என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்கே"

    • பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.
    • எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.

    எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் 2 நாட்களாக இரு அவைகளும் முடங்கியது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் தோள்பட்டை வலியால் தவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தி தோள்பட்டை பிடித்து விட்டார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    • 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21 ராஜினாமா செய்தார்.
    • பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.

    14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 15வது ஜனாதிபதி ஆகியுள்ளார்.

    அவர் பதியேற்ற பின் முதல் முறையாக அவர் தலைமையில் இன்று மாநிலங்களவை நடந்தது.

    அவையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "உங்களுக்கு முன் இந்த அவையின் தலைவராக இருந்தவர், சிறிதும் எதிர்பாராமல் திடீரென விலகினார். பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.

    அவருக்கு பிரவு உபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து வருந்துகிறேன்" என்றார்.

    கார்கேவின் பேச்சால் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அப்போது பேசிய கிரண் ரிஜிஜு, "புதிய தலைவருக்கு வாழ்த்து கூற வேண்டிய நேரத்தில் கார்கே, தேவையின்றி தன்கர் விவகாரத்தை எழுப்புகிறார்.

    இதன்மூலம் அவர் முந்தைய அவைத் தலைவரை அவமதித்துள்ளார். தொடர்பில்லாத விஷயங்களை அவையில் எழுப்பாதீர்கள்" என்று தெரிவித்தார்.  

    • சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
    • டி.கே. சிவக்குமார் முதல்வராக வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி.கே. சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கார்கேவை ஏற்கனவே சந்தித்து பேசினர்.

    இந்த நிலையில் சித்தராமையா உடன் கார்கே நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் இது 2ஆவது சந்திப்பாகும். இதனால் முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என செய்தியாளர்கள் கார்கேயிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு கார்கே பதில் அளிக்கையில் "பேச்சுவார்த்தை குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. நீங்கள் இங்கே நிற்பதால் உங்களுடைய நேரம்தான் செலவாகும். நான் மிகவும் கவலை அடைகிறேன். எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மேலிடம அதைச் செய்யும். நீங்கள் இதைப் பற்றி மேலும் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.

    டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சிலர் டெல்லி சென்று கார்கேவை சந்தித்ததாக கூறப்படுகிறது. எனினும், டெல்லிக்கு எம்.எல்.ஏ. சென்றது தனக்கு தெரியாது என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
    • இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பிரதமர் மோடிக்கு பிறந்தநாளுக்கு டிரம்ப் அழைத்து வாழ்த்து கூறிய பிறகு 'ஆப்கி பார், டிரம்ப் சர்க்கார்' அரசாங்கத்திடமிருந்து நீங்கள் பெற்ற பரிசுகளைப் பார்த்து இந்தியர்கள் வேதனைப்படுகிறார்கள்

    * H-1B விசாக்களுக்கு ஆண்டு கட்டணம் $100,000 (ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தப்பட்டது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை கடுமையாக பாதிக்கும். H-1B விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள்.

    * ஏற்கனவே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதனால் 10 துறைகளில் மட்டும் இந்தியாவிற்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    * இந்திய அவுட்சோர்சிங்கை இலக்காகக் கொண்ட HIRE சட்டம்.

    * சபாஹர் துறைமுக விலக்கு நீக்கப்பட்டது, நமது மூலோபாய நலன்களுக்கு இழப்பு.

    * இந்திய பொருட்களுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

    * டிரம்ப் சமீபத்தில் மீண்டும் (பதினொரு முறை!) தனது தலையீட்டால் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறுகிறார்.

    இந்தியாவின் தேசிய நலன்கள் மிக உயர்ந்தவை. கட்டி அணைப்பது, வெற்று முழக்கங்கள் இடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் மக்களை "மோடி, மோடி" என்று கோஷமிட வைப்பது என்பது வெளியுறவுக் கொள்கை அல்ல!

    வெளியுறவுக் கொள்கை என்பது நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது; இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பது மற்றும் ஞானத்துடனும் சமநிலையுடனும் நட்பு நாடுகளை வழிநடத்துவது பற்றியது" என்று தெரிவித்துள்ளார். 

    • வாக்கு திருட்டு மூலம் மோடி பீகார் தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்
    • இன்னும் சில மாதங்களில் பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்தில் இருக்காது.

    பீகாரில் நடைபெற்ற வாக்காளர்கள் அதிகாரம் பேரணியில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்கு திருட்டு மூலம் மோடி பீகார் தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவில்லை என்றால், மோடி மற்றும் அமித் ஷா உங்களை அடக்கி வைத்து விடுவார்கள்.

