என் மலர்
- தமிழக காங்கிரசில் ராகுல் அணி, ஸ்டாலின் அணி என இரு அணிகள் உள்ளன.
- தமிழக மக்களுக்காக சிந்திக்கக்கூட அவர்களுக்கு நேரம் இல்லை என்றார்.
வேலூர்:
வேலூர் ஸ்ரீ நாராயணி பீடம் 50-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அதன்பின் அண்ணாமலை அளித்த பேட்டி:
தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள கஞ்சா புழக்கத்திற்கு, மத்திய அரசுதான் காரணம் என்கிறார்.
இப்படியெல்லாம் சொல்வதற்கு பதில், காவல் துறையை என்னால் நிர்வகிக்க முடியவில்லை என ஸ்டாலின் கூறிவிடலாம்.
தன் தோல்வியை முதல்வர் ஒப்புக் கொண்டால், கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த ஆலோசனை சொல்கிறேன்.
தமிழக காங்கிரசில் ராகுல் அணி, ஸ்டாலின் அணி என இரு அணிகள் உள்ளன.
இரு கோஷ்டியினரும் மாறி மாறி ஜால்ரா போடுகின்றனர். தமிழக மக்களுக்காக சிந்திக்கக்கூட அவர்களுக்கு நேரம் இல்லை.
காங்கிரஸ் விஜயோடு கூட்டணியாகச் சென்றால், சிதம்பரம் புதிய கட்சி ஆரம்பித்து தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என சொல்கின்றனர்.
இந்தியாவில் எப்படி காங்கிரஸ் என்ற கட்சி இல்லையோ, அதுபோல தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து எறும்பு அளவில் உள்ளது.
காங்கிரஸ் என்பது அழிந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி; அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவரே சான்று.
வரும் சட்ட சபைத் தேர்தலுக்குப் பின் தமிழக காங்கிரசார் நடுத்தெருவில் நிற்பர். சீட் கேட்பது மட்டுமல்ல, பண பேரமும் நடக்கிறது என தெரிவித்தார்.
- டெல்லியில் புத்தர் தொடர்பான மாபெரும் சர்வதேச கண்காட்சி இன்று தொடங்குகிறது.
- பிரதமர் மோடி இந்தக் கண்காட்சியை இன்று காலை திறந்து வைக்கிறார்.
புதுடெல்லி:
புத்தர் தொடர்பான புனித பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்களின் 'ஒளியும் தாமரையும்: ஞானம் பெற்றவரின் நினைவுச் சின்னங்கள்' என்ற மாபெரும் சர்வதேசக் கண்காட்சி டெல்லியில் இன்று தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கண்காட்சியை இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வரலாறு, கலாசாரம் மற்றும் பகவான் புத்தரின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மிகச் சிறப்பான நாள்.
புத்தரின் உன்னதமான சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க அமைந்துள்ளது.
இது நமது இளைஞர்களுக்கும் நமது செழுமையான கலாசாரத்திற்கும் இடையிலான பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. இந்த நினைவுச் சின்னங்களைத் தாயகம் கொண்டுவர உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
- நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் மழையினால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.
பாராமுல்லாவில் உள்ள ஶ்ரீநகர்-பாரமுல்லா-உரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவால் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் வரிசையில் நின்று கொண்டிருந்தன.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திடீர் நிலச்சரிவால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின.
மெக்சிகோ சிட்டி:
தெற்கு மெக்சிகன் மாநிலமான குரேரோவில் 6.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதனால் உயரமான கட்டடங்கள் குலுங்கின. அச்சத்தால் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு மெக்சிகோ அதிபர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பூகம்ப எச்சரிக்கை மணி ஒலித்ததால் செய்தியாளர் சந்திப்பு தடைபட்டது. சில மணி நேரத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
- யுனைடெட் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்றார்.
சிட்னி:
யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கிரீசின் மரியா சக்காரி உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய நவோமி ஒசாகா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.
- காத்மண்டுவில் இருந்து 50 பயணிகளுடன் புத்தா ஏர் விமானம் புறப்பட்டது.
- பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கியது.
காத்மண்டு:
நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து 50 பயணிகளுடன் புத்தா ஏர் விமானம் புறப்பட்டது. பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கியது.
அப்படி தரையிறங்கும்போது அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. இதையடுத்து விமானிகள் அந்த விமானத்தைப் பாதுகாப்பாக நிறுத்தினர்.
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது.
- இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ராசா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணி விவரம் வருமாறு:
சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேம் க்ரீமர், பிராட்லி எவன்ஸ், கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, ப்ளெஸிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்டன் நகரவா, பிரெண்டன் டெய்லர்.
நாயகி சிந்தியா லூர்டே தனது குழந்தையுடன் ஊரிலிருந்து சென்னைக்கு வருகிறார். அதேசமயம் சக்தி வாசு சட்டவிரோதமாக கள்ளக் கடத்தல் செய்கிறார். சிந்தியா குழந்தையுடன், சக்திவாசு வைத்திருக்கும் கண்டெய்னர் குடோனுக்கு எதிர்பாராத விதமாக செல்கிறார். சென்ற இடத்தில் சக்தி வாசு உங்களிடம் சிக்கிக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் கண்டெய்னர் குடோனில் இருந்து வெளியேறும் சிந்தியா, தனது குழந்தையையும் ஒரு பையையும் அங்கு தொலைத்து விடுகிறார்.
