என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆசிரியர் தேர்வு
- காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்
- நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்
உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகிநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,
"காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். அதாவது, பசுவதையை எந்தத் தடைகளும் இன்றி அனுமதிக்கப் போகிறார்கள் என்று அதற்கு அர்த்தம். நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்.
அதாவது, ஒருவரது வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அதில் இரண்டை அவர்களே எடுத்துச் சென்று விடுவார்கள். அதுமட்டுமின்றி, பெண்களின் நகைகளை கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது, இதை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவர்கள் முயலுகின்றனர்.
நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் சதி செய்து வருகிறது. ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் ராமர் இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கினர். ஆனால் தெய்வம் அனைவருக்கும் உள்ளது. இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.
'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று முழக்கமிட தயங்குபவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது" என்று அவர் தெரிவித்தார்.
- வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி.
- மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி.
2023-24-ல் வெங்காயத்தின் உற்பத்தி அதற்கு முந்தைய காலக்கட்டத்தை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாலும், உள்நாட்டில் தேவை அதிகரித்ததாலும், வெளிநாட்டிலும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது.
இந்த நிலையில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளித்துள்ளது.
இந்த வெங்காயம் முற்றிலும் ஏற்றமதியைச் சார்ந்தது. வழக்கமான வெங்காயத்தை விட இந்த வெங்காயம் அறுவடை செய்வதற்கு அதிக செலவாகும்.
- பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
- உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தது வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுப்பட்டார். பிரசாரம் முடிந்து துர்காபூர் பகுதியில் ஹெலிகாப்டரில் ஏறும்போது நகரக்கூடிய படிக்கட்டுகளில் மம்தா நடந்து சென்ற போது நிலை தடுமாறி கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
நிலை தடுமாறி தவறி விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர் மம்தா தனது பயணத்தை தொடர்ந்தார்.
அசன்சோலுக்குச் செல்வதற்காக துர்காபூரில் இருந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.
- 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம்.
ஒரு சில சமயங்களில் நமக்கு பிடித்த வேலையை பெறுவதற்காக பிடிக்காத வேலையை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். அத்தகைய சூழல்களில் வெறுப்பாகவும், வேலையை முழு ஈடுபாடு இல்லாமலும் செய்ய நேரிடும். சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பது ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு. அதிலும் முக்கியமாக ஊதிய உயர்வு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பதால் அது கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். அதிலும் 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம். ஆனால், இங்கு ஒருவர் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார் அன்கேத். கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தராத நிறுவனத்தில் இருந்து வேலையை ராஜினாமா செய்துள்ளார். வேலையை ராஜினாமா தானே செய்துள்ளார் என்றால் சரி. அதனை கொண்டாடும் விதமாக இசைக்குழுவுடன் இணைந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் தற்போது பேசுபொருளாகியுள்ளார்.
ஊதிய உயர்வு தராமல் இருந்ததால் கடும் அதிருப்தியில் இருந்த அன்கேத், பணியில் இருந்து விலகுவதை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட முடிவெடுத்தார். இதையடுத்து தனது நண்பர்கள் மற்றும் இசைக்குழுவை அழைத்து அன்கேத், நிறுவனத்தின் மேலாளர் அலுவலகம் முடிந்து வெளியில் வந்த போது வாசல் முன்பு மகிழ்ச்சியுடன் மேளம் அடித்து ஆடிப்பாடி நடனம் ஆடி கொண்டாடினார். இதனால் எரிச்சலடைந்த நிறுவனத்தின் மேலாளர், அன்கேத் மற்றும் குழுவினரை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
- மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.
- மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது என்றார்.
சிலி நாட்டில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை கொண்டு ஒருவர் டி.வி. வாங்கியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் என்பவர் மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.
ஒரு வாரத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களை கொண்டு இந்திய மதிப்பில் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை வாங்கியுள்ளார். இது தொடர்பாக லூயில் அல்வெரெஸ் கூறும் போதும், ஒவ்வொரு வாரமும் 210 அமெரிக்க டாலர் முதல் 263 டாலர் வரை கிடைக்கும். என்னுடைய மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது. சேகரித்த நாணயங்களை இரவு முழுவதும் சுத்தம் செய்தேன். வெகுநேரமாகியதால் வங்கிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மறுநாள் நாணயங்களை சிறிய பையில் வைத்து எடுத்துச் சென்றேன் என்றார்.
This Chilean TikToker bought a new television using only coins found by a metal detector pic.twitter.com/Gh1H3BGRst
— Reuters (@Reuters) April 26, 2024
- நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2:15 மணி வரை தாக்குதல் நடந்துள்ளது.
- உயிரிழந்த இருவரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிஆர்பிஎப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு இன குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறி ஏராளமானோர் உயிரை பறித்தது.
இன்னமும் அந்த கலவரத்தில் இருந்து மணிப்பூர் மாநிலம் விடுபடவில்லை. அடிக்கடி இரு இன மக்களும் மோதலில் ஈடுபடுகிறார்கள்.
இந்த நிலையில் மணிப்பூரில் நேற்று பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்காக துணைநிலை ராணுவத்தினர் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பிஸ்னுபூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட துணைநிலை ராணுவத்தினர் மலையடி வார கிராமத்தில் தங்கியிருந்தனர்.
நரைன்சைனா என்ற கிராமத்தில் துணைநிலை ராணுவத்தினர் ஓய்வு எடுத்து வந்தனர். நேற்று இரவு 12.30 மணியளவில் அந்த முகாம் மீது மணிப்பூர் பயங்கரவாத குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது. மலையில் பதுங்கி இருந்தபடி அவர்கள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தினார்கள்.
இதையடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை 2.30 மணி வரை இந்த தாக்குதல் நீடித்தது.
இதில் ஏராளமான துணைநிலை ராணுவத்தினர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் துணைநிலை ராணுவத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சர்கார், தலைமை போலீஸ்காரர் அருப்சைனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
10-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளை பிடிக்க அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- போலீசாரை பார்த்ததும் சச்சின் தனது காரில் ஏறி தப்ப முயன்றார்.
- சச்சின் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவருடைய முன்னாள் மனைவி லியா கோல்ட்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் அன்டோனியோ நகரில் வசித்து வந்த இந்தியர் சச்சின் குமார் சாஹூ (வயது 42). சம்பவத்தன்று சச்சின் தன்னுடன் அறையில் தங்கியிருந்த தோழியை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், 2 போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர்.
அப்போது சச்சின் ஒரு பெண் மீது வேண்டுமென்றே காரை மோதுவதை போலீஸ் அதிகாரிகள் பார்த்தனர். இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் சச்சினை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் சச்சின் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அதனை தொடர்ந்து சச்சின் காரை மோதியதில் படுகாயம் அடைந்த 51 வயது பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சச்சினுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் சச்சின் மீண்டும் தனது அறைக்கு வந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் 2 போலீஸ் அதிகாரிகள் சச்சின் இருக்கும் இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் சச்சின் தனது காரில் ஏறி தப்ப முயன்றார். ஆனால் போலீஸ் அதிகாரிகள் இருவரும் துப்பாக்கி முனையில் அவரது காரை வழிமறித்தனர்.
தங்களிடம் சரணடைந்துவிடும்படி சச்சினை போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதற்கு செவிசாய்க்க மறுத்த அவர் போலீஸ் அதிகாரிகள் மீது காரை ஏற்றினார். அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் சச்சினை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவர் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.
காயம் அடைந்த 2 போலீஸ் அதிகாரிகளையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதனிடையே சச்சின் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவருடைய முன்னாள் மனைவி லியா கோல்ட்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.
- 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு.
- 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 11.1 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 25.1 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 40 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 50.03 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 64 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
தொடர்ந்து, இரவு 8 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் மொத்தம் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.
- பேர்ஸ்டோ 45 பந்தில் சதம் விளாசினார்.
- ஷஷாங்க் சிங் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.
கொல்கத்தா:
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இன்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதல் இறுதி வரை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக தொடக்க வீரர்களான சுனில் நரேன் - சால்ட் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.
இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- பேர்ஸ்டோ களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் சிங் 18 பந்தில் அரை சதம் கடந்தார். இவர் 54 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரிலீ ரோசோவ் 26 ரன்னில் வெளியேறினார். தொடக்கம் மெதுவாக ஆரம்பித்த பேர்ஸ்டோ பின்னர் அதிரடி காட்டி சதம் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி 15 ஓவரில் 201 ரன்கள் குவித்தது.
இதனால் கொல்கத்தா அணிக்கு 5 ஓவரில் 61 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ஷஷாங்க் சிங் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி சிக்சருமாக மாற்றினார். இதனால் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.
பேர்ஸ்டோ 108 ரன்னிலும் ஷஷாங்க் சிங் 68 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
- "கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.
இயக்குனர் சங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவே. சங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார்.
தற்போது, "கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று தனது 51வது பிறந்த நாள் முன்னிட்டு இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் சங்கருடன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.
- ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டார்.
காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி நாளை மாலை கூடுகிறது. அப்போது அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி இதுவரை மக்களவை தேர்தலில் 317 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இவர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டார். தற்போது உடல் நலம் காரணமாக மக்களவை தொகுதியில் சோனியாக காந்தி போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
- 6 மணிக்கு முன், வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
- 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.
அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 11.1 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 25.1 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 40 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 50.03 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 64 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
2ம் கட்ட தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 6 மணிக்கு முன், வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்