என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொதிகை எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து புறப்படும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- வரும் மார்ச் 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.
- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும்போது வழக்கம்போல எழும்பூரில் இருந்து புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் மின்சார ரெயில் நடைமேடை 10, 11-ல் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக கூட்ட நெரிசலான நேரங்களில் (பீக் அவர்ஸ்) மின்சார ரெயில்களை சீராக இயக்க எழும்பூரில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிலவற்றில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12661), வரும் மார்ச் 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறபட்டு செங்கோட்டை செல்லும். பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு வழக்கம்போல எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடையும்.
* நெல்லையில் புறப்பட்டு எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (12632), வரும் மார்ச் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையில், தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 6.25 மணிக்கு வந்தடையும். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும்போது வழக்கம்போல எழும்பூரில் இருந்து புறப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22675), வரும் 28-ந்தேதி முதல் மார்ச் 15-ந்தேதி வரையில் எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு (2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக) புறப்பட்டு திருச்சி செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






