என் மலர்
நீங்கள் தேடியது "கார்கே"
- இரண்டு சமூகங்களுக்கு இடையிலான இன வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
- மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஒய்.கேம்சந்த் சிங் பதவியேற்றார்.
மணிப்பூர் பற்றி எரியும்போது மத்திய அரசு அமைதி காத்ததாகவும், அம்மாநிலத்தை ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றியதாகவும் மல்லிகார்ஜுனே கார்கே குற்றம் சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பதிலளித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே,
"வாஸ்கோடகாமா போர்ச்சுகலிலிருந்து ஆப்பிரிக்கா வழியாக இந்தியாவை அடைய சுமார் 11 மாதங்கள் எடுத்துக் கொண்டார், அப்போது அவருக்கு கடல் வழி கூட தெரியாது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினிலிருந்து வட அமெரிக்காவை அடைய இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டார். ஆனால் இவ்வளவு பெரிய மனிதாபிமான நெருக்கடியின் போது, எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து மணிப்பூரை அடைய இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்.
இரண்டு சமூகங்களுக்கு இடையிலான இன வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 70,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். நீங்கள் மணிப்பூரை இராணுவமயமாக்கப்பட்ட மண்டலமாக மாற்றியுள்ளீர்கள். வடகிழக்கு மற்றும் இந்தியா மீதான உங்கள் அக்கறையை இப்படித்தான் வெளிப்படுத்துவீர்களா? என கார்கே கேள்வி எழுப்பினார். கார்கேவின் இந்த உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டநிலையில் கார்கே இந்த உரையை நிகழ்த்தினார். மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஒய்.கேம்சந்த் சிங் பதவியேற்பு விழாவிற்கு சற்று முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே பல மாதங்களாக நடந்த இன வன்முறையைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி பிரேன் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
- குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கார்கே, ராகுல் 3-வது வரிசையில அமர வைக்கப்பட்டனர்.
- ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இது பாஜக-வால் வேண்டுமென்றே செய்யப்பட்டது- காங்கிரஸ்
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மாநில ஊர்திகளின் அணிவகுப்புகளும் நடைபெற்றன.
இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போன்றோரும் கலந்து கொண்டனர்.
இதில் கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு 3-வது வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் அமர்ந்திருந்தனர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரை அவமானப்படுத்தியதாக விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில் "நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரை இத்தகைய முறையில் நடத்துவது?, இது எந்தவொரு கண்ணியம், மரபு மற்றும் நெறிமுறைகளின் தரங்களுக்கும் பொருந்துமா?. இது தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் விரக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. "ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இது பாஜக-வால் வேண்டுமென்றே செய்யப்பட்டது. 2014-ஆம் ஆண்டு எல்.கே. அத்வானி எங்கு அமர வைக்கப்பட்டிருந்தார் என்று பாருங்கள். இப்போது ஏன் இந்த நெறிமுறை மீறல்? மோடியும், அமித் ஷாவும் கார்கே மற்றும் ராகுல் காந்தியை அவமானப்படுத்த விரும்புவதால்தான் இது நடந்ததா?" என்று கேள்வி எழுப்பினார்.
- VB-G RAM G பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம், உங்களால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முடியாது.
- அதற்குப் பதிலாக காங்கிரஸ் பலவீனம்தான் ஆகும் என மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் கீழ் (MGNREGA) கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாக VB-G RAM G என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், MGNREGA திட்டத்தை காப்போம் (MGNREGA Bachao Sangram) என்ற பெயரில் கடந்த 10-ந்தேதியில் இருந்து 45 நாட்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் VB-G RAM G திட்டம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பொய் கூறி வருகின்றனர் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சிவராஜ் சவுகான் கூறியதாவது:-
VB-G RAM G பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம், உங்களால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக காங்கிரஸ் பலவீனம்தான் ஆகும் என மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
காங்கிரஸ் கட்சி தனது சிந்தனை, சித்தாந்தம் மற்றும் லட்சியத்தை கைவிட்டுவிட்டது. சிந்தனை என்பது தேசம் முதன்மை, நாட்டின் வளர்ச்சி. VB-G RAM G கிராமங்களின் வளர்ச்சிக்கானது.
MGNREGA-ஐ சிறந்ததாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்கு சாட்சி காங்கிரஸ் அரசாங்கம் 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே இத்திட்டத்திற்கு செலவழித்த நிலையில், நாங்கள் 9 லட்சம் கோடி ரூபாய் செலவழித்துள்ளோம். வேலைக்கான உரிமை பறிக்கப்படும் என்ற கங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு பொய்யானது.
