என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்சம்"

    • மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
    • இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறது.

    மதுரையில் இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் முக்கியத்துவம் அளித்துள்ளார். ரூ.150 கோடி மதிப்பிட்டீல் மதுரை மேலமடையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    மக்களின் நீண்ட கோரிக்கையையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    டிசம்பர் 7-ம் தேதி மதுரை மேலமடையில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் ஜனவரியில் முடிக்கப்படும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படாததால் விபத்துகள் நடைபெற்றது. தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது.

    தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் உள்ள வளைவுகளில் அமெரிக்கா தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. பாலங்களின் வளைவுகளால் மட்டுமே விபத்துகள் நடைபெறுகிறது.

    மதுரை தெற்குவாசல்- வில்லாபுரம் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆய்வு முடிவுகளின் படி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்.

    பொதுப்பணித்துறையில் லஞ்சம் பெற்றதாக உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். குற்றச்சாட்டுக்கள் உறுதியானதால் பல்வேறு நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். ஆதாரப்பூர்வமாக புகார்கள் வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்.

    இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே 8 முறை நடைபெற்றுள்ளதால் எஸ்.ஐ.ஆர்.ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கவில்லை.

    எஸ்.ஐ.ஆர்.ஐ மேற்கொள்ள காலமும் நேரமும் போதாது என்பதைத்தான் கூறுகிறோம். வடகிழக்கு பருவமழை, பொங்கல் விழா, தேர்தல் தேதி அறிவிப்பு இருப்பதால் தற்போது எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளக் கூடாது என கூறுகிறோம்.

    கொளத்தூரில் கள்ள ஓட்டுக்கள் இருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தினாரா? அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒன்றை பேசி வருகிறார்.

    நாங்கள் எதை சொன்னாலும் அதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர் கருத்துதான் கூறுவார். இந்தியாவில் உள்ள அனைவரும் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்த்து கருத்து சொல்லும்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் ஆதரித்து கருத்து சொல்வது ஏதற்காக?

    பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளதால் அதன் செயல்பாடுகளுக்கு ஒத்து ஊதுகிறது. தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சராக ஓ.பி.எஸ். பதவி வகித்துள்ளார்.

    மனோஜ் பாண்டியனுக்கு புரியாமலா தி.மு.க.விற்கு வந்திருப்பார். தமிழக அரசியலில் அண்ணா, பெரி யார் வகுத்துக் கொடுத்த திராவிட கொள்கையை கலைஞர் நிறைவேற்றினார்.

    அதனையே மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். திராவிட கொள்கையை தி.மு.க. மட்டும் தான் கடைப்பிடிப்பதால் பிற கட்சிகளில் இருந்து தி.மு.க.விற்கு வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி சங்கி கொள்கையை தாங்கி பிடிக்கிறார். அதனால்தான் அ.தி.மு.க.விலிருந்து, தி.மு.க.விற்கு வருகிறோம் என செல்கிறார்கள். தி.மு.க.விற்கு வருபவர்கள் அதன் கொள்கையை ஏற்றுக் கொண்டு வருகி றார்கள்.

    திராவிட மாடல் ஆட்சி யில் ஏழை, எளிய மக்க ளுக்காக முதலமைச்சர் திட்டங்களை தீட்டி செயல்ப டுத்துவதால் தி.மு.க.வில் இணைகிறார்கள். தி.மு.க. விற்கு நீண்ட காலமாக உழைப்பவர்களுக்கு பதவி கள் வழங்கப்பட்டுள்ளது.

    துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு என தி.மு.க.விற்கு உழைத்த வர்களுக்கு பதவி வழங்கப் பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வில் திறமை உள்ளவர்களை பயன்படுத்திக் கொள்வார். திறமை உள்ளவர்கள் தி.மு. க.வில் உள்ளவர்களா? அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களா? என பார்க்க மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2022 ஆம் ஆண்டில் சென்னை பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய காடுகள் ராம்சார் அங்கீகாரம் பெற்றன.
    • பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தலைநகரில் உள்ள ஒரே ஒரு ஈரப்பகுதியாகும்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பள்ளிக்கரணையில் தனியார் நிறுவனம் எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அங்கு ரூ.2000 கோடி அளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி குறித்து மிகப்பெரிய சர்ச்சை எழுந்து வருகிறது.

