என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெற்கு ரெயில்வே"

    • வரும் மார்ச் 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.
    • நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும்போது வழக்கம்போல எழும்பூரில் இருந்து புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் மின்சார ரெயில் நடைமேடை 10, 11-ல் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக கூட்ட நெரிசலான நேரங்களில் (பீக் அவர்ஸ்) மின்சார ரெயில்களை சீராக இயக்க எழும்பூரில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிலவற்றில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12661), வரும் மார்ச் 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறபட்டு செங்கோட்டை செல்லும். பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு வழக்கம்போல எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடையும்.

    * நெல்லையில் புறப்பட்டு எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (12632), வரும் மார்ச் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையில், தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 6.25 மணிக்கு வந்தடையும். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும்போது வழக்கம்போல எழும்பூரில் இருந்து புறப்படும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22675), வரும் 28-ந்தேதி முதல் மார்ச் 15-ந்தேதி வரையில் எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு (2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக) புறப்பட்டு திருச்சி செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பல்வேறு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன.
    • சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள் நடப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நடைமேடை 10 மற்றும் 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன. நேற்று முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை (45 நாட்கள்) இந்த மாற்றம் அமலில் இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையில் இருந்தும். மறுமார்க்கமாக வரும் ரெயில்கள் 5-வது நடைமேடையில் இருந்தும் இயக்கப்பட்டன.

    சுமார் 40 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார ரெயில்கள், 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன.

    எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், சேத்துப்பட்டு கிராசிங்கில் உள்ள ஒரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் நின்று, ஒரு ரெயில் வந்த பின்னரே எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரெயில் அந்த வழித்தடத்தில் செல்ல முடிந்தது.

    இதனால், பல்வேறு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வேலை மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டுச் செல்லும் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று முதல் மாம்பலத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    எழும்பூரில் இருந்து புறப்படும் திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில், சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் மாம்பலத்தில் நாளை முதல் ஏப்.6 வரை நின்று செல்லும். மாம்பலத்தில் நிற்கும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள் நடப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்கள் நடைபெறவுள்ளன.
    • பயணிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை, ஆதரவையும் வழங்க வேண்டும் என்றனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடக்கும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ஏப்ரல் 5-ம் தேதி வரை கடற்கரை-தாம்பரம் -செங்கல்பட்டு வழித்தடத்தில் 40 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எழும்பூரில் 10, 11 நடைமேடைகளில் பணிகள் நடைபெறவுள்ளதால், 5 மற்றும் 6 நடைமேடைகளில் புறநகர் ரெயில்கள் வந்து செல்லும் வகையில் தற்காலிக அட்டவணை அமலுக்கு வந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில், புறநகர் ரெயில் சேவையில் குளறுபடிகள் ஏதுமில்லை என தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் முக்கிய மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்கள் காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் பயணிகள், பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குமாறு தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் மனமாரக் கேட்டுக்கொள்கிறது.

    இந்த முக்கிய கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவில் சில புறநகர் ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதும், சில சேவைகள் மாற்றி அமைக்கப்படுவதும் இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கவனமாக திட்டமிடப்பட்டவை ஆகும். திட்டமிட்ட காலக்கெடுவில் பாதுகாப்பாகவும் திறம்படவும் பணிகளை நிறைவேற்றுவதற்காக அவை அவசியமானவை.

    இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டத்தின் நோக்கம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய, பயணிகள் நட்பு நிலையமாக மாற்றுவதாகும். மேம்பட்ட வசதிகள். உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.

    இந்த தற்காலிக மாற்றங்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என புரிந்துகொள்கிறோம். தினசரி லட்சக்கணக்கான பயணிகளுக்கும் வருங்கால தலைமுறைகளுக்கும் நீண்டகால நன்மைகளை வழங்க இவை அவசியமானவை.

    சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சரிபார்க்கப்படாத மற்றும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன என்பது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, செயல்பாட்டு தோல்வி அல்லது பாதுகாப்பற்ற ரெயில் இயக்கம் குறித்த தவறான தகவல்கள் தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

    அனைத்து ரயில் இயக்கங்களும் நிலையான பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கடுமையான கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

    பயணிகள் பாதிப்பு குறித்த முழுமையான மதிப்பீட்டின் பின்னரே இந்த செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் மற்றும் செயல்பாட்டு துறை அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் திட்டமிட்டுச் செயல்படுத்தியுள்ளனர்.

    பயணிகள் அனைவரும் தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் வழிகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் தொடர்ந்த ஒத்துழைப்பும் புரிதலும் உடன், இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி, அனைவருக்கும் பாதுகாப்பான, திறம்பட்ட மற்றும் வசதியான பயண அனுபவத்தை உருவாக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.

    • எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன.
    • மாம்பலத்தில் நிற்கும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நடைமேடை 10 மற்றும் 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன. நேற்று முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை (45 நாட்கள்) இந்த மாற்றம் அமலில் இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையில் இருந்தும். மறுமார்க்கமாக வரும் ரெயில்கள் 5-வது நடைமேடையில் இருந்தும் இயக்கப்பட்டன.

    சுமார் 40 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார ரெயில்கள், 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன.

    எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், சேத்துப்பட்டு கிராசிங்கில் உள்ள ஒரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் நின்று, ஒரு ரெயில் வந்த பின்னரே எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரெயில் அந்த வழித்தடத்தில் செல்ல முடிந்தது.

    இதனால், பல்வேறு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வேலை மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    சுமார் 40 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார ரெயில்கள், 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன. எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், சேத்துப்பட்டு கிராசிங்கில் உள்ள ஒரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் நின்று, ஒரு ரெயில் வந்த பின்னரே எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரெயில் அந்த வழித்தடத்தில் செல்ல முடிந்தது.

    பல்வேறு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வேலை மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். பராமரிப்பு பணியின் முதல் நாளிலேயே சென்னை மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டுச் செல்லும் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை முதல் மாம்பலத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    எழும்பூரில் இருந்து புறப்படும் திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில், சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் மாம்பலத்தில் நாளை முதல் ஏப்.6 வரை நின்று செல்லும். மாம்பலத்தில் நிற்கும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள் நடப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

     

    • கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில் சேவைகள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
    • தாம்பரத்தில் இருந்து இரவு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வரும் ரெயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் வழக்கமாக இயக்கப்படக்கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை (8 மணி நேரம்) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இயக்கப்படும்.

    இதில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையிலும், மறுமார்க்கமாக செல்லும் ரெயில்கள் 5-வது நடைமேடையிலும் இயக்கப்படும். இதன் காரணமாக சில மின்சார ரெயில் சேவைகள் பகுதிநேரமாகவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

    அதன் விவரம் வருமாறு:-

    * இன்று முதல் 18-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8.55, 10.20, 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரெயில் சேவைகள் முழுவதுமாகவும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 9.05, 10.10, 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில் சேவைகள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    * இன்று மற்றும் 15-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.30, 10.00, 11.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் சேவைகளும், தாம்பரத்தில் இருந்து இரவு 10.00, 11.00. 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வரும் ரெயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருச்சியில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புதிய கால நேர அட்டவணைப்படி ராமேசுவரத்திற்கு மதியம் 12.35 மணிக்கும் சென்றடையும்.
    • திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் மதுரைக்கு காலை 9.10 மணிக்கும் சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களின் கால நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. அதன்விவரம் வருமாறு:-

    * திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து ராமேசுவரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16343), புதிய கால நேர அட்டவணைப்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு காலை 8.05 மணிக்கும், மதுரைக்கு 9.20 மணிக்கும், மானாமதுரைக்கு 10.03 மணிக்கும், பரமக்குடிக்கு 10.23 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 10.48 மணிக்கும், ராமேசுவரத்திற்கு மதியம் 12.15 மணிக்கும் சென்றடையும்.

    * திருச்சியில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16849), புதிய கால நேர அட்டவணைப்படி திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் ரெயில் மானாமதுரைக்கு 9.40 மணிக்கும், பரமக்குடிக்கு 10.08 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 10.38 மணிக்கும், உச்சிப்புளிக்கு 10.54 மணிக்கும், மண்டபத்திற்கு 11.09 மணிக்கும், பாம்பனுக்கு 11.19 மணிக்கும், ராமேசுவரத்திற்கு மதியம் 12.35 மணிக்கும் சென்றடையும்.

    * திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் (56717), புதிய கால நேர அட்டவணைப்படி திண்டுக்கல்லில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும் ரெயில் அம்பாத்துரைக்கு 8.01 மணிக்கும், கொடைக்கானல் சாலைக்கு 8.10 மணிக்கும், வாடிப்பட்டிக்கு 8.20 மணிக்கும், சோழவந்தானுக்கு 8.29 மணிக்கும், சமயநல்லூருக்கு 8.39 மணிக்கும், கூடல்நகருக்கு 8.49 மணிக்கும், மதுரைக்கு காலை 9.10 மணிக்கும் சென்றடையும்.

    * ராமேசுவரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் (56714), புதிய கால நேர அட்டவணைப்படி ராமேசுவத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் பாம்பனுக்கு 11.43 மணிக்கும், மண்டபத்திற்கு 11.53 மணிக்கும், உச்சிப்புளிக்கு மதியம் 12.10 மணிக்கும், வாலாந்தரவைக்கு 12.20 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 12.39 மணிக்கும், சத்திரக்குடிக்கு 12.46 மணிக்கும், பரமக்குடிக்கு 1 மணிக்கும், சூடியூருக்கு 1.13 மணிக்கும், மானாமதுரைக்கு 1.40 மணிக்கும், ராஜகம்பீரத்திற்கு 1.52 மணிக்கும், திருப்பாச்சேத்திக்கு 2.02 மணிக்கும், திருப்புவனத்திற்கு 2.12 மணிக்கும், சிலைமானுக்கு 2.23 மணிக்கும், மதுரை கிழக்கு ரெயில் நிலையத்திற்கு 2.35 மணிக்கும், மதுரைக்கு மாலை 3.05 மணிக்கும் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை வரும் சிறப்பு ரெயில் ரேணிகுண்டா, பகலா, காட்பாடி ஆகிய மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.
    • காச்சிகுடாவில் இருந்து வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-

    * ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06182), ரேணிகுண்டா, பகலா, காட்பாடி ஆகிய மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.

    * அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (22504), 1 மணி நேரம் 45 நிமிடம் தாமதமாக புறப்படும்.

    * காச்சிகுடாவில் இருந்து வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17652), 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 3 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 4-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

    அதன்படி, தஞ்சாவூர்-எழும்பூர் இடையிலான உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், கேரளா மாநிலம் கொல்லம்-எழும்பூர் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    எழும்பூர்-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

    எழும்பூர்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
    • சென்னை கடற்கரையில் இருந்து மாலை 3.52 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (49005) புறப்பட்டு மாலை 4.47 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் 2 ஏ.சி.மின்சார ரெயில் சேவையின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-

    தாம்பரத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (வண்டி எண்.49004) புறப்பட்டு மதியம் 3.20 மணிக்கு கடற்கரை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து மாலை 3.52 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (49005) புறப்பட்டு மாலை 4.47 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு திரும்புகிறார்கள். காலையில் இருந்து பஸ் மற்றும் ரெயில்களில் பயணத்தை தொடர முன்பதிவு செய்துள்ளனர். 19-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு தயாராகி வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. 18-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்த சிறப்பு ரெயில் (எண்.06160 ) புறப்பட்டு மறுநாள் (திங்கள்கிழமை) அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த அதிவேக சிறப்பு ரெயில் வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. 

    • இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
    • தென்னக ரெயில்வே மண்டலம் தற்போது 29.5 சதவீதம் செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கி சாதனை படைத்துள்ளது.

    ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி , யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து ரெயில்வே அமைச்சகம் 'ரெயில் ஒன்' என்ற செயலியை அறிமுகம் செய்தது.

    இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். ரெயில்வே துறை மற்றும் ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டும் இந்த செயலி மூலம் பெற முடியும்.

    ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது. அதாவது, ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் கூட்டத்தில் முண்டியடித்து செல்வதற்கு பதிலாக செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கட்டண சலுகை கியூ.ஆர். கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுகளை ரெயில் ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் திரும்ப பெறும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி வரை 3 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    தென்னக ரெயில்வே மண்டலம் தற்போது 29.5 சதவீதம் செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சாதாரண டிக்கெட்டுகளுக்கு யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் டிக்கெட் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால், செல்போனில் டிக்கெட் பதிவு செய்தும், முழுமையடையாமலும், அது குறித்த தகவல் கிடைக்கப்பெறாததாலும், அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

    • இந்த கட்டண சலுகை கியூ.ஆர். கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
    • ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் திரும்ப பெறும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.

    ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி , யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து ரெயில்வே அமைச்சகம் 'ரெயில் ஒன்' என்ற செயலியை அறிமுகம் செய்தது.

    இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். ரெயில்வே துறை மற்றும் ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டும் இந்த செயலி மூலம் பெற முடியும்.

    இந்நிலையில் ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது. அதாவது, ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் கூட்டத்தில் முண்டியடித்து செல்வதற்கு பதிலாக செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கட்டண சலுகை கியூ.ஆர். கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுகளை ரெயில் ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் திரும்ப பெறும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் நாளை முதல் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி வரை 3 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    தென்னக ரெயில்வே மண்டலம் தற்போது 29.5 சதவீதம் செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சாதாரண டிக்கெட்டுகளுக்கு யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் டிக்கெட் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால், செல்போனில் டிக்கெட் பதிவு செய்தும், முழுமையடையாமலும், அது குறித்த தகவல் கிடைக்கப்பெறாததாலும், அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

    ×