search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மதிநுட்பத்துடன் செயல்படும் நாள். கசந்த காலங்கள் வசந்த காலங்களாக மாறும். வியாபார விரோதம் விலகும். குடும்ப செலவு களில் தாராளம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கிடைக்கும்.

    தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடைசி நாளான அக்டோபர் 25-ம் தேதி வரை 11.85 லட்சம் பேர் மேல் முறையீடு செய்துள்ளனர். மேல் முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 25-ம் தேதி முதல் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.

    பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.க. அரசுக்கு எதிராக எந்தக் கருத்துக்களைச் சொன்னாலும் அச்சுறுத்துகின்றனர். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் வரிசையில் போன் ஒட்டுக்கேட்பில் ஈடுபடுகின்றனர். வரும் 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் தோல்வி அடையும் என தெரிவித்தார்.

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் 5,715 ரூபாய்க்கும், ஒரு பவுன் 45,720 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இன்று ஒரே நாளில் கிராம் ரூ.29-ம், பவுன் ரூ. 232-ம் குறைந்துள்ளது. இன்று கிராம் ரூ. 5,686-க்கும், பவுன் ரூ. 45,488-க்கும் விற்பனை ஆகிறது.

    சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 101 ரூபாய் 50 காசு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 203 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது, 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இந்த மாதத்தின் இறுதியில் அபெக் தலைவர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இஸ்ரேல் தாக்குதலால் தரைமட்டமாகியுள்ள கட்டட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள் கிடக்கின்றன. அந்த இடங்களை இதுவரை நெருங்க முடியவில்லை என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. காசா மீதான தாக்குதலில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளது வங்காளதேசம். அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    காலி-பீலி ஓட்டுனர்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு மிக சரியாகவும், பாதுகாப்பாகவும் பயணிகளை கொண்டு சேர்ப்பதில் பெருமை பெற்றவர்கள். இதனால் மும்பைவாசிகள் மட்டுமல்லாது பிற மாநிலத்தில் இருந்து அங்கு வருபவர்களுக்கும் எளிதான போக்குவரத்தாக காலி-பீலி அமைந்தது.

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தீபாவளிக்குப் பின் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். ஜேஇஇ, பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதிசெய்யப்படும். ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    2006ல் அமெரிக்காவில் துவங்கப்பட்ட டுவிட்டர் நிறுவனத்தை கடந்த 2022 அக்டோபர் மாதம், உலகின் நம்பர் 1. கோடீசுவரரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், சுமார் ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) விலைக்கு வாங்கினார்.

    ×