என் மலர்
நீங்கள் தேடியது "Southern Railway"
- பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
* சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும், தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஜூலை 2-ந்தேதி மற்றும் 4-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருச்செந்தூர் - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு நெல்லை செல்லும்.
- மறுமார்க்கத்தில் நெல்லை- திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும்.
செங்கோட்டை:
நெல்லை - செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை - செங்கோட்டை இடையே வருகிற 1-ந் தேதி முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
நெல்லை பகுதிக்கு 2 ஜோடி சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதன்படி நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு செங்கோட்டை செல்லும்.
இதே மார்க்கத்தில் மற்றொரு நெல்லை-செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை செல்லும்.
மறுமார்க்கத்தில் செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு நெல்லை செல்லும். இதே மார்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு நெல்லை செல்லும்.
இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருச்செந்தூர் - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு நெல்லை செல்லும். மறுமார்க்கத்தில் நெல்லை- திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும்.
இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில் மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.20 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மாலை 3.35 மணிக்கு மதுரை செல்லும்.
இந்த ரெயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
- தாம்பரம்-கடற்கரை இடையே பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று மற்றும் 27-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தாம்பரம்-கடற்கரை இடையே பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
* தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.40 மணி, 11.15 மணி மற்றும் 11.35 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.30 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் ரெயில்வேயுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- மறு உத்தரவு வரும் வரை பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் பாரத்பந்த் காரணமாக ரெயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரத் பந்த் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும், மறு உத்தரவு வரும் வரை பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
ரெயில் பயனாளிகள் மற்றும் ரெயில்வே சொத்துக்களின் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கு, பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரெயில்வேயுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- சென்டிரல்-திருத்தணி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பராமரிப்பு பணி காரணமாக சென்டிரல்-அரக்கோணம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 8-ந்தேதிகளில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் 8-ந்தேதிகளில் திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்டிரல்-திருத்தணி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் 8-ந்தேதிகளில் திருவள்ளூர்-திருத்தணி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணம்-சென்டிரல் இடையே காலை 10 மணி, 11.10 மணி மற்றும் மதியம் 12 மணி, 1.50 மணிக்கும், திருத்தணி-சென்டிரல் இடையே காலை 10.15 மணி மற்றும் மதியம் 12.35 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை மற்றும் 8-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில்களுக்கு பதிலாக கடம்பத்தூர்-சென்டிரல் இடையே காலை 10.25 மணி, 11.35 மணி, மதியம் 1.25 மணிக்கும், திருவள்ளூர்-சென்டிரல் இடையே காலை 11.10 மணி, மதியம் 12.35 மணிக்கும், அரக்கோணம்-சென்டிரல் இடையே மதியம் 1.50 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரெயில் மேற்கண்ட தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நிலச்சரிவு காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் இன்று (17-ந்தேதி) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
* நாகர்கோவில்-திருவனந்தபுரம் (வண்டி எண்: 06426), திருவனந்தபுரம்-நாகர்கோவில் (06427), கொல்லம்-திருவனந்தபுரம் (06425), திருவனந்தபுரம்-கொல்லம் (06435) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் (12634) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-குருவாயூர் (16127) இடையே இயக்கப்படும் ரெயில் நெல்லை-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு (16525) ரெயில் கன்னியாகுமரி-கொல்லம் இடையிலும், நாகர்கோவில்-கோட்டயம் (06366) ரெயில் நாகர்கோவில்-கொல்லம் இடையிலும், கொல்லம்-எழும்பூர் (16724) ரெயில் கொல்லம்-நாகர்கோவில் இடையிலும், நாகர்கோவில்-மங்களூரு (06650), நாகர்கோவில்-மங்களூரு (06606) ரெயில்கள் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* மங்களூரு-நாகர்கோவில் (06649), மங்களூரு-நாகர்கோவில் (06605) ரெயில்கள் திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையிலும், திருச்சி-திருவனந்தபுரம் (02627) ரெயில் நெல்லை-திருவனந்தபுரம் இடையிலும், திருவனந்தபுரம்-திருச்சி (02628) ரெயில் திருவனந்தபுரம்-நெல்லை இடையிலும், கன்னியாகுமரி-ஹசரத் நிசாமுதீன் (06011) ரெயில் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது.
இதனால், சென்னை முழுவதும் வெள்ளக்காடானது. தொடர் மழை எதிரொலியால், ரெயில் சேவையும் நேற்று பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், ரெயில் சேவை சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 24-ந்தேதி புறப்பட்ட சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பால்ராஜ் என்பவர் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்தார். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பயணம் செய்த பெட்டியில் மின் தடை ஏற்பட்டது.
