என் மலர்
நீங்கள் தேடியது "தெற்கு ரெயில்வே"
- எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
- சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16866), கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22662), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 15-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.
* எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22661), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.
- ரெயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரெயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது ரெயில் நிலைய வளாகத்தின் எந்த பகுதியிலும் கற்பூரம், மெழுகுவர்த்தி, விளக்குகள் ஆகியவற்றை ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது ரெயில்வே சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில், ரெயில் மூலம் சபரிமலை செல்லும் பக்தர்கள் ரெயில்களுக்குள்ளோ அல்லது ரெயில் நிலைய வளாகத்திற்குள்ளோ கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ரெயில் பயணத்தின் போது பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரெயில்வே சொத்துகளைப் பாதுகாப்பதற்கே இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ரெயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது தீ விபத்தை ஏற்படுத்தும். ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இதுகுறித்து, சபரிமலை செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்களிடம் சென்னை கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. தடையை மீறி கற்பூரம் ஏற்றுவதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை குழுக்கள் ரெயில்களுக்குள்ளும், ரெயில் நிலைய வளாகங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடிகால்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் எளிதாக வடிவதற்குத் தற்காலிக கால்வாய்கள் வெட்டப்பட்டு உள்ளன.
- சென்னை சென்ட்ரலில் தானே இயங்கும் விபத்து நிவாரண ரெயில் தயார் நிலையில் உள்ளன.
சென்னை:
'டிட்வா' புயலைக் கருத்தில் கொண்டு, பயணி கள் மற்றும் ரெயில்வே கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் விரிவான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. இதற்காகக் கோட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, பெரம்பூர், ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் சூலூர்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர்.
வடிகால்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் எளிதாக வடிவதற்குத் தற்காலிக கால்வாய்கள் வெட்டப்பட்டு உள்ளன.
அனைத்து அதிகாரிகளும் தங்களது தலைமையகத்தில் இருக்கவும், குறுகிய அறிவிப்பில் பணிக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
எந்தவொரு அவசர நிலையையும் சமாளிக்க, சென்னை சென்ட்ரல், செங்கல்பட்டு மற்றும் ஜோலார்பேட்டையில் விபத்து நிவாரண ரெயில்கள் மற்றும் சென்னை சென்ட்ரலில் தானே இயங்கும் விபத்து நிவாரண ரெயில் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
மின் இணைப்புகளைச் சரிசெய்யப் பணியாளர்களுடன் கூடிய 'டவர் வேகன்கள்' மற்றும் அவசரத் தேவைக்காக டீசல் என்ஜின்கள் முக்கிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. குறைந்தது 72 மணி நேரத்திற்குத் தேவையான டீசல் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிர் சேதத்தைத் தடுப்பதே எங்களின் முதல் முன்னுரிமை என்று, சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கருதி தேவைப்பட்டால் சில பகுதிகளில் ரெயில் சேவைகள் நிறுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- முதற்கட்டமாக 10 ரெயில்களில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
தெற்கு ரெயில்வேயில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிப்போர் கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகளை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிப்போர் கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகளை பயன்படுத்தும் வசதி ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, தலையணை-ரூ.30, பெட்ஷீட்-20 பெறலாம் எனவும், ரூ.50 கொடுத்து உறையுடன் கூடிய தலையணை, பெட்ஷீட் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, ஜனவரி 1ம் தேதி முதல் தென்னக ரெயில்வேயில் முதற்கட்டமாக 10 ரெயில்களில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி, மங்களூர், மன்னார்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திருவனந்தபுரம் விரைவு ரெயில்களில் வரும் ஜனவரி 1ம் தேத முதல் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- அரக்கோணத்தில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) இரவு 11.30 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 2.30 மணி வரையில் (3 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* மூர்மார்க்கெட்டில் (சென்னை சென்ட்ரல்) இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66009), திருவலங்காடு-அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.
- இந்த சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.
சென்னை:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.