    மோடி வாக்கு திருட்டு, பைசா திருட்டு, வங்கிகளை கொள்கை அடிப்பவர்களை பாதுகாக்கும் திருட்டு போன்ற திருட்டு பழக்கம் கொண்டவர்.

    இன்னும் சில மாதங்களில் பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்தில் இருக்காது. ஏழை, பெண்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு அமையும்.

    இவ்வாறு கார்கே பேசினார்.

    • காங்கிரஸ் அமைப்பில் மாவட்ட தலைவர் பதவி மிகவும் முக்கியமானது.
    • நான் அமைச்சராக பணியாற்றிக் கொண்டே மாவட்ட தலைவரானேன்.

    காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் கட்டமைப்பில் பெண்களுக்கு 50 சதவீதம் என்ற வகையில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என கட்சி தலைவர்களிடம் பேசும்போது, அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே வலியுறுத்தினார்.

    ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சா் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக கார்கே தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டர்.

    இது தொடர்பாக கார்கே வெளியிட்டு எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் அமைப்பில் மாவட்ட தலைவர் பதவி மிகவும் முக்கியமானது. லால் பகதூர் சாஸ்திரி, கோவிந்த் வல்லாப் பண்ட், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குண்டு ராவ், அமைச்சர் தரம் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மாவட்ட தலைவர் பதவியை வகித்தவர்கள். நான் அமைச்சராக பணியாற்றிக் கொண்டே மாவட்ட தலைவரானேன்.

    கட்சியின் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 சதவீதம் என்ற வகையில் நாம் உயர்த்த வேண்டும். அவர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து, முக்கிய கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும்.

    பீகாரில், ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி வாக்காளர் அதிகாரம் என்பதன் மூலம் முழு ஆதரவை மக்களிடம் இருந்து பெற்று வருகின்றன. நாட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில், நம்முடைய போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சொல்ல வேண்டும்.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • இந்த செயல்முறை பீகாரில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் பரவி வருகிறது.
    • இந்த விஷயத்தின் தீவிரத்தை உச்ச நீதிமன்றமும் ஒப்புக்கொண்டுள்ளது.

    பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் முடிக்கப்பட்டு இன்று வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் உள்ளோரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுடன் இணைந்து, நாட்டின் ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    டெல்லியில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த சட்ட மாநாட்டில் பேசிய கார்கே, "தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து வேண்டுமென்றே நீக்கி வருகிறது.

    பீகாரில் 65 லட்சம் முதல் 1 கோடி வரையிலான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தற்செயல் நிகழ்வு அல்ல, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை தேர்தல் செயல்முறையிலிருந்து விலக்குவதற்கான நன்கு திட்டமிடப்பட்ட சதி இது.

    அரசு தரவுகளை மேற்கோள் காட்டி, 70 கோடி வாக்காளர்களில் 1 கோடி பெயர்கள் எந்த உறுதியான காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டால், அது அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும்.  இத்தகைய பட்டியல்களை ஆணையமே வெளியிட்டு வருகிறது.

    இந்த செயல்முறை பீகாரில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் பரவி வருகிறது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, அது ஒரு தேசிய போக்காக மாறும்போது, அதை அம்பலப்படுத்துவது அவசியமாகிறது.

    அரசியலமைப்பு பாதுகாப்பை பலவீனப்படுத்த தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் இணைந்து செயல்படுகிறது.

    இந்த விஷயத்தின் தீவிரத்தை உச்ச நீதிமன்றமும் ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் பல விசாரணைகள் இருந்தபோதிலும், ஆணையம் இதுவரை தனது அணுகுமுறையை மாற்றவில்லை.

    சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. பிரதமரின் பணி அரசியலமைப்பைப் பாதுகாப்பதே தவிர, அதை மிதிப்பது அல்ல.

    பொதுமக்கள் அவரை அரசியலமைப்பைப் பாதுகாக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர், அழிப்பதற்கு அல்ல" என்று தெரிவித்தார்.  

    • இன்றுவரை தீவிரவாதிகள் பிடிக்கப்படவில்லை அல்லது சுட்டுக் கொல்லப்படவில்லை.
    • உளவுத்துறை தோல்வியடைந்ததாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் அறிக்கையை வெளியிட்டார்.

    பாராளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மேல் சபையில் எதிர்கட்சி தலை வரும், காங்கிரஸ் தலைவரு மான மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விதி 267-ன் கீழ் நான் நோட்டீஸ் அளித்துள்ளேன். இன்றுவரை தீவிரவாதிகள் பிடிக்கப்படவில்லை அல்லது சுட்டுக் கொல்லப்படவில்லை. அனைத்து தரப்பினரும் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினர்.

