என் மலர்tooltip icon
    • மலேசியாவில் 2009 முதல் 2018 வரை பிரதமராக பதவி வகித்தவர் நஜிப் ரசாக்.
    • இவர்மீது பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில், 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தவர் நஜிப் ரசாக் (72). இவர் தன் பதவிக்காலத்தில், 1 எம்.டி.பி. எனப்படும், 'ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம்' என்ற அரசு நிறுவனத்தை தொடங்கினார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.

    இந்நிறுவனத்தின் நிதியில் இருந்து 4,900 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை தன் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரசாக் மாற்றியதாக புகார் எழுந்தது. அவர்மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

    இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

    இதற்கான தண்டனை விவரம் விரைவில் வெளியாக உள்ளது.

    ஏற்கனவே மற்றொரு வழக்கில் நஜிப் ரசாக் 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 112 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 13.2 ஓவரில் 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்திய அணியின் தீப்தி சர்மா இந்தப் போட்டியில் 3 விக்கெட் எடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் சாதனையை சமன் செய்தார் தீப்தி சர்மா. இதுவரை 131 போட்டிகளில் விளையாடியுள்ள தீப்தி சர்மா 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • மிஷிமா நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.
    • இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிஷிமா நகரம் உள்ளது. இந்நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஊழியர் நேற்று மாலை தொழிற்சாலையில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். அங்கு வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்திய ஊழியரை கைதுசெய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பானு முஷ்டாக் எழுதிய ‘ஹார்ட் லாம்ப்’ என்ற புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றது.
    • கன்னட மொழியில் இருந்து இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் 6 புத்தகங்கள் இடம்பிடித்தன. இதில் தென்னிந்திய மொழிகளில் ஒன்றான கன்னட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட 'ஹார்ட் லாம்ப்' எனும் நூலும் ஒன்றாகும்.


    கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய 'ஹார்ட் லாம்ப்' எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றது. கன்னட மொழியில் இருந்து இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

    பானு முஷ்தாக் கன்னடத்தில் ஹசீனா அண்ட் அதர் ஸ்டோரிஸ் என்ற தலைப்பில் புத்தக தொகுப்பை எழுதி இருந்தார். 1990 முதல் 2012-ம் ஆண்டு இடைவெளியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத் தொகுப்பு தென் இந்தியாவில் இஸ்லாமிய பெண்களின் வாழ்வியல் குறித்து வெளிப்படுத்தியது.

    குடும்பம், சமூகப் பதற்றங்களுக்கிடையே இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பதிவுகளைச் சிறுகதைகளாக எடுத்துரைக்கும் இந்தப் புத்தகம், அதன் நகைச்சுவையான, துடிப்பான பேச்சு வழக்கு, நெகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான கதை சொல்லலுக்காக பாராட்டுகளை பெற்றது.


    கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பானு முஷ்டாக் கன்னட எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். சர்வதேச புக்கர் பரிசு வெல்லும் முதல் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக். அவருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் புக்கர் விருதும், 50 ஆயிரம் யூரோ பரிசு பணமும் வழங்கப்பட்டது.

    பானு முஷ்டாக் உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை தொடங்கி வைத்தார் என்பதும், இந்த விவகாரம் சர்ச்சை ஆனதும் குறிப்பிடத்தக்கது.

    • கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றனர்.
    • அப்போது பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ சிட்டியில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஏராளமான பயணிகள் பேருந்து ஒன்றில் சிகோன்டெபெக் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

    இந்த பேருந்து வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள ஜோன்டெகோமட்லான் என்ற மலைப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 112 ரன்கள் எடுத்தது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் இரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், தீப்தி சர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 42 பந்தில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இந்திய பெண்கள் அணி 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் யோகேஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • திருமணத்தை தாண்டிய உறவு உட்பட பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வருகிறோம்

    உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில், முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இறந்தவர் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் (58) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய விமானப்படையில் (IAF) இருந்து ஓய்வு பெற்ற யோகேஷ், தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் அசோக் விஹார் காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று உள்ளூர் சந்தையில் இருந்து யோகேஷ் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

    மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் யோகேஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் உடல் ரீதியாக தாக்கி, அவரது தலையில் சுட்டுக் கொன்றுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர், யோகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார் என உ.பி. போலீசார் தெரிவித்தனர்.

    "திருமணத்தை தாண்டிய உறவு உட்பட பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வருகிறோம். மேலும் விசாரணைக்காக அருகிலுள்ள கேமராக்களில் இருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற்றுள்ளோம்," என ஏசிபி லோனி சித்தார்த்த கௌதம் தெரிவித்துள்ளார்.


    • விஜய் மல்லையா, லலித் மோடி இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர்.
    • இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் என லலித் மோடி குறிப்பிட்டிருந்தார்.

    விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட லலித் மோடி, நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் என வீடியோ வெளியிட்டிருந்தார்.

    பொருளாதா குற்றச்சாட்டில் ஈடுபட்ட இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நிலையில் இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார் லலித் மோடி. இதற்கு இணைய தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்திய அரசு அவர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

    இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இருவரையும் இந்தியா கொண்டு வர அரசு உறுதிப் பூண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் "இந்தியாவில் இருந்து தப்பி ஓடியவர்கள், இந்திய சட்டத்தால் தேடப்படுபவர்கள், இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்பதில் நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம்.

