என் மலர்tooltip icon

    பீகார்

    • பொதுமக்களின் புனிதமான உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கைகள் புண்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
    • சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம்

    பீகாரில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா அறிவித்துள்ளார்.

    நேற்று செய்தியாளர்கள் சந்திபில் பேசிய அவர், பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    சிறுவர்களிடையே வன்முறைப் குணம் உருவாவதைத் தடுப்பது, பொதுமக்களின் புனிதமான உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கைகள் புண்படாமல் பாதுகாப்பது, சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் விற்கப்படும் உணவுகளால் ஏற்படும் உடல்நலக் கேடுகளை தவிர்ப்பது, பொது இடங்களில் தூய்மையைப் பராமரித்தல் ஆகிய காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விஜய் குமார் சின்ஹா தெரிவித்தார்.

    மேலும், மக்களின் உணவு விருப்பங்களுக்கு அரசு எதிரானது அல்ல என்று குறிப்பிட்ட விஜய் குமார் சின்ஹா, பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும், சமூக கண்ணியத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூறினார்.

    விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் பொருட்களைப் பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மற்ற இடங்களில், இறைச்சிக் கடைகள் பொதுமக்களின் பார்வையில் நேரடியாகப் படாதவாறு திரைகள் அல்லது கண்ணாடி பேனல்கள் மூலம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

    • சகோதரர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
    • தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மனிஷ் குமார் (27), மஞ்சீத் குமார் (25). அண்ணன்-தம்பியான இருவரும் அதே கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    அப்போது திருமண வரவேற்பு விழாவில் திடீரென உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சகோதரர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சகோதரர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் சொத்து பிரச்சனை தொடர்பான முன்பகை காரணமாக சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணத்திற்கு பிறகு நிதீஷ் குமாரை கடத்திச் சென்று வீட்டில் அடைத்து வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தியாவில் வடமாநிலங்களில் ஆண்,பெண் விகிதச்சாரம் வெகுவாக மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் திண்டாடி வருக்கின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க பீகார் மாநிலத்தில் அரசு வேலை மற்றும் உயர் கல்வி படித்த மாப்பிள்ளைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    நல்ல மாப்பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருக்கும் சிலர் ஆண்களை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற ஒரு திருமணம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம், சமஷ்தி பூர் மாவட்டம், பகார் கிராமத்தை சேர்ந்தவர் நிதீஷ் குமார். பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு தயாராகி வந்தார். பக்கத்து கிராமமான சக்கரஜா அலி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராய்.

    இவரது குடும்பத்தினர் போலீஸ் வேலைக்கு தயாராகி வரும் நிதிஷ் குமாரை தங்களது மருமகனாக்க விரும்பினார்கள். நிதீஷ் குமாரின் நடவடிக்கைகளை சங்கர் ராய் குடும்பத்தினர் கண்காணித்து வந்தனர்.

    கடந்த 7-ந்தேதி நிதிஷ்குமார் நூலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சங்கர் ராய் குடும்பத்தினர் காரை எடுத்து வந்து நிதிஷ்குமாரை வலுக்கட்டாயமாக காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர்.

    நிதீஷ்குமார் கத்தி கூச்சலிட்டதால் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் நிதிஷ்குமாரின் வாயில் வலுக்கட்டாயமாக போதை மருந்தை ஊற்றினர். சிறிது நேரத்தில் நிதிஷ் குமார் மயக்கமடைந்தார்.

    சங்கர் ராய் குடும்பத்தினர் மோர்வாலில் உள்ள கோவிலுக்கு அவரை கொண்டு சென்றனர். தங்களது மகள் லட்சுமி குமாரிக்கு மணப்பெண் அலங்காரம் செய்தனர். அதேபோல் நிதீஷ் குமாருக்கும் புது உடைகளை அணிவித்து அலங்கரித்தனர்.

