என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "government hospital"
- செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
- கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
- டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்றும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராதாபுரம் அருகே உள்ள பாப்பாங்குளத்தை சேர்ந்த ராஜ் என்பவரது மனைவி சுபத்ரா தேவி (வயது24) என்பவர் நேற்று முன்தினம் இரவில் பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது அங்கு டாக்டர்கள், நர்சுகள் இரவு பணியில் இல்லை. இதனால் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியால் துடித்த சுபத்ரா தேவிக்கு தானாகவே அழகான பெண் குழந்தை பிறந்தது.
அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுபத்ரா தேவி மற்றும் குழந்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
சுமார் 1 மணி நேரமாக பிரசவ வலியால் கர்ப்பிணி பெண் துடித்த நிலையில் டாக்டர்கள் இல்லாததால் உறவினர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் திசையன்விளை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டினர். டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட யாரையும் ஆஸ்பத்திரிக்குள் அவர்கள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்த நிலையில் தகவல் அறிந்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிய ராஜ்குமார், உதய லட்சுமி ஆகியோர் வந்து பொது மக்களை சமாதானம் செய்தனர்.
ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையில் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்று பெயர் பலகை மட்டும் பெரிதாக வைத்துள்ளீர்கள். ஆனால் டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.
மேலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்தாலும் கூட, அருகில் உள்ள சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கோ தான் சிகிச்சை பெறுவதற்கு அனுப்பி வைக்கிறீர்கள். எனவே 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஜனவரி மாதத்திற்குள் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் உறுதி அளித்தார்.
இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- வாகனத்தில் சென்றோர் என பலரையும் துரத்தி கடித்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.
- சாலைகளில் குழந்தைகளை தனியாக அனுப்ப பெற்றோர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் தெருநாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாய்கள் பெருக்கத்தை தடுக்க செய்யும் கருத்தடை பணிகள் முடங்கி உள்ளன. இது நாய்கள் பெருக்கத்துக்கு ஓர் முக்கியக்காரணம்.
புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் சாலையில் நடந்து சென்றோர், வாகனத்தில் சென்றோர் என பலரையும் துரத்தி கடித்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.
ரெட்டியார்பா ளையத்திலிருந்து கம்பன் நகர், மூலக்குளம் பகுதிக்கு சென்றது மேலும் 8 பேரை கடித்தது. இதில் மொத்தமாக 15 பேர் காயமடைந்து நாய்கடி தடுப்பூசி போட்டனர்.
இந்த நிலையில் இன்றுகாலை புதுவை நகராட்சி அமைந்துள்ள கம்பன் கலையரங்கம் அருகே நாய் ஒன்று பலரை விரட்டி கடித்துள்ளது. இதில் 6 பேர் வரை காயம் அடைந்தனர். அதேபோல் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் 9 பேரை நாய் கடித்துள்ளது.
காலை நாய் கடித்த 15 பேர் புதுவை அரசு மருத்துவமனையில் நாய்கடி ஊசி போட்டு சென்றனர். இதனால் சாலைகளில் குழந்தைகளை தனியாக அனுப்ப பெற்றோர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
- ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.
- பொதுப் பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண் காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர் மழையின் காரணமாக தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப் படுத்தும் பணிகளை மேற் கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டி டங்களை பார்வையிட்டது டன், மருத்துவ பயன் பாட்டிற்கு உள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடு போன்றவற்றை பார்வை யிட்டத்துடன், பொதுப்பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண் காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள் மலர்வண்ணன், சிவகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வட்டத்தின் தலைமையிட மருத்துவமனையாக அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் டாக்டர் உள்ளிட்ட 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் பா.ஜ.க. தலைவர் சரவணன் தலைமையில் நகரத் தலைவர் ஜோசப் ஜெபராஜ், ஒன்றிய பொதுச் செயலர் ஜெயராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் பிரபுவிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட 11 பணியிடங்கள் காலியாக உள்ளது. மருத்துவமனைக்கு தற்காலிகமாக மருத்துவர்கள் வந்து செல்கின்றனர். போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லாததால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். எனவே அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
- நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் கலெக்டர், எம்,எல்.ஏ திடீர் ஆய்வு செய்தனர்.
