என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெற்கு ரெயில்வே"

    • ஏ.சி.மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 9 மின்சார ரெயில் சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.20 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயில், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 3 ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு நேரம் மாற்றப்பட்டுள்ளது. 4 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இது நாளை (5-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் நாளை முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. கடற்கரையில் மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு மாலை 4.42 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    * செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு வரும் ஏ.சி.மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு கடற்கரை வந்தடையும்.

    * தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து மதியம் 2.28 மணிக்கு புறப்பட்டு மாலை 3.23 மணிக்கு கடற்கரை சென்றடையும்.

    * ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தமாக தாம்பரம்-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-கடற்கரை, கடற்கரை-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-தாம்பரம் ஆகிய ரெயில்கள் நாளை முதல் ஊரப்பாக்கத்தில் நின்று செல்லும்.

    ஏ.சி.மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 9 மின்சார ரெயில் சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * திருமால்பூரில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரெயில் தாம்பரத்துக்கு மதியம் 1.15 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.10 மணிக்கு பதிலாக 2.05 மணிக்கும் சென்றடையும்.

    * தாம்பரத்தில் இருந்து மதியம் 1.32 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 1.30 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.27 மணிக்கு செல்லும் ரெயில் மதியம் 2.25 மணிக்கும் சென்றடையும்.

    * கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 3.39 மணிக்கும், தாம்பரத்துக்கு மாலை 4.40 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 4.35 மணிக்கும் சென்றடையும்.

    * தாம்பரத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.30 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.30 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.25 மணிக்கும் சென்றடையும்.

    * தாம்பரத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.38 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.47 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.33 மணிக்கும் சென்றடையும்.

    * தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.53 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.55 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.48 மணிக்கும் சென்றடையும்.

    * கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.10 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு செல்லும் ரெயில், இரவு 11.55 மணிக்கும் சென்றடையும்.

    * செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.20 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயில், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்றடையும்.

    * கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.50 மணிக்கும், தாம்பரத்திற்கு இரவு 10.40 மணிக்கு செல்லும் ரெயில் இரவு 11.15 மணிக்கு சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு, ஒரு சில நிறுத்தங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது.
    • மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று (1-ந்தேதி) முதல் சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி-திண்டுக்கல் டெமு ரெயில், மதுரை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில், எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயில்களுக்கான நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு (வண்டி எண். 20665), ஒரு சில நிறுத்தங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, புதிய நேர அட்டவணைபடி திருச்சிக்கு இரவு 7 மணிக்கும், திண்டுக்கல் 7.58 மணிக்கும், மதுரை 8.45 மணிக்கும், விருதுநகர் 9.20 மணிக்கும், கோவில்பட்டி 9.48 மணிக்கும், நெல்லை இரவு 11 மணிக்கு சென்றடையும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635) புதிய நேர அட்டவணைப்படி, எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் 1.40, செங்கல்பட்டு 2.08, விழுப்புரம் மாலை 3.30, விருத்தாச்சலம் 4.14, அரியலூர் 4.49, ஸ்ரீரங்கம் 5.30, திருச்சி 6.05, மணப்பாறை 6.39, திண்டுக்கல் இரவு 7.17, சோழவந்தான் 7.49, மதுரை இரவு 8.35 மணிக்கு சென்றடையும்.

    * மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22624), மதுரையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணைப்படி, மதுரையில் இருந்து இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.

    * திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் டெமு ரெயில் (76835), புதிய நேர அட்டவணைப்படி, திருச்சியில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, பூங்குடி மாலை 6.44, கொளத்தூர் 6.53, சமுத்திரம் இரவு 7.01, மணப்பாறை 7.13, செட்டியபட்டி 7.23, வையம்பட்டி 7.30, கல்பட்டிச்சத்திரம் 7.39, அய்யலூர் 7.49, வடமதுரை 7.59, தாமரைபாடி 8.10, திண்டுக்கல் ஜங்சன் இரவு 9.05 மணிக்கும் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நடப்பாண்டில் 8 புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • கோவை-ராமேசுவரம் ரெயில் (16618) 55 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு ரெயில்வேக்கான புதிய கால அட்டவணை வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதில் மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய பயணிகள் ரெயில், ரெயில் சேவை நீட்டிப்பு, புதிய நிறுத்தங்கள், ரெயிலின் வேகம் அதிகரிப்பு, கூடுதல் பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட மாற்றங்கள் அடங்கிய புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக, நடப்பாண்டில் 8 புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4 ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 ரெயில்கள் மாற்று நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 44 எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 102 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. 22 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 வந்தே பாரத் ரெயில்களில் கூடுதாலாக 40 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. 46 எக்ஸ்பிரஸ் ரெயில், 27 பயணிகள் ரெயில்களில் 62 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், 14 பயணிகள் ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி, 5 நிமிடங்கள் முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் சேமிக்க முடியும்.