இறுதியில் குழந்தையும் பையையும் சிந்தியா மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிந்தியா லூர்டே, குழந்தை பாசம், ஆக்சன் என நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பு செயற்கை தனமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
படத்திற்கு பெரிய பலம் சக்தி வாசு தேவன் நடிப்பு. வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். கபீர் சிங், இனியா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
கடத்தல் கும்பலிடம் சிக்கி அவர்களை போலீசிடம் சிக்க வைக்கும் பெண்ணை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் தீனா. பழைய கதையை தூசி தட்டி எடுத்து இருக்கிறார் இயக்குனர். அதிக லாஜிக் மீறல்கள், காட்சிகளின் தொடர்ச்சி இல்லை. திரைக்கதை வலுவில்லை. காட்சிகளின் சுவாரசியம் இல்லை. இவை அனைத்தையும் சரி செய்து இருக்கலாம்.
இசை
தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு கவரவில்லை.
ரேட்டிங்-1.5/5
- நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான்.
- போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தின் துவக்க விழா திருச்சி, தென்னூரில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் அதிகரிப்பு குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதை ஒழிக்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதனால், ஓரளவிற்கு பலனும் கிடைத்துள்ளது. போதைப்பொருள் மிகப்பெரிய நெட்வொர்க். அதை ஒழிக்க மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவிற்குள் போதைப்பொருள் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். அதற்கு, அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்டவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்கள் தான்.
அந்த நெட்வொர்க் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பொருளை ஒழிக்க தமிழ்நாட்டின் துறைகள் மத்திய அரசின் துறைகளோடும் பிற மாநில அரசு துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பது சமூகத்தின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கலைத்துறையை சார்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்லும் போது வேடிக்கை பார்க்கக் கூடாது.
அவர்களை தீவிரமாக கண்காணித்து பொறுப்போடு வளர்க்க வேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான். மத்திய அமைச்சர் பதவியில் இருப்பவர்களே வெறுப்பு பேச்சுக்களை பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும் சீர்குலைக்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் என எல்லோரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்த காலம் போய் ஒருவருக்கொருவர் எதிரியாக இருக்கக்கூடிய வேலையை பிளவுவாத சக்திகள் செய்து வருகிறார்கள்.
அன்பு செய்ய சொல்லி தர வேண்டிய ஆன்மிகத்தை, சிலர் வம்பு செய்ய பயன்படுத்தி வருகிறார்கள். மது போதையும் அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க நாம் ஒன்று சேர வேண்டும். என்று தெரிவித்தார்.
- நியூயார்க் மேயர் மம்தானி உமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
- நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நேற்று பதவியேற்றார். நியூயார்க் நகரின் முதல் முஸ்லீம் மேயரான அவர் திருக்குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றார். மேயர் தேர்தலில் மம்தானியை டிரம்ப் கடுமையாக எதிர்த்தது அறிந்ததே.
இந்நிலையில் 2020 டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பான வழக்கில் கைதாகி 5 வருடங்களாக சிறையில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு மம்தானி கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், "அன்புள்ள உமர், கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அவை நம்மைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
உமர் காலிதின் நண்பர் பனோஜ்யோத்ஸ்னா லாஹிரி இந்த கடிதத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் யாரேனும் தலையிட்டால் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பஜக தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில் "இந்திய இறையாண்மைக்கு சவால் ஏற்பட்டால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 140 கோடி மக்களும் ஒன்றிணைந்து நிற்பார்கள். இந்திய மக்கள் நாட்டின் நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- துணை ஜனாதிபதியாக சி.பி.ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா.
- தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் பிரமாண்ட வரவேற்பு.
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போனது. இந்தநிலையில் முதல் முறையாக இன்று அவர் சென்னை வந்தார்.
அவருக்கு தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
மாலை 5 மணி அளவில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஹண்டே தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார்.
இந்நிலையில், சென்னையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
- தான் விஷம் குடித்துவிட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
- மரணத்திற்கு காரணமான தனபால் என்பவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 53), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (50). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மண்ணாடிப்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன், தனபால் ஆகிய 2 பேரும் கொட்டாரப்பட்டிக்கு சென்று, வேலுமணியிடம் ரூ.50 ஆயிரம் கடனை இன்னும் திருப்பி கொடுக்கவில்லை என கேட்டுள்ளனர்.
அதற்கு வேலுமணி, பணம் கட்டியுள்ளேன். கட்டியதற்கு ஆதாரமும் காண்பிக்கிறேன் என்று சொல்லி உள்ளார். அப்போது பணம் வாங்கி 7 மாதம் ஆகிறது. கேட்டால் திருப்பி தர மாட்டியா? என்று கூறி தடியால் அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது கழுத்தில் துண்டை போட்டு, வீட்டில் இருந்து தெருவில் தரதரவென இழுத்துச்சென்றனர்.
பின்னர் அங்கிருந்த கோயில் அருகில் அவரை விட்டுச் சென்றனர். இதையடுத்து வேலுமணியை, அவரது மனைவி அம்பிகா வீட்டுக்கு அழைத்து வந்தார். தெருவில் தன்னை இழுத்துச் சென்றதால் வேலுமணி மனவேதனையடைந்தார். அவரை அம்பிகா சமாதானம் செய்தார். இந்நிலையில் அன்று மாலையில் மோட்டார் சைக்கிளில் அனுமன்தீர்த்தம் பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வேலுமணி, தான் விஷம் குடித்துவிட்டதாக மனைவியிடம் கூறினார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அம்பிகா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வேலுமணியை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலுமணி உயிரிழந்தார்.
இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வேலுமணி மரணத்திற்கு காரணமான தனபால் (63) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழ்வாணனை தேடி வருகின்றனர்.







