என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "velacherry to mount project"

    • ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
    • திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம், 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே கடந்த 1984-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியது. 1995-ம் ஆண்டு இதற்கான பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 2-ம் கட்ட பணிகள் மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே 1998-ம் ஆண்டு தொடங்கி, 2004-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், 2-ம் கட்ட பணி விரிவாக்கமாக கடந்த 2008-ம் ஆண்டு வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரூ.495 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியிருந்த ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்கு பின்பு கோர்ட்டு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. அப்போது, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரெயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போது அந்த பாலம் சரிசெய்யும் பணி முடிவடைந்துள்ளது. எஞ்சிய ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் நவம்பர் மாதம் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு, இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும். அதன்படி, வரும் நவம்பர் மாதம் இறுதியில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

    வேளச்சேரி-செயிண்ட் தாமஸ் வரை பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்பு பணி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 500 மீட்டர் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. #FlyingTrainProject
    சென்னை:

    சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவை தற்போது நடந்து வருகிறது. பறக்கும் ரெயிலில் தினமும் 50 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பறக்கும் ரெயில் திட்டத்தை வேளச்சேரி- செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன.

    தெற்கு ரெயில்வே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பறக்கும் ரெயில் திட்டத்துக்கான நில ஆர்ஜித பணிகளில் ஈடுபட்டு வந்தது.

    நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் இடையே பிரச்சனைகள் உருவானது. நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் பணம் கேட்டு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பு படி சதுர அடிக்கு ரூ.3,151 வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சதுர அடிக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கேட்டு வந்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள், குடியிருப்பு வாசிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 40 சதவீதம் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் அதிகாரிகள் மீண்டும் குடியிருப்பு வாசிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

    பறக்கும் ரெயில் திட்டம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2004-ல் திருவான்மியூர் வரை நீட்டிக்கப்பட்டது. 2007-ல் வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது.

    வேளச்சேரி-செயிண்ட் தாமஸ் வரை பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்பு பணி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 500 மீட்டர் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    நிலம் கையகப்படுத்துவது குறித்து குடியிருப்புவாசிகளிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #FlyingTrainProject
    ×