search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southern Railway"

    • வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • சிறப்பு ரெயிலானது மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும்.

    பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இந்த தூத்துக்குடி-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயிலானது (ரெயில் எண் 06168) வருகிற 19-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (15-ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஶ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏற்கனவே 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 2 ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 10ம் தேதி பெங்களூரில் இருந்து காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல வசதியாக கூடுதலாக 2 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, வரும் 10ம் தேதி மைசூரில் இருந்து சேலம், திண்டுக்கல் வழியாக தூத்துக்குடிக்கும், மறு மார்க்கத்தில் 11ம் தேதி மைசூருக்கும் இயக்கப்படுகிறது.

    10ம் தேதி பெங்களூரில் இருந்து காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கும், மறு மார்க்கத்தில் அதே நாளில் பெங்களூருவுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    ஏற்கனவே 5 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    இதன்மூலம், சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பயன்பெறுவர்.

    • பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இயக்கப்படும் சிறப்பு ரெயில் குறித்து அறிவிப்பு.
    • ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி, ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கம்; மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆம் தேதிகளில் மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது.

    ரெயில் எண். 06190/06191 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் – திருச்சிராப்பள்ளி ஜன் சதாப்தி அதிவிரைவு சிறப்பு ரயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் விவரம் பின்வருமாறு.

    திருச்சியில் இருந்து மாலை 5.35 க்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திரிபாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இரவு 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் தாம்பரத்திலிருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மதுரை சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையம் செல்லாது.
    • சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20628), அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

    சென்னை:

    திருச்சி - திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), இன்று (வெள்ளிக்கிழமை), 6, 8, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். மதுரை சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையம் செல்லாது.

    * கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயில் (12666), நாளை (சனிக்கிழமை) மற்றும் 11-ந்தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.

    * எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), வரும் 7, 11 ஆகிய தேதிகளில் திருச்சி- மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 7-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

    * எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும்.

    * நாகர்கோவிலில் இருந்து வரும் 9, 11 ஆகிய தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20628), அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த மே 2-ந்தேதி முதல் சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மெண்ட் மெமு விரைவு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு.
    • ரெயில்வேயின் புதிய கால அட்டவணை தொடர்பான அறிவிப்பில், 14 ரெயில்களின் எண்கள் மாற்றம் மட்டுமே புதியதாக இடம் பெற்றுள்ளது.

    சென்னை:

    ரெயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரெயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான ரெயில்வே புதிய கால அட்டவணை சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு, நாளை ஜனவரி 1-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தெற்கு ரெயில்வே புதிய கால அட்டவணை நாளை (ஜனவரி 1-ந்தேதி) முதல் அமலாக உள்ளது. இதில் புதிய ரெயில்கள், ரெயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    ஆகஸ்டு 31-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையேயான சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரெயில் (20627-20628), மார்ச் 12-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை சென்ட்ரல்- மைசூரு இடையே ஓடும் மைசூர் வந்தே பாரத் ரெயில் (20663-20664) உள்பட 8 புதிய ரெயில்களின் அறிமுகம் இடம் பெற்றுள்ளன.

    கடந்த மே 2-ந்தேதி முதல் சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மெண்ட் மெமு விரைவு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு. ஜூலை 12-ந்தேதி முதல் சென்னை சென்ட்ரல் சத்யா சாய் பிரசாந்தி நிலையம்- சென்னை சென்ட்ரல் இடையேயான வாராந்திர விரைவு ரெயில் (12691-12692) ஷிவி மொக்கா டவுன் வரை நீட்டிப்பு உள்பட 19 ரெயில்கள் செல்லும் வழித்தடங்களில் நகரங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

    சென்னை சென்ட்ரல்-மைசூரு விரைவு ரெயிலின் எண் (12609) மாற்றப்பட்டு புதிய எண் (16551) வழங்கப்பட்டுள்ளது. மைசூரு-சென்னை சென்ட்ரல் விரைவு ரெயிலின் எண் (12610) மாற்றப்பட்டு புதிய எண் (16552) வழங்கப்பட்டு உள்ளது. இது தவிர 14 ரெயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. 45 ரெயில்களுக்கு சோதனை அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    கன்னியாகுமரி-நிஜாமுதீன் இடையேயான வாரம் இருமுறை ஓடும் விரைவு ரெயில் (12641) உள்பட 56 அதிவிரைவு ரெயில்களின் வேகம் 10 முதல் 85 கி.மீ. வரை அதிகரித்து இயக்கப்பட உள்ளது. இதுபோல 46 மெயில், விரைவு ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வேயின் புதிய கால அட்டவணை தொடர்பான அறிவிப்பில், 14 ரெயில்களின் எண்கள் மாற்றம் மட்டுமே புதியதாக இடம் பெற்றுள்ளது. மற்றபடி பெரும்பாலானவை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு, அமல்படுத்தப்பட்டவையாக உள்ளன. இது பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடா வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
    • மதுரையில் இருந்து காச்சிகுடாவிற்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 2-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடா வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07436) அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது. அதே போல, காச்சிகுடாவில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலும் (07435) அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதியில் இருந்து மார்ச் 28-ந்தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது.

    காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07191) அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதியில் இருந்து மார்ச் 31-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது. அதேபோல, மதுரையில் இருந்து காச்சிகுடாவிற்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07192) அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 28-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை ரத்து.
    • திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 28-ந் தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை ரத்து.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 27-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரையும், மறுமார்க்கமாக, காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 28-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 28-ந் தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரையும், மறுமார்க்கமாக, காட்பாடியில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 27-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும்.
    • கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    சென்னை:

    திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதாக கடந்த 10-ந்தேதி தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இதனால் பல்வேறு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.22671), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22672) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * குருவாயூரில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * செங்கோட்டையில் இருந்து வரும் 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16848), நாகர்கோவிலில் இருந்து வரும் 31-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16340), உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வரும் 29-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16368) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * இதேபோல, கன்னியாகுமரியில் இருந்து வரும் 28-ந் தேதி காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயிலும் (12666), நாகர்கோவிலில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16354) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * நாகர்கோவிலில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16321), மறுமார்க்கமாக கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * ஈரோட்டில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்ட செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16845). மறுமாா்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16846) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி இயங்கும்.
    • சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ரெயில் சேவைகள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்.

    கிறிஸ்துமஸ் பண்டியை நாளை மறுதினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேசிய விடுமுறையாகும்.

    இதனையொட்டி புதன்கிழமை சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி/சூளுர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    அதேபோல் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் ஞாயிறு போன்று ஒரு ஷிப்ட் அடிப்படையில் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    • இந்த ரெயில் முதலில், சென்னை-பெங்களூரு இடையே இயக்கப்பட்டது.
    • 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல்-மைசூரு அதிவிரைவு ரெயில், மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு பெங்களூருவை அடையும். இரவு 10 மணிக்கு மைசூருவை சென்றடையும். இந்த ரெயில் 23 நிலையங்களில் நின்று செல்கிறது. 497 கி.மீ. தூரத்தை 9 மணி 15 நிமிடங்களில் கடக்கும் இந்த ரெயில் சராசரியாக மணிக்கு 54 கி.மீ. வேகத்தை கொண்டிருக்கிறது.

    இந்த ரெயில் முதலில், சென்னை-பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. இதன்பிறகு, 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த அதிவிரைவு ரெயில் ஜனவரி 3-ந்தேதி முதல் சாதாரண விரைவு ரெயிலாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயிலின் குறைந்தபட்ச சராசரி வேகமான 55 கி.மீ. வேகத்தை பராமரிக்கத் தவறியதால், இந்த ரெயில் சாதாரண ரெயிலாக மாற்றப்பட உள்ளது. ரெயில் கட்டணமும் குறைக்கப்பட உள்ளது.

    அதன்படி சென்னை-மைசூரு இன்டர்சிட்டி விரைவு ரெயில் கட்டணம் இரண்டாம் வகுப்பு இருக்கைக்கு ரூ.15-ம், சேர்கார் வகுப்புக்கு ரூ.45-ம் குறையும். இதுபோல, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விரைவு ரெயிலில் பயணிப்பவர்களுக்கான சீசன் டிக்கெட் கட்டணம் கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது.

    • சி.எஸ்.டி மும்பை விரைவு ரெயில் (16340) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.
    • கச்சக்குடா விரைவு ரெயில் (16354) திருச்சி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    நெல்லை:

    தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல்-திருச்சி ரெயில் பாதை பிரிவில் ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக மதுரை கோட்டம் சார்பில் ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி செங்கோட்டையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 14, 17, 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை விரைவு ரெயில் (16848), நாகர்கோவிலில் இருந்து நாளை புறப்பட வேண்டிய சி.எஸ்.டி மும்பை விரைவு ரெயில் (16352), குருவாயூரில் இருந்து இன்று மற்றும் 13, 16, 27, 30 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (16128), கன்னியாகுமரியில் இருந்து வருகிற 14, 28 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹவுரா விரைவு ரெயில் (12666), நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 13-ந்தேதி புறப்பட வேண்டிய சி.எஸ்.டி மும்பை விரைவு ரெயில் (16340) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.

    நாகர்கோவிலில் இருந்து வருகிற14, 28 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரெயில் (16354) திருச்சி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    மயிலாடுதுறையில் இருந்து வருகிற 14-ந்தேதி புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரெயில் (16847), கச்சக்குடாவில் இருந்து நாளை மறுநாள் புறப்பட வேண்டிய நாகர்கோவில் சிறப்பு ரெயில் (07435), சென்னை எழும்பூரில் இருந்து 14-ந்தேதி புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரெயில் (16127) ஆகியவை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து வருகிற 28, 31-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரெயில்கள் (16321-16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வரும் 14-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியும், ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.
    • வரும் 15-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியும், ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயிலில் (வண்டி எண்.08557), வரும் 14-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியும், ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.

    மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் சிறப்பு ரெயில் (08558), வரும் 15-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியும், ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×