search icon
என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரலாறு காணாத மழை பெய்த போதிலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை பாதிப்பு குறைந்துள்ளது.
    • மழை நிற்பதற்கு முன்பே வெளி மாவட்ட பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தொடங்கின.

    சென்னை:

    சென்னையில் புயல், மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். முதலில் சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அதன்பின் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார். அதனை தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சுண்ணாம்பு கொளத்தூர் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது:

    "முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். வரலாறு காணாத மழை பெய்த போதிலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் இயல்பு நிலையை வெகு விரைவில் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், மழையால் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது.

     

    2015-ல் சென்னையில் செயற்கை வெள்ளம் ஏற்பட்டது. தற்போது இயற்கையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 2015 மழையின்போது 119 பேர் பலியான நிலையில், இம்முறை அதிகம் மழை பெய்தும் 7 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். 47 ஆண்டுகளில் இல்லாத அளவாக இம்முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 4 ஆயிரம் கோடி ரூபாயை திட்டமிட்டு செலவு செய்ததன் காரணமாகவே தற்போது சென்னை தப்பியுள்ளது.

    ரூ.4 ஆயிரம் கோடிக்கு சென்னையில் பணிகள் நடந்ததால் தான் பாதிப்புகள் குறைவாக இருக்கின்றன. மழை நிற்பதற்கு முன்பே வெளி மாவட்ட பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தொடங்கின.

    'மிச்சாங்' புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளோம். மத்திய அரசு வழங்கும் நிதியை பொறுத்து மழை நிவாரண உதவிகள் வழங்கப்படும்." இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிச்சாங் புயல் காரணமாக சென்னை, தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
    • நாளைக்கும் மீட்புப்பணி முழுமையாக முடியவடைய வாய்ப்பு இல்லை.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்கள் நான்கு மாவட்டங்களிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் தற்போது இந்த நான்கு மாவட்டங்களிலும் மழை நீர் வேகமாக வடிய வாய்ப்பில்லை. இதனால் நாளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.
    • அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. அவர் உயிரோடு இருக்கும் வரை அ.தி.மு.க.வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான தீர்மானங்களும் இயற்றப்பட்டன.

    இந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும் கட்சியில் காட்சிகள் மாறியது.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. அதற்கு பதிலாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

    இதை எதிர்த்து தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மனுதாக்கல் செய்தனர்.

    அந்த மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோரை கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் சசிகலா தான்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறி வந்தார்.

    இதற்கிடையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

    இதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டம் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. கட்சி முற்றிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்தது.

    சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினார்கள்.

    அதில் சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதும், கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 9 மணியில் இருந்து விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
    • விமான சேவை தொடங்கப்பட்டாலும், குறைந்த அளவிலேயே விமானம் இயக்கப்பட்டது.

    கனமழை காரணமாக காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. ஓடுபாதையில் இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் இரவு 11 மணி வரை மூடப்படும். அதன்பின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மழையின் தாக்கம் குறையாததால் இன்று காலை வரை விமான நிலையம் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மழைவெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் 9 மணியில் இருந்து விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

    விமான சேவை தொடங்கப்பட்டாலும், குறைந்த அளவிலேயே விமானம் இயக்கப்பட்டது. இன்றும் 177 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
    • இதை வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மீட்புப் பணியில் ஈடுபடுவதுதான் உடனடி தீர்வுக்கு முக்கிய காரணம்.

    இதை வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் " " எனப்பதிவிட்டுள்ளார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் தமிழ் மக்கள் பாசத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால் அடிக்கடி தமிழில் டுவீட் செய்வது வழக்கம். தற்போது சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக பதிவு செய்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து இடங்களிலும் முறிந்து கிடக்கும் மரங்கள் இன்று மாலைக்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 11 சுரங்கப்பாதைகளில் மழை நீரால் மூழ்கியுள்ளது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. இதனால் போர்க்காள அடிப்படையில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று காலை மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    2015-ம் ஆண்டு சென்னையை மழை வெள்ளம் மூழ்கடித்தது. அதைவிட தற்போது அதிக மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் படிப்படியாக மின்சாரம் சீராகும். அனைத்து இடங்களிலும் முறிந்து கிடக்கும் மரங்கள் இன்று மாலைக்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 11 சுரங்கப்பாதைகளில் மழை நீரால் மூழ்கியுள்ளது.

    சென்னையில் 8 லட்சம் மக்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3500 மக்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாநராட்சி தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
    • டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பவுமா செயல்படுவார்.

    கேப்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 10ந்தேதி டர்பனில் நடக்கிறது. இந்திய தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் காயத்துடன் ஆடிய கேப்டன் பவுமா, வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா ஆகியோருக்கு வெள்ளைநிற பந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெரால்டு கோட்ஜீ, மார்கோ யான்சென், இங்கிடி ஆகியோர் முதல் இரு 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராவதற்காக உள்ளூர் முதல்தர போட்டிகளில் ஆடுகிறார்கள். டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பவுமா செயல்படுவார்.


    தென்ஆப்பிரிக்க 20 ஓவர் போட்டி அணி:

    மார்க்ரம் (கேப்டன்), ஓட்னில் பார்ட்மேன், மேத்யூ பிரீட்ஸ்கே, பர்ஜர், கோட்ஜீ, டோனோவன் பெரீரா, ரீஜா ஹென்ரிக்ஸ், மார்கோ யான்சென், கிளாசென், கேஷவ் மகராஜ், டேவிட் மில்லர், இங்கிடி, பெலுக்வாயோ, ஷம்சி, ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ்.

    தென்ஆப்பிரிக்க ஒருநாள் போட்டி அணி:

    மார்க்ரம் (கேப்டன்), ஒட்டினல் பார்ட்மேன், பர்ஜர், டோனி டி ஜோர்ஸி, ரீஜா ஹென்ரிக்ஸ், கிளாசென், கேஷவ் மகராஜ், போங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், பெலுக்வாயோ, ஷம்சி, வான்டெர் டஸன், கைல் வெரைன், லிசாட் வில்லியம்ஸ்

    டெஸ்ட் அணி:

    பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், பர்ஜர், ஜெரால்டு கோட்ஜீ, டோனி டி ஜோர்ஸி, டீன் எல்கர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், மார்க்ரம், வியான் முல்டர், இங்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்.
    • தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. பலத்த காற்றும் வீசியதால் மரங்கள் சாய்ந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    சென்னையில் இருந்து புயல் விலகி சென்றாலும் சாலைகள், தெருக்களில் தேங்கிய நீர் அப்படியே உள்ளது. நீர் வடிய பல மணி நேரம் ஆகலாம். இதனால் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேபோல் சென்னை புறநகர் மின்சார ரெயில்களும் இயக்கப்படவில்லை.

    மெட்ரோ ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. வழக்கமான காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் கட்டயாம் பயணம் செய்ய விரும்புவோர் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம், தடுத்திருக்கிறோம்.
    • அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.

    சென்னை:

    சென்னை, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.

    முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம், தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம்.

    இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்!

    அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.

    வெல்லட்டும் மானுடம்!


    இவ்வாறு முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo