என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
    • சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தின் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர்.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் நேற்று், இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று விண்ணப்பித்து சென்றனர்.

    சென்னையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர வேண்டியவர்கள் படிவம் 6-ஐயும், ஒருவரின் பெயர் தவறாக சேர்க்கப்பட்டிருந்தால் படிவம் 7-ஐயும், முகவரி, பெயர் மாற்றத்திற்கு படிவம் 8-ஐயும் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    • விண்கலன் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்யும் வகையில் சோதனை.
    • பாராசூட் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    ககன்யான் திட்டத்திற்கான இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றிப்பெற்றுள்ளது.

    விண்வெளிக்கு சென்று பூமி திரும்பும் வீரர்களின் விண்கலன் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட பாராசூட் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    • கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.
    • இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர்.

    இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் 'டிட்வா' புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.

    இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.

    இந்தநிலையில் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

    • சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
    • வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் மந்தனா, தீப்தி ஷர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகுவதற்கு இரு அணிகளும் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ள தீவிரம் காட்டும். வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 26 இருபது ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ரகு நந்தனின் இசையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் கேட்கும் ரகம்.

    னந்த் முருகன் மதுரையையே ஆட்டிப்படைக்கும் பிரபல ரவுடியின் சிஷ்யனாக இருக்கிறார்.பின்னர், ஆனந்த் முருகன் குருவின் இடத்தை பிடித்து மதுரையில் மேலோங்கி நிற்கிறார்.

    ஆனந்த் முருகனை கதையின் நாயகன பாலஹாசன் தனது நண்பர்ளுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிடுகிறார். இவர், அப்பா, அம்மா, மனைவி, குழந்தை என குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் ஆனந்த் முருகனை கொலை செய்ய திட்டிமிடுகிறார்.

    பாலஹாசன், மதுரையின் மிகப்பெரிய சக்தியாக திகழும் ரவுடி ஆனந்த் முருகனை கொலை செய்ய முயற்சிப்பது ஏன் ? அவரது முயற்சி வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதிகதை.

    நடிகர்கள்

    அறிமுக நடிகர் ஆனந்த் முருகன் ரவுடி கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார்.மிக நேர்த்தியாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாலஹாசன், படத்திற்கு படம் கதாபாத்திரங்களில் வித்தியாசத்தை காட்டுவதோடு, தனது நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்கிறார்.

    சீரியல் நாயகன் ஸ்ரீதேவா, யாசர், விஜே ஆண்ட்ரூஸ் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திருக்கிறார்கள்.

    நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, சோசியல் மீடியா மோகத்தினால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்களை எச்சரிக்கும் விதமாக நடித்திருக்கிறார்.

    இயக்கம்

    மதுரையை ஆட்டிப்டைக்கும் அசாதாரண மனிதன் ஒருவனை சாதாரணமான ஒருவன் வீழ்த்த முடிவு செய்வதும், அந்த முடிவை செயல்படுத்த போராடுவதையும் விறுவிறுப்பாக காட்டியிருகிறார். படத்தில் ஆங்கங்கே தொய்வும் இருக்கிறது. கதை ஓட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலம்.

    இசை

    ரகு நந்தனின் இசையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் கேட்கும் ரகம். ஜோஸ் ஃபிராங்கிளினின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு பலம்.

    ஒளிப்பதிவு

    கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் குகநேசன் சோனைமுத்து, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடுகிறார்.

    ரேட்டிங்- 2/5

    • தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் தலையிடுவதை சீனா எதிர்த்து வருகிறது.
    • சீனாவின் அத்துமீறலை கண்காணித்து வருகிறோம் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

    தைபே நகரம்:

    சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்து சென்றது.

    ஆனால், தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

    தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.

    ஆனால் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தைவான் அதனை மறுத்து வருகிறது.

    இதற்கிடையே தைவான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.

    இந்நிலையில், தைவான் கடற்பகுதியில் 11 போர்க்கப்பல் மற்றும் 7 விமானங்கள் தைவான் எல்லையைச் சுற்றி வளைத்தன.

    சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.
    • அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.

    அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது. பிரதமரின் வருகைக்காக மாநாட்டுத் திடலில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.

    இந்நிலையில், மாநாட்டுத் திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

    ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்.ஐ.ஆரை திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளனர்.

    அந்தக் கட்சி என்னையும், பா.ஜ.க.வையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், பேசட்டும். ஆனால் மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது.

    பின்தங்கிய, மேற்கு வங்கத்தின் தொலைதூர பகுதிகளுக்கு நவீன வசதிகளை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இங்கு வளர்ச்சியைக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

    மாநிலத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு அளியுங்கள் என தெரிவித்தார்.

    • பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
    • ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம்.

    நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் கட்டிடத்தில் 1,585 பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    கொற்கை கட்டிடத்தில் பாண்டியர்களின் கடல் வணிகம், முத்துக்குளித்தல் தொடர்பாக பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிவகளை கட்டிடத்தில் 5,300 ஆண்டுக்கு முந்தைய இரும்பு உருக்கும் தொழில்நுட்பம், நெல் மணிகள், பழங்கால பொருட்களை காணலாம்.

    தமிழர்களின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம். பொருநை அருங்காட்சியகத்தில் கடல் வழி வணிகம், முத்துக்குளித்தல் போன்றவற்றை திரைப்பட பாணியில் 3டி தொழில்நுட்பத்தில் காணலாம்.

    பண்டைய தமிழர்களின் பாரம்பரிய முறையில் முற்றம், தாழ்வாரம் அமைத்து பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் திறந்தவெளி திரையரங்கு, மூலிகை தோட்டம், கைவினைப்பொருட்கள் விற்பனையகம் உள்ளது.

    மலையடிவாரத்தில் அருங்காட்சியகம் அமைந்துள்ளதால் அங்கிருந்து நெல்லை மாநகர் அழகை பார்க்கும் வசதியும் உள்ளது.

    • பராசக்தி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
    • பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

    இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

    சிவகார்த்திகேயன் வந்த கார், முன்னால் சென்ற கார் மீது லேசாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்து தொடர்பாக இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் சமரசம் பேசி உள்ளனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மும்பை:

    10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. பரம போட்டியாளரான பாகிஸ்தானை பிப்.15-ந்தேதி கொழும்பில் சந்திக்கிறது.

    இந்த நிலையில். டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2-வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார். 

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம்:-

    அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன். 




    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்,

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்தில் 73 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 25 பந்தில் 63 ரன்களும் அடித்தனர். சஞ்சு சாம்சன் 37 ரன்னும், அபிஷேக் சர்மா 34 ரன்னும் எடுத்தனர்.


    தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. டி காக் அதிரடியாக ஆடினார். 35 பந்தில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டெவால்டு பிரேவிஸ் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி.
    • தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர்.

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தை ஒடுக்க நடத்தபட்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்ததையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது.

    இதையடுத்து ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவராக இருந்தவர் மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32).

    வங்காளதேசத்தில் வருகிற பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு அதில் போட்டியிட முடிவு செய்த ஷெரீப் உஸ்மான் ஹாடி தனது பிரசாரத்தை கடந்த 12-ந்தேதி மத்திய டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் தொடங்கினார்.

    அப்போது அவர் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஷெரீப் உஸ்மானின் நிலைமை மோசமடைந்ததையடுத்து அவரை மேல்-சிகிச்சைக்காக விமான ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூருக்கு இடைக்கால அரசாங்கம் அனுப்பியது.

    சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளுடன் ஷெரீப் உஸ்மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஏற்கனவே ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள், அவர் இறந்த செய்தியை அறிந்ததும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    நேற்று இரவு தலைநகர் டாக்காவில் உள்ள சாலைகளில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ஷெரீப் உஸ்மான் கொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள ஷாபாக் சந்திப்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.

    ஷெரீப் உஸ்மானை கொன்றவர்களை கைது செய்யத் தவறியதற்காக உள்துறை ஆலோசகரின் உருவ பொம்மையை எரித்தனர்.

    நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் குவிந்ததால் போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது. மேலும் நாட்டின் மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் பரவியது.

    தலைநகர் டாக்காவில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதோம் அலோ ஆகிய 2 செய்தி அலுவலகங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் அந்த அலுவலக கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

    இதில் அக்கட்டிடங்களுக்குள் ஊழியர்கள் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டுத் தீயை அணைத்தனர்.

    டாக்கா முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டம்-வன்முறையை கட்டுபடுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டன.

    அவர்களை பல இடங்களில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் போராட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை.

    ராஜ்ஷாஹியில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லத்திற்கும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அலுவலகத்திற்கும் தீ வைத்தனர். இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதடைந்தன.

    மேலும் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா வீட்டுக் கும் தீ வைக்கப்பட்டது. சிட்டகாங்கில் ஒரு முன்னாள் அமைச்சரின் இல்லத்தையும் தாக்கினர். டாக்கா-மைமன்சிங்கை இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் போராட்டகாரர்கள் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். ராஜ ஷாஹி நகரில், போராட்டக்காரர்கள் இந்தியத் தூதரக அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்தியத் துணைத்தூதரக அலுவலகம் அருகே கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்தன. சிட்டகாங்கில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அப்போது இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    நேற்று முன்தினம் டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தது. அப்போது ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

    தாக்குதல் நடத்தியவர்களை திருப்பி அனுப்பும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே ஷெரீப் உஸ்மான் இறந்ததால் இந்திய தூதரகத்தை போராட்டக்காரர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    தலைநகர் டாக்கா, சிட்ட காங் மற்றும் பிற நகரங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தது. இன்று காலை வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    ஆனால் ஷெரீப் உஸ்மான் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராட் டம் தொடரும் என்று மாணவர் இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் வங்காளதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

    ×