என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளது வங்காளதேசம். அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    காலி-பீலி ஓட்டுனர்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு மிக சரியாகவும், பாதுகாப்பாகவும் பயணிகளை கொண்டு சேர்ப்பதில் பெருமை பெற்றவர்கள். இதனால் மும்பைவாசிகள் மட்டுமல்லாது பிற மாநிலத்தில் இருந்து அங்கு வருபவர்களுக்கும் எளிதான போக்குவரத்தாக காலி-பீலி அமைந்தது.

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தீபாவளிக்குப் பின் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். ஜேஇஇ, பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதிசெய்யப்படும். ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    2006ல் அமெரிக்காவில் துவங்கப்பட்ட டுவிட்டர் நிறுவனத்தை கடந்த 2022 அக்டோபர் மாதம், உலகின் நம்பர் 1. கோடீசுவரரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், சுமார் ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) விலைக்கு வாங்கினார்.

    மின்வாரிய முதன்மை என்ஜினீயர் அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பணியாற்றும்போது விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமின் வழங்க கோரி சந்திரபாபு நாயுடு ஆந்திரா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் அவருக்கு 4 வாரம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    இளைஞர்களின் திடீர் மரணத்துக்கு கொரோனா ஊசி காரணமல்ல என்று இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.

    ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட்காஸ்டின் 3வது ஆடியோ இன்று வெளியானது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தி.மு.க.வின் முக்கிய கொள்கைகளில் ஒன்று மாநில சுயாட்சி. மாநிலங்களை ஒழிக்கவேண்டும் என பா.ஜ.க. அரசு நினைக்கிறது. மாநில சுயாட்சி கொள்கை வெல்லும் வகையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். இந்தியாவை இந்தியா கூட்டணியிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர், வீராங்கனைக்கு ஆண்டுதோறும் பிபா வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்தார். பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருதை உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீராங்கனை அடானா பொன்மதி கைப்பற்றியுள்ளார்.

    தலைநகர் டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேசுகையில், ஹமாசால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை நிபந்தனை இன்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். போர்நிறுத்தத்திற்கான அழைப்புகள் இஸ்ரேலை ஹமாசிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அது நிச்சயம் நடக்காது என தெரிவித்தார்.

    "இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில், பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகளை எங்கள் நாட்டு எல்லையில் நிலைநிறுத்தி உதவுமாறு அமெரிக்காவை கோரியுள்ளோம்" என ஜோர்டான் நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முஸ்தஃபா ஹியாரி கூறியுள்ளார்.

    ×