என் மலர்
நீங்கள் தேடியது "shot dead"
- மாணவர் சிவாங்க் அவஸ்தியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்று உள்ளனர்.
- தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டொராண்டோ:
இந்தியாவை சேர்ந்த மாணவர் சிவாங்க் அவஸ்தி (வயது 20). கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
இந்த நிலையில் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் வளாகம் அருகே மாணவர் சிவாங்க் அவஸ்தி உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் பிணமாக கிடந்த ஹைலேண்ட் கிரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதியில் சிலரிடையே தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதில் மாணவர் சிவாங்க் அவஸ்தியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்று உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக டொராண்டோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகம் அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த முனைவர் பட்ட மாணவர் சிவாங்க் அவஸ்தி உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த வேதனை அடைந்து உள்ளோம்.
இந்தக் கடினமான நேரத்தில் துணைத் தூதரகம் அவரது துயரமடைந்த குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது. மேலும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என்று தெரிவித்து உள்ளது.
கனடாவில் சில தினங்களுக்கு முன்பு, டொராண்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி பெண் ஹிமான்ஷி குரானா அவரது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
- மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி.
- தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர்.
வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை ஒடுக்க நடத்தபட்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்ததையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது.
இதையடுத்து ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவராக இருந்தவர் மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32).
வங்காளதேசத்தில் வருகிற பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு அதில் போட்டியிட முடிவு செய்த ஷெரீப் உஸ்மான் ஹாடி தனது பிரசாரத்தை கடந்த 12-ந்தேதி மத்திய டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் தொடங்கினார்.
அப்போது அவர் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஷெரீப் உஸ்மானின் நிலைமை மோசமடைந்ததையடுத்து அவரை மேல்-சிகிச்சைக்காக விமான ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூருக்கு இடைக்கால அரசாங்கம் அனுப்பியது.
சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளுடன் ஷெரீப் உஸ்மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஏற்கனவே ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள், அவர் இறந்த செய்தியை அறிந்ததும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
நேற்று இரவு தலைநகர் டாக்காவில் உள்ள சாலைகளில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ஷெரீப் உஸ்மான் கொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள ஷாபாக் சந்திப்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.
ஷெரீப் உஸ்மானை கொன்றவர்களை கைது செய்யத் தவறியதற்காக உள்துறை ஆலோசகரின் உருவ பொம்மையை எரித்தனர்.
நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் குவிந்ததால் போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது. மேலும் நாட்டின் மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் பரவியது.
தலைநகர் டாக்காவில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதோம் அலோ ஆகிய 2 செய்தி அலுவலகங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் அந்த அலுவலக கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
இதில் அக்கட்டிடங்களுக்குள் ஊழியர்கள் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டுத் தீயை அணைத்தனர்.
டாக்கா முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டம்-வன்முறையை கட்டுபடுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டன.
அவர்களை பல இடங்களில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் போராட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை.
ராஜ்ஷாஹியில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லத்திற்கும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அலுவலகத்திற்கும் தீ வைத்தனர். இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதடைந்தன.
மேலும் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா வீட்டுக் கும் தீ வைக்கப்பட்டது. சிட்டகாங்கில் ஒரு முன்னாள் அமைச்சரின் இல்லத்தையும் தாக்கினர். டாக்கா-மைமன்சிங்கை இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் போராட்டகாரர்கள் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். ராஜ ஷாஹி நகரில், போராட்டக்காரர்கள் இந்தியத் தூதரக அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்தியத் துணைத்தூதரக அலுவலகம் அருகே கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்தன. சிட்டகாங்கில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அப்போது இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
நேற்று முன்தினம் டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தது. அப்போது ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களை திருப்பி அனுப்பும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே ஷெரீப் உஸ்மான் இறந்ததால் இந்திய தூதரகத்தை போராட்டக்காரர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தலைநகர் டாக்கா, சிட்ட காங் மற்றும் பிற நகரங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தது. இன்று காலை வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள்.
ஆனால் ஷெரீப் உஸ்மான் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராட் டம் தொடரும் என்று மாணவர் இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் வங்காளதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
- வெப் சீரிஸ் நடிக்க ஆள் தேவை என்ற விளம்பரம் செய்து பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றியுள்ளார்.
- யூடியூபர் ரோகித்தை மும்பை காவல்துறை சுட்டுக்கொன்றது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஆக்டிங் ஸ்டூடியோவில் குழந்தைகளை பணயமாக பிடித்து வைத்து மிரட்டியவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆக்டிங் ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தவரும் யூடியூபருமான ரோகித்தை மும்பை காவல்துறை சுட்டுக்கொன்றது.