    பின்னர் வலுக்கட்டாயமாக நிதீஷ் குமாரை லட்சுமி குமாரியின் கழுத்தில் தாலி கட்ட வைத்தனர். அங்கிருந்த ஒருவர் திருமண நிகழ்ச்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

    திருமணத்திற்கு பிறகு நிதீஷ் குமாரை கடத்திச் சென்று தங்களது வீட்டில் அடைத்து வைத்தனர். நூலகத்திற்குச் சென்ற மகன் திரும்பி வராததால் இதுகுறித்து அவரின் பெற்றோர் சமஷ்தி பூர் போலீசில் மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நிதிஷ்குமாரின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தனர். போலீசார் சங்கர் ராய் வீட்டிற்கு சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிதீஷ் குமாரை மீட்டனர்.

    தன்னை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வைத்த சங்கர் ராய் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் ராய் குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகாரில் அரசு வேலை மற்றும் உயர் கல்வி முடித்த வாலிபர்களை குறி வைத்து கட்டாய திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 1224 ஆண்களை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளனர்.

    பெண்களின் பெற்றோர் வாலிபர்களை கடத்திச் சென்று ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    பீகார் மாநிலத்தில் திருமணமாகாத ஆண்களுக்கு இது போன்ற திருமணங்கள் பெரும் சோதனையாக மாறியுள்ளது.



    • நானே சென்று கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்தேன்.
    • ஒரு சிறிய அறையில் தான் ஒரு சுகாதார அமைப்பு இயங்கி வருகிறது.

    பிரபல நாட்டுப்புறப் பாடகியும், பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வுமான மைதிலி தாகூர், இன்று (பிப்.10) சட்டப்பேரவையில் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சரை விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மங்கல் பாண்டேவை மைதிலி தாகூர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அதாவது தனது தொகுதியான அலிநகரில் உள்ள அரசு மருத்துவமனையின் மோசமான நிலைக்குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் கட்டிடம் மோசமான நிலையில் இல்லை என்றும், பழுதுபார்ப்பு மட்டுமே தேவை என்றும் பதிலளித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மைதிலி சட்டப்பேரவையில், 

    "அமைச்சரின் பதிலில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை. ஏனெனில்,'கட்டிடம் மோசமான நிலையில், சிறிய பழுதுவேலைலகள் மட்டுமே இருப்பதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நானே சென்று கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்தேன்.

    அங்கே ஒரு சிறிய அறையில் தான் ஒரு சுகாதார அமைப்பு இயங்கி வருகிறது. அங்கு இப்போது மருத்துவர் யாரும் இல்லை, கடந்த காலத்தில் அங்கு இரண்டு மருத்துவர்கள் இருந்தார்கள், ஆனால் தற்போது இல்லை. நான் மிகவும் சிறிய வயதிலிருந்தே சுகாதார அமைச்சரைப் பார்த்து வருகிறேன். அவர் சுகாதாரத் துறையில் பணியாற்றுவதை நான் கவனித்து வருகிறேன். எனவே, இது மிகவும் முக்கியமானது என்பதால், அவர் பொதுமக்களின் நலனுக்காக இதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    ஐந்து முதல் ஏழு பஞ்சாயத்துகள் இந்த மருத்துவமனையைச் சார்ந்துள்ளன. இந்த மருத்துவமனையிலிருந்து 40,000 முதல் 50,000 பேர் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த மருத்துவமனை எனது முழு தொகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, இதன் மூலம் கன்ஷ்யாம்பூர் மற்றும் அலினகர் ஆகிய இரண்டு கிளைகளும் பயனடைய முடியும்" என தெரிவித்தார். 

    தனது சொந்தக் கட்சியின் அமைச்சரையே சட்டப்பேரவையில் விமர்சித்தது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் பலரும் மைதிலி தாகூரின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர். 

    • பப்பு யாதவ் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
    • விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்றனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் பூர்ணியா தொகுதியைச் சேர்ந்தவர் சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ்.

    இந்நிலையில், பாட்னாவில் உள்ள பப்பு யாதவ் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். அவரை பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்ற போலீசார், அதன்பின் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், 1995-ம் ஆண்டு நடந்த பழைய குற்ற சம்பவம் தொடர்பாக பப்பு யாதவை கைது செய்துள்ளோம். விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. ஆகவே அவரை கைது செய்தோம் என தெரிவித்தனர்.

    சுயேட்சை எம்பி பப்பு யாதவை நள்ளிரவில் போலீசார் கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேஜஸ்வி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.
    • 26 வயதிலேயே பீகாரின் மிக இளைய துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

    ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவராக பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் தேசிய தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ஜேடி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மூத்த தலைவர்கள் முன்னிலையில் தனது மகனுக்கு நியமனக் கடிதத்தை முறையாக வழங்கினார். இந்த நிகழ்வில் தேஜஸ்வியின் தாயார் ராப்ரி தேவியும் கலந்து கொண்டார். 

    ஆனால் தேஜஸ்வி யாதவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யாவுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தேஜஸ்வியின் பதவி உயர்வு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ரோகிணி ஆச்சார்யா, "அரசியலின் உச்சம் - ஒரு வகையில், ஒரு மனிதனின் புகழ்பெற்ற இன்னிங்ஸின் மகத்தான இறுதிப் போட்டி; தங்கள் கைகளில் பொம்மையாக மாறிய இளவரசரின் முடிசூட்டு விழாவிற்காக, அந்தச் ஜால்ராக்களுக்கும் 'ஊடுருவல் கும்பலுக்கும்' வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து திடீரென ஓய்வு எடுத்து, தனது தாய்வழி குடும்பத்துடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டார் ரோகிணி ஆச்சார்யா. 

    தேஜஸ்வியின் அரசியல் பயணம்

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனான தேஜஸ்வி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். தனது தந்தை கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டபோது கட்சியின் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளப்பட்டார். தேஜஸ்வி 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராகோபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2015-ல் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணியில், 26 வயதிலேயே பீகாரின் மிக இளைய துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

    இந்த துணை முதலமைச்சர் பதவியும், 2017-ல் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு வெளியேறியபோது திடீரென முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டணி முறிவு, தேஜஸ்வியை எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளியது. அப்போது ஆர்ஜேடி அமைப்பை மீண்டும் வலுப்படுத்திய தேஜஸ்வி, தனது தேர்தல் பிரச்சார உத்திகளைக் கூர்மைப்படுத்தி, பீகாரில் என்.டி.ஏ கூட்டணிக்கு முதன்மையான சவாலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

    2020 சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியை வழிநடத்திய தேஜஸ்வி அதிகாரத்தை கைப்பற்றவில்லையென்றாலும், தனிப்பெரும் கட்சியின் தலைவராக உருவெடுத்தார். 2022 ஆகஸ்டில் நிதிஷ் குமார் மீண்டும் மகா கூட்டணியுடன் இணைந்தபோது, தேஜஸ்வி இரண்டாவது முறையாகத் துணை முதல்வராகப் பதவியேற்றார். 2024-ல் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்ததால் இப்பதவி முடிவுக்கு வந்தது. 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இருப்பினும், கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.


    • இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல
    • முகம் மறைத்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொதுவானது

    பீகார் மாநிலம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் ஹிஜாப், புர்கா, நிகாப், முகமூடிகள் (Masks), ஸ்கார்ஃப் அல்லது ஹெல்மெட் அணிந்து முகம் மறைக்கப்பட்ட நிலையில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்ற புதிய விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

    இதை தெரிவிக்கும் வகையில், பீகாரின் பல பகுதிகளில் உள்ள நகைக் கடைகளின் வாசலில் "முகத்தை மறைத்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை"என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    அகில இந்திய நகைக்கடைகள் மற்றும் தங்கக் கூட்டமைப்பு அறிவுறுத்தலின்பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நகைக் கடைகளில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டது என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல என்றும், முகம் மறைத்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொதுவானது என்றும் AIJGF பீகார் தலைவர் அசோக் குமார் வர்மா தெரிவித்துள்ளார். இந்த முடிவிற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது மத சுதந்திரத்திற்கு எதிரானது என்று விமர்சித்துள்ளன

    • அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் இருப்பதில்லை.
    • மக்கள் கஷ்டத்தை சந்திக்கக் கூடாத வகையில், அதிகாரிகள் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்.

    பீகார் மாநிலத்தில் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்களை சந்திக்கும் வகையில் அதிகாரிகள் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    குறிப்பாக பஞ்சாயத்து மற்றும் டிவிசனல் அளவிலான அலுவலங்களில் கட்டாயம் வருகையை பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை வருகிற 19-ந்தேதி முதல் கடைபிடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நிதிஷ் குமார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "கோரிக்கை மனுக்களுடன் அரசு அலுவலங்களுக்கு பொதுமக்கள் செல்லும்போது, அதிகாரிகள் இருப்பதில்லை என்பது அடிக்கடி கவனிக்கப்படுகிறது. மக்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளக் கூடாது. அதிகாரிகள் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் மக்களை சந்திக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.

    இந்த சிஸ்டம் பொது மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இருக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • VB-G RAM G திட்டத்தில் 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக உயர்த்தப்படும்.
    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வேலை நாட்களை அதிகரிப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA) திரும்பப் பெறப்பட்டு, பாராளுமன்றத்தில் VB-G RAM G சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த மசோதாவை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக பேராட்டம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் புதிய சட்டத்தில் ராம் பெயர் இருப்பதுதான் காங்கிரஸ்க்கு பிரச்சினை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    பீகார் மாநிலம் பெகுசாரை மக்களவை எம்.பி. தொகுதியில் செய்தியாளர்களை சந்தித்த கிரிராஜ் சிங் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஏழை மக்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வேலைவாய்ப்பு அல்லது நிலத்திட்டம் குறித்து காங்கிரஸ் கவலைப்படுவதில்லை. அவர்களுடைய ஒரே பிரச்சினை கடவுள் ராமர் பெயரோடுதான். VB-G RAM G திட்டத்தில் 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக உயர்த்தப்படும். காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சி காலத்தில் வேலை நாட்களை அதிகரிப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை.

    UPA ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு 10 வருடங்களில் மாநிலங்களுக்கு 2.13 லட்சம் கோடி ரூபாய் நிதி மட்டுமே ஒதுக்கியது. என்டிஏ அரசு 2014-ல் இருந்து மாநிலங்களுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் ஏழைகளுக்கு எதிரானது. கிராமப்புறங்களுக்கு எதிரானது.

    காங்கிரசின் உண்மையான முகம் மக்களுக்கு தெரியும். இதனால்தான் தேர்தலில் அவர்கள் மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.

    இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    • பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர்.
    • 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர்.

    பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ரூ. 50,000 வெகுமதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    உயிரிழந்தவர் தடைசெய்யப்பட்ட சிபிஐ-மாவோயிஸ்ட் (CPI-Maoist) அமைப்பின் வட-பீகார் மத்திய மண்டலக் குழுவின் செயலாளர் தயானந்த் மலக்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

    "14-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மலக்கர் என்ற சோட்டு என்ற நக்சலைட், பெகுசராய் மாவட்டத்தின் தேக்ரா பகுதியில் புதன்கிழமை மாலை சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் அடங்கிய கூட்டுக்குழுவுடன் நடந்த மோதலில் (Encounter) உயிரிழந்தார். 

    பாதுகாப்பு படையினர் தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மலக்கர் தனது கூட்டாளிகளுடன் ஒளிந்திருந்த இடத்திற்கு சென்றனர். காவல்துறையினரைக் கண்டதும், மலக்கர் அங்கிருந்து தப்பிக்க முயன்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் அந்த நக்சலைட் காயமடைந்தார் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். 

    மலக்கர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என பீகார் காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சம்பவ இடத்திலிருந்து ஒரு 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர். முன்னதாக வட பீகாரில் பல்வேறு நக்சலைட் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மலக்கரை பற்றி தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

    • சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.
    • நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன.

    பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ்குமார் 10-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

    இந்த நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு வெறும் ரூ.1.65 கோடிதான் என்று தெரிய வந்துள்ளது.