    குறிப்பாக இந்த இருவரையும் இந்தியா கொண்டு வர, நாங்கள் பல்வேறு அரசுகளுடன் பேசி வருகிறோம். அதற்கான செயல்முறை நடைபெற்று கொண்டிருக்கிறது. பல்வேறு வழக்குகளில், ஏராளமான வழக்கறிஞர்கள் சட்டப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும், நாங்கள் அவர்கள் இந்தியா கொண்டு வர உறுதிப்பூண்டுள்ளோம். ஆகவே, இந்திய நீதிமன்றங்கள் முன் விசாரணையை எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

    • இந்தியாவில் இருந்து சுமார் 4 முதல் 5 கோடி மக்கள் இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றனர்.
    • எந்த நாட்டிற்குச் சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் ஈட்டப்படுகிறது.

    மக்கள்தொகை நிலைத்தன்மையைப் பராமரிக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

    திருப்பதியில் நடைபெற்ற பாரதிய விஞ்ஞான் சம்மேளனத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, 

    இந்தியாவின் மக்கள் தொகை, அறிவு மற்றும் திறமை நமது பாரம்பரிய மதிப்புகள் மற்றும் தேசிய இலக்குகளுடன் இணைந்தால், உலகளாவிய சக்தியாக இந்தியா உருவெடுப்பதைத் யாராலும் தடுக்க முடியாது. வயதானவர்கள் மற்றும் குறைந்து வரும் மக்கள்தொகையில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. இந்த விஷயத்தில், இன்று நீங்கள் பார்த்தால், இந்தியாவில் இருந்து சுமார் 4 முதல் 5 கோடி மக்கள் இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றனர். இன்று நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் ஈட்டப்படுகிறது.

    எந்தவொரு ஆடம்பரமான பகுதியும், அமெரிக்காவில் கூட. அமெரிக்கர்களின் சராசரி வருமானம் 55,000 டாலர்கள் முதல் 60,000 டாலர்கள் வரை இருக்கும், அதே நேரத்தில் இந்தியர்கள் சுமார் 135,000 டாலர்கள் சம்பாதிக்கிறார்கள், இது இரண்டு மடங்கு அதிகம். மோகன் பகவத் எப்போதும் கூறுவதுபோல ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். நாம் மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால், 2047க்குப் பிறகும் இந்தியாதான் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும்' என தெரிவித்தார். 

    • இன்னும் தேர்தலை சந்திக்காத ஒரு அரசியல் கட்சி தவெக.
    • திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தேர்தலில் பிரதிபலிக்கும்

    தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் சரத்குமார், 

    "நூறுநாள் வேலை திட்டத்தை சிதைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. வேலையில்லாத இடத்தில் வேலைசெய்துவிட்டு இலவசமாக பணம் கொடுக்கக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள். திமுக எந்த நலத்திட்டங்களையும் வரவேற்பது இல்லை. சாதகமாக இருக்கும் திட்டங்களில் அவர்களின் பெயர்களை போட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு பாதகமாக இருப்பதை குற்றச்சாட்டாக கூறுகிறார்கள். இன்னும் தேர்தலை சந்திக்காத ஒரு அரசியல் கட்சி தவெக. இப்போதுதான் களத்திற்கு வந்துள்ளார்கள். தங்களின் கொள்கை, கோட்பாடை சொல்லாமல் தனிநபர் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

    தேர்தலுக்கு பின்தான் அவர் கட்சியை நடத்துவாரா? இல்லையா என்பது தெரியவரும். ஒரு பெண் நிர்வாகி கேட்கும்போது வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்பவர்தான் கதாநாயகனாக இருக்கமுடியும். தலைவனாக இருக்கமுடியும். இறங்கி பேசியிருந்தால் இன்று அவர் தூக்கமாத்திரை சாப்பிடிருக்கமாட்டார். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தேர்தலில் பிரதிபலிக்கும்." என தெரிவித்தார். 

    தொடர்ந்து பாஜக தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். 

    • கலை என்பது சமூகத்தை செதுக்கக்கூடிய உளியாக, சம்மட்டியாக இருக்க வேண்டும்
    • மார்கழியில் மக்களிசை என்பது மாற்று அரசியல் பேசுவதற்கான மேடை.

    மேடைகள் மறுக்கப்பட்ட கலைகளை, மேடை ஏற்றி கெளரவிக்கும் வகையில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்  `மார்கழியில் மக்களிசை' என்ற நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கியது. திமுக எம்.பி கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் பறை அடித்து மார்கழியில் மக்களிசை நிகழ்வை இன்று தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசிய கனிமொழி, 

    "என் வாழ்த்துக்களை ரஞ்சித்திற்கு தெரிவிக்கிறேன். 6 ஆண்டுகளாக மக்கள் கொண்டாடும் இசையை நிகழ்த்தி கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி. மார்கழியில் மக்களிசை என்பது மாற்று அரசியல் பேசுவதற்கான மேடை. கலை என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக மட்டும் இருக்கக்கூடாது. கலை என்பது சமூகத்தை செதுக்கக்கூடிய உளியாக, சம்மட்டியாக இருக்க வேண்டும். அப்படியான மேடையைத்தான் ரஞ்சித் உருவாக்கியிருக்கிறார். நம்முடைய கலை வடிவத்தை பிடுங்கிக் கொண்டார்கள். பறையையும் யார் யாரோ பிடுங்கிக் கொண்டார்கள். அதை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார். பறை எங்கள் இசை, நம்முடைய இசை என்பதை நாம் மறுபடியும் உரக்கச் சொல்வோம்." என தெரிவித்தார். 

    ×