    சுற்றுச்சூழல் முக்கியதுவம் வாய்ந்த சதுப்பு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல், வனத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எப்படி அனுமதி வழங்கி உள்ளது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எடப்பாடியார் கடுமையாக கேள்வி எழுப்பி வருகிறார்.

    இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி பெற்ற பின்னர் ரூ.100 கோடியளவில் முறைகேடு, லஞ்சம் கரைபுரண்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் ஈரப்பகுதிகளை காக்கும் வண்ணம் 1922 ஆண்டு ஈரானில் ராம்சார் என்ற சர்வதேச உடன்படிக்கை ஏற்பட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டனர்.

    2022 ஆம் ஆண்டில் சென்னை பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய காடுகள் ராம்சார் அங்கீகாரம் பெற்றன. தற்பொழுது 1,247 ஹேக்டேர் பரப்பளவில் பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலையில் ஈர பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் 4-வது பிரிவுபடி ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலங்களில் எந்த கட்டுமான பணியும் மேற்கொள்ளக்கூடாது அனுமதி வழங்க முடியாது.

    இந்த சூழ்நிலையில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப்பகுதிகளில் 1,250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.2000 கோடி ஆகும்.

    குடியிருப்பு கட்டுமான திட்டங்களுக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி அளவில் லஞ்சம் கைமாறியதாக சொல்லப்படுகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தலைநகரில் உள்ள ஒரே ஒரு ஈரப்பகுதியாகும். வடகிழக்கு பருவமழையில் நீரை உள்வாங்கி நிலத்தின் நீர் தன்மையை உயர்த்தும்.

    தற்போது பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய முதல்வர் ஸ்டாலின் என்ன கூற போகிறார். அதிகார துஷ்பிரயோகம் மூலம் பலன் அடையப்போவது யார்? ஆகவே இன்றைக்கு முறைகேடு செய்து, ஊழல் செய்த இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டனர். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி வரும். அப்போது இது போன்று சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

    • சான்றிதழ் அளிப்பதற்காக அவர் ரூ.10 லஞ்சம் பெற்றுள்ளார்.
    • அவருக்கு நாடு முழுவதும் உள்ள 9 நிலச் சொத்துகள் மற்றும் 20 அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    அசாமில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் ஆணையத்தின் (NHIDCL) அதிகாரியை லஞ்ச புகாரில் சிபிஐ கைது செய்துள்ளது.

    மைஸ்னம் ரிட்டன் குமார் சிங் அசாமின் தலைநகர் கவ்ஹாத்தியில் உள்ள NHIDCL மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

    அசாமில் டெமோவ் முதல் மோரன் புறவழிச் சாலை வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-37-ஐ நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒரு தனியார் நிறுவனத்திடம் பணி நீட்டிப்பு மற்றும் பணி நிறைவுச் சான்றிதழ் அளிப்பதற்காக அவர் ரூ.10 லஞ்சம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சிபிஐ சோதனையில் அதிகாரியிடமிருந்து ரூ. 2.62 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான, நாடு முழுவதும் உள்ள 9 நிலச் சொத்துகள் மற்றும் 20 அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ஆடம்பர வாகனங்கள் வாங்கியதற்கான ஆவணங்களையும் சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.

    இந்த வழக்கில், கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த தனியார் நிறுவனத்தின் பிரதிநிதியான மோகன் லால் ஜெயின், பினோத் குமார் ஜெயின் என்பவரும் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கவ்ஹாத்தியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.  

    • ஹர்சரண்சிங் புல்லரை கையும் களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.
    • மாநிலம் முழுவதும் போதை பொருள் வலை அமைப்புகளை அகற்றுவதற்காக பஞ்சாப் அரசின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் பதேகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்பட்டா. பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்து வரும் இவர் ரோபர் ரேஞ்சில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் ஹர்சரண்சிங் புல்லர் ஐபிஎஸ் மீது சி.பி.ஐ. அதிகாரியிடம் லஞ்ச புகார் தெரிவித்தார்.