பனாரசில் இருந்து 7-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 9-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
இதேபோல, சென்டிரலில் இருந்து டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் 7-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 11-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 17-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 19-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
- கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சிறப்பு ரெயில்கள் மட்டுமின்றி, கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
தெற்கு ரெயில்வேயைப் பொறுத்தவரையில், கடந்த 2 ஆண்டுகளைவிட நடப்பாண்டில் அதிகளவு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்கு ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 7 மாதங்களில் ரெயில்களில் 5 ஆயிரத்து 436 கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.22.97 கோடி வருவாய் கிடைத்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும்.
- ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும்.
சென்னை:
தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் அடுத்த மாதம் 12-ந்தேதி முதல் இயக்கப்படவுள்ளன. கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை ராயபுரம் வரை இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கான பார்சல்களை ஏற்றுவதற்கு ஒதுக்கப்படும்.
ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும். வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் இந்த ரெயில் மங்களூருவில் இருந்து டிசம்பர் 12-ந் தேதி புறப்பட்டு 13-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை ராயபுரம் வந்தடையும். பின்னர், 16-ந்தேதி மாலை 3.45 மணிக்கு ராயபுரத்தில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்றடையும்.
இதில் ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும். ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு 3 பிரிவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் இந்த ரெயிலானது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கன்னூர் உள்ளிட்ட 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அடுத்தக்கட்டமாக சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12608) வருகிற 23-ந் தேதி வரையும், காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12680) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16054) 23-ந் தேதி அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12679) சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) 23-ந் தேதி சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16053) சென்ட்ரல்-அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (20643) வருகிற 23-ந் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
- வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16327) வருகிற 22-ந் தேதி கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16328) 23-ந்தேதி குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த ரெயில் மதியம் 12.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12695) வருகிற 21-ந் தேதி கோட்டயம்-திருவனந்தபுரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இதே வழித்தடத்தில் 25-ந்தேதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22207) பகுதிநேரமாக எர்ணாகுளம் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12696) வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127) 25-ந் தேதி 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும். அதே தேதியில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போத்தனூரில் புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் வழக்கமாக வரும் நேரத்தைவிட 5 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
- சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24-ந்தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12657), அதற்கு மாற்றாக சென்னை சென்டிரலில் இருந்து மறுநாள் (27-ந்தேதி) அதிகாலை 1.30 மணிக்கு (2 மணி நேரம் 40 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செல்லும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (22649), அதற்கு மாற்றாக மறுநாள் (27-ந்தேதி) அதிகாலை 1.40 மணிக்கு (2 மணி நேரம் 40 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செல்லும்.
* எழும்பூரில் இருந்து வருகிற 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வழக்கமாக மதுரை செல்லும் நேரத்தைவிட 20 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* போத்தனூரில் இருந்து வருகிற 21-ந்தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06124), வழக்கமாக சென்டிரல் வரும் நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
* போத்தனூரில் இருந்து வருகிற 28-ந்தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06124), வழக்கமாக வரும் நேரத்தைவிட 5 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (06151), வழக்கமாக கன்னியாகுமரி செல்லும் நேரத்தைவிட 25 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 19,21 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் குண்டக்கல் செல்லும் சிறப்பு ரெயில் (06091), வழக்கமாக செல்லும் நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 21-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (12691), வழக்கமாக நேரத்தைவிட 20 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24-ந்தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12601), வழக்கமாக நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மகர விளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக காக்கி நாடா, கோட்டயம் சிறப்பு ரெயில் உள்பட 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
- ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும்.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, காக்கி நாடா, கோட்டயம் சிறப்பு ரெயில் உள்பட 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி காக்கிநாடா டவுனில் இருந்து வருகிற 17 -ந்தேதி மற்றும் டிசம்பர் 1, 8, 15, 22, 29 ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து வருகிற 18-ந் தேதி மற்றும் டிசம்பர் 2, 9, 16, 23, 30 ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரெயில் (07110) இயக்கப்படும். இந்த ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும்.
மகாராஷ்டிரா ஹசூர் சாஹிப் நாந்தேட்-கொல்லம் இடையே ஒரு சிறப்பு ரெயிலும், தெலுங்கானா சார்பள்ளி-கொல்லம் இடையே ஒரு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