    என்ன நடந்தது என்பதை அரசு எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உளவுத்துறை தோல்வியடைந்ததாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் அறிக்கையை வெளியிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தலையீட்டால் மட் டுமே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக 24 முறை கூறியுள்ளார். அவர் மீண்டும் மீண்டும் கூறுவது நாட்டுக்கு அவமானகரமானது.

    இவ்வாறு மல்லிகார் ஜூன கார்கே பேசினார்.

    இதற்கு பதில் அளித்து பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா கூறும் போது, 'இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது.எந்தவொரு விவாதத்தில் இருந்தும் ஓடிப் போக மாட்டோம்' என்றார்.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மறுக்கப்பட்டதால் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மேல் சபை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    12 மணிக்கு பிறகு அவை கூடியதும் இதே பிரச்சி னையை எதிர்க்கட்சிகள் கிளப்பினார்கள்.

    பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்ககோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    • டி.கே. சிவகுமார் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முதலமைச்சராக வாய்ப்பு பெறலாம்.
    • காங்கிரஸ் உயர்மட்டக் குழு முடிவில் இப்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

    சித்தராமையாவுக்குப் பதிலாக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்பார் என்ற ஊகங்கள் வேகமெடுத்துள்ளன.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவின் பெங்களூரு வருகை இந்த விவாதத்தை மேலும் தூண்டியுள்ளது.

    இந்தச் சூழலில், திங்களன்று, "கர்நாடக முதல்வர் அக்டோபரில் மாற்றப்படுவார் என்று சொல்கிறார்கள்" என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அது உயர்மட்டத்தின் எல்லைக்குள் உள்ள விஷயம். இங்கு உயர்மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. இந்த விஷயத்தை உயர்மட்டத்திடம் விட்டுவிட்டோம், மேலும் நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. தேவையற்ற பிரச்சினைகளை யாரும் உருவாக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.

    மறுபுறம், டி.கே. சிவகுமார் அணியை சேர்ந்த தலைவர்கள் தலைமை மாற்றத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.ஏ. இக்பால் உசேன், "டி.கே. சிவகுமார் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முதலமைச்சராக வாய்ப்பு பெறலாம்" என்று கூறினார்.

    சிவகுமாரின் கடின உழைப்பு மற்றும் கட்சியின் வெற்றிக்கான உத்திகள் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும், சரியான நேரத்தில் உயர் கட்டளை அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மாநிலத்தில் முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்று சில தலைவர்கள் கூறி வருவதாகவும், அதைப் பற்றி அவர் பேசி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

    மே 2023 இல் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.

    அந்த நேரத்தில், உயர்மட்டக் குழு இருவருக்கும் இடையே சமரசம் செய்து சித்தராமையாவை முதலமைச்சராகவும், சிவகுமாரை துணை முதலமைச்சராகவும் நியமித்தது.

    இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சிவகுமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் வகையில், அவர்களுக்கு இடையே சுழற்சி முறையில் முதல்வர் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அப்போது செய்திகள் வந்தன. இருப்பினும், கட்சி இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

    இந்நிலையில் காங்கிரஸ் உயர்மட்டக் குழு முடிவில் இப்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. 

    • சசி தரூரின் கட்டுரை பிரதமர் அலுவலகத்தால் பகிரப்பட்டது.
    • பறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. இறக்கைகள் உங்களுடையது.

    பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூரை மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்கே, "சசி தரூரின் மொழி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் அவர் காங்கிரஸ் காரியக் குழுவில் தக்கவைக்கப்பட்டுள்ளார். நாங்கள் நாட்டிற்காக ஒன்றாக நிற்கிறோம். ஆபரேஷன் சிந்தூரிலும் நாங்கள் ஒன்றாக நின்றோம். நாடு எங்களுக்குப் பெரியது.

    நாடு முதலில் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு மோடி பெரியவர். நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்று கூறினார்.

    கடந்த சில மாதங்களாக பிரதமரைப் புகழ்ந்து சசி தரூர் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். தி இந்துவில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரதமரிடம் இணையற்ற ஆற்றல் இருப்பதாகவும், அவர் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு சொத்து என்றும் குறிப்பிட்டார். சசி தரூரின் கட்டுரை பிரதமர் அலுவலகத்தால் பகிரப்பட்டது.

    சசி தரூர் மோடியைப் புகழ்ந்தது அவர் பாஜகவுக்கு தாவுவதற்கான அறிகுறி என்று பல ஊகங்கள் இருந்தன. ஆனால் சசி தரூர் அதை நிராகரித்தார்.

