7 ஆயி ரத்தில் இருந்து தற்போது 12 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. இதனால் அப்பளம் விலை கடுமையாக உயர்வது மட்டு மல்லாமல், தொழில் பாதிக் கும் அபாய நிலையில் இருக் கிறது.

மாதத்திற்கு ஒரு டன் அப்பளம் தயாரிக்கப்படு கின்ற இடத்தில் தற்போது 100 கிலோ மட்டுமே தயா ரிக்கின்ற நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உளுந்தம் பருப்பு விலை உயர்வு மட்டும் அல்லாமல் பருப்பு கிடைக்காத சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது.

தயாரிப்பு அல்லது விளைச்சல் இல்லையா? அல்லது பதுக்கலா என்று காரணம் தெரியவில்லை. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து உளுந்து விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கம் கேட்டுக்கொள் கிறது.

அப்பளத்திற்கு மார்க் கெட்டில் விலை கிடைக்காத நிலைமை உள்ளதால் ஆயி ரக்கணக்கான தொழிலா ளர்களின் குடும்பங்கள் வேலை இழந்து தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நி லையில் இருக்கிறார் கள். அது மட்டுமல்லாமல் வியா பாரம் இல்லாத சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு போனஸ் கூட வழங்க முடி யாத நிலைமையில் உரிமை யாளர்கள் தவித்துக் கொண் டிருக்கிறார்கள்.

இந்த விலை ஏற்றத்தினால் அப்பளத்தின் விலை குறைந்த பட்சம் ஒரு கிலோ 50 ரூபாய் அதிகப்படுத்து வதற்கான வாய்ப்புகள் 100 சதவீதம் இருக்கிறது. எனவே இதற்கு உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com