    குறிப்பாக, செங்கோட்டை- சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12662) வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர்-குருவாயூர் (16127) 20 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது. கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16102) 85 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும், கோவை-ராமேசுவரம் ரெயில் (16618) 55 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

    நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (20692) 45 நிமிடம் முன்னதாகவும், தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (12694) முத்துநகர் எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் முன்னதாகவும் சென்றடையும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதேபோல, நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரெயில் 35 நிமிடம் முன்னதாகவும், மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயில் 15 நிமிடம் முன்னதாகவும் செல்லும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் பயண நேரம் சேமிக்க முடியும்.

    திருப்பதி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 2-ந்தேதி முதல் போலூர் வரையிலும், ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் போலூர் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதியா ரெயில், நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரெயில் சீர்காழி ரெயில் நிலையத்தில் வரை விரிவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும்செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்கு புறப்படும்.
    • மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளும் முடிவடைந்து இருக்கிறது. இதற்கிடையே புதிய ரெயில்கள், சிறப்பு ரெயில்கள், நீட்டிப்பு செய்யப்பட்ட ரெயில்கள் உள்ளிட்டவை புதிய கால அட்டவணையில் இடம்பெறும்.

    கடந்த ஏப்ரல் மாதம் கால அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பழைய அட்டவணையின்படியே ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் தெரிவித்திருந்தது.

    அதே நேரத்தில், புதிய கால அட்டவணை 2026 ஜனவரி மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவித்தது. அதன்படி 2026-ம் ஆண்டுக்கான புதிய ரெயில்வே கால அட்டவணை ஜனவரி 1-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்த புதிய கால அட்டவணையில் பல்வேறு ரெயில்களின் புறப்படும் நேரம், நீட்டிப்பு ரெயில்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற உள்ளது. இதேபோல, மாற்றியமைக்கப்பட்ட புதிய கால அட்டவணையானது தேசிய ரெயில்வே விசாரணை அமைப்பு (என்.டி.இ.எஸ்.) என்ற செயலில் வெளியாகி இருக்கிறது.

    புதிய கால அட்டவணையின்படி, சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்கும், எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்கும், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும்செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்கு புறப்படும்.

    இதேபோல, எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.35 மணிக்கும், எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும். எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்கு புறப்படும். எழும்பூரில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை. அதேநேரத்தில் மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 8.50-க்கு புறப்படும். சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12.10 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும். ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணிக்கு புறப்படும். தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 9.05 மணிக்கு புறப்படும். இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரெயில்களில் மறுமார்க்கமாக புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை.

    • அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும்.
    • 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.

    சென்னை:

    நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85 சதவீதம் பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.

    இதையடுத்து, ரெயில் டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க ஆதார் அட்டை இணைப்பு முறையை ரெயில்வே வாரியம் அமல்படுத்தியது.

    இதேபோல, பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும் என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரெயில்வே கவுண்ட்டர் உட்பட அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும். தட்கல் முன்பதிவுகளை உறுதிசெய்வதும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான சிறந்த அணுகலை வழங்கும் நோக்கத்துடன் இது கொண்டு வரப்பட்டுள்ளது.