100 நாட்களுக்குப் பதிலாக நாங்கள் 125 நாட்கள் வேலை கொடுக்க இருக்கிறோம். வேலைக்கான உரிமை மட்டுமல்ல, 12 நாட்களுக்குள் வேலைவாய்ப்பின்மைக்கான அலவன்ஸ் கொடுக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். நீங்கள் பேப்பரில் உரிமையை கொடுத்தீர்கள். நாங்கள் அதை களத்தில் வலுப்படுத்தியுள்ளோம்.
ஒரு குறிப்பிட்ட பஞ்சாயத்துகளில் மட்டுமே வேலை வழங்கப்படும் என தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். இந்த திட்டம் அனைத்து பஞ்சாயத்திற்கும் என்ற அளவில் அமல்படுத்தப்படும் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். மாநிலங்களுக்கு கூடுதல் சுமை கிடையாது, மத்திய அரசு ஏற்கனவே அதிக நிதி கொடுத்து வருகிறது. மாநிலங்களுக்கான முதலீடு கிராமங்களில் கட்டமைப்புகளை வலுப்படுத்தும்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
- MGNREGA அறக்கட்டளை இல்லை. இது சட்டப்பூர்வ உத்தரவாதம்.
- கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்களுடைய சொந்த கிராமத்தில் வேலை பெற்றனர்.
மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை திரும்பப் பெற்று, VB GRAM G என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் மீதான தாக்குதல், கோடிக்கணக்கான மக்கள் மீதான தாக்குதல் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி தெளிவாக, சந்தேகமின்றி VB GRAM G சட்டத்தை திரும்ப பெற வேண்டும், உரிமை அடிப்படையிலான MGNREGA சட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும், வேலைக்கான உரிமை மற்றும் பஞ்சாயத்திற்கான உரிமையை மீண்டும் வழங்குதல் ஆகிய 3 கோரிக்கைகளை முன் வைக்கிறது. இதனால்தான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை காப்போம் என்ற தேசிய அளவிலான போராட்டத்தை ஜனவரி 10 முதல் பிப்ரவரி 25-ந்தேதி வரை நடத்துகிறோம்.
MGNREGA அறக்கட்டளை இல்லை. இது சட்டப்பூர்வ உத்தரவாதம். கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்களுடைய சொந்த கிராமத்தில் வேலை பெற்றனர்.
MGNREGA திட்டம் பசி மற்றும் துயர இடம்பெயர்வைக் குறைத்தது, கிராமப்புற ஊதியத்தை உயர்த்தியது மற்றும் பெண்களின் பொருளாதார கண்ணியத்தை வலுப்படுத்தியது. VB GRAM G இந்த உரிமையை அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடுகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்படும், எனவே நெருக்கடியான காலங்களில் கூட, பணம் தீர்ந்ததும் பணிகள் முடிவடையும். மேலும், நிதியையும் பணிகளையும் மத்திய அரசே தீர்மானிக்கும். இது கிராம சபைகளையும் பஞ்சாயத்துகளையும் பொருத்தமற்ற நிலைக்குத் தள்ளிவிடும்.
MGNREGA-ஐ தாக்குவது கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளையும் தாக்குவது போன்றது. ஒவ்வொரு பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை அமைதியாகவும் உறுதியாகவும் நாங்கள் எதிர்ப்போம்.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
- ஜனநாயக உரிமையை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த திட்டமிட்ட சதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.
- UPA அரசால் கொண்டு வரப்பட்ட MGNREGA உலக நாடுகளால் பாராட்டை பெற்றது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய மக்கள் பிரசாரம் தேவை என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு கூட்டம் என்று கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கார்கே பேசியதாவது:-
* ஜனநாயக உரிமையை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த திட்டமிட்ட சதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.
* ஜனநாயகம், அரசியலமைப்பு, மக்கள் உரிமை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்த கூட்டம் கூட்டப்படுகுிறது.
* UPA அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் {Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)} உலக நாடுகளால் பாராட்டை பெற்றது. இந்த திட்டம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக மகாத்மா காந்தி எனப் பெயரிடப்பட்டது.
* மோடி அரசு எந்தவித ஆய்வும் இன்றி, மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் மதிப்பீடு அல்லது ஆலோசனை செய்யாமல் சட்டத்தை ரத்து செய்துள்ளது. இதை மூன்று விவசாய சட்டங்களை போன்று செய்துள்ளனர்.
