என் மலர்
நீங்கள் தேடியது "velacherry to mount project"
- வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- ரெயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதில் மிக முக்கியமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நாளை (10-ந் தேதி) முதல் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பதாகவும் இதற்கு இடையே ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமையில் வந்த குழுவினர் ரெயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதும் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், தற்போது இந்த வழித்தடத்தில் தண்டவாளப் பாதுகாப்பு பரிசோதனை முடிந்த நிலையில், ரெயில் இயக்க அனுமதிச்சான்று கிடைக்கவில்லை எனவும் தண்டவாளத்தில் சில பணிகள் மேற்கொள்ளவேண்டும் என பரிசோதனைக்கு வந்த குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின் பரங்கிமலை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாளை அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
- சோதனை ஓட்டம் முடிந்தவுடன் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் அதனை பரங்கிமலை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
பரங்கிமலை புறநகர் ரெயில் நிலையத்தோடு இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் காலதாமதம் ஆனது.
கோர்ட்டு வழக்குகளால் பணிகள் முடங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விரைவுபடுத்தப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இத்திட்டம் தொடங்கி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஒரு சில நாட்களில் இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் நாளை அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
வேளச்சேரி-பரங்கிமலை இடையான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் நாளை மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை இந்த சோதனை ஓட்டம் முதன்மை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடக்கிறது.
இந்த சோதனை ஓட்டத்தின் போது அனுமதி இல்லாத நபர்கள் யாரும் ரெயில் தண்டவாளங்களை நெருங்கவோ அதன் அருகில் வேலை செய்ய வேண்டாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சோதனை ஓட்டம் முடிந்தவுடன் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் புதிய சேவையை தொடங்கி வைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே துறை வட்டாரம் தெரிவிக்கின்றன. பிரதமர் வருவதால் தான் அவரது பயண திட்டம் குறித்த அறிவிப்பு தாமதம் ஆகிறது.
திருச்சியில் 11-ந்தேதி நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்தப் பயணத்தின் போது ரெயில்வே திட்டங்களையும் தொடங்கி வைக்க முடிவு செய்யப்படுகிறது.
பறக்கும் ரெயில் திட்டம், பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரெயில் ஆகியவற்றை தொடங்கி வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தெற்கு ரெயில்வே மூலம் நடந்து முடிந்துள்ள திட்டப் பணிகள், அம்ரித் பாரத் ரெயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தமிழகம் வரும் பிரதமர் மோடி பறக்கும் ரெயில் சேவை மற்றும் மெட்ரோ ரெயில் புதிய சேவையை தொடங்கி வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெற்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
- திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம், 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே கடந்த 1984-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியது. 1995-ம் ஆண்டு இதற்கான பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 2-ம் கட்ட பணிகள் மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே 1998-ம் ஆண்டு தொடங்கி, 2004-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், 2-ம் கட்ட பணி விரிவாக்கமாக கடந்த 2008-ம் ஆண்டு வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரூ.495 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியிருந்த ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்கு பின்பு கோர்ட்டு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. அப்போது, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரெயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போது அந்த பாலம் சரிசெய்யும் பணி முடிவடைந்துள்ளது. எஞ்சிய ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் நவம்பர் மாதம் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு, இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும். அதன்படி, வரும் நவம்பர் மாதம் இறுதியில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.
சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவை தற்போது நடந்து வருகிறது. பறக்கும் ரெயிலில் தினமும் 50 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பறக்கும் ரெயில் திட்டத்தை வேளச்சேரி- செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன.
தெற்கு ரெயில்வே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பறக்கும் ரெயில் திட்டத்துக்கான நில ஆர்ஜித பணிகளில் ஈடுபட்டு வந்தது.
நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் இடையே பிரச்சனைகள் உருவானது. நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் பணம் கேட்டு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பு படி சதுர அடிக்கு ரூ.3,151 வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சதுர அடிக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கேட்டு வந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள், குடியிருப்பு வாசிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 40 சதவீதம் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அதிகாரிகள் மீண்டும் குடியிருப்பு வாசிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
பறக்கும் ரெயில் திட்டம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2004-ல் திருவான்மியூர் வரை நீட்டிக்கப்பட்டது. 2007-ல் வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது.
வேளச்சேரி-செயிண்ட் தாமஸ் வரை பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்பு பணி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 500 மீட்டர் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
நிலம் கையகப்படுத்துவது குறித்து குடியிருப்புவாசிகளிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #FlyingTrainProject