    நிதிஷ்குமார் மற்றும் அவரது அமைச்சர்களின் சொத்து விவரங்கள் மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடைசி நாளில் இந்த முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி நிதிஷ்குமாரின் சொத்து விவரம் ரூ.1.65 கோடி என்று தெரியவந்து உள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.68,455 அதிகமாகும்.

    நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன. அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.17.66 லட்சமாகும். அதே சமயம் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1.48 கோடியாகும். மேலும் அவருக்கு டெல்லியில் கூட்டுறவு வீட்டு வசதி குடியிருப்பில் ஒரு பிளாட்டும் இருக்கிறது.

    துணை முதலமைச்சர் சவுத்ரியிடம் ரொக்கமாக ரூ.1.35 லட்சம் உள்ளது. அவரது மனைவி குமாரி மம்தாவிடம் ரூ.35 ஆயிரம் இருக்கிறது. சவுத்ரியிடம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஒரு துப்பாக்கியும், விவசாயம் அல்லாத நிலம் உள்பட ரூ.4.91 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன.

    மற்றொரு துணை முதலமைச்சரான விஜய்குமார் சின்காவிடம் ரூ.48.46 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், ரூ.77,181 மதிப்புள்ள ஒரு கைத் துப்பாக்கியும் உள்ளது.

    • நிதிஷ்குமார் 2000-ல் பீகார் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
    • அந்தப் பதவி காலம் 7 நாட்களே நீடித்தது.

    பாட்னா:

    பீகார் என்றாலே நிதிஷ்குமார், நிதிஷ்குமார் என்றாலே பீகார் என அழைக்கும் அளவுக்கு தனது பதவியை தக்க வைத்துள்ளதுடன், மக்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்த தலைவராக திகழ்கிறார்.

    நிதிஷ்குமார் ஏற்கனவே 9 முறை பீகார் மாநில முதல் மந்திரியாக இருந்துவிட்டார். இந்த ஆண்டு 10-வது முறை பதவி ஏற்றுள்ளார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடவே இல்லை என்பதுதான்.

    இந்த ஆண்டில் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக மாறி இருக்கிறது பீகார் சட்டசபைத் தேர்தல்.


    பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி.யின் மகாபந்தன் கூட்டணியும் களம் கண்டன.

    இந்த முறை வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பீகாரில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த சட்டசபைத் தேர்தலில் பீகாரில் 67.13 சதவீத வாக்குகள் பதிவானது.

    சட்டசபை உறுப்பினராக இல்லாமல் இரு தசாப்தங்களாக முதல் மந்திரியாக இருக்கும் இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் நிதிஷ்குமார் மட்டுமே.

    நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை 1977-ம் ஆண்டு முதன் முதலில் ஜனதா கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு தோல்வி கிடைத்தது. அடுத்த தேர்தலிலும் தோல்வியை தழுவினார்.

    1985-ம் ஆண்டில் ஹர்ணாத் தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றி வாகை சூடினார்.

    5 முறை மக்களவை பதவி, 10 முறை முதல் மந்திரி பதவி, காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் மாறி மாறி கூட்டணி என பீகார் தன் கைக்குள் இருப்பதை உறுதி செய்தவர்.

    நிதிஷ்குமார் 2000-ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக முதல் முறை பதவியேற்றார். அந்தப் பதவி காலம் 7 நாட்களே நீடித்தது. அதன்பின், 2005-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 10 முறை முதல் மந்திரி பதவியை அலங்கரித்துள்ளார்.

    இத்தனை ஆண்டு காலம் பீகார் மாநில முதல் மந்திரியாக தனது அரியணையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தக்கவைத்துள்ளார் என்பதே இவரது சாமர்த்தியம். வாஜ்பாயி அரசாங்கத்தில் மத்திய மந்திரி பதவி வகித்தவர்.


    இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த நிதிஷ்குமார் மீது அம்மாநில மக்களின் நம்பிக்கையும் நல்லெண்ணமும் குறையவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

    ×