    அதில், டி.ஜ.ஜி. ஹர்சரண்சிங் புல்லர் தன்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்ததாகவும், அந்த வழக்கை முடித்து கொடுத்ததற்காக தன்னிடம் ரூ.8 லட்சம் கேட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து ஹர்சரண்சிங் புல்லரை கையும் களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.

    அதன்படி, ஆகாஷ்பட்டாவிடம் ரூ.8 லட்சத்தை கொடுத்து அனுப்பினர். அவர் டி.ஐ.ஜி.யிடம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது சி.பி.ஐ. அதிகாரிகள் ஹர்சரண்சிங் புல்லரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அவரை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைதை தொடர்ந்து ஹர்சரண்சிங் புல்லருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் ஹர்சரண்சிங் புல்லர் வீட்டில் இருந்து கட்டு கட்டாக ரொக்கப்பணம், தங்க நகைகள், கார் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பைகளில் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை எடுத்து எண்ணியபோது அதில் மொத்தம் ரூ.7.5 கோடிக்கு மேல் இருந்தது. அதேபோல நகைகளை ஆய்வு செய்ததில் மொத்தம் 2½ கிலோ தங்கம் மற்றும் நகைகள், 22 உயர் ரக கைக்கடிகாரங்கள், ஒரு மெர்ஷிடஸ் கார், ஆடி கார், லாக்கர் சாவிகள், 40 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கின.

    மேலும் அவரது வீட்டில் இருந்து இரட்டை குழல் துப்பாக்கி, ஒரு கைத்துப் பாக்கி, ஒரு ரிவால்வர், ஒரு ஏர்கண் உள்ளிட்ட துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கைதான ஹர்சரண்சிங் புல்லரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு இடைத்தரகராக கிருஷ்ணா என்பவர் செயல்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணாவையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட பொருட்களை வீடியோ ஆதாரங்களாக போலீசார் சேகரித்துள்ளனர்.

    கைதான ஹர்சரண்சிங் புல்லர் 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் பாட்டியாலா ரேஞ்சின் டி.ஐ.ஜி., விஜிலென்ஸ் பிரிவின் இணை இயக்குனர் மற்றும் மொகாலி, சங்கரூர், தன்னா, ஹோஷியார்பூர், பதேஹ்கர் சாஹிப் மற்றும் குருதாஸ்பூர் ஆகிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சிரோமணி அகாலிதளம் தலைவர் பிக்ரம்சிங் மஜிதியாவுக்கு எதிரான உயர்மட்ட போதைப பொருள் கடத்தல் வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவை ஹர்சரண்சிங் புல்லர் வழி நடத்தி வந்துள்ளார்.

    மாநிலம் முழுவதும் போதை பொருள் வலை அமைப்புகளை அகற்றுவதற்காக பஞ்சாப் அரசின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோபர் ரேஞ்சின் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற அவர் மொகாலி, ரூப் நகர் மற்றும் பதேகர்சாகித் ஆகிய மாவட்டங்களில் மேற்பார்வை செய்து வந்த நிலையில், தற்போது லஞ்ச வழக்கில் கைதாகி உள்ளார்.

    இவரது தந்தை எம்.எஸ்.புல்லர் பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ஆவார். கைதான டி.ஐ.ஜி. ஹர்சரண்சிங், கிருஷ்ணா ஆகிய இருவரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். 

    • லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
    • புகாரின் பேரில் அம்பேத்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், பினாமிகள் வீடுகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், மாதப்பூர், காணாமேட்டில் உள்ள மேக்னஸ் லேக் வியூ குடியிருப்பை சேர்ந்தவர் அம்பேத்கர்.

    இவர் மின்சார வாரியத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவர் அடுக்குமாடி குடியிருப்புகள் தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்க காலதாமதப்படுத்தி வந்தார்.

    இதனால் மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அம்பேத்கருக்கு கோடிக்கணக்காண ரூபாயை லஞ்சமாக கொடுத்து மின் இணைப்பு பெற்றனர்.

    அம்பேத்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    புகாரின் பேரில் அம்பேத்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், பினாமிகள் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

    சங்கரெட்டி மாவட்டம் பிரங்குடா மல்லிகாராஜன நகரில் உள்ள அம்பேத்கரின் பினாமி சதீஷ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அம்பேத்கரின் வங்கி கணக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.150 கோடி என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அம்பேத்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முதலில் அறுவை சிகிச்சை தொடங்குங்கள் என்று கூறியதற்கு முழு பணத்தையும் செலுத்த வேண்டும் என்று கூறினர்.
    • அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்ட மகளிர் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள்.

    பிரசவத்தின் போது இறந்த குழந்தையின் உடலை ஒரு பையில் போட்டு மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு எடுத்து சென்று தந்தை முறையிட்டதால், மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில், பிரசவத்தின்போது இறந்த தனது குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு ஒரு நபர் மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு வந்ததை அடுத்து, மாவட்ட நீதிபதி மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    குழந்தையை இழந்த தந்தையான விபின் குப்தா கூறுகையில், மனைவியை மருத்துவமனையில் சேர்த்தபோது, சுகபிரசவத்திற்கு ரூ.10 ஆயிரமும், அறுவை சிகிச்சைக்கு ரூ.12 ஆயிரமும் மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. தொடர்ந்து மனைவிக்கு பிரசவ வலி அதிகமான உடனே மாவட்ட நிர்வாகம் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே சென்றது. நேற்று அதிகாலையில் கொஞ்சம் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ உங்கள் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யணும் அதனால் முழு பணத்தையும் செலுத்த வேண்டும் என கூறியது. முதலில் அறுவை சிகிச்சை தொடங்குங்கள் என்று கூறியதற்கு முழு பணத்தையும் செலுத்த வேண்டும் என்று கூறினர்.



    இதையடுத்து பணத்தை செலுத்திய பிறகு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் பிறந்த குழந்தை இறந்தது. இதன்பிறகு எனது மனைவியை சாலையில் தூக்கி போட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து, நாங்கள் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரிடம் சென்றோம். பின்னர் நான் மாவட்ட நிர்வாகத்திடம் சென்றேன். அவர் என்னுடன் இங்கு வந்தார். நான் என் இறந்த குழந்தையை ஒரு பையில் சுமந்து கொண்டிருப்பதாக கூறினார்.

    இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், பிறந்த குழந்தை இறந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் கோல்டர் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்ட மகளிர் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகியின் அறிவுறுத்தலின் பேரில், ADM AK ரஸ்தோகி ஸ்ரீஜன் மருத்துவமனைக்குச் சென்று கர்ப்பிணித் தாயின் நிலை குறித்து விசாரித்தார். சிறந்த சிகிச்சைக்கான வழிமுறைகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் மாவட்ட நிர்வாகம் துணை நிற்கிறது என கூறினார்.

    • நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார்.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார்.

    கோவை:

    கோவை ரத்தினபுரி சுபைதார் லே-அவுட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது52). கட்டிட கான்ட்ராக்டராக உள்ளார்.

    இவரது சமூகத்திற்கு சொந்தமான கோவில் சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக நிலம், கட்டிடங்கள் உள்ளன.

    இந்த நிலையில் இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறைக்கு மாற்ற வேண்டும் என சுரேஷ்குமார் மற்றும் சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதையடுத்து சுரேஷ்குமார், கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று, அங்கு உதவி ஆணையராக இருக்கும் இந்திரா(54) என்பவரை சந்தித்து, எங்கள் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    ஆனால் பலமுறை சந்தித்து பேசியும் இதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

    இருப்பினும் சுரேஷ்குமார் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று உதவி ஆணையர் இந்திராவை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி வந்தார்.

    அப்போது இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.3 லஞ்சம் தர வேண்டும் என கேட்டார். அதற்கு சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து சென்றார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார். அப்போது ரூ.1½ லட்சம் கொடுங்கள். உடனே நடவடிக்கை எடுத்து விடுகிறேன் என தெரிவித்தார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார். பின்னர் நேராக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு சென்று போலீசாரிடம் இதுதொடர்பாக தெரிவித்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் கேட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி சுரேஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சம் பணம் கொடுத்தனர்.

    அதனை வாங்கி கொண்ட சுரேஷ்குமார், பெண் உதவி ஆணையர் இந்திராவுக்கு போன் செய்து பணம் ரெடி பண்ணிவிட்டதாகவும், எங்கு வந்து தர வேண்டும் என கேட்டார்.

    அதற்கு இந்திரா, பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில் உள்ள பர்னிச்சர் கடைக்கு வருமாறு தெரிவித்தார். அதன்படி நேற்று இரவு சுரேஷ்குமார் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சத்தை பணத்தை எடுத்து கொண்டு அங்கு சென்றார்.

    பின்னர் பெண் உதவி ஆணையர் இந்திராவை சந்தித்தார். அப்போது அவர் தான் வைத்திருந்த மஞ்சள் நிற பேக்கை காண்பித்து அதில் பணத்தை வைக்குமாறு தெரிவிக்கவே, அவரும் அதில் வைத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    முதலில் லஞ்சம் வாங்கியதை மறுத்த அவர், பின்னர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    இன்று காலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். முன்னதாக அவரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

    • பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது.
    • லஞ்சம் மற்றும் சஸ்பெண்ட் விவகாரம் பத்திரப்பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர் ஸ்ரீகாந்த், பத்திரம் பதிய வந்த ஒருவரை அலுவலக கழிவறைக்கு அழைத்து சென்று ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும் வீடியோ நேற்று சமூக வலை தளங்களில் வைரலாகியது.

    மேலும் இந்த சம்பவம் கடந்த 16.10.24 அன்று நடந்ததாகவும் இதுகுறித்து வீடியோ ஆதாரத்துடன் பதிவாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீடியோவின் ஒரு பகுதியை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி குமாரப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயசங்கர், கவர்னர், டி.ஜி.பி., கலெக்டர் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு புகார் மனு அனுப்பினார்.

    அதன்பேரில் இப்புகார் குறித்து விசாரணை நடத்திய பத்திரப்பதிவுத்துறை ஆணையரான கலெக்டர் குலோத்துங்கன், லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    இந்த லஞ்சம் மற்றும் சஸ்பெண்ட் விவகாரம் பத்திரப்பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்.
    • மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும்.

    சென்னை அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு, ஊழியர்கள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த கார்த்திகா என்ற பெண்ணின் குடும்பத்திடம், அவரைப் பிரசவ வார்டுக்கு மாற்றவும், குழந்தையை சுத்தம் செய்யவும் வார்டு பாய்கள் தலா ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.

    பயந்த கார்த்திகாவின் குடும்பத்தினர், வேறு வழியின்றி பணம் செலுத்தியுள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் வரை, மொத்தம் ரூ.10,000 வரை செலவழித்ததாகத் தெரிகிறது.

    இதுகுறித்து பேசிய கார்த்திகா, "வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

    இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் என்று குறிப்பிட்ட கார்த்திகா,மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும் என்று கூறினார்.

    மருத்துவமனை ஊழியர்களின் லஞ்சப் பட்டியல் :

    வார்டு பாய்கள் - அறுவை சிகிச்சை அறையில் இருந்து குழந்தையை சாதாரண வார்டுக்கு மாற்றுதல், குழந்தையை சுத்தம் செய்தல் மற்றும் நோயாளிக்கு பிற வகையான உதவி ஆகியவற்றுக்கு சராசரியாக ரூ.500 முதல் ரூ.3000 வரை லஞ்சம் கேட்கின்றனர்.  

    பெண் மருத்துவ உதவியாளர்கள் - பிரசவ உதவி, குழந்தைக்கு குளிப்பாட்டுதல், துணிகள் கொண்டு வருதல் மற்றும் பிற சேவைகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 லஞ்சம் கேட்கின்றனர்.

    துப்புரவு பணியாளர்கள் - துப்புரவு சேவை மற்றும் நோயாளிகளின் வார்டுக்கு வழிகாட்டுதலுக்கு குறைந்தது ரூ.20 முதல் ரூ.50 லஞ்சம் கேட்கின்றனர்.

    இதுதவிர வாட்ச்மேன்கள் ரூ.100 லஞ்சமாக பெறுகின்றனர்.

    சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சங்கீதா, இந்த பிரச்சினை குறித்து தாங்கள் அறிந்திருப்பதாகவும், ஆனால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறுகிறார்.

    "பணம் கேட்க வேண்டாம் என்று ஊழியர்களிடம் கூறுகிறோம், இருப்பினும் இத்தகைய புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஊழியர்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை அவர்களை அடையாளம் காண முடியவில்லை" என்றும் அவர் டாக்டர் சங்கீதா வருத்தத்துடன் தெரிவித்தார்.

    சிறுசிறு வேலைகள் முதல் நோயாளிகளை வேறு அறைக்கு மாற்றுவது அல்லது ஸ்கேன் எடுப்பது போன்ற பெரிய வேலைகளுக்கும் ரூ.50 முதல் ரூ.500 அல்லது அதற்கு மேல் பணம் கோரப்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

    பணம் கொடுக்க மறுப்பவர்கள் வாய்மொழித் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாகவும், பார்வையாளர்கள் நேரத்திலும் நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

    • ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டு, அதில் ரூ.25 லட்சத்தை முதல் தவணையாக பெற்றுள்ளார்.
    • 25 வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் ஒரு லாக்கரின் ஆவணங்கள் கிடைத்தன.

    டெல்லி வருமான வரித்துறையில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தவர் ஐஆர்எஸ் அதிகாரி அமித் குமார் சிங்கால்.

    இவர் ஒருவரிடம் ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டு, அதில் ரூ.25 லட்சத்தை முதல் தவணையாக பெற்றுள்ளார்.

    இதுதொடர்பாக கிடைத்த புகாரின்பேரில் லஞ்சம் வாங்கும்போது அதிகாரி மற்றும் அவரது கூட்டாளியை சிபிஐ மடக்கிப்பிடித்து கைது செய்தது.

    இந்நிலையில் டெல்லி, மொஹாலி, மும்பை மற்றும் பஞ்சாபில் ஆகிய மாநிலங்களில் அதிகாரி அமித் குமாருக்கு சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது.

    இதில், இந்த இடங்களில் இருந்து சுமார் 3.5 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் சுமார் ரூ.1 கோடி ரொக்கம் மீட்கப்பட்டுள்ளன.

    இது தவிர, 25 வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் ஒரு லாக்கரின் ஆவணங்கள், டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாபில் உள்ள பல சொத்துக்களின் ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

    • ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டு முதல் தவணையாக ரூ.20 லட்சம் பெற்றுள்ளார்
    • பணமோசடி வழக்கில் இருந்து சுரங்க தொழிலதிபரின் பெயரை நீக்குவதாக உறுதியளித்துள்ளார்.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் (ED) துணை இயக்குநர், லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷியை சிபிஐ கைது செய்தது. அவர் 2013 பேட்ச் இந்திய வருவாய் சேவை அதிகாரி ஆவார்.

    அவர் உள்ளூர் சுரங்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டு முதல் தவணையாக ரூ.20 லட்சம் பெற்றுள்ளார்.

    பணமோசடி வழக்கில் இருந்து சுரங்க தொழிலதிபரின் பெயரை நீக்குவதாக உறுதியளித்து ரூ.50 லட்சம் கேட்டிருக்கிறார்.

    தகவலறிந்த சிபிஐ அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சிபிஐ காவலில் சிந்தன் ரகுவன்ஷி வைக்கப்பட்டுள்ளார். 

    • கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்குவதற்காக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
    • அனுமதி வழங்க மாநகராட்சி உதவியாளர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமாக திருப்பூர் மங்கலம் ரோடு ஜான்ஜோதி கார்டன் பகுதியில் 5½ சென்ட் நிலம் உள்ளது.

    அதில் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்குவதற்காக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட மாநகராட்சி தொழில்நுட்ப உதவியாளர் நாகலிங்கம் (வயது 35) அனுமதி வழங்க ரூ.6ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    லஞ்சம் கொடுக்க மறுத்த கிருஷ்ணமூர்த்தி இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலைய த்தில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கிருஷ்ண மூர்த்தியிடம் கொடுத்து அனுப்பினர்.

    அவர் திருப்பூர் ராயர்புரம் வாட்டர்டேங்க் கீழ் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த நாகலிங்கத்திடம் பணத்தை கொடுத்தார்.

    அதனை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகலிங்கத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான அவர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருவது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×