    கார்கேவின் கருத்துகளைத் தொடர்ந்து, தரூர் தனது எக்ஸ் பதிவில், ஒரு பறவையின் படத்தைப் பகிர்ந்து,"'பறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. இறக்கைகள் உங்களுடையது, வானம் யாருக்கும் சொந்தம் அல்ல" என்று குறிப்பிட்டுளார். 

    • பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்பு அபாயத்தில் உள்ளது.
    • மோடி அரசாங்கத்தின் கீழ் கருத்துச் சுதந்திரமோ, நடமாடும் சுதந்திரமோ இல்லை.

    நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி கொண்டு வந்த நிலையில், அவசரநிலை தினத்தை பாஜக கையில் எடுப்பது, அரசின் தோல்வியை மறைப்பதற்கானது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    இந்தியா சுதந்திரம் பெற்றதில் மற்றும் அரசியலைப்பு உருவாக்கப்பட்டதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் பங்கு ஏதும் இல்லை. அம்பேத்கரின் அரசியலமைப்பை நிராகரித்தன. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறது அதை கையில் எடுத்து, அரசியலைப்பை பாதுகாப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்பு அபாயத்தில் உள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் கருத்துச் சுதந்திரமோ, நடமாடும் சுதந்திரமோ இல்லை. அரசியலமைப்பு பாதுகாப்போம் எனப் பேசிக் கொண்டிருப்பவர்கள், தற்போது 50 வருடத்திற்குப் பிறகு எம்ர்ஜென்சியை கையில் எடுத்துள்ளனர். சிலர் இதை மறந்திருப்பார்கள். இவர்கள் தோண்டி எடுக்கிறார்கள்.

    மனுஸ்மிருதியின் கூறுகள் போன்ற நம்முடைய கலாசார அம்சங்கள் இல்லை என பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியலமைப்பை நிராகரித்தன. இதை செய்த அவர்களுக்கு தற்போது ஞானமடைந்துள்ளனர்.

    இவர்கள் ஆட்சியில் தோல்வியடைந்துள்ளனர். பணவீக்கம், வேலைவாய்ப்பின்மைக்கு பதில் அளிக்காதது, ஊழல், பொருளாதார தோல்வி குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளனர். பொய்கள் மற்றும் தோல்வியை மறைக்க இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    பொருளாதார சமநிலை மிகப்பெரிய அளவில் இடைவெளி பெற்றுள்ளது. அறிவிக்கப்படாத அவசரநிலையை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
    • இரண்டு கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்ளவில்லை.

    பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பீட்டால், மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே, பிரதமர் மோடியை எச்சரித்துள்ளார்.

    கர்காடக மாநிலம் ராய்ச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது கார்கே கூறியதாவது:-

    சமீபத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி பயங்கரவாதிகளை அழித்தது இந்திய படைகள்.

    ஒட்டுமொத்த நாடும், இந்திய படைகளும் நாட்டை பாதுகாக்க ஒற்றுமையாக இருந்த நிலையில், சில தனி நபர்கள், தனிப்பட்ட ஆதாயத்தை பெற முயற்சி செய்தார்கள்.

    அவர்கள் ராணுவத்தில் கேப்டன், கர்னல் அல்லது லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றியிருந்தால், நாட்டிற்காக சிறப்பாகப் போராடியதற்காகவும், சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும் நாம் அவர்களைப் பாராட்டியிருப்போம். ஆனால் அது அப்படியல்ல.

    பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இரண்டு கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி கேட்க விரும்புகிறேன்.

    அதற்குப் பதிலாக பீகார் தேர்தலுக்கான பிரசாரத்தில் பிசியாக இருந்தார். இதற்கு அர்த்தம் என்ன?. நாட்டு மக்களும், வீரர்களும் ஒருபக்கம் போரிட்டு கொண்டிருக்கும்போது, அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிறகு, மறுபக்கம் பிரதமர் பிரசாரத்தை தேர்வு செய்துள்ளார்.

    நீங்கள் எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பீட்டால் தலைவர்கள், மக்கள், குறிப்பாக நாட்டின் இளைஞர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.

    அமெரிக்க தேர்தல்களின்போது மோடி 'பிர் ஏக் பார் டிரம்ப் சர்க்கார் (Phir Ek Baar Trump Sarkar)' என்ற முழக்கத்தை எழுப்பினார். இந்த பெரிய மனிதர் (பிரதமர் மோடி) அமெரிக்காவில் இதைச் சொன்னார். ஆனால் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்தார். பிரதமர் மோடி அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

    ×