வெப் சீரிஸ் நடிக்க ஆள் தேவை என்ற விளம்பரம் செய்து பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றி அழைத்து வந்து பயணக்கைதிகளாக வைத்து மிரட்டினார் ரோகித் ஆர்யா.
இந்நிலையில், பள்ளிக் குழந்தைகள் 17 பேரை பணய கைதிகளாகப் பிடித்து வைத்து மிரட்டியவரை காவல்துறை சுட்டுக்கொன்றுள்ளது.
- வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.
- தீர்ப்பு வழங்கியதும் அங்கிருந்த குற்றவாளி தன்னிடமிருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
டிரானா:
அல்பேனியா நாட்டின் தலைநகர் டிரானாவில் குற்றவியல் மேல் முறையீட்டு கோர்ட் அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்தார்.
அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார். ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே அங்கு நின்றிருந்த குற்றவாளி எல்விஸ் ஷ்கெம்பி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார்.
இதில் நீதிபதி சம்பவ இடத்திலேயே சரிந்து இறந்தார். இதனையடுத்து எல்விஸ் ஷ்கெம்பி, கோர்ட் பாதுகாப்பு அதிகாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பெட்ரோல் பங்கிற்குள் வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
- இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில், இந்திய வம்சாவளி பெண்ணான கிரண் பட்டேல் (49) என்பவர் பெட்ரோல் பங்கை நிர்வகித்து வந்தார். இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி பெட்ரோல் பங்கிற்குள் வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
அந்த வாலிபர் மீது ஒரு பாட்டிலை எறிந்து விட்டு கிரண் படேல் தப்பி ஓடினார். அப்போது வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் கிரண் பட்டேல் உயிரிழந்தார்.
உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இந்திய பெண்ணை சுட்டு கொன்றது ஜேடன் மேக் ஹில்(வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- ஆண்ட்ரி கொலைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
- கொலையாளிகளை பிடிக்க அனைத்து விசாரணை அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
உக்ரைன் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி வேலோடிமிரோவிச் பருபிய் (வயது 53). இவர் 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை சபாநாயகராக செயல்பட்டார்.
இந்த நிலையில் ஆண்ட்ரி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். லிவீவ் மாகாணம் பிராங்க்ஸ்வி பகுதியில் ஆண்ட்ரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஆண்ட்ரி கொலைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க அனைத்து விசாரணை அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளிலும் முக்கிய அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகள் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் தந்தை கோபம்.
- விடுதிக்கு சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஜாதி மாறி மகள் திருமணம் செய்து கொண்டதால் கோபம் அடைந்த தந்தை, அவரது கண் முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்பங்கா மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனையில் பிஎஸ்சி (நர்ஸ்சிங்) 2ஆம் ஆண்டு படித்து வந்தவர் ராகுல் குமார். இங்கு முதலாம் ஆண்டு படித்து வருபவர் தானு பிரியா. இவரும் நர்ஸிங் படித்து வருகிறார். இருவரும் காதலித்து சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டனர்.
மகளின் காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், தந்தைக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. மகளின் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
தானுவின் தந்தை பிரேம்ஷங்கர் மருத்துவமனை விடுதிக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அங்கு அவரது மகள் தானுவும், அவரது கணவரும் இருந்துள்ளனர். மேலும், ராகுல் குமாருடன் படிக்கும் மாணவர்களும் இருந்துள்ளனர்.
பிரேம்ஷங்கர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுல் குமாரை சுட்டுள்ளார். இதில் ராகுல் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ராகுல் குமார் உடன் படிக்கும் சக மாணவர்கள் பிரேம்ஷங்கரை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு போலீசார் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ராகுலும், தானுவும் கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் திருமணம் செய்துள்ளனர். ஒரே விடுதியில் தனித்தனி மாடியில் தங்கி படித்து வந்துள்ளனர். தானுவின் தந்தை மாறுவேடத்தில் வந்து ராகுலை நேற்று மாலை அணுகியுள்ளார். பின்னர்தான் தானுவின் தந்தை எனத் தெரியவந்துள்ளது.
"எனது தந்தை துப்பாக்கி வைத்திருந்தார். எனது கணவர் மார்பில் என் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டார். ராகுல் என் மடியில் சாய்ந்தார்" என கண்ணீர் மல்க தானு தெரிவித்தார்.
மேலும், எனக்கு அல்லது எனது கணவருக்கு என்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிமன்றத்தை நாடியிருந்தோம் எனத் தெரிவித்தார்.
- சட்ட விரோதமாக யார் மதுபானம் விற்பது? என்பது தொடர்பாக மோதல்.
- பிரச்சினை அதிகரிக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் இருவர் உயிரிழப்பு.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக இரண்டு கும்பலுக்கு இடையில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விரோதம் துப்பாக்கிச்சண்டை வரை செல்ல இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பாய் கான் கா புரா என்ற கிராமத்தில் பண்டி பதாரியா (39), அவருடைய மருமகன் போலா பதாரியா (23) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பிரதீப் தோமர், லூக்கா தோம், லால்கி பண்டிட் ஆகியோரும் சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்துள்ளனர்.
இதனால் இரு கும்பலுக்கும் இடையில் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சிலர் பாய் கான் கா பூரா கிராமத்திற்கு மதுபானம் கொண்டு வருவதாக பண்டிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பண்டி தனது மருமகன் போலா பதாரியா உடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு மற்றொரு கும்பல் மதுபானம் விற்றுக் கொண்டிருந்துள்ளது. இருவரும் அவர்களுடன் தகராறு செய்துள்ளனர். இதனால் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் இருவரையும் சரமாரி சுட்டுள்ளனர். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோதமாக மதுபானம் விற்ற விவகாரத்தில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், அக்கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான காஙகிரஸ் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பாஜக தலைமையில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதாக ஆளுங்கட்சியை விமர்சித்துள்ளது.
- அகாலி தளம் கவுன்சிலர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான்.
அமிர்தசரஸ் சேஹர்தா பகுதியில் குருத்வாரா அருகே பொதுவிழா ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அதன்பின், அங்குள்ள சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த அவரை அங்குள்ளோர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் ஏற்கனவே ஹர்ஜிந்தர் சிங் வீடு மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அதே நபர்கள் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
- காலை 5 மணிக்கு தகராறில் ஏற்பட்டு துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.
- ஐந்து பேர் மீது குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில், 3 பேர் உயிரிழப்பு.
பீகார் மாநிலத்தில் அற்ப காரணத்திற்காக ஏற்பட்ட தகராறு, துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. இதில் 3 பேர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பக்சர் மாவட்டம் அஹியாபூர் கிராமத்தில் இன்று காலை 5 மணிக்கு இரு பிரிவினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. தகராறு அதிகரிக்க இரு பிரிவினரும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது ஐந்து பேர் குண்டு பாய்ந்து சரிந்து கிடந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 3 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயத்துடன் இரண்டு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. காலை 5 மணிக்கு இரு பிரிவினருக்கு இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
- பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 27 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- பப்பு லோஹாரா தலைக்கு ரூ.10 லட்சம் பிரபாத் கஞ்சு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.
மாவோயிஸ்டுகளை கூண்டோடு ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மண்டலத்தில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 27 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் முக்கிய தலைவர் பசவராஜ் கொல்லப்பட்டார்.
70 வயதான பசவ ராஜு, இந்தியாவின் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்டு தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது தலைக்கு ரூ. 10 கோடி வரை பரிசு அறிவிக்கப்பட்டது.
இவரைப் போலவே ஜன்முக்தி பரிஷத் என்ற மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவர்களான பப்பு லோஹாரா மற்றும் பிரபாத் கஞ்சு ஆகியோரை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.
பப்பு லோஹாரா தலைக்கு ரூ.10 லட்சம் பிரபாத் கஞ்சு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளை இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது கடுமையான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்த மோதலில் மாவோயிஸ்டு முக்கிய தலைவர்களான பப்பு லோஹாரா மற்றும் பிரபாத் கஞ்சு இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த மோதலின் போது மாவோயிஸ்டு ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் மாவோயிஸ்டுகள் வேட்டை நடந்து வருகிறது.
- மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பாதுகாப்பின் கீழ் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்.
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் அமீர் ஹம்சா(வயது 66). அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
இந்த நிலையில் லாகூரில் வசித்து வந்த அமீர் ஹம்சா வீட்டில் இருந்தபோது ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரது உடம்பில் காயங்கள் இருந்தன. அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
படுகாயம் அடைந்த அவரை மீட்டு லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பாதுகாப்பின் கீழ் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைபுல்லா காலித் 3 நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அந்த அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப் பட்டுள்ளது.
அமீர் ஹம்சா, இந்தியாவில் நடந்த தாக்குதல் பின்னணியில் இருந்துள்ளார். இவரும் சைபுல்லாவும் 2005-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டனர்.
அமீர் ஹம்சா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ஐ.நா.வால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத் மற்றும் அப்துல் ரகுமான் மக்கி ஆகியோருக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார்.