- பொது மக்களிடம் இருந்து வந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக எக்ஸ்ரே பிரிவு மற்றும் ஜெனரேட்டர் வசதி குறித்து பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால், அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன், குறைகளை விரைந்து சரி செய்யுமாறு அறிவுறுத்தினர்.
ஆய்வின் போது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.
- சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி:
வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
அதிலும் தொடர் விடுமுறை நாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர்.
அதிலும் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விட அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை மோட்டார் சைக்கிளில் வலம் வருகின்றனர். இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலில் சிக்கும் வாகனங்களால் வார விடுமுறை நாட்களில் அதிக விபத்து ஏற்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரிக்கு விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் விபத்து சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அவசர சிகிக்சை பிரிவில் 25 படுக்கைகள் மட்டுமே உள்ளதால் கூடுதலாக சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது பற்றி சுகாதாரதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது, விடுமுறை நாட்களில் புதுவைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளும் மற்றும் உள்ளூர் மக்களும் அதிக அளவு கொண்டாட்டத்தில் போதையுடன் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுகிறது.
இதில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இரவு மட்டுமே தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளவர்கள் அவசர சிகிச்சை பிரிவு வராண்டாவில் தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.
இதில் பெரும்பாலானோர் மறுநாள் காலையில் சென்று விடுவார்கள். இது ஒவ்வொரு வாரமும் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது
ஆனாலும் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பார்கள் என தெரிவித்தனர். இருப்பினும் நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
- பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.
- காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பெரும்பாலானோருக்கு சளி, இருமலுடன் காய்ச்சல், உடல்வலி இருக்கிறது.
காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் தினமும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.
குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பெரும்பாலானோர் மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள மருந்து கடைகளிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.
ஆண்டார்குப்பம், தடபெரும்பாக்கம், வெள்ளி வாயில் சாவடி, வாயலூர், பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு ,தேவம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் காணப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் உள்ள 150 படுக்கை வசதியில் 20 படுக்கைகளுடன் டெங்குகாய்ச்சல் வார்டு திறக்கப்பட்டு உள்ளது.
இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ள சித்த மருத்துவ வார்டில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் பரவலை தடுக்க பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் பருவநிலை மாற்றம் மற்றும் கொசுக்களின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு படுக்கை வசதியுடன் திறக்கப்பட்டு உள்ளது. யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரின் ஆலோசனை படி சிகிச்சை எடுத்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது.
இப்போது காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது. ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாவிட்டாலும், பசி இன்மை, குமட்டல், வாந்தி, உடல்சோர்வு ஏற்படுதல் என இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் பரிந்துரையின்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காய்ச்சல் பாதித்த கிராமங்களில் மீஞ்சூர் வட்டார கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- அதிகாரிகள் தகவல்
- வேலூர் அரசு மருத்துவமனையில் விட்டுச்சென்றனர்
வேலூர்:
வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை புறநோயா ளிகள் பிரிவு பகுதியில் கடந்த மாதம் 20-ந்தேதி பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.
அந்த குழந்தையை அங்குவிட்டு சென்ற பெற்றோர் யார் என்று தெரியவில்லை. இதையடுத்து குழந்தை சிகிச்சைக்காக அடுக் கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அதனை விட்டு சென்ற பெண் குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரித்து வரு கின்றனர்.
குழந்தைக்கு இதுவரை யாரும் உரிமை கோர வில்லை. அதனால் குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் சென்னையில் உள்ள தத்து நிறுவனத்திடம் குழந்தை வழங் கப்பட உள்ளது.
இந்த குழந்தையின் பெற்றோர் உரிய ஆதாரங்களுடன் வேலூர் சுற்றுலா மாளிகை எதிரில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தை நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் என்று குழந்தை பாது காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பழச்சாறு குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் நலமாக உள்ளனர்.
- பொன்னேரி அரசு மருத்துவனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி கிராமத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் அங்குள்ள கடைக்கு பழச்சாறு குடிக்க சென்றனர். அவர்களுக்கு கடைக்காரர் எலுமிச்சை பழச்சாறு கலந்து கொடுத்தார்.
பழச்சாறில் கலப்பதற்காக அவரிடம் ஐஸ் கட்டி இல்லை. எனவே ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் காணப்பட்ட சிலிக்கா ஜெல்லை பழச்சாறில் கலந்தார்.
இந்த பழச்சாறை குடித்த 13 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுப் ப