என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் அதிபர்"

    • ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் யூன் சுக் யோல் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.
    • பிற குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    தென் கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக்யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க் கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இச்சட்டத்தை கொண்டு வந்தார்.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சில மணி நேரங்களிலேயே ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார். இந்த விவகாரத்தால் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் மீதான வழக்கில் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளித்தது. அதில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் யூன் சுக் யோல் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.

    இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. யூன் சுக் யோல் சட்டவிரோத முயற்சியில் ராணுவம் மற்றும் போலீஸ் படைகளைத் திரட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டதாக நீதிபதி ஜீ குய்-யோன் தனது தீர்ப்பில் கூறினார்.

    ஏற்கனவே அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது அவர்களின் முயற்சிகளை மீறியது போன்ற பிற குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சைப் அல்-இஸ்லாம் கடாபி அண்டை நாடான நைஜருக்கு தப்பி செல்ல முயன்றபோது அவரை போராளிகளால் பிடித்தனர்.
    • சைப் அல் இஸ்லாம் கடாபிக்கு லிபிய கோர்ட்டு 2015-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

    வடஆப்பிரிக்க நாடான லிபியாவில் நீண்ட காலமாக அதிபராக இருந்தவர் முயம்மர் கடாபி. இவரது ஆட்சி கடந்த 2011-ம் ஆண்டு கவிழ்க்கப்பட்டது. இதில் முயம்மர் கடாபி கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் முயம்மர் கடாபியின் மகன் சைப் அல்-இஸ்லாம் கடாபி (வயது 53) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    தலைநகர் திரிபோலியில் இருந்து தென்மேற்கே 136 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷின்டான் நகரில் உள்ள வீட்டில் சைப் அல்-இஸ்லாம் கடாபி இருந்தபோது அங்கு துப்பாக்கி ஏந்திய 4 நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் தங்களது முகத்தில் முகமூடி அணிந்திருந்தனர்.

    அந்த மர்ம நபர்கள் சைப் அல்-இஸ்லாம் கடாபியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்றனர். சைப் அல்-இஸ்லாம் கடாபி கொல்லப்பட்டதை அவரது வக்கீல் காலித் அல்-சைதி, அரசியல் ஆலோசகர் அப்துல்லா உஸ்மான் ஆகியோர் உறுதிப்படுத்தினர்

    முயம்மர் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு கிளர்ச்சியாளர்கள் இடையே பிளவு ஏற்பட்டு உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அந்த நாட்டில் 2011-ம் ஆண்டுக்கு பிறகு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. தனது தந்தை ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது சைப் அல்-இஸ்லாம் கடாபி அண்டை நாடான நைஜருக்கு தப்பி செல்ல முயன்றபோது அவரை போராளிகளால் பிடித்தனர்.

    பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். லிபிய நீதிமன்றம் அவர் மீது வன்முறையைத் தூண்டியதாகவும், போராட்டக்காரர்களைக் கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கில் சைப் அல் இஸ்லாம் கடாபிக்கு லிபிய கோர்ட்டு 2015-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. பின்னர் அவருக்கு லிபியாவின் போட்டி அரசாங்கங்களில் ஒன்று பொது மன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

    அதன்பிறகு சைப் அல்-இஸ்லாம் கடாபி, ஷின்டான் நகரில் வசித்து வந்தார். இந்தநிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

    • வைர நெக்லஸ் மற்றும் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள் உட்பட சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை லஞ்சமாக பெற்றார்.
    • தென்கொரிய வரலாற்றிலேயே ஒரு முன்னாள் அதிபர் மற்றும் அவரது மனைவி ஒரே நேரத்தில் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

    தென்கொரியாவில் 2022 முதல் 2025 ஏப்ரல் வரை அதிபராக இருந்தவர் யூன் சுக்-இயோல். இவரது மனைவி கிம் கியோன் ஹீ.

    யூன் சுக்-இயோல் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கிம் கியோன் ஹீ தென் கொரியாவின் முதல் பெண்பணியாக இருந்தார்.

    2022 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், Unification Church என்ற அமைப்பிடமிருந்து வைர நெக்லஸ் மற்றும் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள் உட்பட சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அவர் லஞ்சமாகப் பெற்றதாக வழக்கு நடந்து வந்தது.

    இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதி, கிம் தனது பதவியைத் தனிப்பட்ட லாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி 20 மாத சிறை தண்டனை விதித்தார். மேலும், 12.85 மில்லியன் டாலர் பணத்தைத் திருப்பிச் செலுத்தவும், வைர நெக்லசை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

    முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோல் ஏற்கனவே கடந்த ஆண்டு தென் கொரியாவில் அவசர நிலையை அமல்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

    தென்கொரிய வரலாற்றிலேயே ஒரு முன்னாள் அதிபர் மற்றும் அவரது மனைவி ஒரே நேரத்தில் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும். 

    • முன்னாள் அதிபர் மனைவி மீது பரிசு பொருள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
    • இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.

