என் மலர்tooltip icon
    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இந்த நிலையில், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.


    • சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவையும் ரத்து.

    நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.

    மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் 3-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.

    இந்த நிலையில், 4-வது நாளாக இன்று சென்னையில் 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவை என நேற்று இரவு 8 மணி முதல் தற்போது வரை 65 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்துதவுவீர்கள். வெளியுலகத் தொடர்பும் விரிவடையும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    ரிஷபம்

    கல்யாண முயற்சி கை கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மிதுனம்

    யோகமான நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தூர தேசத்திலிருந்து வரும் தகவல் ஆதாயம் தரும்.

    கடகம்

    அலைபேசி மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.

    சிம்மம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்வர்.

    கன்னி

    மகிழ்ச்சி கூடும் நாள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    துலாம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வேலைப்பளு கூடும். குடும்பத்தினர்களின் ஆதரவு குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை.

    விருச்சிகம்

    புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கல் கொடுக்கல்கள் ஆதாயம் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    தனுசு

    மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சி லாபம் தரும். ஆரோக்கியக் குறைபாடுகள் படிப்படியாக மாறும். உத்தியோக உயர்விற்கான அறிகுறிகள் தென்படும்.

    மகரம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.

    கும்பம்

    பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    மீனம்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாகத் தீட்டிய திட்டம் நிறைவேறும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திருமண முயற்சி கைகூடும்.

    • எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
    • சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16866), கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22662), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 15-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.

    * எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22661), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2025

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாகத் தீட்டிய திட்டம் நிறைவேறும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திருமண முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2025

    பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2025

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2025

    மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சி லாபம் தரும். ஆரோக்கியக் குறைபாடுகள் படிப்படியாக மாறும். உத்தியோக உயர்விற்கான அறிகுறிகள் தென்படும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2025

    புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கல் கொடுக்கல்கள் ஆதாயம் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2025

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வேலைப்பளு கூடும். குடும்பத்தினர்களின் ஆதரவு குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2025

    மகிழ்ச்சி கூடும் நாள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2025

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்வர்.

    ×