    அதன்படி, தற்போது 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து அகமதாபாத் செல்லும் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12656), சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12842), சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), சென்னை சென்டிரலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22160), ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158) ஆகிய 5 ரெயில்களில் கடந்த 23-ந்தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் மதியம் நாகர்கோவில் சென்றடையும்.
    • வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை செகந்திராபாத் சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- மங்களூரு, ஈரோடு-நாகர்கோவில், செந்திராபாத்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 24, 31 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்பட்டு மங்களூரு ஜங்சன் செல்லும் சிறப்பு ரெயில் (06125), அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்சன் சென்றடையும்.

    இதேபோல, ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வருகிற 24,31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் சிறப்பு ரெயில் (06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

    மேலும், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரெயில் (07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான அதிகபட்ச டிக்கெட் கட்டணம் சுமார் ரூ. 105 ஆகும்.
    • ஏ.சி. ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் உள்ள மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்த மின்சார ரெயிலின் மூலம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வந்தன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்தது.

     

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இந்த புறநகர் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஏ.சி. ரெயில்களில் தானியங்கி கதவுகள், பயணிகள் தகவல் அமைப்புகள், சிசிடிவி கேமராக்கள் போன்ற மேம்பட்ட வசதிகள் உள்ளன. மேலும் 1,116 பேர் நின்றும் ,3,798 பேர் அமர்ந்தும் பயணிக்கலாம்.

    சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான அதிகபட்ச டிக்கெட் கட்டணம் சுமார் ரூ. 105 ஆகும். குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35-ல் இருந்து தொடங்குகிறது.

    இந்த ஏ.சி. ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7:00 மணி மற்றும் மதியம் 3:45 மணிக்கு புறப்பட்டு காலை 8:35 மணி மற்றும் மாலை 5:25 மணி செங்கல்பட்டுக்கு வந்தடையும்.

    மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9:00 மணி மற்றும் மாலை 5:45 மணிக்கு புறப்பட்டு காலை 10:30 மணி மற்றும் இரவு 7:15 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.

    மேலும் இந்த ரெயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

     

    முதலில் இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அது குறைந்தது. ஏ.சி. மின்சார ரெயிலில் எதிர்பார்த்த கூட்டமும் இல்லாததால் காலியாகவே ஓடின. இதற்கு முக்கிய காரணம் கட்டணம் அதிகமாகும். மேலும் மெட்ரோ ரெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதும் ஒரு முக்கிய காரணம் என்று பயணிகள் தெரிவித்தனர். இது தவிர ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டப்பட்டது.

    எதுவாக இருப்பினும் கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    • நெல்லையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை தாம்பரம் வந்தடையும்.
    • தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் நெல்லை சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நெல்லையில் இருந்து வருகிற 28, ஜனவரி 4 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06166), கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 29, ஜனவரி 5 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06165), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகின்றன.
    • மறுமார்க்கத்தில் இந்த ரெயில் வருகிற 16-ந் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 3-ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும்.

    தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, கொல்லத்தில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20636) வருகிற 15-ந் தேதி முதல் வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.20635) வருகிற 16-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 3-ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும்.

    அதேபோல, ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16752) வருகிற 15-ந் தேதி முதல் வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16751) வருகிற 16-ந் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 3-ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும்.

    • மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
    • திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், நாளை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாரவிடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * நாகர்கோவிலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06011), மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    * திருவனந்தபுரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06108), நாளை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மதியம் 1.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06107), மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
    • சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16866), கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22662), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 15-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.

    * எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22661), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.
    • ரெயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரெயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது ரெயில் நிலைய வளாகத்தின் எந்த பகுதியிலும் கற்பூரம், மெழுகுவர்த்தி, விளக்குகள் ஆகியவற்றை ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது ரெயில்வே சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    அந்த வகையில், ரெயில் மூலம் சபரிமலை செல்லும் பக்தர்கள் ரெயில்களுக்குள்ளோ அல்லது ரெயில் நிலைய வளாகத்திற்குள்ளோ கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ரெயில் பயணத்தின் போது பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரெயில்வே சொத்துகளைப் பாதுகாப்பதற்கே இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ரெயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது தீ விபத்தை ஏற்படுத்தும். ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

    இதுகுறித்து, சபரிமலை செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்களிடம் சென்னை கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. தடையை மீறி கற்பூரம் ஏற்றுவதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை குழுக்கள் ரெயில்களுக்குள்ளும், ரெயில் நிலைய வளாகங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×