    சியோல்:

    தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ தனது கணவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிசு பொருட்கள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், தென் கொரியா முன்னாள் அதிபரின் மனைவி கிம் கியோன் ஹீ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் இது தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையின் இறுதியில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

    மாலத்தீவு தேர்தல் வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் அதிபர் மனு செய்துள்ளதை அடுத்து அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #AbdullaYameen
    மாலே:

    மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.

    அதை யாமீன் ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடத்தி வெற்றி பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மாலத்தீவு தேர்தல் கமி‌ஷன் மறுத்துள்ளது.

    தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றது. அதனால் 89.2 சதவீதம் ஓட்டுகள் பதிவானது என தெரிவித்துள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்ததன் மூலம் யாமீன் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும். புதிய அதிபர் இப்ராகிம் முகமது சாலிக் வருகிற நவம்பர் 17-ந்தேதி பதவி ஏற்க வழிவிட வேண்டும்.

    அதற்கு மாறாக தேர்தல் வெற்றியை எதிர்த்து மாலத்தீவு சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.



    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலே நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #AbdullaYameen
    வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு எல்சல்வடார் முன்னாள் அதிபர் ஆன்டனியோ சாகாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. #ElSalvadorPresident #AntonioSaca
    சான்சல்வடார்:

    மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடார் நாட்டில் 2004-2009 ஆண்டுகளில் அதிபராக பதவி வகித்தவர், ஆன்டனியோ சாகா (வயது 53). இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.



    இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தனது மகன் திருமணத்தின்போது 2016 அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின்போது, அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என கண்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த நாட்டு அரசுக்கு 260 மில்லியன் டாலர் தொகையை (சுமார் ரூ.1,872 கோடி) அவர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த ஊழலில் சிக்கிய ஆன்டனியோ சாகா அரசு உயர் அதிகாரிகள் 6 பேருக்கு தலா 3 ஆண்டு முதல் 16 ஆண்டு வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.   #ElSalvadorPresident #AntonioSaca
    மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முன்னாள் அதிபர் லுலாவும் போட்டியில் இருந்து விலகி இருப்பது, பிரேசில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #BrazilElection #PresidentLula
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் தற்போது மிச்செல் டெமர் அதிபராக உள்ளார். அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 7-ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தேர்தலில், தற்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அதிபர் லுலா (வயது 72) போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் தண்டிக்கப்பட்டு உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு தடை செய்துவிட்டது. ஆனால் அவர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    இந்த நிலையில் திடீர் திருப்பமாக அவர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டு விட்டார். அவர் தனது தொழிலாளர் கட்சி சார்பில் பெர்னாண்டோ ஹத்தாத் என்பவரை களம் இறக்குகிறார். இது குறித்து சிறையில் இருந்தவாறு அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அக்டோபர் 7-ந் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. பெர்னாண்டோ ஹத்தாத் எனது பிரதிநிதியாக தேர்தல் களத்தில் இருப்பார். நமது வேட்பாளர் பெர்னாண்டோ ஹத்தாத்” என கூறி உள்ளார்.

    ஏற்கனவே சமூக தாராளவாத கட்சி வேட்பாளர் ஜெயிர் போல்சொனரோ (63), கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முன்னாள் அதிபர் லுலாவும் போட்டியில் இருந்து விலகி இருப்பது, பிரேசில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #BrazilElection #PresidentLula
    பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லுலா போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. #Brazil #PresidentialElection #Lula
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் அடுத்த மாதம் (அக்டோபர்) அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் லுலா (வயது 72) விரும்புகிறார். அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் அவர் முன்னிலை வகிக்கிறார்.

    ஆனால் இவர், அரசு எண்ணெய் கம்பெனியின் பணி ஒப்பந்தம் வழங்குவதற்கு ஒரு என்ஜினீயரிங் கம்பெனியிடம் இருந்து ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.7 கோடி) லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இந்தநிலையில் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு நேற்று தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர், தேர்தலில் நிற்க முடியாது என அந்த கோர்ட்டு கூறி விட்டது.

    ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக லுலாவின் வக்கீல்கள் குழு அறிவித்து உள்ளது.

    இதே போன்று லுலாவின் தொழிலாளர் கட்சி கருத்து தெரிவிக்கையில், “லுலா அதிபர் தேர்தலில் நிற்பதற்காக எல்லா விதத்திலும் போராடுவோம்” என கூறியது. மேலும் லுலாவுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி போராடப்போவதாகவும் கூறி உள்ளது.  #Brazil #PresidentialElection #Lula 
    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Pakistan #AsifAliZardari
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் யுனைடெட் வங்கி மற்றும் சம்மிட் வங்கிகளில் 29 போலி கணக்குகளை தொடங்கி நிதி மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத்தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் உள்பட 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இந்த மோசடி தொடர்பாக சம்மிட் வங்கி தலைவரும், சர்தாரியின் கூட்டாளியுமான உசேன் லவாய் கடந்த 6-ந் தேதி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் அங்கு பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த பிரச்சினையில் தலையிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, 20 பேரையும் 12-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

    முன்னதாக இந்த வழக்கில் சிக்கியுள்ள 20 பேரும் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம் சர்தாரி மற்றும் அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி சர்தாரி, கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர் ஆவார். #Pakistan #AsifAliZardari #tamilnews 
    ×