search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southern Railway"

    • ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
    • இரவு நேரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி ரத்து செய்யப்படும்.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (ஜூலை 23) துவங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை தினமும் சுமார் இரண்டு லட்சம் பயணிகள் ரெயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் 55 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

    இந்த நிலையில், இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை ரெயில் சேவைகள் ரத்து செய்யும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக இன்று வழக்கம் போல் ரெயில் சேவைகள் இயங்கும்.

    எனினும், இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை மட்டும் புறநகர் ரெயில்கள் முன்பு அறிவித்தப்படி இயங்காது. வருகிற சனிக்கிழமை (ஜூலை 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) புறநகர் ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி ரத்து செய்யப்படும்.

    ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை புறநகர் ரெயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போல் ரத்து செய்யப்படும். 

    • அதிகாலை முதல் காலை 09:20 மணி வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்.
    • கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும் / டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் உதவிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

    ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

    ரத்து செய்யப்பட்ட 55 மின்சார ரயில்கள்


    • அதிகாலை முதல் காலை 09:20 மணி வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்.

    • மதியம் 01:00 மணியிலிருந்து இரவு 10:20 வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்.

    ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் சிறப்பு மின்சார ரயில்களின் கால அட்டவணை


    • பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக, பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ரயில்களின் ரத்து குறித்த விவரங்களை ரயில் நிலைய அறிவிப்பு (Station Announcement) / அறிவிப்பு பலகைகள் மூலமாகவும், மேலும் செய்தித்தாள்கள். டிவி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

    • மேலும், சென்னை எழும்பூர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையம் (Passenger Help Desk) ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    • கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும் / டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் உதவிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் செங்கல்பட்டிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் இயக்கப்பட உள்ளது.

    • ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த பராமரிப்புப் பணி நடைபெறுவதன் காரணமாக பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்றவாறு திட்டமிடும்படி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது. பயணிகளுக்கு ஏற்படும்

    சிரமத்திற்கு வருந்துகிறோம்.

    • சென்னையில் வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ம் தேதி வரை 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • இதற்கு மாற்றாகவும், பயணிகள் வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் வரும் 23-ம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ம் தேதி வரையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கூடுவாஞ்சோி செல்லும் மின்சார ரெயில்கள் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    தாம்பரத்தில் இருந்து காலை 10.30, 10.40, 11, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டிலிருந்து காலை 11, 11.30, மதியம் 12, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    இதற்கு மாற்றாகவும், பயணிகள் வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே 15 சிறப்பு மின்சார ரெயில்களும், பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே 15 சிறப்பு மின்சார ரெயில்களும், கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே 7 சிறப்பு மின்சார ரெயில்களும், செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே 7 சிறப்பு மின்சார ரெயில்கள் என மொத்தம் 44 சிறப்பு மின்சார ரெயில்கள் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு14-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

    சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, இரவு 10.40, 11.05, 11.30, 11.59, ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 10.20, 10.40, 11, 11.20, 11.40, மதியம் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, 12.20, 12.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.

    கூடுவாஞ்சேரியிலிருந்து காலை 10.45, 11.10, மதியம் 12, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து காலை 10, 10.30, 11, 11.45, மதியம் 12.30, 1, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
    • நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரம் பணிமனையில் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-20691) வருகிற 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20692) வருகிற 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) 23-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12653) 24-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 1-ம் தேதி வரை செங்கல்பட்டில் இருந்து புறப்படும். ஐதராபாத்தில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12760) 22-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை சென்னை கடற்கரை சென்றடையும். அதேபோல, தாம்பரத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12759) 22-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

    செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20684) 22, 24, 26, 27, 29, 31 ஆகிய தேதியில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் இந்த ரெயில் விழுப்புரம்-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20683) 24, 25, 28, 30 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635) 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை செங்கல்பட்டில் இருந்து புறப்படும். மேலும் இந்த ரெயில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12606) 23-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் இந்த ரெயில் செங்கல்பட்டு-சென்னை எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாகர்கோவிலில் இருந்து இன்று மாலை புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
    • தாம்பரத்தில் இருந்து நாளைகாலை புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவிலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012) ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 7.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06011) ரத்துசெய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல ரெயில்கள் தாமதமாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னைக்கு ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் முன் கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    நெல்லை:

    சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் இன்டர்லாக் சிக்னல் பணிகள் காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து புறப்படும் பல ரெயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்படும் (வண்டி எண் 20683 / 20684) தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 11-ந்தேதி வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ரெயில்கள் தாமதமாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை சென்னைக்கு ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் முன் கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    அதேபோல் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டுடன் நின்று விடும். அவை தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூருக்கு செல்லாது என தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரையில் இருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மதுரையில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை காலை 11.55 புறப்படும். தற்போது அதற்கு மாற்றாக மதுரையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    சென்னை:

    பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பல்வேறு வாராந்திர சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.07695) இன்று (புதன்கிழமை), 10, 17 ஆகிய தேதிகள் வரையும் (புதன்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, ராமநாதபுரத்தில் இருந்து செகந்திராபாத் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (07696) வரும் 5, 12, 19 ஆகிய தேதிகள் வரையும் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவில் இருந்து மதுரை வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (07191) வரும் 8, 15, 22, 29 ஆகஸ்டு 5, 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகள் வரையும் (திங்கட்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக மதுரையில் இருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (07192) இன்று (புதன்கிழமை), 10, 17, 24, 31 ஆகஸ்டு 7, 14, 21, 28 செப்டம்பர் 4, 11, 18, 25 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகள் வரையும் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஈரோடு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (07189) வரும் 5, 12, 19, 26 ஆகஸ்டு 2, 9, 16, 23, 30 செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகள் வரையும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக ஈரோட்டில் இருந்து மகாராஷ்டிரா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (07190) வரும் 7, 14, 21, 28 ஆகஸ்டு் 4, 11, 18, 25 செப்டம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் வரையும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவில் இருந்து நாகர்கோவில் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (07435) வரும் 5, 12, 19, 26 ஆகஸ்டு 2, 9, 16, 23, 30 செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகள் வரையும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (07436) வரும் 7, 14, 21, 28 ஆகஸ்டு 4, 11, 18, 25 செப்டம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் வரையும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * குறிப்பாக மதுரையில் இருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரையில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை காலை 11.55 புறப்படும். தற்போது அதற்கு மாற்றாக மதுரையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் திண்டுக்கல் 11.40 மணிக்கும், திருச்சி 1.25 மணிக்கும், தஞ்சாவூர் 2.43 மணிக்கும், பாபநாசம் 3.05 மணிக்கும், கும்பகோணம் 3.23 மணிக்கும் சென்றடையும். அதன்பின் செல்லும் ரெயில் நிலையங்களுக்கு வழக்கமான நேரத்திலேயே செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அட்டவணையில் புதிய ரெயில்களின் இயக்கம், கூடுதல் ரெயில் நிறுத்தம், ரெயில்கள் இயங்கும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும்.
    • புதிதாக வர இருக்கிற அட்டவணைக்கு தென்மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

    சென்னை:

    ரெயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணையில் புதிய ரெயில்களின் இயக்கம், கூடுதல் ரெயில் நிறுத்தம், ரெயில்கள் இயங்கும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும்.

    இந்த நிலையில், புதிய ரெயில்வே அட்டவணை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 1-ம் தேதி வெளியிடப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில நிர்வாக காரணங்களுக்காக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அனைத்து பொது மேலாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 31-ம் தேதி வரை பழைய ரெயில்வே அட்டவணை பின்பற்றப்படும்.

    இதேபோல, புதிதாக வர இருக்கிற அட்டவணைக்கு தென்மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடும் கூட்ட நெரிசலுடன் செல்வதால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். புதிய அட்டவணை மூலம் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • வாரந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06036), வரும் ஜூலை மாதம் 5, 7, 12, 14, 19, 21 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தாம்பரம் - நாகர்கோவில், தாம்பரம் - கொச்சுவேலி இடையே ஏற்கனவே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அந்த வாரந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வரும் வாரந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), வரும் ஜூலை மாதம் 7, 14, 21 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011), வரும் ஜூலை மாதம் 8, 15, 22 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, தாம்பரத்தில் இருந்து வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.40 மணிக்கு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06035), வரும் ஜூலை மாதம் 4, 6, 11, 13, 18, 20 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06036), வரும் ஜூலை மாதம் 5, 7, 12, 14, 19, 21 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்கால் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
    • காரைக்காலில் இருந்து ஜூலை 3-ம் தேதி எர்ணாகுளம் புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், அதற்கு மாற்றாக நாகப்பட்டினத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் செல்லும்.

    சென்னை

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி கோட்டம், காரைக்கால் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

    தஞ்சாவூரில் இருந்து வரும் 28, 29, 30 மற்றும் ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06832) நாகர்கோவில் - காரைக்கால் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், திருச்சியிலிருந்து வரும் 28, 29, 30 மற்றும் ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06490) நாகர்கோவில் - காரைக்கால் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது. திருச்சியிலிருந்து வரும் வரும் 28, 29, 30 மற்றும் ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் காலை 8.35 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06880) நாகர்கோவில் - காரைக்கால் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது.

    இதேபோல, எர்ணாகுளத்தில் இருந்து ஜூலை 1-ம் தேதி இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16188) நாகப்பட்டினம் - காரைக்கால் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது. மேலும், எர்ணாகுளத்தில் இருந்து ஜூலை 2-ம் தேதி இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16188) நாகர்கோவில் - காரைக்கால் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 2-ம்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16175) நாகப்பட்டினம் - காரைக்கால் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது.

    இதேபோல, காரைக்காலில் இருந்து ஜூலை 3-ம் தேதி மாலை 4.30 மணிக்கு எர்ணாகுளம் புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16187), அதற்கு மாற்றாக நாகப்பட்டினத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • தாம்பரம்-நாகர்கோவில் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை:

    சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, தாம்பரம்-நாகர்கோவில் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடைகிறது.

    மறுமாா்க்கமாக நாகர்கோவிலில் இருந்து நாளை பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை மறுநாள் தாம்பரம் வந்தடைகிறது.

    அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும் (16-ம் தேதி) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும், பின்னர் மறுமாா்க்கமாக நாகர்கோவிலில் இருந்து 17-ம் தேதி புறப்பட்டு (18-ம் தேதி) தாம்பரத்தையும் சிறப்பு ரெயில் வந்தடைகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மைசூருவில் இருந்து ஜூலை 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து.
    • சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 2, 9 ஆகிய தேதிகளில் திருப்பதி செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 1, 2, 8, 9 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.16021), மறுமார்க்கமாக, மைசூருவில் இருந்து ஜூலை 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16022) ரத்து செய்யப்படுகிறது.

    மேலும், திருப்பதியிலிருந்து ஜூலை 2, 9 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரல் வரும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16204), மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 2, 9 ஆகிய தேதிகளில் திருப்பதி செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16203) ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல, பெங்களூருவில் இருந்து ஜூலை 2, 9, 30 மற்றும் ஆகஸ்டு 6, 13 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12658), மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 3, 10, 30, 31 மற்றும் ஆகஸ்டு 6, 7, 13, 14 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12657) ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×