என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஷாட்ஸ்
ஆந்திராவில் இரண்டு ரெயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்து தகவல் பெற ரெயில்வே துறை சார்பில் 8106053051, 8106053021, 8500041670, 8500041671, 0891 2746330, 0891 2744619, 8300383004 என்ற இலவச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மனித தவறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக கிழக்கு ரெயில்வே செய்தி பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"பாலஸ்தீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழையவும், வசிக்கவும் அரபு நாடுகள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீனர்களை பொறுப்பில் எடுத்து கொள்ள தயங்கி, தங்கள் நாடுகளுக்குள் சேர்க்கவும் மறுத்து, இஸ்ரேலை மட்டும் கண்டிக்கும் வழிமுறையையும் அரபு நாடுகள் கைவிட வேண்டும்", என இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து அமெரிக்க குடியரசு கட்சியின் முக்கிய தலைவர் விவேக் ராமசாமி தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என ஐ.நா.வும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது. இந்நிலையில், தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் எனில் இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
ஹமாசுக்கு எதிரான போரில் அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என ஐ.நா.வும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அந்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் குழுவிற்கு எதிரான இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.
எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைதுசெய்தது. மேலும் மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது.
இன்று பகுதி நேர சந்திர கிரகணம் ஏற்பட்டது. அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.24 மணி வரை ஒரு மணி நேரம் 19 நிமிடத்துக்கு சந்திர கிரகணம் நீடித்தது. இந்த கிரகணம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தென்பட்டது. மேலும், ஆசியாவின் பிற பகுதிகள், ரஷியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளிலும் கிரகணம் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் நடந்த உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 270 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 271 ரன்கள் எடுத்து வென்றது. இந்தப் போட்டியில் வென்றதும், பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் `ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என பதிவிட்டார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,675 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 975 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,920 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 16 ஆயிரத்து 895 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்