மாலை 5.50 மணிக்கு ஏற்பட்ட மின் தடை இரவு 8.25 மணிவரை சரியாகவில்லை. சுமார் 2½ மணி நேரம் மின் தடையால் அந்த பெட்டி முழுவதும் இருளில் மூழ்கியது. மின் விசிறிகளும் ஓடவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இருளில் குழந்தைகளை தொலைத்து விடக்கூடாது என்ற அச்சமும் அவர்களை வாட்டியது.
ரெயில் அரக்கோணம் வந்ததும் ரெயில்வே ஊழியர்கள் வந்து பழுது பார்த்து மின் தடையை சரி செய்தனர். அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எனினும் மின் தடையால் அவதியடைந்த பால்ராஜ் சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் சமரச தீர்வு மையத்தில் புகார் செய்தார்.
அதில், மின் தடையால் அவதியடைந்த எனக்கு நஷ்டஈடாக ரூ.3 லட்சம் வழங்க ரெயில்வே துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார். அதன் பேரில் நுகர்வோர் சமரசத்தீர்வு மையம் விசாரணை நடத்தியது.
அப்போது புகாரில் குறிப்பிட்டிருந்த பெட்டியில் மின் தடை ஏற்பட்டதை தெற்கு ரெயில்வே ஒப்புக்கொண்டது. ரெயில் இயக்க கட்டுப்பாட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டதாக விளக்கம் அளித்த ரெயில்வே அதிகாரிகள், மின் தடை புகார் வந்ததும் அடுத்த நிறுத்தத்திலேயே ஊழியர்களால் சரி பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நுகர்வோர் சமரச தீர்வு மைய தலைவர் லட்சுமிகாந்தம், புகார்தாரருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்க தென்னக ரெயில்வேக்கு உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம்-தக்கோலம் இடையே புதிய ரெயில் பாதையில் சிக்னல்கள் மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை சென்னை-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பல்வேறு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரலில் காலை 7.25 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22625) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22626) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் பெங்களூரு சதாப்தி ரெயில் (12027) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். பெங்களூருவில் காலை 6 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் சென்னை சதாப்தி அதிவிரைவு ரெயில் (12028) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.
பெங்களூரு - சென்னை அதிவிரைவு ரெயில் (12608), காட்பாடி ஜங்ஷன் வரை இயக்கப்பட்டு, காட்பாடியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் மைசூர்- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12610) காட்பாடியில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்தாகிறது.
வாஸ்கோடகாமா- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (17312) ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ஏப்ரல் 4 மற்றும் 11-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.
ஹூப்ளி - சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (22679) ஏப்ரல் 6 மற்றும் 13-ந் தேதியில் ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். அன்றைய தேதிகளில் ஜோலார்பேட்டையில் இருந்த சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படுகிறது.
பெங்களூரு- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (12640) ஏப்ரல் 14-ந் தேதி சோளிங்கர் வரை இயக்கப்பட்டு அங்கிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படும்.

சென்னை சென்ட்ரல்- வாஸ்கோடகாமா விரைவு ரெயில் (17311) சென்னை சென்ட்ரல்- ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 5 மற்றும் 12-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி அதிவிரைவு ரெயில் (22698) சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 7 மற்றும் 14-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.
தனப்பூர்- பெங்களூரு இடையே இயக்கப்படும் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12296) ஏப்ரல் 12-ந்தேதி கூடூர்- சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்- காட்பாடி வழியாக இல்லாமல், கூடூர்- ரேணிகுண்டா- திருப்பதி- காட்பாடி வழியாக இயக்கப்படும்.
பெங்களூரு- தனப்பூர் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12295) ஏப்ரல் 5-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை காட்பாடி- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி திருப்பதி- கூடூர் வழியாக இயக்கப்படும்.
பெங்களூரு- தர்பாங்க் வரை இயக்கப்படும் பாக்மதி அதிவிரைவு ரெயில் (12578) ஏப்ரல் 13-ந் தேதி முதல் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயங்கும்.
யஷ்வந்த்பூர் - கமாக்கியா அதிவிரைவு ரெயில் (12552) ஏப்ரல் 3 மற்றும் 10-ந் தேதியில் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் வழியாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயக்கப்படும்.
பெங்களூரு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12658) ஏப்ரல் 13-ந் தேதி காட்பாடி- அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் மார்க்கமாக இல்லாமல் காட்பாடி- வேலூர்- திருவண்ணாமலை- விழுப்புரம்- எழும்பூர்- கடற்கரை வழியாக இயக்கப்படும்.
நேரம் மாற்றியமைக்கப்படும் ரெயில்கள் விவரம்
சென்னை சென்ட்ரல் - சாய்நகர் வாராந்திர ரெயில் (22601) ஏப்ரல் 10-ந் தேதி காலை 10.10 மணிக்கு பதிலாக பிற்பகல் 1.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.
யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரெயில் ஏப்ரல் 14-ந் தேதி காலை 11 மணிக்கு பதிலாக மாலை 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway