என் மலர்
நீங்கள் தேடியது "ஹிஜாப்"
- நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக கூறப்பட்டது.
- தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. .
பீகாரில் நகைக்கடைகளில் பெண்கள் முகத்தை மூடி வர தடை விதிக்கப்பட்டது. அதே போல் உ.பி. வாரணாசியிலும் ஹிஜாப் அணிந்து வர நகைக்கடைகள் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால் இது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், "நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை - தமிழ்நாட்டில் அல்ல!
'பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்யமாட்டோம்' என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது.
ஆனால், நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல. சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அல்ல. தவறான தகவலைப் பரப்பாதீர்!" என்று கூறப்பட்டுள்ளது.

- இந்திய அரசியலமைப்பு யாருக்கும் தடை விதிக்கவில்லை. இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த ஒரு மகள் பிரதமராக வருவார் என்பது எனது கனவு
- இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வருவார் என்ற ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நிகழ்வொன்றில் பேசிய ஓவைசி, "பாகிஸ்தான் அரசியலமைப்பு முஸ்லிம் அல்லாதவர்கள் உயர்பதவிக்கு வருவதைத் தடுக்கிறது.
ஆனால், இந்திய அரசியலமைப்பு யாருக்கும் தடை விதிக்கவில்லை. இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த ஒரு மகள் பிரதமராக வருவார் என்பது எனது கனவு" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "அரசியலமைப்பு ரீதியாக யாரும் பிரதமராகலாம், அதில் தடையில்லை.
ஆனால் இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது. இந்தியாவின் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனாவாலா இதுபற்றி பேசுகையில், "பிரதமர் பதவி பற்றிப் பேசுவதற்கு முன்பு, ஓவைசி தனது சொந்தக் கட்சியில் ஒரு ஹிஜாப் அணிந்த பெண்ணையோ அல்லது இஸ்லாமியர்களில் பஸ்மாந்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையோ தலைவராக்கிக் காட்டட்டும்" என்று சவால் விடுத்தார்.
- முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியல் நீண்ட காலம் நீடிக்காது என்றார்.
- அசாதுதீன் ஒவைசியின் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:
பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே அந்நாட்டின் பிரதமர் அல்லது அதிபராக முடியும். ஆனால், சட்டமேதை அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனும் பிரதமர், முதல்-மந்திரி அல்லது மேயர் ஆக முடியும் என தெளிவாகக் கூறுகிறது.
இறைவனின் அருளால் ஒரு நாள் வரும், அப்போது நானும், இந்த தலைமுறையும் இருக்க மாட்டோம். ஆனால், ஹிஜாப் அணிந்த ஒரு மகள் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார். முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியல் நீண்ட காலம் நீடிக்காது என தெரிவித்தார்.
இந்நிலையில், அசாதுதீன் ஒவைசியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக, பா.ஜ.க. எம்.பி. அனில் போன்டே கூறுகையில், ஒவைசியின் பேச்சு பொறுப்பற்றது. எந்த ஒரு பெண்ணும் அடிமைத் தனத்தை விரும்புவதில்லை. முஸ்லிம் பெண்களே ஹிஜாப் அணிவதற்கு எதிராக இருக்கிறார்கள். ஈரான் போன்ற நாடுகளிலும் பெண்கள் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர் என குறிப்பிட்டார்.
- இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல
- முகம் மறைத்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொதுவானது
பீகார் மாநிலம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் ஹிஜாப், புர்கா, நிகாப், முகமூடிகள் (Masks), ஸ்கார்ஃப் அல்லது ஹெல்மெட் அணிந்து முகம் மறைக்கப்பட்ட நிலையில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்ற புதிய விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
இதை தெரிவிக்கும் வகையில், பீகாரின் பல பகுதிகளில் உள்ள நகைக் கடைகளின் வாசலில் "முகத்தை மறைத்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை"என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய நகைக்கடைகள் மற்றும் தங்கக் கூட்டமைப்பு அறிவுறுத்தலின்பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நகைக் கடைகளில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டது என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல என்றும், முகம் மறைத்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொதுவானது என்றும் AIJGF பீகார் தலைவர் அசோக் குமார் வர்மா தெரிவித்துள்ளார். இந்த முடிவிற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது மத சுதந்திரத்திற்கு எதிரானது என்று விமர்சித்துள்ளன
- நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை அகற்றி நிதிஷ் குமார் அவரது முகத்தை பார்த்தார்.
- அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் தெரிவித்தார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரால் அரசு நிகழ்வின் போது ஹிஜாப் கழற்றப்பட்ட பெண் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் தனது அரசு வேலையை ஏற்க மறுத்துள்ளார்.
அரசுத் திட்டத்தின் கீழ் 1,000க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் போது, நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை அகற்றி நிதிஷ் குமார் அவரது முகத்தை பார்த்தார்.
இதற்கு ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் பெண் மருத்துவர் நுஸ்ரத் தனது பணியை ராஜினாமா செய்தார்.
இந்த மாதம் 20 ஆம் தேதி அவருக்கு பணியில் சேர நியமனக் கடிதம் கிடைத்ததாகவும், ஆனால் அவர் பணியில் சேரவில்லை என்றும் அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மேலும் பணியில் சேர்த்த அரசு தரப்பில் இருந்து நிர்பந்திக்கப்படுவதாவும் அவர் தெரிவித்தார்.
- முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆயுஷ் மருத்துவர்களின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹஜாபை முதலமைச்சர் நிதிஷ்குமார் பிடித்து இழுத்து கழற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆயுஷ் மருத்துவர்களின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பணி நியமன ஆணை பேரானந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை நிதிஷ்குமார் பிடித்து இழுத்துகழற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் பெண் மருத்துவரை அவமதித்த முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. நிதிஷ்குமாரின் மனநிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் விமர்சித்தது.
- கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.
- காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின்பு ஹிஜாப் தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பாஜக அரசின் உத்தரவு நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின்பு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநில கொச்சியில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் மாணவி ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, முஸ்லிம் மாணவியை ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வர அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத உரிமைகள் மற்றும் RTE சட்டத்தை சுட்டிக்காட்டி, கல்வி அமைச்சர் சிவன்குட்டி ஹிஜாப் தடையை நீக்க உத்தரவிட்டார்.
- ஒரு முஸ்லிம் பெண்ணின் பர்தாவை அகற்றச் சொல்லி ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலானது.
- பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் பர்தாவை அகற்றச் சொல்லி ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ஃபர்ஹீன். அவரின் தாயார் ஃபர்ஹானா உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடன் பெற்றவர்களிடம் இருந்து மாத தவணையை வசூலிக்கும் பொறுப்பில் அவர் உள்ளார்.
இந்நிலையில், சுஜாது கிராமத்தில் வசிக்கும் ஷாமா என்பவரிடமிருந்து கடன் தொகையை வசூலிக்க தனது நிறுவனத்தில் உடன் வேலை செய்யும் சச்சின் என்ற நபருடன் தனது மகள் ஃபர்ஹீனை அனுப்பியுள்ளார்.
ஃபர்ஹீனும் சச்சினும் ஒரு பைக்கில் அந்த கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 10 ஆண்கள் அவர்களை வலுக்கட்டாயாமாக தடுத்து, இருவரையும் தாக்கியுள்ளனர். குறிப்பாக ஃபர்ஹீனின் பர்தாவை கழட்ட சொல்லி தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும், மக்களுக்கான சேவைகளை வழங்க ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஈரான் இந்த விஷயத்தில் மிகவும் வித்தியாசமானது. இங்கு ஹிஜாப் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து, எதிர்ப்பை அடக்குவதற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வெகுஜன கண்காணிப்பை ஈரான் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஈரான் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் face recognition போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று ஐநா அறிக்கை கூறுகிறது.

ஐ.நா அறிக்கையின்படி, ஈரான் தனது கட்டாய ஹிஜாப் சட்டத்தை அமல்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக, நாசர் மொபைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இது ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களைப் புகாரளிக்க காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் உதவுகிறது. இந்த செயலி உதவியுடன் வாகனத்தில் ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களுடைய வாகன நம்பர் பிளேட், இடம் மற்றும் விதிமீறல் நேரம் ஆகியவை அதிகாரிகளைச் சென்றடைகின்றன.
மீண்டும் மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று வாகன உரிமையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
செப்டம்பர் 2024 முதல், ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களும் இதன்மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த செயலியைத் தவிர, ஹிஜாப் விதிகளை கண்காணிக்க ஈரானிய அரசாங்கம் தெஹ்ரான் மற்றும் தெற்கு பிராந்தியங்களில் வான்வழியாக டிரோன்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

ஹிஜாப் சட்டம் ஈரானின் பாதுகாப்புப் படைகளுக்கு விதிகளைச் செயல்படுத்த விரிவாக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும். ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286 இன் கீழ், இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு அறநெறிப் போலீசாரின் காவலில் 22 வயதான மஹ்சா அமினி இறந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. அதைத் தொடர்ந்து நடந்த அடக்குமுறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக ஐநா சபை மதிப்பிட்டுள்ளது.
- ஹிஜாப் சட்டத்தை மீறுபவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும்.
- பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப்பை சரியாக அணியாததாக கூறி இளம்பெண் மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது.
இந்த நிலையில் பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பொது இடங்கள் மற்றும் சாலைகளில் ஸ்மார்ட் கேராக்கள் மூலம் விதிமுறைகளை மீறுபவர்கள் கண்டறியப்படுவார்கள். ஹிஜாப் சட்டத்தை மீறுபவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த குற்றத்தை மீண்டும் செய்தால் ஏற்படும் சட்ட ரீதியான விளைவுகள் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
முதலில் எச்சரிக்கை பெறும் நபர்கள் மீண்டும் குற்றம் செய்தால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றனர். மேலும் காரில் பயணிப்பவர்களில் யாராவது ஆடை குறியீட்டை மீறினால் வாகன உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். மீண்டும் குற்றம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
- சுப்பிரமணியனை பரிசோதித்து அவரை நாகை அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப டாக்டர் ஜன்னத் அறிவுறுத்தினார்.
- நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கீழையூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் ஜன்னத் (வயது 29). இவர் திருப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இரவில் நள்ளிரவில் திருப்பூண்டி சிந்தாமணி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை நெஞ்சுவலி காரணமாக அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி புவனேஷ்ராம் (35) என்பவர் திருப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்.
அப்போது சுப்பிரமணியனை பரிசோதித்து அவரை நாகை அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப டாக்டர் ஜன்னத் அறிவுறுத்தினார். இதனை கேட்ட புவனேஷ்ராம் மேல் சிகிச்சைக்கு அனுப்பாமல் இங்கேயே மருத்துவம் பார்க்க வேண்டும். பணியின்போது ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள்? நீங்கள் டாக்டராக என்று சந்தேகம் உள்ளது. ஹிஜாப்பை கழற்றுங்கள் என கூறி ஜன்னதிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தார்.
அதற்கு ஜன்னத், நள்ளிரவில் ஒரு பெண்ணிடம் வீணாக தகராறில் ஈடுபடாதீர்கள் என கூறியும் புவனேஷ்ராம் தொடர்ந்து ஹிஜாப் குறித்து பேசி தகராறில் ஈடுபட்டார். மேலும் இதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதுகுறித்து தகவல் அறிந்த கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, ம.ம.க, ம.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமையில் ஆஸ்பத்திரி அருகே வேளாங்கண்ணி - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பா.ஜ.க நிர்வாகி புவனேஷ்வராமை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கீழையூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று கட்சியினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள் ஆவர்.
- தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
பள்ளிக்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம் சிக்கலில் சிக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவிகள், பள்ளி நிர்வாகம் தங்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியது என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கையில் கட்டியிருந்த கயிறு மற்றும் நெற்றியில் வைத்திருந்த பொட்டு ஆகியவற்றை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களை பாட வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள், இருவர் வேறு மதத்தை சேர்ந்தவர்கள ஆவர்.
ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியவர்கள் மீது ஐ.பி.சி. 295 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் தாமோ கோட்வாலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக பள்ளிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
முஸ்லீம் அல்லாத மதத்தை சேர்ந்தவர்களை ஹிஜாப் அணிய வலியுறுத்தும் விவகாரத்தில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் கங்கா ஜமுனா பள்ளி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தான் இந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.