* இந்த சட்டம் ரத்துக்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் தேவை. நாடு முழுவதும் அரசு நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட வேண்டும். 2015 நிலம் கையப்படுத்துதல் சட்டத்திற்கு எதிரான போராட்டம் போன்றது தேவை.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) குறித்து உறுதியான திட்டங்களைத் தீட்டுவதும், நாடு தழுவிய மக்கள் பிரச்சாரத்தைத் தொடங்குவதும் நமது கூட்டுப் பொறுப்பாகும்.
* வங்கதேசத்தில் இந்து மைனாரிட்டிகள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த நாட்டையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
* கிறிஸ்துமஸ் அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சமூக நல்லிணக்கத்தை குலைத்ததுடன், உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு கார்கே பேசினார்.
- பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது.
- அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்
மக்களவையில் வந்தே மாதரம் மீதான விவாதம் திங்கள்கிழமை மக்களவையில் நடைபெற்ற நிலையில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது.
தேசிய கீதமாக வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தது காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
இதற்குப் பிறகு, பேசிய கார்கே "வந்தே மாதரம்" என்ற முழக்கத்தை எழுப்பி தனது உரையைத் தொடங்கினார்.
அவர் பேசியதாவது, பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது. 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸின் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடி சிறைக்குச் சென்றனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்து கொண்டிருந்தீர்கள்.
இப்போது நீங்கள் எங்களுக்கு தேசபக்தியை குறித்து பாடம் எடுக்கிறீர்கள். சுதந்திர இயக்கத்தை ஆதரிக்க நீங்கள் பயந்தீர்கள். நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்தீர்கள் என்று கூறினார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி, இந்தப் பாடலின் இரண்டு பத்திகளை மட்டுமே பாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முடிவை எடுத்தது நேரு மட்டும் அல்ல. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், மதன் மோகன் மாளவியா மற்றும் ஆச்சார்யா ஜே.பி. கிருபளானி போன்ற தலைவர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்று கார்கே கூறினார்.
நீங்கள் இந்த உயர்மட்டத் தலைவர்கள் அனைவரையும் அவமதிக்கிறீர்கள். அது அவர்களின் ஒருங்கிணைந்த முடிவு. ஏன் நீங்கள் நேருவை மட்டும் குறிவைக்கிறீர்கள்?.
ஜவஹர்லால் நேருவை அவமதிக்கும் எந்த வாய்ப்பையும் பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் தவறவிடுவதில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதே பாதையைப் பின்பற்றுகிறார். பாஜகவின் மூதாதையர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, முஸ்லிம் லீக்குடன் சேர்ந்து வங்காளத்தில் அரசாங்கத்தை நடத்தி வந்தபோது உங்கள் தேசபக்தி எங்கே இருந்தது? பாஜக அதன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
சீனாவின் ஷாங்காயில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.
- எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.
எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் 2 நாட்களாக இரு அவைகளும் முடங்கியது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் தோள்பட்டை வலியால் தவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தி தோள்பட்டை பிடித்து விட்டார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
- 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21 ராஜினாமா செய்தார்.
- பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.
14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 15வது ஜனாதிபதி ஆகியுள்ளார்.
அவர் பதியேற்ற பின் முதல் முறையாக அவர் தலைமையில் இன்று மாநிலங்களவை நடந்தது.
அவையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "உங்களுக்கு முன் இந்த அவையின் தலைவராக இருந்தவர், சிறிதும் எதிர்பாராமல் திடீரென விலகினார். பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.
அவருக்கு பிரவு உபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து வருந்துகிறேன்" என்றார்.
கார்கேவின் பேச்சால் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய கிரண் ரிஜிஜு, "புதிய தலைவருக்கு வாழ்த்து கூற வேண்டிய நேரத்தில் கார்கே, தேவையின்றி தன்கர் விவகாரத்தை எழுப்புகிறார்.
இதன்மூலம் அவர் முந்தைய அவைத் தலைவரை அவமதித்துள்ளார். தொடர்பில்லாத விஷயங்களை அவையில் எழுப்பாதீர்கள்" என்று தெரிவித்தார்.
- சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
- டி.கே. சிவக்குமார் முதல்வராக வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி.கே. சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கார்கேவை ஏற்கனவே சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் சித்தராமையா உடன் கார்கே நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் இது 2ஆவது சந்திப்பாகும். இதனால் முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என செய்தியாளர்கள் கார்கேயிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கார்கே பதில் அளிக்கையில் "பேச்சுவார்த்தை குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. நீங்கள் இங்கே நிற்பதால் உங்களுடைய நேரம்தான் செலவாகும். நான் மிகவும் கவலை அடைகிறேன். எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மேலிடம அதைச் செய்யும். நீங்கள் இதைப் பற்றி மேலும் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.
டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சிலர் டெல்லி சென்று கார்கேவை சந்தித்ததாக கூறப்படுகிறது. எனினும், டெல்லிக்கு எம்.எல்.ஏ. சென்றது தனக்கு தெரியாது என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
- இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பிரதமர் மோடிக்கு பிறந்தநாளுக்கு டிரம்ப் அழைத்து வாழ்த்து கூறிய பிறகு 'ஆப்கி பார், டிரம்ப் சர்க்கார்' அரசாங்கத்திடமிருந்து நீங்கள் பெற்ற பரிசுகளைப் பார்த்து இந்தியர்கள் வேதனைப்படுகிறார்கள்
* H-1B விசாக்களுக்கு ஆண்டு கட்டணம் $100,000 (ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தப்பட்டது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை கடுமையாக பாதிக்கும். H-1B விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள்.
* ஏற்கனவே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதனால் 10 துறைகளில் மட்டும் இந்தியாவிற்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
* இந்திய அவுட்சோர்சிங்கை இலக்காகக் கொண்ட HIRE சட்டம்.
* சபாஹர் துறைமுக விலக்கு நீக்கப்பட்டது, நமது மூலோபாய நலன்களுக்கு இழப்பு.
* இந்திய பொருட்களுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
* டிரம்ப் சமீபத்தில் மீண்டும் (பதினொரு முறை!) தனது தலையீட்டால் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறுகிறார்.
இந்தியாவின் தேசிய நலன்கள் மிக உயர்ந்தவை. கட்டி அணைப்பது, வெற்று முழக்கங்கள் இடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் மக்களை "மோடி, மோடி" என்று கோஷமிட வைப்பது என்பது வெளியுறவுக் கொள்கை அல்ல!
வெளியுறவுக் கொள்கை என்பது நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது; இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பது மற்றும் ஞானத்துடனும் சமநிலையுடனும் நட்பு நாடுகளை வழிநடத்துவது பற்றியது" என்று தெரிவித்துள்ளார்.
- வாக்கு திருட்டு மூலம் மோடி பீகார் தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்
- இன்னும் சில மாதங்களில் பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்தில் இருக்காது.
பீகாரில் நடைபெற்ற வாக்காளர்கள் அதிகாரம் பேரணியில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு திருட்டு மூலம் மோடி பீகார் தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவில்லை என்றால், மோடி மற்றும் அமித் ஷா உங்களை அடக்கி வைத்து விடுவார்கள்.
மோடி வாக்கு திருட்டு, பைசா திருட்டு, வங்கிகளை கொள்கை அடிப்பவர்களை பாதுகாக்கும் திருட்டு போன்ற திருட்டு பழக்கம் கொண்டவர்.
இன்னும் சில மாதங்களில் பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்தில் இருக்காது. ஏழை, பெண்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு அமையும்.
இவ்வாறு கார்கே பேசினார்.
- காங்கிரஸ் அமைப்பில் மாவட்ட தலைவர் பதவி மிகவும் முக்கியமானது.
- நான் அமைச்சராக பணியாற்றிக் கொண்டே மாவட்ட தலைவரானேன்.
காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் கட்டமைப்பில் பெண்களுக்கு 50 சதவீதம் என்ற வகையில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என கட்சி தலைவர்களிடம் பேசும்போது, அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே வலியுறுத்தினார்.
ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சா் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக கார்கே தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டர்.
இது தொடர்பாக கார்கே வெளியிட்டு எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் அமைப்பில் மாவட்ட தலைவர் பதவி மிகவும் முக்கியமானது. லால் பகதூர் சாஸ்திரி, கோவிந்த் வல்லாப் பண்ட், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குண்டு ராவ், அமைச்சர் தரம் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மாவட்ட தலைவர் பதவியை வகித்தவர்கள். நான் அமைச்சராக பணியாற்றிக் கொண்டே மாவட்ட தலைவரானேன்.
கட்சியின் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 சதவீதம் என்ற வகையில் நாம் உயர்த்த வேண்டும். அவர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து, முக்கிய கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும்.
பீகாரில், ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி வாக்காளர் அதிகாரம் என்பதன் மூலம் முழு ஆதரவை மக்களிடம் இருந்து பெற்று வருகின்றன. நாட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில், நம்முடைய போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சொல்ல வேண்டும்.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.






